Page 33 of 401 FirstFirst ... 2331323334354383133 ... LastLast
Results 321 to 330 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #321
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MAKKAL THILAGAM ''NALLA NERAM ''


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #322
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


  4. #323
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy - thiru era. chezhiyan

    "திரையுலகின் சிங்கம் எம்ஜிஆர்' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மலர் 1997- இல் வெளியிடப்பட்டது. அதை அண்மையில் கண்ணுற்றேன். அதில் எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அந்த மலரில் தரப்பட்டுள்ள அண்ணாவின் ஒரு கருத்து, " எம்ஜிஆர் கழகத்தின் கண்மணி, கலை உலகத்தின் நன்மணி; குணத்தில் தங்கம், கொதித்தெழுந்தால் சிங்கம்' என்பதாகும்.

    சிங்கம் பீடு நடையுடன் வந்த வழியை திரும்பிப் பார்க்குமாம் - அதை அரிமா நோக்கு என்பார்கள். அதைப்போல் எம்ஜிஆர் திரையுலகில் புரிந்த சாதனைகளை சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.

    எம்ஜிஆர் நடித்த படங்கள் 134 அதில் கதாநாயகனாக இருந்த படங்கள் 115. அவற்றில் 100 நாள்கள் விழா கண்ட படங்கள் 66. வெள்ளிவிழா (25 வாரங்கள்) கொண்டாடிய படங்கள் 10 . என் தங்கை படம் 200 நாள்களுக்கு மேலும் வெற்றிப் படமாக விளங்கியது.

    எம்ஜிஆர் பெற்ற விருதுகள்:

    1954 - மலைக் கள்ளன் - இந்திய அரசாங்க விருது.

    1956 - அலிபாபா நாற்பது திருடர்கள் - பிலிம் ரசிகர்கள் விருது 1967.

    1967 - காவல்காரன், தமிழ்நாடு அரசாங்க விருது.

    1968 - குடியிருந்த கோயில், தமிழ்நாடு அரசாங்க விருது.

    1969 - அடிமைப் பெண், தமிழ்நாடு அரசாங்கப் பரிசு, பிலிம்பேர் விருது.

    1972 - ரிக்ஷாகாரன், சிறந்த நடிகர் -தேசிய விருது.

    1978 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிறந்த படம்- தமிழ்நாடு அரசாங்க விருது.

    கவுரவ டாக்டர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம்.

    கவுரவ டாக்டர் பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகம்.

    1988 - (இறந்தபின்) பாரத் ரத்னா விருது.

    மேலும் 1960-இல் இந்திய அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ விருதை ஏற்றுக்கொள்ள எம்ஜிஆர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், "அந்த விருது தமிழில் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தியில் இருந்தபடியால் ஏற்றுக்கொள்ளவில்லை'.

    நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.

    ""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''

    அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.

    வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.

    எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.

    மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
    Last edited by esvee; 14th July 2014 at 05:22 AM.

  5. #324
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    'ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று, தான் பாடல் எழுதவந்தது பற்றி வர்ணிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.

    எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரைக்கும் தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிற கவிஞர்.

    எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம்.

    ''பிறவி கம்யூனிஸ்ட் நான். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி. பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன். சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.. என் முகங்களில் ஒன்று'' என்று சிரிக்கிறார்.

    உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் பளிச் வெள்ளை!

    ''பஞ்சாலைக் கூலித் தொழிலாளி நான். புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -

    நான் யார்? நான் யார்? நீ யார்?
    நாலும் தெரிந்தவர் யார்- யார்?
    தாய் யார்? மகன் யார்? தெரியார்;
    தந்தை என்பார் அவர் யார்- யார்?
    உறவார்? பகை யார்?
    உண்மையை உணரார்;
    உனக்கே நீ யாரோ?
    வருவார்; இருப்பார்;
    போவார்; நிலையாய்
    வாழ்வார் யார் யாரோ?

    'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...

    இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் தரப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சிகர எண்ணங்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற -

    நாளை உலகை ஆள வேண்டும்
    உழைக்கும் கரங்களே - இந்த
    நாடு முழுதும் மலர வேண்டும்
    புரட்சி மலர்களே
    கடமை செய்வோம் கலங்காமலே
    உரிமை கேட்போம் தயங்காமலே
    வாருங்கள் தோழர்களே - ஒன்றாய்
    சேருங்கள் தோழர்களே!

    என்கிற பாடல். இன்றைக்கும் கேட்ட விநாடி சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல் அது.

    பஞ்சபூதங்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-

    காற்றும் நீரும் வானும் நெருப்பும்
    பொதுவில் இருக்குது - மனிதன்
    காலில் பட்ட பூமி மட்டும்
    பிரிந்து கிடக்குது..
    பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
    மனித இதயமே - உலகில்
    பிரிவு மாறி ஒருமை வந்தால்
    அமைதி நிலவுமே...
    என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை.

    என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மயக்கமே உண்டு.

    எந்தக் குழந்தையும் நல்ல
    குழந்தைதான்
    மண்ணில் பிறக்கையிலே - அவர்
    நல்லவராவதும் தீயவராவதும்
    அன்னை வளர்ப்பதிலே...
    என்கிற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு அரசாங்கம் தந்த உச்சகட்ட அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

    எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை. 'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும் -

    பொய்கையெனும்
    நீர்மகளும்
    பூவாடை போர்த்து
    நின்றாள்
    தென்றலெனும்
    காதலனின்
    கைவிலக்க வேர்த்து
    நின்றாள்
    என்ன துடிப்போ
    அவள் நிலை
    நீயுணர மாட்டாயோ
    அந்த நிலையில் தந்த சுகத்தை
    நான் உணரக் காட்டாயோ?
    என்கிற வரிகள் விரகத்தின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாகச் சித்திரித்தது -

    சந்தன மேனிகளின்
    சங்கம வேளையிலே
    சிந்திய முத்துகளைச்
    சேர்த்திடும் காலமிது
    தேன்கனிக் கோட்டையிலே
    சிற்றிடை வாசலிலே
    தோரண மேகலையில்
    தோன்றிய கோலமிது
    courtesy - pulavar pulamaipithan

  6. Likes ainefal liked this post
  7. #325
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

    கடின இலக்கான 9,000 பதிவுகளை வெகு சாதரணமாக பதிவிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திரு. வினோத் அவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறாரோ நம் பொன்மனச்செம்மல் ?

    இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்


  8. Likes Russelllkf liked this post
  9. #326
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது ;

    அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், அதன் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் திரு. புலமைபித்தன் அவர்கள் வெளியிடும் "தலைவர் - தம்பி - நான் " புத்தக வெளியீட்டில் கலந்து கொள்வர்.

    அதே போன்று திரு. ராஜ்குமார் அவர்களை தலைவராக கொண்ட "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" அமைப்பினரும் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்களின் அம்சமான அழகிய வடிவமைப்புடன் கூடிய பதிவுகள் தொடரட்டும்.

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  10. #327
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Tenali Rajan View Post
    வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

    மக்கள் திலகம் - அபிநய சரஸ்வதி இணை ... படங்கள் வெகு அருமை. நன்றி திரு. தெனாலி ராஜன் அவர்களே........ !

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #328
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like
    ”நடிகவேள் மீது கலைவேந்தன் வைத்திருந்த பாசம்..”
    ----------------------------------------------------- --------------------------
    சண்டைக் காட்சிகளில் நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை நடிகவேள் எம்.ஆர்.ராதா வைத்திருந்தார். ஆனால் அவரையும் சண்டை செய்து நடிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர்.,
    'நல்லவன் வாழ்வான்' படத்தில் இருவரும் மோதிக் கொள்ளும் ஒரு காட்சி உண்டு. கதைப்படி அந்த சண்டைக் காட்சியில் எம்.ஆர்.ராதா நடிக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர்., விரும்பினார்.
    அதைப் பற்றி கூறி, "இந்தக் காட்சியில் நாம் இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் சம்மதித்தால் உங்களுக்கு சிரமமில்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கேட்டிருக்கிறார். "சரி, நடிச்சிட்டா போச்சு" என்று எம்.ஆர்.ராதா கூறியதும் எம்.ஜி.ஆர். உற்சாகமாகிவிட்டார்.
    அந்த சண்டைக் காட்சியை அமைத்தது, இயக்கியது எல்லாம் எம்.ஜி.ஆர்., தான். தண்ணீருக்கடியில் இருவரும் சண்டை செய்வது போல் காட்சிகள் ஒரு வாரம் தொடர்ந்தாற் போல் படமாக்கப்பட்டது.
    தொடர்ந்து தண்ணீரில் நனைந்தபடியே இருந்தது எம்.ஆர்.ராதாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால், உடல்ந்லம் குன்றி அவர் படுக்கையில் விழ நேர்ந்தது. எழுந்திருக்க முடியாமல், அசைய முடியாமல் படுத்திருந்தார்.
    இதனையறிந்த எம்.ஜி.ஆர்., ரொம்பவும் வேதனைப்பட்டுப் போனார்; 'நம்மால் தானே ராதாண்ணனுக்கு இப்படி ஆயிற்று' என்று உணர்வுக்குள்ளாகி, தனக்குத் தானே மருகினார்.
    தனது படப்பிடிப்பு மற்றும் எல்லா வேலைகளையும் ஒத்தி போட்டுவிட்டு எம்.ஜி.ஆர்., தினமும் எம்.ஆர்.ராதாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
    தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் கட்டிலில் படுத்திருக்கும் எம்.ஆர்.ராதாவின் முகத்திற்கு நேராக எம்.ஜி.ஆர்., கீழே தரையில் அமர்ந்து கொள்வார். வந்தது முதல் யாருடனும் பேச மாட்டார்.எம்.ஆர்.ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமல்ல, காலை முதல் மாலை வரை அமர்ந்திருப்பார். இப்படி எம்.ஆர்.ராதாவின் உடல் நலம் தேறும் வரையில் எம்.ஜி.ஆர்., ஏதோ தியானம் செய்வது போல் அமர்ந்துவிட்டு செல்வாராம்.
    (தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான நட்பு குறித்து ஒரு பத்திரிக்கை பேட்டியில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கூறியது..)

  12. #329
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like
    வினோத் சார்,

    தங்களின் மகத்தான 9,000 பதிவுகள் என்னும் மகத்தான சாதனைக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  13. #330
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    courtesy - thiru era. chezhiyan



    எம்ஜிஆர் நடித்த படங்கள் 134 அதில் கதாநாயகனாக இருந்த படங்கள் 115. அவற்றில் 100 நாள்கள் விழா கண்ட படங்கள் 66. வெள்ளிவிழா (25 வாரங்கள்) கொண்டாடிய படங்கள் 10 . என் தங்கை படம் 200 நாள்களுக்கு மேலும் வெற்றிப் படமாக விளங்கியது.

    எம்ஜிஆர் பெற்ற விருதுகள்:

    1954 - மலைக் கள்ளன் - இந்திய அரசாங்க விருது.

    1956 - அலிபாபா நாற்பது திருடர்கள் - பிலிம் ரசிகர்கள் விருது 1967.

    1967 - காவல்காரன், தமிழ்நாடு அரசாங்க விருது.

    1968 - குடியிருந்த கோயில், தமிழ்நாடு அரசாங்க விருது.

    1969 - அடிமைப் பெண், தமிழ்நாடு அரசாங்கப் பரிசு, பிலிம்பேர் விருது.

    1972 - ரிக்ஷாகாரன், சிறந்த நடிகர் -தேசிய விருது.

    1978 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிறந்த படம்- தமிழ்நாடு அரசாங்க விருது.

    கவுரவ டாக்டர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம்.

    கவுரவ டாக்டர் பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகம்.

    1988 - (இறந்தபின்) பாரத் ரத்னா விருது.

    மேலும் 1960-இல் இந்திய அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ விருதை ஏற்றுக்கொள்ள எம்ஜிஆர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், "அந்த விருது தமிழில் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தியில் இருந்தபடியால் ஏற்றுக்கொள்ளவில்லை'.

    நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.

    ""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''

    அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.

    வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.

    எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.

    மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

    Dear Esvee Sir,

    Did he also put the list of 100 days films and 175 days films as claimed by Mr. Chezian ?

    Would love to see that too.

    Regards
    RKS

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •