-
6th September 2014, 03:52 PM
#1
Senior Member
Senior Hubber
*
அதிகாலை..கருக்கல் வேளை..கதிரவன் குணதிசை வந்தடைய இன்னும் கொஞ்சம் நாழிகை பாக்கி..
அப்பாவிற்குமுழிப்பு வந்தது..சரி கோவிலிற்குச் சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி ஈசனைத் தரிசித்து வரலாம் எனத் துண்டெடுத்துக் கிளம்ப …அப்பா அப்பா எனக் குரல்…
பார்த்தால் பிள்ளை..
சமத்தோல்லியோ தூங்குடா செல்லம்.. கோவிலுக்குப் போய் ஜோ குளிச்சுட்டு ஒம்மாச்சி சேவிச்சுட்டு வரேண்டா..
“ம்ம்..மாத்தேன் போ..” என்றான் பிள்ளை.. நானும் உன் கூட வர்றேன்..
அதான் சாயந்தரம் கோவிலுக்கு டாட்டா கூட்டிட்டுப் போறேனே நெதைக்கும்..இப்ப விடேண்டா..
ம்ஹீம் மாட்டேன் நானும் வருவேன்..
பார்த்தார் சிவபாதர்.. உள்ளே அகமுடையாளோ கொஞ்சம் அசதியோ என்னவோ தூங்கிக் கொண்டிருந்தாள்.. சரி வா..ஆனா அடம்லாம் பண்ணப் படாது – எனச் செல்லமாகக்கண்டித்து கோவிலுக்குக் கூட்டிச் சென்றார்..
திருத்தோணிபுரம் தான் சீகாழியாய் மருவியதா தெரியவில்லை..சில புத்தகங்களில் சீகாழி சட்ட நாதர் ஆலயம் என்று சொல்லியிருக்கிறார்கள்..
கோவிலுள் தெப்பக் குளம்.. பிரம்ம தீர்த்தம் என்று பெயர் அதில் சென்று நீராட வேண்டும்..பையனைக் கூட்டிச் செல்ல முடியாது. அகமர்ஷண மந்திரங்களை வைகறைப் பொழுதில் ஜபம் வேறு செய்ய வேண்டும். என்ன செய்யலாம்..
-
6th September 2014 03:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks