-
21st August 2014, 12:04 AM
#2241
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
திரு ரவி கிரண்
ஒரு மணி நேரத்துக்கு முன் நான் நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்தேன் .உங்களால அமைதி
காக்க முடியாது என்பதை இந்த பதிவின் மூலம் வந்து மீண்டும் பிரச்சனையை பெரிதாக்க வழி
செய்கிறீர்கள் . உண்மையிலயே நீங்கள் பொறுமை உள்ளவராக இருந்தால் சற்று நிதானத்தை
கடை பிடிக்கவும் .
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .
இத்துடன் இந்த விவாதத்திற்கு முற்று புள்ளி வைப்போம் .
ESVEE SIR
திரு செல்வகுமார் அவர்கள் பதிவுக்கு அவர் வாய் திறக்க முடியாத வண்ணம் என்னால் அவர் கூறும் பல விஷயங்கள் பொய், அதாரம் இல்லாதவை, கற்பனை வளத்தால் விளைந்தவை என்பதை ஆவணங்களுடன் ஆதாரங்களுடன் இந்த நிமிடம் பதில் பதிவு செய்ய முடியும்...!
"உங்களால் அமைதி காக்க முடியாது " என்பதை நீங்கள் கூறுவதில் இருந்தே அவர்கள் என்ன தூண்டினாலும்..என்ன வம்புக்கிழுத்தாலும் நீங்கள் அமைதி காக்கலாமே...
அதை ஏன் செய்யவில்லை என்பது பொருள் என்பது உங்களுக்கும் புரியும் !
நீங்கள் பொறுமை காக்க சொல்வதால் என்னுடைய பதிவை நான் நீக்கிவிட்டேன் எஸ்வி சார்..!
இந்த தடவையும்...உங்களுக்காக மட்டும் !
திரு செல்வகுமார் அவர்கள் பதிவிட்டுள்ள உண்மையை போல தோற்றமளிக்கும் பொய் தகவல் இனியும் இடம்பெறாது பார்த்துகொள்ளுங்கள்.
தகுந்த ஆதாரம், ஆவணம் இல்லாமல் பதிவிடும் அதுபோன்ற திரைக்கதை வசனங்கள் இனி உலகம் நம்பாது, செல்லுபடியாகாது.
மேலும் உங்கள் திரி நண்பர்கள் என்னை வம்புக்கு இழுக்காதவண்ணம் பார்த்துகொள்ளுங்கள் சார் !
Thanks
rks
Last edited by RavikiranSurya; 21st August 2014 at 12:14 AM.
-
21st August 2014 12:04 AM
# ADS
Circuit advertisement
-
21st August 2014, 05:22 AM
#2242
Junior Member
Platinum Hubber
எனக்காக உங்கள் பதிவை நீக்கியது உண்மை என்றால் இனி மேல் மக்கள் திலகம் திரியில் நீங்கள் எம்ஜிஆர் பற்றிய
திரை உலக ஆளுமைகள் பற்றிய கருத்துக்களை பதிவிட்டால் நல்லது .
எதெற்கெடுத்தாலும் ஆவணம் - பொய் - சவால் - என்று சகட்டு மேனிக்கு , உடனுக்குடன் வந்து போராட்டம் நடத்தும்
குணத்தை மாற்றுங்கள் .உங்கள் பதிவுகளில் நாங்கள் கண்டு பிடித்த பொய்கள் - தவறான , ஆதாரமில்லாத ,கிண்டல்
கேலி பதிவுகளை வைத்து உங்களுக்கு பதிலுக்கு பதில் கச்சேரி நடத்த எங்களுக்கும் தெரியும் .
மக்களுக்கு தெரியும் - நாடு நிலையாளர்களுக்கு புரியும் என்று இன்னும் எத்தனை நாளுக்கு இந்த அறிக்கை .
மக்கள் திலகம் திரியிலும் சில தவறான தகவல் கொண்ட விளம்பரங்கள் - புள்ளி விவரங்கள் - தனி மனிதரின் தாக்குதல் கொண்ட வாசகங்கள் இருந்த விளம்பர பதிவுகள் வந்தது தவறு என்பதை ஏற்று கொள்கிறோம் . இனி எங்கள் சாதனைகள் பற்றி நாங்கள் பார்த்து கொள்கிறோம் .பதிவிடுகிறோம் .
உங்கள் திரியில் உங்களுக்கு நிறைய பணிகள் உள்ளது .முதலில் அதை கவனியுங்கள் .
எங்கள் திரியை மறந்து விடுங்கள் - ஒரு வழி பாதை - உங்களுக்கு நல்லது .பயணம் சுகமாக இருக்கும் .
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ரவிகிரன் அவர்களே .
-
21st August 2014, 05:25 AM
#2243
Junior Member
Platinum Hubber
ஒரு திரைப்படம் அரசியல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி ஒரு தனி மனிதரின் லட்சிய படைப்பிற்கு உறு துணையாக நின்ற படம் என்றால் அது மக்கள் திலகத்தின் ''நாடோடி மன்னன் ''.
1936-1958
தன்னுடைய 23 வருட திரை உலக அனுபவத்தை கொண்டும் , தன்னுடய பொருளாதார சக்தியையும் மீறி இரவு -பகல்
உழைத்து ,ஒரு மாபெரும் படைப்பை உருவாக்குவதில் வெற்றி கண்டவர் மக்கள் திலகம் .
புரட்சிகரமான கதை
இரட்டை வேடம் - இயக்கம்
நட்சத்திர பட்டாளம் .
கண்ணதாசனின் வசனம்
இசை மேதை சுப்பையா நாயுடு -இசை
புகழ் பெற்ற பாடல்கள்
படம் வெற்றி பெற்றால் - மன்னன் . தோற்றால் - நாடோடி என்று பிரகடனம் செய்தார் மக்கள் திலகம் .
22.8.1958
56 ஆண்டுகள் முன்பு '' நாடோடி மன்னன் '' வந்தார் - நின்றார் - வென்றார் . மறை முகமாக இன்னும் 19 ஆண்டுகள்
கழித்து 1977ல் தமிழகத்தை ஆளப்போகும் மன்னன் என்று சொல்லாமல் சொன்ன படம் .
1948ல் வெளியான சந்திரலேகா படம்தான் வசூலில் முதலில் இருந்தது - தகவல் பேசும் படம் -1955
1956ல் வந்த மதுரை வீரன் - அந்த சாதனையை முறியடித்து முன்னிலை வந்தது .
1958ல் வந்த நாடோடி மன்னன் - 1965 வரை முறியடிக்க முடியாத சாதனையாக இருந்தது .
-
21st August 2014, 05:27 AM
#2244
Junior Member
Platinum Hubber
-
21st August 2014, 05:28 AM
#2245
Junior Member
Platinum Hubber
-
21st August 2014, 05:32 AM
#2246
Junior Member
Platinum Hubber
Mgr narrates about nadodimannan - coutesy ;inba - kadaitheru
கேள்வி : "நாடோடி மன்னன்" கதை எப்படி உருவானது?
பதில் : 1937-38 ம் ஆண்டுகளில் நான் கல்கத்தாவில் "மாயா மச்சீந்திரா " படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம். ஒருநாள் நான் சில நண்பர்களுடன் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கப் போனேன். "இப் ஐ வெர் கிங்" (If I were king) என்ற படம் அது. ரோனால்ட் கால்மன் என்ற பிரபல நடிகர் நடித்த படம் அது….அதில் ஒரு காட்சியில் நான் மன்னனானால்? என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன் "நான் மன்னனானால்?…" என்று.
இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றிவிட்டது. அந்தக் காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்துக் கொண்டிருந்தவன் என்பதே பொருந்தும். நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்குக் கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம்,?அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான்? என்பதே….ஆனால் அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகிவிடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை. ஆகவே தான், நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர். என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன்.
இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் ; அவர்களும் நம்மோடிருப்பவர்கள்தான். ஆனால் அவர்களுடைய ஆற்றலும் அறிவும் திறனும் திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக இவர்களும் நம்மோடிணைந்தால்….? இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம்…. மன்னன் உண்மையை உணருகிறான்; தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான். ஆனால் அன்னிய பிடிப்பு அவ்வளவு இலேசாகவிடாது என்பதற்கும், தன் ஆதிக்கத்தை மீறிவிடுகிறவர்கள் அன்றுவரை தன்னோடு உண்மையாக உழைத்தவர்கள் என்பதைக்கூடச் சிறிதும் கவனியாது அந்த நல்லவர்களைத் தொலைத்துவிடவும், ஆட்சியிலிருந்து அகற்றிவிடவும் துணியும் என்பதற்கும் உதாரணமாகத்தான், குருநாதர் மன்னனைத் தொலைத்துத் தனது இஷ்டப்படி தலையாட்டும் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்க முயன்றார் என்பதைச் சித்தரித்தேன். அதோடு மட்டுமல்ல, மக்களின் பிரதிநிதியான நாடோடியோடு நல்லவனான மன்னன் இணைந்துவிட்டால் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றி நாட்டை நன்னிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதையும் விளக்கிக் காட்ட வேண்டுமென்று விரும்பினேன். அதே சமயத்தில் நாட்டில் "கட்சி தான் பெரிது, மக்களல்ல" என்ற எண்ணத்தில் வாழ்ந்து, தன் கட்சியின் எண்ணத்தை நிறைவேற்ற எந்தவித செயல்களில் ஈடுபடவும் தாயராயிருப்பவர்களைப் பற்றி விளக்குவதற்காகவே வீரபாகுவின் கூட்டத்தாரை காண்பித்து அவர்களின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட,அன்பைப் பற்றிக் கவலைப்படாத வன்செயல்களைப் பற்றித் தெளிவுபடுத்த முயன்றேன். இவ்வாறு நமது நாட்டு அரசியலையும் மக்களின் நிலையையும் பின்னணியாகக் கொண்டு அமைந்த கதைதான் "நாடோடி மன்னன்".
‘மக்கள் எல்லோரும் நல்லவர்கள் தான் . சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் அவர்களை எங்கோ கொண்டு நிறுத்துகின்றன… அவைகளை தமதாக்கி கொண்டால் நாடு நலம் பெறும்’ என்பதைத் தெளிவுபடுத்த முயலுவதுதான் ‘நாடோடி மன்னன்’ கதை. என்னுடைய கொள்கையையும் எடுத்துச் சொல்லி,அதே நேரத்தில் எந்தத் தரப்பினரின் மனத்தையும் புண்பாடுத்தாமல் நிகழ்ச்சிகளை அமைத்து மக்களின் பாராட்டைப் பெற முடிந்தது என்றால் அது பெரிய வெற்றி தானே? அதோடு புதிய, ஆனால் தேவையான,சிலசட்டங்களைச் சொல்லுகிறது "நாடோடிமன்னன் " கதை.
-
21st August 2014, 05:34 AM
#2247
Junior Member
Platinum Hubber
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1958ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா?
எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.
1958ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.
இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன்.
இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.
அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.
தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள்.
இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த நாடோடி மன்னன் மீண்டும் சென்னையில்உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்படடுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்இப்படம் திரையிடப்பட்டு 2வாரங்களைக் கடந்தும் கூட அத்தனை காட்சியும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான்.
ரிசர்வ் செய்து பலரும் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாடோடி மன்னன்திரையிடப்பட்டுள்ள சென்னை பாரத் திரையரங்கம் உள்ள பகுதியே விழாக்கோலம்பூண்டுள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அதிமுகவினரும் தியேட்டரில் அலை மோதியவண்ணம் உள்ளனர்.
படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டையும் ரிப்பீட்டு கேட்டு ரசிகர்கள் போடும்கோஷத்தால் தியேட்டரே இரண்டு படுகிறதாம். ஆபரேட்டர்களும் பாட்டுக்களைரிப்பீட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.
இந்தக் கால சூப்பர் ஹிட் படங்களுக்குப் போட்டியாக நாடோடி மன்னனுக்குவந்துகொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து புதுப் படங்க்ளை மட்டுமேபோட்டுக்கொண்டிருக்கும் பிரபல ஆல்பட் திரையரங்கம், நாடோடிமன்னனை நாளைமுதல் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
சென்னை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் நாடோடி மன்னன்ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. கோலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் நான் மட்டும்தான் என்பதை மறைந்த பின்னரும் கூட எம்.ஜி.ஆர். நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.
Courtesy; malaimalar-2006
-
21st August 2014, 05:34 AM
#2248
Junior Member
Platinum Hubber
நாடோடி மன்னன் வந்தபோது (7-9-58) விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
முனுசாமி : மாணிக்கம்
மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!
முனு: எதுக்கடா?
மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.
முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?
மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!
முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?
மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.
முனு: ரொம்பப் பெரிய படமாமே?
மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!
முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?
மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!
முனு: கத்திச் சண்டை உண்டா?
மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!
முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?
மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.
முனு: காமிக் இருக்குதா?
மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!
முனு: என்ன தம்பி சொல்றே?
மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!
-
21st August 2014, 05:40 AM
#2249
Junior Member
Platinum Hubber
The magic of the legendary actor MGR still works at the box-office.Last week, the MGR produced and directed classic, "Nadodi Mannan", was rereleased in four theatres in Chennai and Chinglepet area by Divya Films, which holds the rights to the MGR library.
"Nadodi Mannan" had its first theatrical release in 1958, but the magic of this 3-hour-45-minute .lm, made partly in black and white and partly in colour, works even with today's audience. Says Shanthi of Divya Films, who has spent nearly Rs. 3 lakh on poster and publicity designs for the re-release: "MGR is truly a legend; he is the only actor who can enthral the audience so many years after his demise.
The nearly 50-year-old `Nadodi Mannan' had a collection of 85 to 90 per cent during its opening weekend and the crowd consisted of mostly youngsters and some MGR fans. We are now planning to rerelease a few more MGR classics such as `Adimai Penn' and `Ulagam Sutrum Valiban'." MGR magic
courtesy - the hindu
-
21st August 2014, 05:43 AM
#2250
Junior Member
Platinum Hubber
Movies of MGR and John Wayne in 1950s decade
In the previous part, I provided a career comparison table of MGR and John Wayne. Let me elaborate on this comparison. In their movie careers, the total number of movies starred by MGR (between 1936 and 1978) and John Wayne (between 1928 and 1976) were 136 and 152 respectively. In the 1950s decade, both featured in almost equal number of movies; MGR in 25, and John Wayne in 22. With a few notable exceptions, both chose the type of vehicle in which they had expertise and had framed their minds to gain fame. John Wayne focused on ‘American historical adventures, including Westerns’ and MGR’s focus was on ‘Tamil historical costume adventures’ [the so-called ‘Raja-Rani kathai (King-Queen stories)].
The name list of 25 movies, their release dates, screens writers and directors details (in chronological sequence) of MGR movies are given below. I provide appropriate English translations of the Tamil movie titles to the best of my knowledge. Shared credits for either script writing or direction are indicated by hyphen between the names.
Maruthanattu Ilavarasi (Princess from Maruthaland) April 1950, M.Karunanidhi, A.Kasilingam.
Manthiri Kumari (Minister’s Daughter) June 1950, (adoption from ancient Tamil-Buddhist epic Kundalakesi story) M. Karunanidhi, Ellis Dungan -T.R.Sundaram.
Marma Yogi (The Secret Mystic) Feb 1951, (a mix of British novelist Marrie Correlli 1886 novel Vendetta and Robin Hood legend) A.S.A.Sami, K.Ramnath.
Sarvadhikari (The Dictator) Sept. 1951, A.V.P.Asaithambi, T.R.Sundaram.
Andaman Kaithi (Prisoner in Andaman Island) March 1952, Ku.Sa.Krishnamoorthy, V. Krishnan.
Kumari (Young Girl) April 1952, Ku.Sa. Krishnamoorthy, R.Padmanaban
Yen Thangai (My Younger Sister) May 1952, T.S.Nadarajan-K.M.Govindarajan, C.H.Narayanamoorthy
Naam (We) March 1953, M. Karunanidhi, A.Kasilingam
Panakkari (Rich Woman) April 1953 (original Anna Karenina story of Leo Tolstoy), K.S.Gopalakrishnan
Genova (Genova) June 1953, (original, a Bible story mixed with myth); Suratha-Ilankovan-Nedumaran, F.Nagoor
Malai Kallan (Mountain Thief) July 1954, M. Karunanidhi, S.M.Sri Ramulu Naidu
Koondu KiLLi (Caged Parrot) Aug 1954, Vinthan, T.R.Ramanna
Gul E-Bhagavali (Flower of Bhagavali) July 1955, (original, a Persian folk tale) Thanjai Ramaiahdas, T.R.Ramanna
Alibababum 40 Thirudarkalum (Alibaba and 40 thieves) Jan 1956(original Arabian Tales) T.R.Sundaram (both, credited script writer and director). One may doubt why the real script writer went unidentified!
Madurai Veeran (Hero of Madurai), April 1956, Kannadasan, Yoganand
Thaiku Pin Thaaram (Wife after the Mother), Sept 1956, S.Ayyapillai, M.A.Thirumugam
Sakravarthi Thirumagal (Princess of the Emperor), Jan 1957, Ilankovan, P.Neelakandan
Rajarajan (King of Kings), April 1957, Ilankovan, T.V.Sundaram
Puthumai Pithan (Crazy guy for Novelty), Aug 1957, M. Karunanidhi, T.R.Ramanna
Mahadevi (The Great Princess), Nov 1957, Kannadasan, Sundar Rao Nadkarni
Nadodi Mannan (Vagabond and the King), August 1958, Ravindar, MGR
Thai Magalukku Kattiya Thaali (Mother who tied the sacred thread to her Daughter), Dec 1959, Rama Arangannal, R.R.Chandran
Baghdad Thirudan (Thief of Baghdad), May 1960, A.S.Muthu, T.P.Sundaram
Raja Desingu (Raja of Desingu Land), September 1960, Kannadasan-Makkalanban, T.R.Ragunath
Mannathi Mannan (King of Kings), October 1960, Kannadasan, M. Nadesan.
Bookmarks