-
9th August 2014, 11:46 PM
#1721
Junior Member
Platinum Hubber

இந்த தமிழ் சினிமாவில் பாடல்கள் எல்லாம் எப்படி பரிணாமம் அடைஞ்சிருக்கு பாருங்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில்
நீதி போதனை மிகுந்த பாடல்கள்.
-இந்த வார டைம் பாஸ் இதழ்.
-
9th August 2014 11:46 PM
# ADS
Circuit advertisement
-
9th August 2014, 11:49 PM
#1722
Junior Member
Platinum Hubber
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த செய்தி புகைப்படத்துடன்
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
-
9th August 2014, 11:50 PM
#1723
Junior Member
Platinum Hubber

நன்றி: ஜூனியர் விகடன்.
-
9th August 2014, 11:52 PM
#1724
Junior Member
Platinum Hubber
இன்றைய மக்கள் குரல் தினசரியில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------------------------
-
9th August 2014, 11:53 PM
#1725
Junior Member
Platinum Hubber
-
10th August 2014, 12:08 AM
#1726
Senior Member
Devoted Hubber
[QUOTE]QUOTE=KALAIVENTHAN;1153753]மது போன்ற தீய பழக்கங்கள் பிடிக்காத நடிகர் M.G. ராமச்சந்திரன் அவர்கள் அரசியலில் குதித்து மக்கள் ஆதரவுடன் மக்கள் (திலக) முதல்வராக ஆனவுடன் அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களை காப்பாற்றியிருந்தால் நீங்கள் இட்ட பதிவு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறியலாமா!? ஏன் மது புகையோடு நிறுத்தி விட்டீர்கள்? 'மாது'க்களை கையாளும் விதத்தையும் குறிப்பிட்டிருக்கலாமே!

Originally Posted by
sivajisenthil
--------------------------------------------------------------------------------------------------------
எந்த விதமான தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாமல்,
தனக்கென்று ஒரு கொள்கையும், கோட்பாடும் வகுத்துக்கொண்ட புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள், மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்தவர்.
அறிவுரை தான் கூற முடியும். அதற்காக மது விலக்கு சட்டத்தை திணித்து தனது கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
கணவன் - மனைவி ஆடிப்பாடி மகிழ்வது கூட தீய பழக்கம் என்றால் உங்களுடன் வாதிட விரும்ப வில்லை. புகை பிடிக்கும் காட்சியை நியாயப்படுத்துவதற்கு மேல் நாட்டு படக்காட்சிகள் பதிவிட வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த பதிவு திரு. ரவி கிரண் சூரியா இனி திரியினில் வந்து குழப்பங்கள் செய்யக்கூடாது என்பதற்காகத்தான். தகுந்த அறிவுரையை முதலில் அவருக்கு கூறுங்கள். எங்களிடம் விவாதம் வேண்டாம்.
எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.
கலைவேந்தன்
சத்த்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !
, ஆகஸ்ட் 09, 10:10 PM IST

எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.
இதுபற்றி வாலி கூறியதாவது:-
"ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.
"வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
"என்ன அண்ணே?'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.
"நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.
"ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?'' என்று கேட்டேன்.
எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:
"வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், "கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!'' என்று சொல்றாங்க.
உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.
"அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, "சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
வெளியே வரும்போது நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''
மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்த எம். ஜி. ஆர். அவர்களின்
கொள்கை இதுதானா? கலைவேந்தன்
எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.
நல்ல கொள்கை
-
10th August 2014, 12:31 AM
#1727
Junior Member
Diamond Hubber
Last edited by saileshbasu; 10th August 2014 at 12:38 AM.
-
10th August 2014, 06:39 AM
#1728
Junior Member
Platinum Hubber
கலைவேந்தனின் பதிலையும் , வாலியின் கட்டுரையையும் ஒப்பிட்டு ''நல்ல கொள்கை '' என்று பதிவிட்டு ஆனந்தமடைந்திருக்கும் இலங்கை பெரியவர் உள் மனதில் இன்னும் எத்தனை குறைகள் உள்ளதோ ?
பாவம் பெரியவர் விட்டு விடுவோம் ..ஆவணங்களை தேடி தேடி மீள் பதிவிட்டு மனசாந்தி அடையும் பெரியவருக்கு
பாராட்டுக்கள் ..எம்ஜிஆரின் புகழ் - சாதனைகள் -ஏற்று கொள்ள இயலாதவர்களின் அறியாமையை கண்டு பரிதாபம்
படுகிறோம் .
-
10th August 2014, 09:05 AM
#1729
Senior Member
Seasoned Hubber
Just noticed. Belated Birth Day greetings Yukesh Babu
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th August 2014, 09:18 AM
#1730
Junior Member
Platinum Hubber
Bookmarks