-
3rd September 2014, 06:33 PM
#1791
Senior Member
Diamond Hubber
எஸ்வீ ஜி... அப்படிப் போட்டீங்க அருவாளை...
கலைக்கோயில் படத்தில் அத்தனை முத்தான பாடல்கள் இருந்தும் இன்று வரை காரணம் என்னவென்று அறியாமல் மனசுக்குள் சுற்றி சுற்றி மயங்க வைக்கும் பாட்டு இதுதான். இதில் ஆடியிருக்கும் சாந்தாவோ குரலிலேயே கிறங்கடிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியோ .. இல்லாட்டி இது எந்த நாட்டு இசை என்று புரியாதவங்களையும் சொக்க வைக்கும் விஸ்வனாதனின் கைவண்ணமோ...அல்லது எல்லாமோ..
நானறியேன்..
மொத்தத்தில் எத்தனை யுகங்கள் போனாலும் இந்தப் பாட்டின் தாக்கம் மட்டும் குறையவே குறையாது ( of course... அதை ரசிப்போருக்கு : ) )
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd September 2014 06:33 PM
# ADS
Circuit advertisement
-
3rd September 2014, 06:44 PM
#1792
Senior Member
Veteran Hubber
Originally Posted by
madhu
கலைக்கோயில் படத்தில் அத்தனை முத்தான பாடல்கள் இருந்தும் இன்று வரை காரணம் என்னவென்று அறியாமல் மனசுக்குள் சுற்றி சுற்றி மயங்க வைக்கும் பாட்டு இதுதான். இதில் ஆடியிருக்கும் சாந்தாவோ குரலிலேயே கிறங்கடிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியோ .. இல்லாட்டி இது எந்த நாட்டு இசை என்று புரியாதவங்களையும் சொக்க வைக்கும் விஸ்வனாதனின் கைவண்ணமோ...அல்லது எல்லாமோ..
நானறியேன்..
ஒருத்தர் அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடிவரப்போகிறார். சீக்கிரமே மாற்றுங்கள். அதாவது 1966-க்கு முன் வந்ததெல்லாம் ராமமூர்த்தியுடையது. விஸ்வநாதனுக்கு இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd September 2014, 07:21 PM
#1793
அருமை எஸ்வி சார் சர்வதிகாரி மேலான தகவல்களுக்கு
கார்த்திக் சார் சி கே சார்,எஸ்வி சார்,மது சார்
கலைக்கோயில் மணி சத்தம் ஒலிச்சிக்கிட்டே இருக்கு அதாவது ஈஸ்வரியின் பாடல் மற்றும் மெல்லிசை மன்னர்களின் அபார இசை ஞானம்
-
3rd September 2014, 07:23 PM
#1794
Originally Posted by
chinnakkannan
கார்த்திக் சார்..cee kay sir
சமீபத்தில் மங்கையர் மலர் மாத இதழில் சரோஜாதேவி,கே ஆர் விஜயா,ஈஸ்வரி போன்றோரின் வாழ்கை அலைகள் தொடர் கட்டுரைகளாக வந்தன
குமுதத்தில் கண்ணதாசன் சந்தித்தேன் சிந்தித்தேன் என்று ஒரு கட்டுரை நினைவு உண்டு
மேலும் தமிழக முதல்வர் மாண்பிமிகு அம்மா அவர்கள் கூட 'மனம் திறந்து பேசுகிறேன் ' ஒரு 38 வாரம் எழுதிய நினைவு. பிறகு நின்று விட்டது
Last edited by gkrishna; 3rd September 2014 at 07:26 PM.
gkrishna
-
3rd September 2014, 07:35 PM
#1795
Junior Member
Platinum Hubber
On December 17, 1964 the country saw the birth of its first multi-screen theatre in Madras with the grand opening of Safire cineplex (Blue Diamond and Emerald) screening Cleopatra in deluxe colour. Safire screened English films exclusively, while Blue Diamond fashioned as an ‘art theatre’ presented movies of quality otherwise not shown in the city. Emerald on the other hand ran popular films in Hindi and Tamil.
A fully air-conditioned 70mm picture house, Safire boasted of Bauer U2 projectors fitted to a 62’x 29’ screen, the largest ever in the country, and a seating capacity of an impressive 909 people in cushion chairs. Continuous shows, a feature popular in the West, was a practice the cineplex brought in vogue. This allowed one to walk in and out of the theatre at any time between 1 p.m. and 1.30 a.m. and watch the same film as many times as one wanted to. A hit among young students and couples, many are known to have spent entire days within the cineplex! The canteens, Nine Gems and Navaratna famous for their North Indian snacks were an added attraction drawing in crowds. Hailed as the ‘showpiece of the motion picture exhibition world’, the cineplex changed the experience of consuming cinema in the country.
First Tamil movie-1965
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
3rd September 2014, 07:38 PM
#1796
அருமை எஸ்வி சார் safire திரை அரங்கு பற்றிய ஆரம்ப செய்தி
-
3rd September 2014, 07:41 PM
#1797
Junior Member
Platinum Hubber
Originally Posted by
gkrishna
அருமை எஸ்வி சார் safire திரை அரங்கு பற்றிய ஆரம்ப செய்தி
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd September 2014, 08:20 PM
#1798
"பாற்கடல் அலை மேலே பாம்பணையின் மேலே பள்ளி கொண்டாய் ரெங்கநாதா......". ராஜாதேசிங்கு படத்தில் எம்.எல்.வி பாடியது.
நாட்டிய பேரொளி பத்மினி படத்தில் பாடி ஆடுவார்.
அதில் சில வரிகள்:
"எங்கிருக்கிறான்? ஹரி எங்கிருக்கிறான்.." என்று ஹிரண்யன் கேட்க, "எங்குமிருப்பான். தூணில் இங்குமிருப்பான் என்று மகன் பிரகலாதன் சொல்ல, நரசிம்மமாகவே தோன்றி பத்மினி ஆடுவார் பாருங்கள்.
ஆவணி ரோகிணியில் அஷ்டமியிலே அர்த்தசாம நேரத்திலே அவதரித்தோனே..ஆயர்பாடி மேவிய யசோதை நந்தபாலா..."என்று கிருஷ்ணன் அவதரிக்க, கோபியரும் சேர்ந்துகொள்ள அருமையான நடனம்.
நடன அமைப்பு யார் என்று நினைவில்லை.
பத்து அவதாரங்களையும் சொல்லும் பாடலின் சந்தங்களை பல ராகங்களில் அமைத்திருப்பார் இசைமேதை ஜி.ராமநாதன். பாட்டைக் கேட்டு என்னென்ன ராகங்கள் என்று குருஜி ராகவேந்தர் அல்லது கோபால் ஜி பிரித்து மேயுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்
http://www.youtube.com/embed/StcPEr1ZqL8
மக்கள் திலகம்,லட்சிய நடிகர்,பானுமதி,பத்மினி,oak தேவர் பெரும் கூட்டம் நடித்த படம் 1960 வெளியீடு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th September 2014, 08:48 AM
#1799
Senior Member
Senior Hubber
வாசு ஜி,
நேற்றே சொல்ல மறந்து விட்டேன்
தம்பி பொண்டாட்டி மிகவும் அற்புதமான படம். ஏனோ மக்கள் அதற்கு அவ்வளவு வரவேற்பு அளிக்கவில்லை என்பது வருத்தமே..
நல்ல கதையம்சமுள்ள ஒரு படம்
நீங்கள் சொன்னது போல் மிகச்சிறந்த படம், கதை என எல்லாமும் கொண்டது. கூட்டுக்குடும்பம் அதிலும் கூட எப்படி ஒருவருக்கொருவர் அன்பாகவும் அதே சமயம் நண்பர்கள் போலவும் நடப்பதாக காட்டியது அருமை
விவேக் சமையல்காரனாக இருந்தாலும் இவர்களுடன் சேர்ந்து டி.வி பார்ப்பது கேலி செய்வது, வயதானாலும் கவிதாவை நாகேஷ் கொஞ்சுவது, தன்னுடன் வேலை செய்யும் பெண்ணையே தன் அண்ணனுக்கு பார்ப்பது, அண்ணியை கொண்டே தனக்கு பெண் பார்க்க சொல்வது என படு யதார்த்தம்.. அன்றைய சூழலில் அது கொஞ்சம் புதியதும் கூட.
இப்படி ஒரு சூழலில் கண்டிப்ப்பான அப்பா(வழக்கறிஞர் ராஜேஷ்), கணவன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத அம்மா சுலக்*ஷனா இப்படி ஒரு குடும்பத்திலுருந்து வரும் சுகன்யா இந்த வீட்டில் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகள் அதானல் நடக்கும் சண்டைகள் என கதை நகரும் விதம் அழகு
எப்பவுமே கணவனை மதிக்கும் சுலக்*ஷனா தன் மகள் வாழ்வு கெட்டுவிடக்கூடாது என்பதால் சொல்லும் உண்மை சுகன்யாவை குலை நடுங்கத்தான் வைக்கிறது.
குழந்தைகள் பாட்டி தாத்தாவை பார்க்க வருவதும், அவர்களுடன் சேர்ந்து ஏறுமயில் ஏறி விளையாடும் பாடலை நவீனப்படுத்தி பாடுவது என அமர்க்களம்.
மொத்தத்தில் அருமையாn் படம்
-
4th September 2014, 10:52 AM
#1800
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks