-
26th July 2014, 05:32 AM
#931
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் பேராசிரியர் செல்வகுமார் சார்
மக்கள் திலகத்தின் ''மாட்டுக்கார வேலன் '' சென்னை நகரில் மறு வெளியீடு பற்றிய விரிவான தேதி - திரை அரங்கு பட்டியல் பதிவு மிகவும் அருமை . 1970ல் தமிழ் திரை உலகில் சாதனை படைத்த வெள்ளி விழா படம் .
மக்கள் திலகத்தின் பல நிழற்படங்கள் , கட்டுரைகள் பதிவுகள் வழங்கிய திரு கலிய பெருமாள் , திரு யுகேஷ் , திரு சைலேஷ் , திரு ரூப் . அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகம் திரிக்கு புதிய வரவான திரு ஜெகன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம் ..
-
26th July 2014 05:32 AM
# ADS
Circuit advertisement
-
26th July 2014, 05:39 AM
#932
Junior Member
Platinum Hubber
மாட்டுக்காரவேலன்" சூப்பர்ஹிட் படம். ஜெயந்தி பிலிம்சார் தயாரித்த இந்தப்படத்தில், எம்.ஜி. ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். வசனம்: ஏ.எல்.நாராயணன். கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமைத்தவர் கே.வி. மகாதேவன். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்.
மாட்டுக்காரவேலனும், வக்கீல் ரகுவும் ஒரே தோற்றம் கொண்டவர்கள். சட்டநாதன் குடும்பத்தினர், வக்கீல் ரகுவை வரவேற்கக் காத்திருக்க, அங்கே வேலன் வருகிறான். அவனுக்கு பெரிய விருந்து நடக்கிறது. வேலனை ரகு என்று எண்ணி, அவனை காதலிக்கிறாள், சட்டநாதன் மகள் லலிதா.
உண்மையைச் சொல்லிவிட வேலன் நினைக்கிறான். ஆனால் சூழ்நிலை, அவன் வாயைக் கட்டிப்போடுகிறது. அதே நேரத்தில் ரகு அங்கு வருகிறான். உண்மையை அறிகிறான். தப்பி ஓட நினைத்த வேலனை அங்கேயே தங்க வைத்து, வேலன் _ லலிதா காதல் வளர உதவுகிறான்.
ஆள் மாறாட்டங்களால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களுடன், படம் விறுவிறுப்பாக அமைந்தது. இரட்டை வேடத்தில், எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்தார். குறிப்பாக, மாட்டுக்காரவேலன் வேடத்தில் அவர் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
ஜெயலலிதாவும், மற்ற நட்சத்திரங்களும், பாத்திரத்தை உணர்ந்து, இயல்பாக நடித்தனர். இந்தப் படத்தின் பெரிய வெற்றிக்குப் பாடல்கள் துணை நின்றன. "சத்தியம் நீயே, தர்மத்தாயே", "ஒரு பக்கம் பார்க்குறா", "பட்டிக்காடா பட்டணமா", "பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா", "தொட்டுக்கொள்ள வா" ஆகிய கண்ணதாசன் பாடல்கள், திக்கெட்டும் எதிரொலித்தன.
1970 பொங்கல் அன்று வெளிவந்த இந்தப்படம், சென்னை பிராட்வே, மதுரை சிந்தாமணி ஆகிய தியேட்டர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. 14 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
-
26th July 2014, 05:53 AM
#933
Junior Member
Platinum Hubber
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் 5 வண்ணப் படங்கள் தொடர்ந்து சாதனை .
ஒளிவிளக்கு
அடிமைப்பெண்
நம்நாடு
மாட்டுக்கார வேலன்
என் அண்ணன்.
அடிமைப்பெண் - மாட்டுக்கார வேலன் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவும் ஒளிவிளக்கு மற்றும் நம்நாடு 20 வாரங்கள்
மேல் ஓடியது . என் அண்ணன் 100 நாட்கள் ஓடியது .
பின்னர் எங்கள் தங்கம் - குமரிகோட்டம் - ரிக்ஷாக்காரன் - 3 வண்ணப்படங்கள் தொடர்ந்து 100 நாட்கள் மேல் ஓடியது .
-
26th July 2014, 06:10 AM
#934
Junior Member
Platinum Hubber
மாட்டுக்கார வேலனில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் சண்டை காட்சி - மக்கள் திலகத்தின் முழு திறமையை இந்த சண்டை காட்சியில் காணலாம் . என்ன ஒரு வேகம் - சுறுசுறுப்பு . எதிரிகளை பந்தாடும் அழகே அழகு . ஒரே நேரத்தில்
பலரை கட்டம் கட்டி சுழன்று சுழன்று அடிக்கும் காட்சி பரவசம் .
-
26th July 2014, 06:23 AM
#935
Junior Member
Platinum Hubber
நல்லவன் வாழ்வான் படத்தில் இடம் பெற்ற இந்த காட்சியில் மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பும் நகைச்சுவை
காட்சியும் அருமை .
-
26th July 2014, 07:44 AM
#936
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
மாட்டுக்கார வேலனில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் சண்டை காட்சி - மக்கள் திலகத்தின் முழு திறமையை இந்த சண்டை காட்சியில் காணலாம் . என்ன ஒரு வேகம் - சுறுசுறுப்பு . எதிரிகளை பந்தாடும் அழகே அழகு . ஒரே நேரத்தில்
பலரை கட்டம் கட்டி சுழன்று சுழன்று அடிக்கும் காட்சி பரவசம் .
Fantastic climax scene and the shirt MGR wears is super.
-
26th July 2014, 08:14 AM
#937
Junior Member
Diamond Hubber
அழகப்பா கல்லூரி விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். முன் மகேந்திரன் பேசிய பேச்சு மிகப் பிரபலம். மேடையிலேயே எம்.ஜி.ஆர் எழுதிக் கொடுத்த பாராட்டு வரிகள், மகேந்திரன் வீட்டின்முகப்பை இன்னும் அலங்கரிக்கின்றன!
எம்.ஜி.ஆர் தந்த உற்சாகத்தினால்,'காஞ்சித் தலைவன்’ படத்தில் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்காக மகேந்திரன் எழுதிய 'அனாதைகள்’ என்ற நாடகம், பிற்பாடு 'வாழ்வே வா’ என எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடிக்க ஆரம்பிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் கைவிடப்பட்டது!
ஏறத்தாழ 25 படங்களுக்குக் கதை- வசனம் எழுதியிருக்கிறார். அவரின் நாடகம் 'தங்கப் பதக்கம்’ நிறையத் தடவைகள் மேடை ஏற்றப்பட்டு, வெற்றிகரமாகத் திரை வடிவத்திலும் வந்தது!
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, கை கொடுக்கும் கை, நண்டு, அழகிய கண்ணே, ஊர்ப் பஞ்சாயத்து, கண்ணுக்கு மை எழுது, சாசனம் என்பவை மகேந்திரன் இதுவரை இயக்கிய 12 படங்கள்!
எம்.ஜி.ஆருக்காக கல்கியின் 'பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆரின் வீட்டிலேயே தங்கி திரைக்கதையாக எழுதினார். ஆனால், அந்த நாவல் படமாக்கப்படவில்லை என்பது அதன் பிறகான சோகம்!
'முள்ளும் மலரும்’ படத்தின் 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’ பாடலின் ஆரம்பக் காட்சியை எடுக்கத் தயாரிப்பாளர் மறுத்துவிட்ட நிலையில், கமல்ஹாசன் அதைப் படமாக்கப் பணம் கொடுத்து உதவினார்!
அஸ்வினி, சுஹாசினி, சாருலதா, மோகன், சாருஹாசன் ஆகியோர் இவருடைய பெருமை மிகு அறிமுகங்கள்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரனின் அழைப்பை ஏற்று, கிளிநொச்சியில் தமிழ் இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள்திரைப் படப் பயிற்சி அளித்தார். விடைபெறுகையில் பிரபாகரன் அளித்த விருந்தை, 'சில்லிடும் தருணம்’ எனக் குறிப்பிடுகிறார்!
மகேந்திரனின் எல்லாப் படங்களுமே அதிக பட்சம் 40 நாட்களில் எடுக்கப்பட்டவைதான். 'உதிரிப்பூக்கள்’ 35 ரோல் ஃபிலிம் சுருள்களில், 30 நாட்களில் படமாக்கப்பட்டது!
'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூன்று தேசிய விருதுகள் வென்றன. விருது வாங்கப் போன மகேந்திரன், அங்கே வந்திருந்த எம்.ஜி.ஆரிடம் விருதுகளைச் சமர்ப்பித்து, 'எல்லாம் உங்களால் வந்தது’ என்றார்!
சினிமா வேண்டாம் என காரைக்குடிக்குத் திரும்பிய மூன்று தடவையும், மகேந்திரனை மீண்டும் அழைத்து வந்தது எம்.ஜி.ஆர்!
மகேந்திரன் இயக்கிய 12 படங்களில், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை என நான்கு படங்கள் மட்டுமே டி.வி.டி-யில் கிடைக்கின்றன. மற்றவை கிடைப்பது இல்லை. யாராவது அவற்றை அளித்தால், அவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்ளச் சம்மதிக்கிறார் மகேந்திரன்!
கடிகாரம் மற்றும் தங்க நகைகள் அணியும் வழக்கம் இல்லை. மிக எளிமை விரும்பி!
கதை-வசனம் எழுதி, இயக்கும் படங்களின் முக்கியமான கேரக்டருக்கு 'லட்சுமி’ என்று பெயர் சூட்டுவார். 'தங்கப்பதக்கம்’ சௌத்ரியின் மனைவி, 'உதிரிப்பூக்க’ளில் அஸ்வினி பெயர் லட்சுமிதான். கஷ்ட காலங்களில் மகேந்திரனுக்குச் சாப்பாடு போட்ட நடிகர் செந்தாமரையின் மனைவி பெயர் தான் லட்சுமி!
தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர் களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர், சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். 'என்னை இது வரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின்’ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!
அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கே பிடித்தது 'உதிரிப்பூக்கள்’. 'பிழைகள் குறைந்த படம்’ என்பார் சிரித்துக்கொண்டே!
நன்றி : கதிர்வேலன் , சினிமா விகடன் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2014, 08:16 AM
#938
Junior Member
Diamond Hubber
The greatest undisputed Actor/leader the world will ever see; unanimous choice of all sections of the society throughtout the World.
Last edited by saileshbasu; 26th July 2014 at 08:21 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2014, 08:56 AM
#939
Junior Member
Veteran Hubber
மாட்டுக்கார வேலன் 101 வது நாள் வெற்றி விழாவின் போது, அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்கள் விருது வழங்கும் காட்சி

ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
26th July 2014, 09:00 AM
#940
Junior Member
Veteran Hubber
ராணி லலிதாங்கி (பின்னாளில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்தது) படத் தொடக்க விழாவில் .....

மக்கள் திலகத்துடன் (இடமிருந்து வலமாக ) பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ், இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், தயாரிப்பாளர் கல்யாணராமன் ஆகியோர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Last edited by makkal thilagam mgr; 26th July 2014 at 09:08 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks