Page 226 of 401 FirstFirst ... 126176216224225226227228236276326 ... LastLast
Results 2,251 to 2,260 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #2251
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Madurai was always seen as the bastion of MGR and it was here many of his firsts were achieved.

    Madurai is a city which is synonymous with a strong visual culture and carnivals, the most important aspect of the visual culture still even in this era of creative commons and digital era seems to be films.

    Madurai has Asia's biggest film theatre, Thangam (now defunct) with a seating capacity close to 4,000. It has had a history of frenetic fan following which always had a spiritual dimension where the film stars who were treated as demigods. MGR always had (still has a) vivid presence in the visual, political, and emotional landscape of Madurai, says film historian Sara Dickey.

    Demigod Status

    In fact it was here that when MGR suffered a stroke, fans cut off fingers, limbs, and offered them to God praying for his recovery.

    It was Madurai Veeran( Warrior of Madurai) a film after the folklore legend turned deity, the first MGR film which ran for 25 weeks (silver jubilee), his first fan club was from Madurai and his foray into politics all had the Madurai connection, and of course his last film Maduraiyai Meeta Sundarapandian (The King who liberated Madurai) had the city as its central subject.

    MGR came to cinema from a stage career, beginning at the age of six, when he entered the Madurai Original Boys Company, where he learned acting, dancing, and sword-fighting—arts that served him well in his later career.

    It was in Tamukkam grounds in Madurai, a grand function was held on October 26, 1958 to celebrate the astounding success of Naadodi Mannan.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2252
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை: "நாடோடி மன்னன் படத்தில் ஏழை மக்களுக்காக பேசிய வசனங்களை தமிழக முதல்வரானதும் நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.,' என்று நடிகை சரோஜா தேவி புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.என்.ராஜம் நடித்த "நாடோடி மன்னன்' படம் 1958ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் கடந்த சில ஆண்டுகளாக தியேட்டர்களில் திரையிடப்படாமல் இருந்தது. தற்போது சென்னையில் நான்கு தியேட்டர்களில் "நாடோடி மன்னன்' படம் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த படத்தின் 49ம் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த ஏழு நாயகிகள் கலந்து கொண்டனர். விழாவில் நடிகை சரோஜாதேவி பேசும் போது, ""எம்.ஜி.ஆரைப் போல சிறந்த மனிதர் கிடையாது. மனித நேயம் உள்ள மகா மனிதன். "நாடோடி மன்னன்' படத்தில், "நாடாள வந்தால் ஏழைகளுக்காக எல்லாம் செய்வேன்' என்று எம்.ஜி.ஆர்., வசனம் பேசினார். அவர் முதல்வர் ஆனதும் படத்தில் சொல்லிய அத்தனையும் மக்களுக்கு செய்தார். ஒரு அரசியல்வாதி எளிதாக முதல்வராகிவிடலாம். ஆனால், ஒரு நடிகர் முதல்வராவது கஷ்டம். எம்.ஜி.ஆர்., தமிழகத்தை ஒரு ஆண்டு அல்ல இரண்டாண்டு அல்ல, பதினொரு ஆண்டுகள் ஆண்டார். மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தார். எம்.ஜி.ஆர்., இறக்கவில்லை. எல்லார் நெஞ்சத்திலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திகழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல திகழவேண்டும், வாழ்ந்தால் எம்.ஜி.ஆரைப் போல வாழ வேண்டும். எனது கடைசி மூச்சிருக்கும் வரை எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டிருப்பேன். தமிழக மக்களை மறக்க மாட்டேன்,'' என்றார்.
    அன்று எம்.ஜி.ஆருடன் கதாநாயகிகளாக நடித்த நடிகைகளான எம்.என்.ராஜம், பத்மினி, சரோஜாதேவி, ராஜசுலோசனா மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோருடன் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனும் நாடோடிமன்னன் படத்தினை இரசிக்கின்றார்கள்.
    நடிகை பத்மினி பேசும் போது, ""மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். "மருதநாட்டு இளவரசி, ராஜா தேசிங்கு, அரசிளங்குமரி, ராஜ ராஜன்' என 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். சரித்திரம் படைத்தவர் எம்.ஜி.ஆர்., அவரே ஒரு சரித்திரம்,'' என்றார். நடிகை எம்.என்.ராஜம் பேசும் போது, ""இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது படம் இன்று தான் வெளியானது போல் இருக்கிறது. படம் வெளியாகி 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. எம்.ஜி.ஆர்., புகழ் இன்னும் நுõறாண்டுகளுக்கு மேல் இருக்கும். "நாடோடி மன்னன்' படத்தில் ஒரு சீனில் "என்னை நம்புகிறாயா சகோதரி' என்று எம்.ஜி.ஆர்., என்னிடம் வசனம் பேசுவார். அதற்கு "நான் மட்டுமல்ல நாடே நம்பும்' என்று பதில் சொல்வேன். எம்.ஜி.ஆர்., முதல்வரானதும் ஒரு முறை என்னிடம் பேசும் போது "நாடே என்னை நம்பும் என்று சொன்னாய்; முதல்வராகி விட்டேன்' என்று சந்தோஷமாக கூறினார். அதனை மறக்க முடியாது,'' என்றார்.

    நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பேசும் போது, ""நான் வாழும் வாழ்க்கையில் சிறப்பு இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர்., தான் காரணம். உயிருள்ள வரை எம்.ஜி.ஆரின் நினைவு என்னை விட்டு போகாது,'' என்றார். நடிகை மஞ்சுளா பேசும் போது, ""இன்று எனது பேத்திக்கு பிறந்த நாள். அதில் பங்கு கொள்ளாமல் இங்கு வந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் மீது அத்தனை மரியாதை வைத்திருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பம். எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் இணைந்து நடித்த படத்தில் சரோஜாதேவியின் படத்தை நீக்கிவிட்டு என் படத்தை ஒட்டி வைப்பேன். அப்படியிருந்த நான் எம்.ஜி.ஆருடன் "ரிக்ஷாக்காரன்' படத்தில் நடித்தேன். அதன்பிறகு நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இன்றைக்கும் நான் சாப்பிடும் போது பெருமாளேன்னு நினைக்கும் போது எம்.ஜி.ஆரையும் நினைத்துக் கொள்வேன்,'' என்றார். நடிகை ராஜசுலோசனா பேசும் போது, ""ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்., அவரைப்போல இனி ஒருவரை பார்க்க முடியாது,'' என்றார்.

    திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பேசும் போது, ""எம்.ஜி.ஆருக்கு ஏராளமான பாடல்களை பாடியுள்ளேன். நான் பாடியதைப் போல உலகத்தில் யாரும் பாட முடியாது. "நான் பார்த்திலே அவர் ஒருத்தரைத்தான் நல்ல அழகனென்பேன்' என்றால் அது எம்.ஜி.ஆரைத்தான் சொல்வேன். எம்.ஜி.ஆர் சரோஜாதேவி சினிமாவில் பொருத்தமான ஜோடியாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்றிருந்தனர். எம்.ஜி.ஆர்., படத்தில் சொன்ன நல்ல விஷயங்களை நிஜத்தில் அவர் ஆட்சியில் செய்து காட்டினார்,'' என்றார். திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும் போது, ""சரித்திரம் படைத்தவர், சாதனையாளர். அவரோடு பணி புரிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். எம்.ஜி.ஆர்., மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வார்,'' என்றார். விழாவில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ராஜஸ்ரீ, சச்சு உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து "நாடோடி மன்னன்' படம் பார்த்து மகிழ்ந்தனர்.

    நன்றி: தினமலர்
    http://www.dinamalar.com/

    நன்றி: தினமணி.காம்
    "காலத்தை வென்றவன்"
    -பா.ஜெகதீசன்-

    அண்மையில் சென்னையில் திரையிடப்பட்டுள்ள 'நாடோடி மன்னன்' ...... "இந்தப் படம் வெற்றிப் பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நாடோடி'- "நாடோடி மன்னன்' படம் வெளியானபோது எம்.ஜி.ஆர். உதிர்த்த வார்த்தைகள் இவை!
    தமிழக திரையரங்குகளில் படம் வெளியாகி, முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் எம்.ஜி.ஆர். போஸ்டரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்: "நீங்கள் நாடோடியும் அல்ல. மன்னனும் அல்ல. மன்னாதி மன்னன்!'. ரசிகர்களின் வாக்கு பொய்க்கவில்லை. "நாடோடி மன்னன்' படம், வெற்றி பெற்று எம்.ஜி.ஆரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்று, "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்' என்று, ரசிகனை நோக்கி எம்.ஜி.ஆரைப் பாட வைத்தது.

    நாடோடி மன்னன் படம் வெளியாகி 50 ஆண்டுகளாகிற இன்றைய நிலையிலும் அந்தப் பாட்டின் வெற்றிச் சப்தம் மட்டும் இன்னும் ஓயவே இல்லை. இப்போதும் நாடோடி மன்னன் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெளியான முதல் நாளே ஹவுஸ்புஃல்லாகி பலர் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்துள்ளனர்.

    வசூலிலும் இப்போது வெளிவந்துள்ள புதிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்போது போலவே 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான போதும், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த படங்களிலேயே வசூலில் முதல் இடத்தைப் பிடித்ததும் இந்தப் படம்தான். ஒரு கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் படம்!

    "தமிழக திரைப்படத்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக' எனச் சொல்கிற சிறப்பு நாடோடி மன்னன் படத்துக்கு வசூலில் மட்டும் அல்ல. பலவற்றிலும் உண்டு.
    எம்.ஜி.ஆர். தயாரித்த முதல் சொந்த படம். எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம். எம்.ஜி.ஆர். இயக்கிய முதல் படம். தமிழில் வெளியான முதல் "பகுதி வண்ணப் படம் (பார்ட்லி கலர்)'. சரோஜா தேவி கதாநாயகியாக அறிமுகம்... என பல "முதல்... முதல்'களின் சிறப்புகள் வெளிப்பட்ட படம் இது. பிரம்மாண்டமான செட்டுகள், கண்ணதாசனின் எழுச்சியூட்டும் வசனங்கள், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், சந்திரபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள், "தூங்காதே தம்பி தூங்காதே' போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் எந்தக் காலத்திலும் நம்மைத் தூங்க விடாத பாடல்கள்... என பல சிறப்பம்சங்கள் இந்தப் படத்திற்கு உண்டு. இத்தகைய சிறப்புகளுடைய நாடோடி மன்னன் படம் மீண்டும் ரிலீசாகி ஓடும் வண்ணாரப்பேட்டை பாரத் திரையரங்கிற்குப் போனோம்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் படம் வெளியாகி இருப்பதுபோல திரையரங்கே விழாக்கோலமாய் இருந்தது. எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடுவது போன்ற போஸ்டர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர்களுக்கும் குறைவில்லை. சேரில் கூட்டம் நிறைந்து பலர் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். புதுப் படத்தைப் பார்க்கப் போவதைபோல பரபரப்பாய் இருக்கிறது கூட்டம். "படத்தைப் போடு படத்தை போடு' என உக்கிரக் கோஷம். படம் போடப்படுகிறது!

    திரையில் எம்.ஜி.ஆர் தோன்றுகிற காட்சி. திரைக்கு முன்னால் உள்ள சுவரில் வரிசையாக தயாராக வைக்கப்பட்டுள்ள சூடங்களை ரசிகர்கள் கொளுத்துகிறார்கள். விசில் சத்தம் அமர்ந்திருப்பவர்களின் காதைக் கிழிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை படத்தின் முக்கியமான கட்டங்களில் விசில் சத்தம் நிற்கவே இல்லை. குறிப்பிட்ட அந்தக் காட்சிகளில் எம்.ஜி.ஆர். பேசும் "பன்ச்' டயலாக்குகள் சில:

    "நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களிடம் இருந்து மாளிகையைப் பார்க்கிறேன்'

    "என்னை நம்பிக் கெட்டவர்கள் கிடையாது - நம்பாமல் கெட்டவர்கள்தான் உண்டு'

    ஒரு எம்.ஜி.ஆர். நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரை மற்றொரு எம்.ஜி.ஆர் சுற்றி வந்தபடியே பேசுகிற வசனத்துக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்திலேயே இரட்டை வேடக் காட்சியை வெகு இயல்பாக எடுத்திருப்பதை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    கடைசியாக க்ளைமேக்ஸ் காட்சி. சூப்பர்... சூப்பர்... என எத்தனை தடவை சொன்னாலும் தகும். தீவைச் சூழ்ந்திருக்கும் வெள்ளம். அந்த வெள்ளத்தின் மீது கயிற்று நடைப்பாலத்தில் எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் சண்டை போடுகிறார்கள். இவருக்கு அவர், அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை என்பது போல விறு விறு சண்டை. திடீரென கயிற்று பாலம் அறுந்துவிடுகிறது. தொங்குகிற கயிற்றை பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆரும், சரோஜா தேவியும் தப்பிக்கிறார்கள். அப்பாடா...இக்காட்சியின்போது திரையரங்கில் இருப்பவர்களுக்கு உயிர்போய் உயிர் வருகிறது.

    50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகி உள்ள படத்திற்கு இத்தனை உயிர்ப்பா? எனச் சிலிர்த்தபடியே தியேட்டரை விட்டு வர மனதில்லாமல் வெளியில் வந்தோம். இதே ஈர்ப்புடன் எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான நடிகர் சத்யராஜ் பேசுகிறார்:

    ""1958-ல் நாடோடி மன்னன் படம் ரிலீசானது. நான் 1954-ல்ல பிறந்தேன். படம் ரிலீசானபோது எனக்கு 4 வயசுதான் என்பதால் அந்தப் படத்தை ரிலீசான அன்றே பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தம் உண்டு. ஆனால், அதுக்குப் பிறகு நாடோடி மன்னன் படத்தை பதினைஞ்சுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன்.

    உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், நாடோடிமன்னன் ஆகிய மூன்று படங்களுக்கு இன்னும் டிவி ரைட்ஸ்க்கு கொடுக்கவில்லை. இதனால் கடந்த பத்துப் பதினைந்து வருஷமாக நாடோடி மன்னன் படத்தைப் பார்க்க முடியவில்லை. ஆல்பர்ட் தியேட்டர்ல போட்டதும் போய் பார்த்துவிட்டு வந்தேன்.

    தலைவர் படத்தையெல்லாம் வீட்டுல உட்கார்ந்து முறுக்கு தின்னுக்கிட்டு டிவியில பார்க்கக்கூடாது. ரசிகர்களோட சேர்ந்து விசிலடிச்சி, கைதட்டி பார்க்கணும். அப்பதான் தலைவர் படம் பார்த்தாப்போல இருக்கும்.

    நாடோடி மன்னன் படத்துக்கு ஏகப்பட்ட சிறப்பு இருக்கு. எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் எடுத்த படங்கள்ல இந்தப் படமும் ஒண்ணு. இந்தப் படத்துல வர்ற "தூங்காதே தம்பி தூங்காதே' பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுல "தினம் அல்லும் பகலுமே வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டமில்லையென அலட்டிக்கொண்டார்' என்ற வரி ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதில் எவ்வளவு பெரிய பகுத்தறிவு கருத்து இருக்கு.

    நாடோடி மன்னனைத் தொடர்ந்து பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்தால் ஓடுமான்னு கேட்டீங்கன்னா... அடிச்சு சொல்வேன் நிச்சயமா ஓடாது.'' என்கிறார் சத்யராஜ்.
    எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்துக் காந்த சக்தி சத்யராஜை மட்டுமல்ல எல்லோரையும் என்றென்றைக்கும் கவர்ந்துகொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர் பாடலைக் கொண்டே சொன்னால்: "காலத்தை வென்றவன் நீ காவியமானவன் நீ.'

    நன்றி: தினமணி.காம்
    Last edited by esvee; 21st August 2014 at 06:10 AM.

  4. #2253
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MGR gave a blockbuster ‘Manthiri Kumari’ in 1951 and struck gold by getting the opportunity to play the role of a hero in the first ever colour movie ‘Alibabavum 40 Thirudargalum’ in Tamil Film Industry. The English movie ‘Prisoner of Zenda’ was interpreted in Tamil version as ‘Nadodi Mannan’, produced and directed by him in 1958 and was wonderfully successful in the theatres. He touched the hearts of millions of fans by his fantabulous performance in movies alike ‘Anbe Vaa’, ‘Adimai Penn’ and won the National Film Award for Best Actor in 1972 for the film ‘Richshawkaran’.

    The charismatic actor’s few movies were even filmed abroad and also had been shot in Singapore, Malyasia, Thailand which are considered to be ‘Rarest of The Rare’ of that era. MGR ended his acting career in 1977 and continued as a politician. His films appealed to the direct sentiments of the common man as well as the rich ones which played a crucial role in enabling him to become a great politician. People were very influenced by his films and so by his dialogues.
    courtesy - the week

  5. #2254
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like


    On the screen of a cinema in Chennai are Late Dr. M.G. Ramachandran (former Chief Minister of Tamil Nadu 1977-87) and Dr. J. Jayalalitha (incumbent Chief Minister of Tamil Nadu) from the 1965 movie ‘Ayirathil Oruvan’ ( One in a Thousand). This movie was re-released in Tamil Nadu just before the start of the 2014 Lok Sabha elections.

    Dr. M.G. Ramachandran (popularly MGR), the founder of the party AIADMK(All India Dravida Munnetra Kazhagam) is the first film star to become the Chief Minister of a state in India. Since the late 40s films and politics have a long, multi-dimensional history in Tamil Nadu, than in any other Indian state. Since 1967 five of the six chief ministers that Tamil Nadu has had are from the film industry.

    courtesy - lok saba -net

    In independent India, DMK was the first and at that time the only party that took films as a vehicle for political mobilisation. During the late 1940s the leaders of the DMK tapped the power of cinema to promote their ideologies.

    1958 film “Nadodi Mannan” (“Vagabond King”) made by Em.Gee. Ar productions which bears the party flag of DMK. Riding on the popularity of cinema in Tamil Nadu, their films kept portraying the party symbols and references directly or indirectly

    Over time, from using films for propagating ideology, the DMK sought to capitalise on star popularity as a vehicle for political mobilisation. MGR became the face of DMK from early 60s. With the mass appeal of MGR and the words of writers of the DMK, like C.N Annadurai and M. Karunanidhi, films made a huge impact on the masses. This eventually lead to DMK winning the elections for the first time in 1967.


    The opening sequence (below) of the 1975 film “Idhayakkani” (“Heart’s fruit”) shows a cut out image of C.N. Annadurai speaking these words about MGR. In 1972 MGR left DMK and formed his own party and named it ADMK (Anna Dravida Munnetra Kazhagam). ‘Anna’ refers to C.N. Annadurai, whom MGR revered to be his political mentor. In a song from the film “Nam Naadu” (Our Nation) MGR refers to Anna as the “South Indian Gandhi”.

    C.N. Annadurai is once supposed to have said about MGR, ‘‘When we show his face, we get 40,000 votes; when he speaks a few words, we get 4 lakhs.’’ (Robert L. Hardgrave, Jr. 2008, p 71) Most MGR’s fans have been the party supporters, and many were drawn to the party because of the star that MGR is. For MGR, ‘‘Art and politics are the two sides of the same coin.’’ (Quoted in Kalaichelvan 1967, p. 13). Even MGR’s production company shows a couple holding the party flag, and his films are filled with both direct and indirect references to the pa

    Songs and lyrics played a major role in communicating the ideals to the masses. For the MGR fans, he is the projection of what he is on screen; for them MGR the person and the cinematic characters he plays are no differen


    “MGR sees himself as the ‘protector’ of the common man and is convinced of the moral purpose of his films.” ‘‘My roles have been to show how a man should live and believe’’ (Interview, Ramachandran, Robert L. Hardgrave, Jr. 2008, p 68).


    Posters showing MGR in different roles from various films. Posters were also a major tool for reaching the masses. Before the release of a film the posters are pasted on walls all over the town.
    Whatever be the role, a cow herd or a king, his roles have been invariably about a man fighting against the social evils that mar the country.

    There are several thousand fan clubs for MGR in South India. A club could be formed even with three or four members. None of the clubs is officially affiliated to the party. But the fans, who were captivated by MGR’s enactment of his personal and political values in all his movies, played a role of great consequence in his electoral succes

    Rickshaws are adorned with photos of MGR film. This is perhaps a way of displaying their loyalty to MGR, a man whom they believe seamlessly lived the real and cinematic life as one.
    The victorious King and Queen that is MGR and Jayalalitha respectively, wave to the people of their country. A happy ending that saves the masses from the tyrannies of the evil rulers.
    Last edited by esvee; 21st August 2014 at 08:37 AM.

  6. #2255
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks ainefal thanked for this post
    Likes ainefal liked this post
  8. #2256
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by pradeep balu View Post
    super!

  9. #2257
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    எனக்காக உங்கள் பதிவை நீக்கியது உண்மை என்றால் இனி மேல் மக்கள் திலகம் திரியில் நீங்கள் எம்ஜிஆர் பற்றிய
    திரை உலக ஆளுமைகள் பற்றிய கருத்துக்களை பதிவிட்டால் நல்லது .

    எதெற்கெடுத்தாலும் ஆவணம் - பொய் - சவால் - என்று சகட்டு மேனிக்கு , உடனுக்குடன் வந்து போராட்டம் நடத்தும்
    குணத்தை மாற்றுங்கள் .உங்கள் பதிவுகளில் நாங்கள் கண்டு பிடித்த பொய்கள் - தவறான , ஆதாரமில்லாத ,கிண்டல்
    கேலி பதிவுகளை வைத்து உங்களுக்கு பதிலுக்கு பதில் கச்சேரி நடத்த எங்களுக்கும் தெரியும் .

    மக்களுக்கு தெரியும் - நாடு நிலையாளர்களுக்கு புரியும் என்று இன்னும் எத்தனை நாளுக்கு இந்த அறிக்கை .

    மக்கள் திலகம் திரியிலும் சில தவறான தகவல் கொண்ட விளம்பரங்கள் - புள்ளி விவரங்கள் - தனி மனிதரின் தாக்குதல் கொண்ட வாசகங்கள் இருந்த விளம்பர பதிவுகள் வந்தது தவறு என்பதை ஏற்று கொள்கிறோம் . இனி எங்கள் சாதனைகள் பற்றி நாங்கள் பார்த்து கொள்கிறோம் .பதிவிடுகிறோம் .


    உங்கள் திரியில் உங்களுக்கு நிறைய பணிகள் உள்ளது .முதலில் அதை கவனியுங்கள் .
    எங்கள் திரியை மறந்து விடுங்கள் - ஒரு வழி பாதை - உங்களுக்கு நல்லது .பயணம் சுகமாக இருக்கும் .
    புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ரவிகிரன் அவர்களே .
    esvee சார்

    என்னுடைய பதிவை புரிந்துகொண்டு, உங்கள் தரப்பில் நடந்த தவறுகளை ஒத்துகொண்டதற்கு முதற்க்கண் எனது நன்றிகள்.

    என்னுடைய பதிவில் ஏதேனும் சொற்ப தவறுகள் இருந்திருக்கலாம் ..இல்லை என்று சொல்லவில்லை காரணம் நானும் மனிதன் தான். ஆனால் பொய் தகவல்கள் என்றும் இருந்ததில்லை...பதில் பதிவு செய்தவைகள் எல்லாம் ஆதாரத்துடன் தான் பதிவு செய்துள்ளேன். உங்கள் தரப்பில் இருந்து எழுந்த தவறான பதிவுகள் என்று அந்த ஆதாரத்தின் மூலம் நிரூபித்தும் இருக்கிறேன், இதுவரையில்.

    ஆகையால் இனியும் எனது பதிவுகளை வேறு விதமாக சித்தரிக்கவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

    உடனுக்குடன் போராட்டும் நடத்தும் குணத்தை மாற்றுங்கள் என்று அறிவுரைகிரீர்கள். 50% ஞாயம் உள்ள அறிவுரை. மிக்க நன்றி..நிச்சயமாக முயற்சிக்கிறேன். அதே போல மற்றவர்கள் வந்து உடனுக்குடன் போராடும் வகையில் பதிவுகளை தவிருங்கள் என்று உங்கள் திரி சில நண்பர்களுக்கும் அறிவுரை கூறுங்கள்..அதுதான் 100% ஞாயம் உள்ள அறிவுரை. ஒருதலைபட்சம் எவருக்குமே நல்லதல்ல அல்லவா ?

    பதிலுக்கு பதில் கச்சேரி என்பது நிச்சயம் என்னுடைய பாணியல்ல. ஆனால் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் நிர்பந்தம் செய்யும்போது, அப்படி ஒரு விஷயம் ஒரு வேளை நடுக்குமாயின் அதற்க்கு பதில் அளிக்க எந்த நேரத்திலும் தங்களை போல என்னாலும் முடியும் என்பது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறன்.

    "திரை உலகம் அறிந்த ஒன்று"..."உலகம் அறிந்த ஒன்று" என்று உங்கள் தரப்பில் பதிவுகள் வரும்போது, மக்களுக்கு தெரியும், நடுநிலயாலர்களுக்கு தெரியும் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறன்.

    உங்களுடைய கடைசி வரி பொருள் புரிந்தது. இனி நீங்கள் கூறியதை போல அவர் அவர் வேலையே அவர் அவர் பார்க்கலாம். யாரையும் யாரும் வம்புக்கு இழுக்காத வரையில் எந்த பதில் பதிவும் யாரும் பதிவு செய்யமாட்டார்கள் என்று நம்புவோம் !

    மீண்டும் உங்கள் புரிதலுக்கும், அறிவுரைக்கும் இங்கு நடந்த தவறுகளை, அந்த உண்மையை பரந்தமனதுடன் ஒத்துகொண்டதற்கு எனது நன்றி

    rks
    Last edited by RavikiranSurya; 21st August 2014 at 10:44 AM.

  10. #2258
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    பிரான்ஸ் எம்ஜிஆர் பேரவைத்தலைவர் திரு. முருகு பத்மநாபன் அவர்களின் புதல்வரின் திருமணம் புதுச்சேரியில் இனிதே நடந்தேறியது. இத்திருமண விழாவிற்கு, பெரும்திரளான எம்ஜிஆர் பக்தர்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் என அனைவரும் வந்து வாழ்த்தினர். அவற்றில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.



    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  11. #2259
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  12. #2260
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •