Page 223 of 401 FirstFirst ... 123173213221222223224225233273323 ... LastLast
Results 2,221 to 2,230 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #2221
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

    ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.

    'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.

    அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!

    பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.

    'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.

    பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.

    அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-

    'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

    பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.

    'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.

    அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'


    இவ்வாறு உதயகுமார் கூறினார்.


    Repeated article but interesting
    'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.

    One of the sample example and proof that Nadigar Thilagam Sivaji Ganesan was a thorough professional and does not give importance to personal matters when it comes to profession. Similarly, in the film "Raman Ethanai Ramanadi" he will do mimicry of Mr. PS Veerappa to an asst. director in his effort to getting a chance in Film. He could have said "No" but he did not because if the Story and Situation wants such things, he has always obliged.

    Great Magnanimity of the Greatest Actor on this Earth.

    Regards
    RKS

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2222
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த
    புகைப்படம்.


  4. #2223
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த செய்தி


  5. #2224
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த செய்தி


  6. #2225
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2226
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மற்றொரு திரியில், நமது புரட்சித்தலைவரின் புகழுக்கும் அவரது நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் ஒரு சில பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று.

    திரு. கலைவேந்தன் அவர்கள், ஆக்ரோஷமான பதிவுகளிட்டிருந்தாலும் (புள்ளி விவரங்களில் சிறு தவறுகள் நீங்கலாக) அதில் உள்ள நியாங்களை புறந்தள்ள முடியாது. "சிவந்த மண்" படத்தின் மூலம் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் எதிர்பார்த்த லாபம் அடையவில்லை என்று திரு. கலைவேந்தன் குறிப்பிட்டால், அதற்கு பதிலாக "சிவந்த மண்" படம் ஒடிய விளம்பரத்தை பதிவிடுகிறார் ஒரு அன்பர். கலைவேந்தன் குறிப்பிட்டது எதிர்பார்த்த லாபம் என்றுதானேயொழிய லாபமே கிட்ட வில்லை என்பதல்ல அதற்குள், அள்ளித்தெளித்த அவசரகோலப் பதிவு ஒன்று ! மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதான். இவர் மக்கள் திலகம் திரிக்குள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியதன் விளைவு இரண்டு திரிகளின் அன்பர்களுக்குள் ஒரு சொற்போர்.

    மற்றொரு அன்பர் " மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் நம் தலைவரின் முதுமையை பழித்து கிண்டல் பதிவு செய்துள்ளார். முதுமை வருவது
    எல்லோருக்கும் இயல்பு. ஒரு முதியவர் இளைஞர் வேடத்தில் நடிப்பது என்பது மிகவும் கடினம். ஆனால், ஒரு இளைஞர் முதியவர் வேடத்தில் நடித்து
    விடலாம். அது மிகவும் சுலபம். நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள், படையப்பா, ஞானப்பறவை, பூப்பறிக்க வருகிறோம் முதலான படங்களில் நடித்த போது அவரது முதுமைத் தோற்றத்தை பார்த்த பின்பு நாங்கள் உண்மையிலேயே கவலை கொண்டோம். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே என்று !


    1977ல் தமிழக முதல்வராக நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் பொறுப்பேற்றபோது கைவசம் சுமார் 25 புதிய படங்களை வைத்திருந்த விவரங்களை
    ஏற்கனவே நமது மக்கள் திலகம் திரியில் பதிவிட்டுள்ளேன். அன்பர் திரு. சிவாஜி செந்தில் அந்த பட்டியலை (authenticated information) பார்த்து விட்டு இது ஒரு miracle என்று ஒப்புக்கொள்ளட்டும். பட்டியலை வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை பதிவிட தயாராகவுள்ளேன்.


    இன்னொரு நண்பர், உணர்ச்சிகரமாக சில புண்படும் பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் திரு.கோபால். தயாரிப்பாளர்கள் ஜி.என். வேலுமணி, பந்துலு, ஸ்ரீதர், ஏ. பி. நாகராஜன் , போன்றவர்கள்தான் தங்களுடைய முந்தைய படங்களின் தோல்விகள் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட அவர்களாகவே எங்கள் மக்கள் திலகத்தை நாடி, தேடி, ஓடி வந்ததை அப்போது பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அதற்கேற்றாற்போல், மக்கள் திலகமும் தன்னை நம்பிய தயாரிப்பாளர்களை, நல்ல லாபம் அளிக்க வைத்து அவர்களை கைதூக்கி விட்டார். இதை அந்த இயக்குனர்களும் நன்றி மறக்காமல் பேட்டிகளும் அளித்தனர்.

    குறிப்பாக, மறைந்த இயக்குனர் ஏ.,பி. நாகரஜான் அவர்கள் "மற்ற நடிகர்களை வைத்து படம் பண்ணினேன் ஆனால், மக்கள் திலகத்தை வைத்து பணம் பண்ணினேன்" என்று பேட்டியளித்தார்.

    இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும், 3 இந்தி படங்கள் மற்றும் 3 தமிழ் படங்கள் எடுத்து அடைந்த நஷ்டத்தை, மக்கள் திலகத்தின் "உரிமைக்குரல்" என்ற ஒரே
    படத்தின் மூலமாக, அதுவும் பூஜை போடப்பட்ட அன்றே கடனிலிருந்து மீண்டதாக பேட்டியளித்துள்ளார்.


    இந்த தயாரிப்பாளர்கள் எவரையும் எங்கள் புரட்சித் தலைவர் அவர்கள் எந்த காலத்திலும் நிர்பந்தப்படுத்தியது கிடையாது. அதற்கு அவசியம் இல்லை. மிரட்டுவதற்கு அவரோ அல்லது அவர் சார்ந்திருந்த கட்சியோ அதிகாரத்தில் இருந்ததில்லை.

    பி. ஆர். பந்துலு அவர்களோ, "முரடன் முத்து" படத்துக்குப்பின் முகாம் மாறி மக்கள் திலகம் படங்களின் மூலம் மறு வாழ்வு பெற்றவர்.

    ஜி. என். வேலுமணி அவர்கள், 1963லேயே " பணத்தோட்டம்" காவியத்தில் எங்கள் பொன்மனசெம்மலை நடிக்க வைத்து பெருமை பெற்றவர்.

    கொழுத்த லாபத்துடன், முகாம் மாறிப்போன, ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை அவர்கள், அதற்கு பிறகு பட்ட பாட்டினை தமிழ் திரையுலகமே அறியும்..

    எங்கள் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன்" வெற்றிக்காவியம் வெள்ளி விழா காண்பதை தாங்க முடியாத எரிச்சலில், ஏதோ அவதூறு செய்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இனி மேலாவது, எங்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய வீண் புரளிகளையும், பொய்யான தகவல்களையும் பரப்பவேண்டாம் என்று இந்தப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 20th August 2014 at 10:25 AM.

  8. #2227
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ADIMAIPEN- BANGALORE -2011


  9. #2228
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர்கள் திரு செல்வகுமார் சார் / திரு ராமமூர்த்தி சார் / திரு கலைவேந்தன் சார்

    கடந்த சில தினங்களில் கசப்பான பதிவுகள் - பதிலுக்கு பதில் நேரத்தை வீணடித்து விட்டது .

    இனி மக்கள் திலகம் திரியில் நம்முடைய சாதனைகள் பற்றிய பதிவுகள் மட்டும் இடம் பெறட்டும் .

    நம் திரியின் நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து ,பதிவிட்டு வரவும் .

    முதற் கட்டமாக 22.8.2014

    நாடோடி மன்னன் - 57 வது ஆண்டு துவக்கம்

    இதயக்கனி - 40 வது ஆண்டு துவக்கம் .

    இரண்டு படங்களை பற்றிய உங்கள் அனைவரின் விமர்சனங்கள் - நிழற் படங்கள் - விளம்பரங்கள் பதிவிடவும் .
    Last edited by esvee; 20th August 2014 at 02:31 PM.

  10. #2229
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    VERY NICE

    THANKS LOGANATHAN SIR

  11. #2230
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    மற்றொரு திரியில், நமது புரட்சித்தலைவரின் புகழுக்கும் அவரது நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் ஒரு சில பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று.

    திரு. கலைவேந்தன் அவர்கள், ஆக்ரோஷமான பதிவுகளிட்டிருந்தாலும் (புள்ளி விவரங்களில் சிறு தவறுகள் நீங்கலாக) அதில் உள்ள நியாங்களை புறந்தள்ள முடியாது. "சிவந்த மண்" படத்தின் மூலம் இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் எதிர்பார்த்த லாபம் அடையவில்லை என்று திரு. கலைவேந்தன் குறிப்பிட்டால், அதற்கு பதிலாக "சிவந்த மண்" படம் ஒடிய விளம்பரத்தை பதிவிடுகிறார் ஒரு அன்பர். கலைவேந்தன் குறிப்பிட்டது எதிர்பார்த்த லாபம் என்றுதானேயொழிய லாபமே கிட்ட வில்லை என்பதல்ல அதற்குள், அள்ளித்தெளித்த அவசரகோலப் பதிவு ஒன்று ! மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதான். இவர் மக்கள் திலகம் திரிக்குள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தியதன் விளைவு இரண்டு திரிகளின் அன்பர்களுக்குள் ஒரு சொற்போர்.

    மற்றொரு அன்பர் " மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தில் நம் தலைவரின் முதுமையை பழித்து கிண்டல் பதிவு செய்துள்ளார். முதுமை வருவது
    எல்லோருக்கும் இயல்பு. ஒரு முதியவர் இளைஞர் வேடத்தில் நடிப்பது என்பது மிகவும் கடினம். ஆனால், ஒரு இளைஞர் முதியவர் வேடத்தில் நடித்து
    விடலாம். அது மிகவும் சுலபம். நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள், படையப்பா, ஞானப்பறவை, பூப்பறிக்க வருகிறோம் முதலான படங்களில் நடித்த போது அவரது முதுமைத் தோற்றத்தை பார்த்த பின்பு நாங்கள் உண்மையிலேயே கவலை கொண்டோம். எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே என்று !


    1977ல் தமிழக முதல்வராக நம் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் பொறுப்பேற்றபோது கைவசம் சுமார் 25 புதிய படங்களை வைத்திருந்த விவரங்களை
    ஏற்கனவே நமது மக்கள் திலகம் திரியில் பதிவிட்டுள்ளேன். அன்பர் திரு. சிவாஜி செந்தில் அந்த பட்டியலை (authenticated information) பார்த்து விட்டு இது ஒரு miracle என்று ஒப்புக்கொள்ளட்டும். பட்டியலை வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை பதிவிட தயாராகவுள்ளேன்.


    இன்னொரு நண்பர், உணர்ச்சிகரமாக சில புண்படும் பதிவுகளை வழங்கி கொண்டிருக்கும் திரு.கோபால். தயாரிப்பாளர்கள் ஜி.என். வேலுமணி, பந்துலு, ஸ்ரீதர், ஏ. பி. நாகராஜன் , போன்றவர்கள்தான் தங்களுடைய முந்தைய படங்களின் தோல்விகள் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட அவர்களாகவே எங்கள் மக்கள் திலகத்தை நாடி, தேடி, ஓடி வந்ததை அப்போது பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. அதற்கேற்றாற்போல், மக்கள் திலகமும் தன்னை நம்பிய தயாரிப்பாளர்களை, நல்ல லாபம் அளிக்க வைத்து அவர்களை கைதூக்கி விட்டார். இதை அந்த இயக்குனர்களும் நன்றி மறக்காமல் பேட்டிகளும் அளித்தனர்.

    குறிப்பாக, மறைந்த இயக்குனர் ஏ.,பி. நாகரஜான் அவர்கள் "மற்ற நடிகர்களை வைத்து படம் பண்ணினேன் ஆனால், மக்கள் திலகத்தை வைத்து பணம் பண்ணினேன்" என்று பேட்டியளித்தார்.

    இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும், 3 இந்தி படங்கள் மற்றும் 3 தமிழ் படங்கள் எடுத்து அடைந்த நஷ்டத்தை, மக்கள் திலகத்தின் "உரிமைக்குரல்" என்ற ஒரே
    படத்தின் மூலமாக, அதுவும் பூஜை போடப்பட்ட அன்றே கடனிலிருந்து மீண்டதாக பேட்டியளித்துள்ளார்.


    இந்த தயாரிப்பாளர்கள் எவரையும் எங்கள் புரட்சித் தலைவர் அவர்கள் எந்த காலத்திலும் நிர்பந்தப்படுத்தியது கிடையாது. அதற்கு அவசியம் இல்லை. மிரட்டுவதற்கு அவரோ அல்லது அவர் சார்ந்திருந்த கட்சியோ அதிகாரத்தில் இருந்ததில்லை.

    பி. ஆர். பந்துலு அவர்களோ, "முரடன் முத்து" படத்துக்குப்பின் முகாம் மாறி மக்கள் திலகம் படங்களின் மூலம் மறு வாழ்வு பெற்றவர்.

    ஜி. என். வேலுமணி அவர்கள், 1963லேயே " பணத்தோட்டம்" காவியத்தில் எங்கள் பொன்மனசெம்மலை நடிக்க வைத்து பெருமை பெற்றவர்.

    கொழுத்த லாபத்துடன், முகாம் மாறிப்போன, ஜெயந்தி பிலிம்ஸ் கனகசபை அவர்கள், அதற்கு பிறகு பட்ட பாட்டினை தமிழ் திரையுலகமே அறியும்..

    எங்கள் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன்" வெற்றிக்காவியம் வெள்ளி விழா காண்பதை தாங்க முடியாத எரிச்சலில், ஏதோ அவதூறு செய்தி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இனி மேலாவது, எங்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய வீண் புரளிகளையும், பொய்யான தகவல்களையும் பரப்பவேண்டாம் என்று இந்தப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    அனைத்து பதிவுகளுக்கும் அருமையான உண்மையான பதில் தந்த திரு செல்வகுமார் உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் kindky one request தலைவர் cm
    ஆவதற்கு முன்பு எத்தனை படங்கள் புக் ஆகி இருந்தது என்பதனை பதிவு செய்யவும் நன்றி சார்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
    Last edited by MGRRAAMAMOORTHI; 20th August 2014 at 08:10 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •