-
13th August 2014, 09:45 AM
#3821
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014 09:45 AM
# ADS
Circuit advertisement
-
13th August 2014, 09:49 AM
#3822

Originally Posted by
Gopal,S.
99% சிவாஜி ரசிகர்களாலேயே ,ஆரம்பிக்க பட்டு,நடத்த பட்டு,பங்களிக்க பட்ட திரி. இதன் வெற்றி ,சிவாஜி ரசிகர்களின் பரந்து விரிந்த அறிவு,தெளிவு,ரசனை மற்றும் விவரங்களின் தெளிவை நிரூபித்துள்ளது.இது எனக்கு சந்தோஷமே ஆனாலும் ,கார்த்திக் ,வாசு,ராகவேந்தர்,சி.க.,ராஜேஷ்,மது, கிருஷ்ணா எல்லோருமே நமது முக்கிய திரியான பாகம்-14 ஐ வந்து கவனிக்க வேண்டுமாய் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா ,பாகம்-2 ,மதுர கானத்தை துவக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை வழி மொழிகிறேன்.
பாகம்-2 வெற்றி பெற வாழ்த்துக்கள். இவ்வளவு வேகம்,பதிவுகளின் மேல் குவிய வேண்டிய கவனத்தை சிதறடிக்க வாய்ப்புண்டு.
காலை வணக்கம்
உண்மை கோபால் சார் . நேற்று இரவு நான் உண்மையில் பயந்து போய் வாசு அவர்களுக்கு போன் செய்து எனது நடுக்கத்தை பகிர்ந்து கொண்டேன்.
இந்த திரியில் நல்ல நல்ல பாடல்கள் மற்றும் சுவையான தகவல்கள் மேலும் வினோத் சார் அவர்களின் கருத்து படங்களுடன் கூடிய பழைய நிகழ்சிகள் என்று கலந்து கட்டி கொண்டு இருந்தாலும் அதையும் மீறி ஒரு நல்ல நட்பு,புரிதல் என்ற வளையம் உருவாகி கொண்டு இருக்கின்றது. அந்த சங்கிலி வளையம் அறுந்து விட கூடாது என்பது தான் அடியேனின் தினசரி பிரார்த்தனை .
எதிலும் சற்று நிதானம் தேவை என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு .அதே சமயம் ராஜேஷ் சார் கூறியது போல் காட்டாறு வெள்ளத்தை அணை போடவும் முடியாது .
எது எப்படி இருந்தாலும் உங்கள் வாழ்த்து ஆலோசனை இரண்டும் இந்த திரியின் வளர்ச்சிக்கு என்பதில் சற்றும் ஐயம் இல்லை
துரை தன திரை வாழ்க்கையை உதவியாளர் ஆக டைரக்டர் யோகானந்த் அவர்களிடம் துவக்கி பின் ஹம்சகீத என்ற கன்னட படத்தின் இயக்குனுர் G .V ஐயர் அவர்களிடம் பணி புரிந்தார் . அவளும் பெண்தானே இவரது இயக்கத்தில் வெளி வந்த முதல் தமிழ் படம் சற்று புதுமையான கருத்துகளுடன் சமுதாய பார்வையை வெளிபடுத்திய படம் இவரது பசி (1979), குடிசை வாழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த படம் .இந்திய அரசாங்கத்தால் சிறந்த தமிழ் படம் என்ற பரிசை பெற்ற படம் . நடிகை ஷோபா இந்த திரை படத்தில் குப்பை பொறுக்குபவர் பாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார் .அதனால் அவருக்கு அந்த ஆண்டின் சிறந்த தேசிய நடிகை விருதும் கிடைத்தது
சில நல்ல படங்கள்
ஒரு குடும்பத்தின் கதை (1975)
பாவத்தின் சம்பளம் (1977)
துணை (1982)
ஒரு மனிதன் ஒரு மனைவி (1985)
ஒரு வீடு , ஒரு உலகம் (1975)
பாலைவனத்தில் பட்டாம்பூச்சி (1988)
இவரது முதல் படமான அவளும் பெண்தானே திரை படத்தில் இடம் பெற்ற ரசித்த பாடல் ஒன்று பன்முக குரல் பாலாவும் கண்ணிய பாடகி சுசீலாவும் இணைந்து பாடியது

வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது
(வார்த்தைகள் )
நன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்
பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்
வார்த்தைகள் என்னைச் சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
(வார்த்தைகள் )
உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து
பறவை ஒன்று வந்தது - அதன்
உடலைத் தின்று பசியைத் தீர்க்க
உலகம் சுற்றி நின்றது
பறவையின் மனமோ பால் மனம் என்று
பார்த்தேன் எடுத்தேன் கையோடு
உறவேது பேசும் ஊரென்ன சொல்லும்
இரு மனம் கலந்தால் அன்போடு
(வார்த்தைகள் )
காலம் ஒரு நாள் கனியும் என்று
கனவிலும் நந்தன் நினைத்தேனா
கடவுள் மனிதன் வடிவில் வந்து
கருணையை என் மேல் பொழிந்தன
ஏழையின் உள்ளம் கோவிலை எண்ணி
தேவியை இங்கு ஏற்றினேன்
நெஞ்சிலே பொங்கும் நினைவெலாம்
வண்ண மாலையாய்க் கொண்டு சூட்டினேன்
(வார்த்தைகள் )
v குமார் இசை என நினைவு முத்துராமன் சுமித்ரா நடித்து
நடிகை பண்டரிபாய் தயாரிப்பு
http://www.inbaminge.com/t/a/Avalum%...rathu.eng.html
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th August 2014, 09:56 AM
#3823
Senior Member
Seasoned Hubber
எஸ் வி ஜி, கிருஷ்ணா ஜி வாங்க வாங்க காலை வணக்கங்கள்
கல்யாண பந்தல் அலங்காரம் மற்றும் அவளும் பெண் தானே பாடல்கள் அற்புதம்
============================
வாசு ஜி,கிருஷ்ணா ஜி, எஸ்.வி ஜி இதோ உங்களுக்காக அருமையான இரு பாடல்கள்
ஒரே மெட்டு கொஞ்சம் மாற்றத்துடன் இன்னொரு மொழியில்
நமக்கு என்றும் பிடித்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதி ராதா ஜெயலெக்*ஷ்மி பாடிய மனமே முருகனின் மயில் வாகனம்
தெலுங்கில் இசையரசியின் குரலில் மாஸ்டர் வேணு சற்றே மாற்றிய மெட்டு
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th August 2014, 10:08 AM
#3824
Junior Member
Platinum Hubber
கிருஷ்ணா சார்

இன்றைய பொழுது சுமித்ராவின் அறிமுகத்தோடு களை கட்டுகிறது .பரிதாபமான முகம் .அகன்ற விழிகள் -1977-1980 வரை நிறைய படங்களில் நடித்தார் .நிழல் நிஜமாகிறது - சிட்டுக்குருவி
எனக்கு பிடித்த படங்கள் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 10:10 AM
#3825
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணாஜி, வாசு சார், ராஜேஷ் ஜி,கோபால் ஜி, எஸ்வி சார், ராகவேந்தர் சார், முரளி சார் குட்மார்னிங்க்..
ஆஹா மங்களமா ஒரு பாட்டு
மனமே முருகனின் மயில் வாகனம் அழ்கு..நன்றி
க்ருஷ்ணாஜி..சுமியோட பாட்டு க் கேட்டதில்லை..
காலங்கார்த்தால ஒலிக்கும்கீதம்
அலைபாயுதே கண்ணா என் மனம்மிக அலைபாயுதே..
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!
தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?
குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு
**
மிஸஸ் அஜீத் பாடிய வெர்ஷனை விட புதிய சங்கமம் என்ற படத்தில் ஒரு வெர்ஷன் வரும்..இருவர் பாடிய பாட்டு எஸ்பி..வாணியா தெரியவில்லை..வெகு அழகாய் இருக்கும்..
இந்தப் பாட்டை வைத்தே பாலகுமாரன் தனது’தலையணைப் பூக்கள்” என்னும் நாவலில் க்ளைமாக்ஸில் இந்தப் பாட்டையும் வேதாந்தத்தையும் மிக்ஸ் செய்து எழுதியிருப்பார்..அதுவும் எப்பொழுது கதையின் நாயகன் ஹார்ட் அட்டாக்கில் துடிக்கும் போது.. அதுவும் நன்றாக இருக்கும்..
ம் அப்புறம் வரட்டா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 10:12 AM
#3826
பொதுவாக ராஜாவின் தாய்-சேய் பாடல்கள் நம்ம மனதைக் கரைக்கும் உணர்ச்சிகர மெலொடிகளா இருக்கும், இந்த பாடல் அப்படியில்லாமல் ஒரு குஷியான விளையாட்டா போற பாட்டு.
ஒரு குழந்தைய பார்த்துக்கிறதுன்னா சும்மாவா, கண்ணே, மணியே முத்தேன்னு கொஞ்சி, மன்னவனே நல்லவேன்னு பாடி, பாலூட்டி சோறூட்டி, முரண்டு செய்ற முரட்டு பாலகனைச் செல்லமா மிரட்டி அதட்டி சொல்லுறத கேக்க வச்சு, கெட்டபழக்கம் எல்லாம் விலக்கி, நல்ல பழக்கம் எல்லாம் சொல்லிக்குடுத்து, கூட குழந்தையா மாறி விளையாடி ஆட்டம் ஆடி, ஆராரோ தாலாட்டு சொல்லி தூங்க வச்சு அப்பப்பா.. எத்தனை இருக்கு!!. இது அத்தனையும் இருக்கு இந்தப் பாட்டுல 
குடுத்திருக்கிற துணுக்குல அப்படியே ஒத்தை வயலினோட ஒரு சாஸ்த்திர சங்கீதமா அமைதியா ஆரம்பிச்சு ஒவ்வொரு கருவியா பக்கவாத்தியமா கூட சேர்ந்து அது போற இடம் கவனிங்க.. இந்த ப்யூஷன்னு என்னமோ இருக்காமே
)
இந்த படத்தில உள்ள மற்ற பாடல்களின் பிரம்மாண்ட வெற்றியால, இந்தப்பாடல் கொஞ்சம் மறைக்கப்பட்டதுன்னே சொல்லலாம். 
ரெட்டை வால் குருவி 1987 -பாலு மகேந்திர இயக்கம்
மோகன் ராதிகா அர்ச்சனா நடித்து வெளிவந்த திரைப்படம்

கண்ணிய பாடகி சுசீலா அம்மாவும் சின்ன குயில் சித்ராவும் இணைந்து
மிக அபூர்வமான பாடல்
பெண்1 தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ
பெண்2 நான் கண்டெடுத்த கட்டுப் பிள்ளை யாரோ
கண்ணியர் கொஞ்சிடும் கன்ன பிறான் இவர் தானோ
பெண்1 பாலை தான் கொடுக்கவா புட்டிப் பாலை தான்
பெண்2 அள்ளித் தான் கொடுக்கவா சத்துனவைத் தான்
பெண்1 இப்போ தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ
பெண்2 நான் கண்டெடுத்த கட்டுப் பிள்ளை யாரோ
கண்ணியர் கொஞ்சிடும் கன்ன பிறான் இவர் தானோ
இசை சரணம் - 1
பெண்1 பாலைக் குடிக்காமே படுத்துவதேனோ
பாலகனே இது போலும் பாவி மனம் அலை மோதும்
பெண்2 சேலை இழித்து இழுத்து சிரிப்பது ஏனோ
செய்வது ஏன் இந்த வம்பு தெரியுது உந்தனின் அன்பு
பெண்1 முரண்டு பிடிக்காதே முரடனைப் போல
பெண்2 நெருண்டு முழிக்காதே திருடனைப் போல
பெண்1 சொல்லுரதைக் கேட்டு கொள்ளு பாப்பாவாப்பா
பெண்2 கைய கைய சப்பாதே இந்தா புட்டிப் பால்
பெண்1 கண்ணைக் கண்ணைக் கொட்டாதே அம்மா கோவிப்பா
பெண்2 இப்போ தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
பெண்1 ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ
இசை சரணம் - 2
பெண்2 டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா டிஸ்கோ பாப்பா
டிஸ்கோ பாப்பா டிஸ்கோ ஆடு
பெண்1 பிஸ்கெட் தந்தா டிஸ்கோ பிடிக்கும்
பிஸ்கெட் தந்தா டிஸ்கோ பிடிக்கும் கிஸ் கிஸ் பண்ணு ஹ ஹ ஹ
பெண்2 அரச மரம் தேடி அலையவுமில்லே
அதிசயம் வேரெதுமில்லே அதிரசம் போலொரு பிள்ளை
பெண்1 பன்னீரில் நீராட்டி பாலன்னம் ஊட்டி
பாடட்டும்மா ஒரு பாட்டு பால் வடியும் முகம் காட்டு
பெண்2 உருண்டு தெருவில் வந்து மன்னு திண்ண வேணாம்
பெண்1 மருந்து குடிக்காமே மக்கார் பண்ண வேணாம்
பெண்2 மண்டையிலே ரெண்டு வைப்பேன் ராஜா ராஜா
பெண்1 சுட்டி புள்ளே நீ தூங்கு ஆரோ ஆரோ ஆரிராரோ
பெண்2 சொல்லும் பேச்சை நீ கேள்ளு ஹீரோ ஹீரோ வேராரோ
பெண்1 இப்போ தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ
ஆல மரத்தடி தேடி அமர்ந்தவர் தானோ
பெண்2 நான் கண்டெடுத்த கட்டுப் பிள்ளை யாரோ
கண்ணியர் கொஞ்சிடும் கன்ன பிறான் இவர் தானோ
பெண்1 பாலை தான் கொடுக்கவா புட்டிப் பாலை தான்
பெண்2 அள்ளித் தான் கொடுக்கவா சத்துனவைத் தான்
பெண்1 ஆஹா ஆரிராரி ராரி ராரோ ஆரோ
ஆரிராரி ராரி ராரி ராரோ
பெண்2 ஆரிராரி ராரி ராரி ராரி ராரோ
ஆரிராரி ராரி ராரி ராரி ராரோ
இந்த பாட்டு லிங்க் யாரவது ஹெல்ப் ப்ளீஸ்
-
13th August 2014, 10:12 AM
#3827
Junior Member
Platinum Hubber
ராஜேஷ் சார்
மிகவும் இனிமையான பாடல்களை வழங்கியுள்ளீர்கள் .இசையும் குரலும் அருமை .நன்றி
-
13th August 2014, 10:13 AM
#3828
Senior Member
Seasoned Hubber
சி.கா வருக வருக
எஸ்.வி , சுமித்ரா சாந்தமான அழகு ... .. நல்ல நல்ல பாத்திரங்கள் செய்தார்..
-
13th August 2014, 10:15 AM
#3829
Senior Member
Diamond Hubber
துரை இயக்கத்தில் வந்த படங்களில் ஒன்று ரகுபதி ராகவ(ன்) ராஜாராம்.
ஜெயச்சந்திரன், சுமித்ரா நடிக்க எஸ்.பி.பி., சுசீலா குரல்களில் ஒலித்த "தங்கத் தேரோடும் அழகினிலே" பாடல் மட்டுமே இன்று வரை இந்தப் படத்தை நினைவில் வைத்திருக்க உதவிக் கொண்டு இருக்கிறது.
இதைப் ப்ற்றி வேறு ஏதாச்சும் செய்தி இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
http://www.inbaminge.com/t/r/Ragupat...rodum.vid.html
-
13th August 2014, 10:19 AM
#3830
நடிகை சுமித்ரா வாசுதேவன் நாயர் இன் நிர்மால்யம் 1973 இல் உண்டு இல்லே ராஜேஷ் சார் ?
Bookmarks