-
14th August 2014, 08:21 AM
#3951
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல் - ஸ்பெஷல் வாசு சாருக்கு சமர்ப்பணம்

வாசு சார் தாங்கள் ஒவ்வொரு பங்கேற்பாளரையும் மறக்காமல் பாராட்டி நன்றி தெரிவித்த பதிவிருக்கிறதே.. இதைப் பாராட்டுவதற்கே தனித்திரி தொடங்கலாம்.. நன்றியை எப்படிப் போற்ற வேண்டும், எப்படிப் பாராட்ட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்துள்ள பதிவு அது... தாங்கள் கூறியது போல் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அபாரம்.
இதைப் படிக்கும் போது எனக்கு உடனே நினைவுக்கு வந்த பாடலைத் தங்களுடன் பகிரந்து கொள்ள விரும்புகிறேன். இத்திரியில் உள்ள பங்கேற்பாளர் ஒவ்வொருவருக்கும் இப்பாடல் பொருந்தும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வைர வரிகளுடன் இப்பாடலைப் படித்தும் கேட்டும் ரசியுங்கள்.
நன்றி இன்பமிங்கே இணையதளம்
ஆளுக்கொரு வீடு திரைப்படத்திலிருந்து கே.ஜமுனா ராணி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மெல்லிசை மன்னர்களின் இசையில்...
இப்பாடலில் மேண்டலின் அக்கார்டின் புல்லாங்குழல் மூன்றும் நம்மை மயக்கும் விதம்... ஆஹா... கேட்டு அனுபவியுங்கள்...
http://www.inbaminge.com/t/a/Aalukkoru%20Veedu/
இப்பாடலில் மெல்லிசை மன்னர் 54 ஆண்டுகளுக்கு முன் புரிந்துள்ள சாகசத்தை இன்று வரை யாராலும் கற்பனை கூட செய்ய முடியாது.. இந்தப் பாடலில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வரிகளை எழுதும் போது இந்த அளவிற்கு இப்பாடல் பிரமாதமாக உருவெடுக்கும் என நினைத்துக் கூட பார்த்திருப்பாரா எனத் தெரியாது..
இந்தப் பாடலில் இசைக் கருவிகளைப் பற்றி மட்டும் எழுத வேண்டும் என்பதற்காகத் தான் இது எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் பாடல் முழுவதுமே இசைக் கருவிகளின் சிறப்பு பரவியுள்ள படியால் தனித்தனியே எழுதுவது சிரமமாயுள்ளது.
கோரஸ் குரலுடன் துவங்குகிறது பாடல்.. தொடர்ந்து மேண்டலின்..மற்றும் கைதட்டல் ஓசைகள்...
தொடர்ந்து பல்லவி அம்பது வருஷம்....
பல்லவி முடிந்த உடனே ஒரு அக்கார்டின் கிளம்புகிறது... அந்த அக்கார்டின் துக்கடாக்களின் இடையில் ஒரு சின்ன கார்டு...அந்த துண்டு இசைக் கருவியின் ஓசையை காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்க வேண்டும்.
இந்த அக்கார்டின் முடிந்தவுடன் மேண்டலின் நுழைகிறது...மேண்டலின் முடிந்த வுடன் புல்லாங்குழல். புல்லாங்குழல் முடிவில் ஒரு மாத்திரை அளவில் அக்கார்டின்... மீண்டும் மேண்டலின்..
சரணம் துவக்கம்...
சரணத்தின் கூடவே ஒரு லேசான புல்லாங்குழல் கூடவே இணைந்து வருகிறது...
மீண்டும் பல்லவி...
தொடர்ந்து பிஜிஎம் புல்லாங்குழலுடன் துவக்கம்...
இப்போது வயலின்கள்.... சேர்ந்து கொள்கின்றன....
இது முடியும் போது மீண்டும் ஒரு மாத்திரையளவில் ஒரு கார்டு...
இம்முறை தனி கிடார் broken pieces...
தொடர்ந்து கோரஸ்...
தொடர்ந்து அக்கார்டின்...
அதைத் தொடர்ந்து சரணம்...
பின் பல்லவி..
பல்லவி முடிவில் கோரஸ் ஹம்மிங்... லலலாலலலா லலலாலா...
இந்த ஒவ்வொரு லலலாவுக்கும் இடையில் ஒரு கார்டு...
இப்போது அடுத்த சரணத்திற்கு லீடாக அக்கார்டின் அதைத் தொடர்ந்து மேண்டலின்...
இதைத் தொடர்ந்து புல்லாங்குழல்...
அந்த புல்லாங்குழல் இடைவெளியில் ஒரு கார்டு ...
வாழ்க வாழ்க வென்று பாட்டு முடிகிறது..
......
இப்போது நாம் என்ன செய்வோம்...
மீண்டும் இதே பாட்டை ரிபீட் செய்வோம்... ஒவ்வொரு இசைக் கருவியாய் போட்டுப் போட்டுக் கேட்போம்...
இது தான் மெல்லிசை மன்னரின் இசைக்குள்ள சிறப்பு...
பாடல் வரிகள்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே
பல்லவி
அன்பும் அறிவும் ஆசையும் நெறஞ்ச
ஐயா வாழ்க வாழ்க..
ஐம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்கவே..
அன்பும் அறிவும் ஆசையும் நெறஞ்ச
ஐயா வாழ்க வாழ்க..
ஐம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்கவே..
சரணம் 1
சின்னக் குழந்தையைப் போலே
துள்ளி விளையாடும் குணம் வாழ்க
ஐயா.. குணம் வாழ்க
ஒரு தினையளவு கூட
சுயநலம் இல்லாத மனம் வாழ்க
ஐயா மனம் வாழ்க..
ஒரு தினையளவு கூட
சுயநலம் இல்லாத மனம் வாழ்க
ஐயா மனம் வாழ்க..
....அன்பும் அறிவும்
கோரஸ் ஹம்மிங்...
சரணம் 2
காசு பணங்களை கைவிடலாகிய
கை வாழ்க வாழ்கவே
ஐயா கை வாழ்க வாழ்கவே
காலந் தெரிஞ்சி அதை விடுதலை செய்த
பை வாழ்க வாழ்கவே
ஐயா பை வாழ்க வாழ்கவே
..... அன்பும் அறிவும்
சரணம் 3
அளவுக்கு மீறி நேசம் வைப்பதால்
ஆபத்து வருமென்று
... ஆபத்து வருமென்று
அள்ளி அள்ளியே வழங்குகின்றார் இவர்
வள்ளல் வழியின்று
வள்ளல் வழியின்று
இமயமலையும் இவரும் ஒன்று...
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே
Last edited by RAGHAVENDRA; 14th August 2014 at 08:47 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
14th August 2014 08:21 AM
# ADS
Circuit advertisement
-
14th August 2014, 08:56 AM
#3952
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
அடுத்த வீட்டுப் பெண் ....
இசையரசியின் குரலில் ஜாலங்கள் படைத்த படம்...
ஒவ்வொரு பாடலிலும் அவருடைய குரலின் இனிமை பளிச்சிடும் என்றாலும்..
இந்தப் பாட்டில் அவர் தன்னுடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருப்பார்..
ஜப்பான் மற்றும தென்னிந்திய இசையின் சங்கமம்...
சுசீலா பி.பி.ஸ்ரீநிவாஸ் இருவருமே குரலில் ஜூகல் பந்தி படைக்க இசையமைப்பாளர் முழுப்பாட்டையுமே இரு வேறு இசைகளின் சங்கமமாக அமைத்திருப்பார்..
இதோ எனக்காக நீயே ராஜா... நமக்காக...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th August 2014, 09:02 AM
#3953
Senior Member
Seasoned Hubber
ஆமாம் பொன்னு மாப்பிள்ளே மிகச்சிறந்த ஃத்ரில்லர் மற்றும் காமெடி படம்.. படத்தின் கடைசி பகுதி தான் கொஞ்சம் இழுவை அ
ஆனாலும் வி.கே.ஆர், ஜெய், காஞ்சனா, நாகெஷ், ஏ.வீரப்பன் , மனோரமா என எல்லாமே தூள்..
-
14th August 2014, 09:22 AM
#3954
Junior Member
Platinum Hubber
மணி மாலா -இன்றைய சிறப்பு விருந்தனர் . பணக்கார குடும்பத்தில் இடம் பெற்ற இந்த பாடலில்
இசை அரசியின் குரலும் இசை அரக்கியின் குரலும் சூப்பர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th August 2014, 09:33 AM
#3955
Senior Member
Seasoned Hubber
எஸ்.வி அவர்களே அருமையான பாடல்
இருவரும் வெளுத்து கட்டியிருப்பார்கள். மூச்சு விடாமல் பாடுகிறோம் பேர்வழி என்று இன்று பாடுகிறார்களே .. இது தான்
உண்மையான மூச்சு விடாமல் பாடும் பாடல்...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th August 2014, 09:44 AM
#3956
நூறு முறை பிறந்தாலும் , நூறு முறை இறந்தாலும் ,
உன்னை பிரிந்து வெகுதூரம் நான் ஒரு நாளும் போவதில்லை ...
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை ...
ஓராயிரம் பார்வையிலே , உன் பாரவையை நான் அறிவேன் ;
உன் காலடி ஓசையிலே , உன் காதலை நான் அறிவேன் .
ஓராயிரம் பார்வையிலே , உன் பாரவைய நான் அறிவேன் ...
இந்த மானிடர் காதல் எலாம் ,
ஒரு மரணத்தில் மாறிவிடும் ;
அந்த மலர்களின் வாசமெல்லாம் ,
ஒரு மாலைக்குள் வாடிவிடும் .
நம் காதலின் தீபம் மட்டும் , எந்த நாளிலும் கூட வரும் ...
ஓராயிரம் பார்வையிலே , உன் பாரவைய நான் அறிவேன் ...
இந்த காற்றினில் நான் கலந்தேன் ,
உன் கண்களை தழுவுகின்றேன் ;
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் ,
உன் ஆடையில் ஆடுகின்றேன் .
நான் போகின்ற பாதை எலாம் உன் பூமுகம் காணுகின்றேன் ...
தமிழில் பாடகர் திலகம் ஹிந்தியில் ரபி கலந்து கட்டிய பாடல்
Last edited by gkrishna; 14th August 2014 at 09:51 AM.
gkrishna
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th August 2014, 09:56 AM
#3957
Junior Member
Platinum Hubber
தொகையறா
தமிழ் பாடல்களின் சிறப்பு . இனிய நண்பர் திரு கிருஷ்ணா அவர்கள் பதிவிட்டுள்ள '' நூறு முறை பிறந்தாலும் , நூறு முறை இறந்தாலும் ,உன்னை பிரிந்து வெகுதூரம் நான் ஒரு நாளும் போவதில்லை. ...
தொகையறா - வரிகள் அத்தனை புகழ் வாய்ந்த வரிகள் - பாடகர்களின் குரலில பிரமாதமாக
இருக்கும் . எனக்கு தெரிந்த சில பாடல்களின் தொகையறா
வானகமே ..வையகமே ... வளர்ந்து வரும் ....
எங்க வீட்டு பிள்ளையில் இடம் பெற்ற இந்த பாடல் .
தொடரும் ....
-
14th August 2014, 09:59 AM
#3958
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2014, 10:06 AM
#3959
[QUOTE=esvee;1156012][URL=[/QUOTE]
மிக அருமை எஸ்வி சார்
தொகையறா என்றவுடன்
காவிய தலைவியில்
'நேரான நெடுஞ்சாலை ' விஸ்வநாதன் குரலில்
பாட்டும் பரதமும்
'மழை காலம் வருகின்றது ' பாடலுக்கு முன் வரும் விஸ்வநாதன் குரல்
சொந்தம் படத்தில்
'கார் கால மேகம் -நல்லாத்தான் யோசிக்கிறீங்க நமக்கு என்ன குறைஞ்சு போச்சு '
வண்டிக்காரன் மகன் படத்தில்
'கார்த்திகை மாதம் கார் கால மேகம் ... பள்ளியறை ' பாலா
makkal thilagam
நாலு பக்கம் சுவர் நடுவில் பாரு இவரு
நடந்து போச்சு தவறு நாலு வார்த்தை உளறு
-
14th August 2014, 10:08 AM
#3960
Senior Member
Senior Hubber
ஹாய் ஆல் குட் மார்னிங்க் 
பொழுதும் விடியும் பூவும் மலரும் பொறுத்த்திருப்பாய் கண்ணா என எழுப்பிய மதுண்ணாவிற்கு நன்றி 
பொங்கும் பூம்புனல் ராகவேந்தர் ஜி நன்றி..அடுத்த வீட்டுப் பெண்ணில் மாலையில் மலர்ச் சோலையில் பாடல் பி.பி.எஸ் அதிகம் பேர் அறிந்திராத பாடல்.. ஜோராக இருக்கும்..(கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே, கண்களும் கவி பாடுதே எல்லாம் லைனில் வருகின்றன)
முரளி சார் வந்தால் புயலாய் வந்து புயலாய்ப் போவார்..இரண்டாம்பாகத்தில் எப்படி எனப் போகபோகத் தான் தெரியும்
க்ருஷ்ணா சார்..ஓராயிரம் பார்வையிலே வெகு நல்ல பாட்டு ஆ..னா..ல் அசோகன் பாடறா மாதிரி வந்திருக்கும்.. எஸ்.வி. சார்..மலருக்குத்தென்றல் பகையானால் எப்போது கேட்டாலும் இனிமை..
நேற்று ஒரு பாடல் போட்டு டெலீட் பண்ணிட்டேன்..இன்னிக்கு ப் போடலாம் என..அது..வ.நி.சி.யில் ஸ்ரீதேவி பாட்டு சுசீலாம்மா குரல்..
ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனதுக்குச் சுமை தானே..
உம்மென்ற கமல் துள்ளும் ஸ்ரீதேவி..துள்ளும் குரல்..அழகிய பாடல்..
Bookmarks