-
7th September 2014, 08:40 AM
#21
Senior Member
Senior Hubber
அன்பின் பவளமணிக்கா.. மிக்க நன்றி..
-
7th September 2014 08:40 AM
# ADS
Circuit advertisement
-
7th September 2014, 01:59 PM
#22
Junior Member
Seasoned Hubber
அன்புள்ள ck - மிகவும் அருமையாக , எல்லோருக்கும் பயன் படும்படியாக , எளிமையான தமிழில் , உங்களுக்கே உரித்த நகைச்சுவை நடையுடன் , மிகவும் சிரத்தை எடுத்துகொண்டு தமிழ் விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் - இந்த கோளாறு பதிகத்தில் கிடைக்கும் அத்தனை புண்ணியமும் உங்களுக்கு கிடைக்க அந்த தோடுடைய செவியனை மனமார வேண்டுகிறேன் - உங்கள் சௌந்தரிய லஹரி யின் தமிழ் வடிவாகத்திர்க்கு பிறகு மிகவும் ரசித்த ஒன்று இது - 360 டிகிரி திறமை உள்ள ஒருவரை சந்திப்பது என் வாழ்க்கையில் இதுவே முதல் தடவை - இப்படியே நீங்கள் விஷ்ணு சஹஸ்ரநாமம் , லலிதா சஹஸ்ரநாமம் - இவைகளுக்கும் தமிழ் வடிவம் கொடுத்தால் எங்கள் எல்லோருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்
அன்புடன்
ரவி
-
7th September 2014, 02:10 PM
#23
Senior Member
Senior Hubber
அன்புள்ள ரவி..வாங்க வாங்க செளக்கியமா.. மிக்க நன்றி ரவி தங்களின் பாராட்டுக்கு.. கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறேன் நீங்கள் சொன்னதை..
அன்புடன்
சி.க..
-
14th September 2014, 08:48 PM
#24
Moderator
Diamond Hubber
>>>அழகிய வேலைப்பாடுகள் மிக்க காதணிகள் அணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை தனது இடது பாகத்தில் கொண்டவன்.
விடையெனச் சொல்லப் படும் எருதின் மேலேறி, தூய்மையிலேயே தலைசிறந்த தூய்மைகொண்ட வெண்மை நிறத்திலான பிறைச் சந்திரனை தனது சிரத்தின் முடியிலே சூடியவன்.. சுடுகாட்டில் விளைந்த சாம்பற்பொடிகளை உடலில் பூசிய அந்த ஈசன் என்னிடம் வந்தான்..என் நெஞத்தைக் கொள்ளையும் கொண்டான்
அழகிய சிவந்த மெல்லிதழ்க்ளை உடைய தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மன் படைத்தல் தொழில் வேண்டி முன்னொரு காலத்தில் வழிபட, அவனுக்கு அருள் புரிந்தபெருமைக்குரிய பிரம்மபுரத்தில் இருக்கும் பெருமான் அவன்..
வேறு யார் பரமசிவனாகிய இவன் தானே!>>>
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
14th September 2014, 10:00 PM
#25
Senior Member
Senior Hubber
உங்கள் கைதட்டலுக்கு என் நன்றி.. அது ஞான சம்பந்தருக்குத் தான் செல்லவேண்டும்.. உங்கள்பெயர்.. ..? ஏனெனில் உங்களுக்கு என் நன்றி ஆனா.. என்றால் வாக்கியம் முழுமை பெறாதது போல் தோன்றுகிறது..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th September 2014, 07:39 PM
#26
இன்று கோளறு பதிகம் வாசித்து முடித்தேன் ஒரே மூச்சில்.
மிக அருமை என்று சொல்வது சம்ப்ரதாய வார்த்தை .
அற்புதம்
சீர்காழிக்கு அருகில் திருகோலக்கா என்ற ஊரில் தான் அம்மை ஓசை கொடுத்த நாயகி தன்னால் அமுதூட்டபட்ட அந்த காழியூர் ஞான சம்பந்தனுக்கு தாளம் கொடுத்த படலத்தை படித்து இருக்கிறேன் .தாளபுரீஸ்வரர் என்று இறைவனுக்கு திருநாமம்
திருத்தோணி புறம்,திருப்ரம்மபுரம்,காழியூர்,கழுமல வள நகர்,வேணுபுரம்,புகலி,வெங்குரு,சிரபுரம்,பூந்தராய்,ப ுறவம்,சண்பை என்றல்லாம் அழைகபடுகிறது சீர்காழி
-
19th September 2014, 09:52 PM
#27
Senior Member
Senior Hubber
மிக்க நன்றி கிருஷ்ணா சார்..அடுத்த ட்ரிப் சீர்காழி போக எண்ணியிருக்கிறேன்..எல்லாம் அவனருள்..
Bookmarks