-
29th July 2014, 09:43 AM
#2571

Originally Posted by
gopu1954
கிருஷ்ணாஜி சார்,
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட நட்சத்திர
இரவில் கலந்து கொள்ள வந்த நடிகர் திலகம்,நெல்லை பூர்ணகலா
திரையரங்கில் நடைபெற்று வந்த உத்தமன் திரைப்பட மாலைக்காட்சிக்கு
வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அன்பு கோபு
கூடுதல் தகவல்களுக்கு நன்றி கோபு சார்
இந்த நட்சத்ர இரவு மேலும் பல நமது நெல்லை தகவல்கள் உங்கள் மூலமாக தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.
பூர்ணகல உத்தமன் மறக்கமுடியாத அனுபவம் .
படம் 51வது நாள் இறுதி நாள் என நினைவு
அன்று இரவு காட்சி 'தேவன் வந்தாண்டி ஒரு தீபம் கொண்டாடிகாதல் கொண்டானடி ' பாடல் ரசிகர்கள் once மோர் கேட்டு திரை அரங்கு operator
அதை மீண்டும் ஒளி பரப்பி lovely experience
-
29th July 2014 09:43 AM
# ADS
Circuit advertisement
-
29th July 2014, 09:46 AM
#2572
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
மிக அபூர்வமாக ஒரு பாடல்
தண்ணீர் தண்ணீர் திரைப்படத்திலிருந்து மானத்திலே மீனிருக்க.. என்ற பாடல்..
இப்படத்தில் மேகம் கருக்குதடி பாடல் மிகவும் பிரபலம். அதே போல் மற்ற பாடல்கலிலும் மெல்லிசை மன்னரின் புலமையும் திறமையும் நிறைந்திருக்கும்.
இப்பாடல் மறக்க முடியாத பாடலாகும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th July 2014, 09:50 AM
#2573
டீச்சரம்மாவின் கண்ணிய பாடகியின் இனிய பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி வாசு சார்
அதே போல் நீ ஒரு மகாராணி 'பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்'
எனக்கு மிகவும் பிடித்த சுசீலாவின் பாடல்களில் ஒன்று .சங்கர் கணேஷ் அவர்களின் ஒரு நல்ல இசைஅமைப்பு கோர்வை உள்ள பாடல் விடுதலை படத்தில் சந்திரபோஸ் இசை அமைப்பில் வந்த 'ராஜாவே ராஜா நீ தானே ராஜா' பாடல் கொஞ்சம் இந்த 'பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் ' பாடலை ஒத்து இருக்கும் என்ற நினைவு
நினைவு கூர்ந்த ராஜேஷ் அவர்களக்கும் வாசு சார் அவர்களுக்கும் நன்றி
Last edited by gkrishna; 29th July 2014 at 09:53 AM.
gkrishna
-
29th July 2014, 09:54 AM
#2574
தண்ணீர் தண்ணீர் மிக அருமையான பாடலை நினைவு படுத்தி உள்ளீர்கள்
அருந்ததி விடுகதை போட்டு ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
அது இந்த படமா அல்லது அச்சமில்லை அச்சமில்லை யா ?
எனக்கு அடிகடி இந்த குழப்பம் ஏற்படும் மன்னிக்கவும்
-
29th July 2014, 10:34 AM
#2575
Senior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
தண்ணீர் தண்ணீர் மிக அருமையான பாடலை நினைவு படுத்தி உள்ளீர்கள்
அருந்ததி விடுகதை போட்டு ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
அது இந்த படமா அல்லது அச்சமில்லை அச்சமில்லை யா ?
எனக்கு அடிகடி இந்த குழப்பம் ஏற்படும் மன்னிக்கவும்
டியர் கிருஷ்ணாஜி,
'புதிரு போட வந்தேனே பொட்டப்புள்ளே' என்ற அந்தப்பாட்டு அச்சமில்லை அச்சமில்லை படத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் வந்தது.
மகா போர் பாட்டு.
கள்ளக்குரல் பாடகி எஸ்.ஜானகி ஓவராக அலட்டிக்கொண்ட காலகட்டத்தில் வந்த பாடல். கேட்கும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படும்....
Last edited by mr_karthik; 29th July 2014 at 10:37 AM.
-
29th July 2014, 11:04 AM
#2576
Senior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
1977-78 மக்கள் திலகம் அன்றைய முதல்வர் அவர் தலைமையில் பாளையங்கோட்டையில் பிரமாண்டமான நட்சத்திர இரவு.
நெல்லை ஜங்ஷன் பொருட்காட்சி மைதானம் அவ்வளவு பெரியது இல்லை என்பதால் பாளையங்கோட்டை ஜான் 'ஸ் காலேஜ் மைதானம் தான் பெரியது என்பதால் அங்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
அந்த நட்சத்ர இரவு highlight என்னவென்றால் தலைவரின் சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகம் .வெளுத்து கட்டி விட்டார் . குரல்வளை நொறுங்கி முகம் எல்லாம் உணர்ச்சி குவியல் ஆகி இறுதியில் பௌத்த பிட்சுவின் காலடியில் தன தலை சாய்த்து அப்படியே விழுந்து விட்டார். தலைவரின் உணர்ச்சி மயமான நடிப்பை பாராட்டி அடுத்த நாள் தினத்தந்தி மாலை முரசு தினமலர் எல்லாம் ஒரே நடிகர் திலகம் மக்கள் திலகம் புகை படங்களாக நிரம்பி வழிந்தன

Originally Posted by
gopu1954
கிருஷ்ணாஜி சார்,
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட நட்சத்திர
இரவில் கலந்து கொள்ள வந்த நடிகர் திலகம்,நெல்லை பூர்ணகலா
திரையரங்கில் நடைபெற்று வந்த உத்தமன் திரைப்பட மாலைக்காட்சிக்கு
வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அன்பு கோபு
டியர் கோபு சார்,
நடிகர்திலகம் பூர்ணகலா தியேட்டருக்கு வந்திருக்கலாம். ஆனால் அது 'உத்தமன்' படத்துக்குத்தானா?. ஏனென்றால், உத்தமன் வெளியானது 1976 மே மாதம். எம்,ஜி,ஆர். முதல்வரானது அதற்கு ஒரு வருடம் கழித்து. விழா நடந்தது அவர் முதல்வராகி சில மாதங்கள் கழித்து. கிருஷ்ணாஜி சொன்னதுபோல 1977-78 காலகட்டத்தில்.
-
29th July 2014, 11:07 AM
#2577
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
நீயும் நானும் படத்தில் ஈஸ்வரி பாடியிருந்த 'ஊஞ்சல் கட்டி ஆடட்டுமா உருவைக்கொஞ்சம் மாற்றட்டுமா' பாடல் அட்டகாசமான ஒன்று. அபூர்வங்களை தேடித்தேடி கொண்டுவந்து கொட்டுகிறீர்கள்.
சிலருக்கு மறந்திருக்கும் பாடல், பலருக்கு தெரியாதிருக்கும் பாடல். மக்கள் மத்தியில் பிரபலமாகாத காரணம் மீடியாக்கள் மட்டுமல்ல. பாடிய பாடகியும்தான். பின்னே?. இதையெல்லாம் பிரபலப்படுத்த வேண்டும் என்று ரசிகரான உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தில் ஒரு சதவீதம்கூட பாடியவருக்கு இல்லையே.
அப்படி இருந்திருந்தால், கையில் மைக் கிடைக்கும்போதெல்லாம் "காதோடுதான் நான் பாடுவேன்" மட்டுமே பாடிக்கொண்டிருக்க தோணுமா?...
-
29th July 2014, 11:07 AM
#2578
கார்த்திக் சார்
மிக்க நன்றி
எனக்கு எப்போதும் தண்ணீர் தண்ணீர் படத்திற்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கும் ஒரு குழப்பம் உண்டு
இரண்டுமே எங்கள் நெல்லையை அடிப்படையாக கொண்ட கதை
அதனால் தான் இந்த கேள்வி எழுந்தது .
மீண்டும் ஒரு முறை நன்றி
-
29th July 2014, 11:11 AM
#2579

Originally Posted by
mr_karthik
டியர் கோபு சார்,
நடிகர்திலகம் பூர்ணகலா தியேட்டருக்கு வந்திருக்கலாம். ஆனால் அது 'உத்தமன்' படத்துக்குத்தானா?. ஏனென்றால், உத்தமன் வெளியானது 1976 மே மாதம். எம்,ஜி,ஆர். முதல்வரானது அதற்கு ஒரு வருடம் கழித்து. விழா நடந்தது அவர் முதல்வராகி சில மாதங்கள் கழித்து. கிருஷ்ணாஜி சொன்னதுபோல 1977-78 காலகட்டத்தில்.
கார்த்திக் சார்
உங்களை போன்றே எனக்கும் இந்த சந்தேகம் தோன்றியது திரு கோபு அவர்களின் பதில் கண்டு . இருந்தாலும் வருஷத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை . ஆனால் அந்த நட்சத்ர இரவுக்கு மக்கள் திலகம் வந்த நினைவு உண்டு .
என்னிடம் ஆவணம் எதுவும் இல்லை இதை உறுதி செய்வதற்கு
Last edited by gkrishna; 29th July 2014 at 11:22 AM.
gkrishna
-
29th July 2014, 11:38 AM
#2580
Senior Member
Veteran Hubber
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் தொடரில் 'ரமலான் சிறப்புப் பாடலாக' நீங்கள் அளித்த 'நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே' பாடல் அருமையான ரமலான் பிரியாணி. சுவைத்து மகிழ்ந்தோம். இப்பாடல் நமது மீடியாக்களால் ரமலான், பக்ரீத், மிலாடி நபி, மொகரம் கொண்டாட்டங்களின்போது தேடிஎடுத்து ஒளிபரப்பப்படும்.
இப்படத்தை (குலேபகாவலி) படத்தை நான் பார்த்தது ஒரு வித்தியாச அனுபவம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்மாபட்டினம் என்ற ஊரில் ஒரு நண்பனின் திருமணத்துக்கு சென்றிருந்தோம். மறுநாள் காலை திருமணம், முதல்நாள் மாலையே சென்றுவிட்டோம் (சென்னையிலிருந்து ரயில் வசதி அப்படி) . இரவு பொழுதை கழிக்க என்ன செய்வது என்று யோசித்தபோது, நண்பனின் கஸின் ஒருவர், பக்கத்தில் 'மணமேல்குடி' என்ற ஊரில் டூரிங்க் டாக்கீஸில் படம் பார்க்க அழைத்துச்சென்றார். அந்தப்படம்தான் 'குலேபகாவலி'. நாங்கள் பார்த்தபோது படம் வெளியாகி எப்படியும் 25 வருடம் ஆகியிருக்கலாம்.
ஆகா..., இந்த திரியின்மூலம் எவ்வளவு மலரும் நினைவுகள்...
Bookmarks