-
12th August 2014, 05:02 PM
#11
Senior Member
Senior Hubber
ம்ம் நன்றி க்ருஷ்ணா ஜி அண்ட் ராகவேந்தர் சார் ஃபார் இனிய பாடல்களுக்காக..
மன்னார் குடி ராஜகோபாலனுக்காக்த் தான் மதுண்ணா..
*
டி.ஆர்.எம் சுசீலா காம்பினேஷன் ஒரு டைப் என்றால்
சீர்காழி எஸ்.ஜி அண்ட் சுசீலாம்மா வேறொரு டைப்..
மதுரையில் தெப்பக்குளம் போகும்வழியில் இருந்தது அந்ததியேட்டர்.. கணேஷ் தியேட்டர் என நினைவு.. அங்கு என் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு பெண்மணி அந்தப் படத்திற்கு என்னை துணைக்கு அழைத்துச் சென்றார்கள்..அப்போது அவருக்கு மணமாகவில்லை ... எனக்கும் தான் (ஏனெனில் நான் எட்டாம் க்ளாஸோ ஒன்பதாவதோ)..மேட்னி ஷோ...
சரித்திரகாலப் படம் தான் ஆனந்தன் சரோஜா தேவி..படப்பெயர் நினைவு வந்திருக்குமே.. யானைப்பாகன்..
இனி பாடல்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே..
பொங்கும் எழில் பருவம்
பெண்களின் இளம் உருவம்
சிந்தையில் உறவாடும் இன்ப உருவம்
கன்னியின் ஆவல் தனைகடைக்கண் சொல்லும்கண்ணே
எண்ணத்தைக் கிள்ளும் அந்த இன்பத்தை சொல்லும் முன்னே
அலை மோதும் உணர்வாலே கனலாகவே
உள்ளம் ஆடி வானம் தொடும் ஆசைக் கடலாகவே
நிழலாகி உருவான காதல் தன்னை
நினைந்து நினைந்து இன்பம்
இணைந்து பருகும் முன்னே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்..
**
நல்ல பாட்டு தானே..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014 05:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks