Page 323 of 401 FirstFirst ... 223273313321322323324325333373 ... LastLast
Results 3,221 to 3,230 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #3221
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3222
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3223
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like
    தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை
    ஒட்டி கடந்த 1979 ஆம் ஆண்டு ஈரோடு
    நகரை தலைநகராகக் கொண்டு புரட்சித்தலைவர்
    எம்.ஜி.ஆர் ., பெரியார் மாவட்டம் உருவாக்கிய
    தினம் இன்று




  5. #3224
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Mumbai
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரே நேரத்தில் – அவர்
    ஒருவர்தான் –
    நட்சத்திரமாகவும், நிலவாகவும் இருந்தவர்; ஏழை எளியவர் விழிகளுக்கு விருந்தவர்! ‘அவர் வாக்கு, வாக்கு வாங்கும் வாக்கு’ எனும்படி – ஆரம்ப நாள்களிலேயே – அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, இரண்டறக் கலந்திருந்த நாள்களிலேயே – எம்.ஜி.ஆருக்கு இருந்தது, எவராலும் எஞ்ஞான்றும் அசைக்க முடியாதபடி – அப்படியோர் Image; அப்படியொரு Charisma அது –
    கதர்ச் சட்டைகளின் கண்களில் கரித்தது!

    ‘எம்.ஜி.ஆர். கேட்டாலும், கேட்கா விட்டாலும் – படத்துக்குப் படம், பாட்டுக்குப் பாட்டு – அவரைத் தூக்கு தூக்குன்னு தூக்கறவன் நீதான்யா! ஏன்யா உனக்கிந்த வேலெ?’ – என்று என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டார், எங்க ஊர்ப்பக்கத்துக் காங்கிரஸ்காரர் ஒருவர்.இந்த இடத்தில் –
    ஒரு தன்னிலை விளக்கம் தர வேண்டியவனாக இருக்கிறேன் நான்!

    கண்ணதாசனுக்கு நேரே – நான் காலம் தள்ள வேண்டிய கட்டாயம்.கண்ணதாசனோ – சங்ககால இலக்கியத்திலிருந்து சமீபகால இலக்கியம் வரை – தனது பாடல்களில் எதையும் விட்டு வைக்கவில்லை.பத்ரகிரியாரும்; பட்டினத்தாரும்; குணங்குடி மஸ்தானும்; குதம்பைச் சித்தரும் – கண்ணதாசன் பாட்டில் கால் பரப்பி நின்றார்கள். கண்ணதாசன் ஓர் Voracious Reader!
    அவ்வை; ஆண்டாள்; வெள்ளி வீதியார்; காக்கைபாடினியார் – என்று பெண்பாற் புலவர்களின் பாடல்களெல்லாம், அவர்தன் நாக்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்தார்.அவற்றை எளிமைப்படுத்தி, எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தார்!

    ஒரு முத்தொள்ளாயிரப் பாடல். அரண்மனை முற்றத்தில் – நிலா வெளிச்சத்தில் மன்னன் மதுவோடும் மாதரோடும் மகிழ்ந்து கிடக்கிறான்.மது மயக்கத்தில், தம் ஆடை அவிழ்ந்ததைக் கூட அறியாத பெண்டிர் – அதை அறியுங்கால், நிலத்தில் விழுந்து கிடந்த நிலா வெளிச்சத்தை ஆடையென எடுத்து அணிய முயல்கின்றனர்.இந்தக் கருத்தை –
    சிவாஜி நடித்த ஒரு படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் – ‘இரவுக்கும் பகலுக்கும்
    இனியென்ன வேலை?’ – எனத் தொடங்கும் பாடலின் சரணத்தில் – ‘ஆடை இதுவென நிலவினை எடுக்கும்
    ஆனந்த மயக்கம்’ – என்று கண்ணதாசன் எளிமைப்படுத்தி எழுதியிருப்பார்!

    இப்படி - எந்தப் பாடலிலும் கண்ணதாசனின் இலக்கிய ஆளுமை மேலோங்கியிருந்ததால் – நானென்ன புதிதாக எழுதிக் கிழித்திட முடியுமென்று – எம்.ஜி.ஆரின் சமூக, அரசியல் செல்வாக்கையும் – அவரது வண்மைக் குணத்தையும் மனதில் வைத்து – படப் பாடல்களை எழுதப் புகுந்தேன். அவை, எம்.ஜி.ஆரைத் தவிர, எவர்க்கும் பொருந்தாதபடியிருந்தன!

    எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போம்.‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே;
    இருட்டினில் நீதி மறையட்டுமே’ ‘உலகம் பிறந்தது எனக்காக!
    ஓடும் நதிகளும் எனக்காக!’ ‘உன்னையறிந்தால் – நீ
    உன்னையறிந்தால் – இந்த உலகத்தில் போராடலாம்’
    – இப்படி எத்துணையோ பாடல்கள்; இவற்றை சிவாஜியும் பாடலாம்!

    ஆனால் –
    அடியேன் எழுதிய – ‘மூன்றெழுத்தில் – என்
    மூச்சிருக்கும்!’ ‘நான் –
    ஆணையிட்டால்!’ ‘கொடுத்ததெல்லாம்
    கொடுத்தான்!’ ‘உதயசூரியன் பார்வையிலே –
    உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ ‘நான்
    செத்துப் பிழைச்சவண்டா!’ ‘ஏன் என்ற கேள்வி –
    இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை’
    – இந்தப் பாடல்களெல்லாம், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்! இவையெல்லாம் –
    கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல், எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது.இந்தப் பாடல்களால் –
    எம்.ஜி.ஆர். ஏழை எளிய உள்ளங்களில் போய் உட்கார்ந்து கொண்டார்.குப்பத்துக் குடிசைகள் – ‘வாத்யார்’ என அவரை வாஞ்சையுடன் கூப்பிட்டுக் குல தெய்வமாய்க்
    குலவையெழுப்பின! ‘

    --- கவிஞர் வாலியின் ' எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து

  6. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  7. #3225
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆடாத மனமும் உண்டோ?

    நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.
    கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.
    ‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
    வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
    ‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
    தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
    என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.
    கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
    கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.
    அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.

    அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.

    இப்படி நுணுக்கமான நடிப்புக் கலையை வெளிப்படுத்தும் திறமை உள்ளவருக்கு மிகவும் தாமதமாக சிறந்த நடிகருக்கான பாரத் விருது 1971ம் ஆண்டில்தான் கிடைத்தது. அதற்கும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. 40,000 ரூபாய் கொடுத்து பட்டத்தை வாங்கியதாக விமர்சனம் எழுந்தது. பட்டம் பெற்றதற்காக சென்னை ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இதற்கு அருமையாக பதிலளித்தார் தலைவர்.‘‘ 40,000 ரூபாய் கொடுத்து பட்டம் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை . அப்படி வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அதற்கான வசதி தமிழக மக்கள் எப்போதோ எனக்கு கொடுத்து விட்டார்கள்’’ என்று அற்புதமாக பதிலளித்து விமர்சனங்களை தகர்த்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் ‘நான் சம்பாதித்து விட்டேன், எனக்கு வசதி வந்து விட்டது’’ என்று தலைவர் கூறவில்லை. மக்கள் எனக்கு வசதியை தந்து விட்டார்கள் என்றுதான் கூறுகிறார். இப்படி எங்கும் எதிலும் எப்போதும் மக்களை முன்னிறுத்தியே அவர் செயல்பட்டதால்தான் மக்களும் அவரை மறக்காமல் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
    அந்தப் பேச்சு தலைவரின் மறைவுக்கு பின், 88ம் ஆண்டில்ஒலிநாடாவாக வெளியே வந்தது. அந்த உரையில் ஒரு நடிகன் எப்படி நடிக்க வேண்டும்? எப்படி நடிக்கக் கூடாது? என்று நுணுக்கமாக பேசியிருப்பார். இயற்கையாக நடிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்று 43 ஆண்டுக்கு முன்பே தீர்க்க தரிசனத்துடன் கூறியிருப்பார். அந்த ஒலிநாடாவின் தலைப்பே ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’. அந்த உரையை ஒலிநாடாவாக வெளியிட்டு காசு பார்த்தவர் தலைவரை சீண்டியும் மறைமுகமாக தனது பத்திரிகையில் விமர்சித்தும் வந்தவருமான எதிர் முகாமைச் சேர்ந்த மதிஒளி சண்முகம். கல்வீசுவோருக்கே கனியைத் தரும் மரம் போல தலைவர் எப்படியெல்லாம், யாருக்கெல்லாம் பயன்படுகிறார் பாருங்கள். அந்த ஒலிநாடாவின் முகப்பில் தலைவர் குத்துவிளக்கேற்றும் படம் அச்சிடப்பட்டிருக்கும். அமெரிக்காவில் சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது அந்தப் படம் என்பதால் மெழுகுவர்த்தியை ஏந்தியிருக்கும் அவரது புறங்கை சற்று வீக்கமாக இருப்பதை பார்த்தாலே கண்களில் நீர் திரையிடும். என் துரதிர்ஷ்டம் அந்த ஒலிநாடா அறுந்து விட்டது. (பல முறை கேட்டபிறகுதான்).
    அதன்பின், 3 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். திரைப்பட ஆல்பம் என்ற பெயரில் அருள்மொழி பதிப்பகத்தின் சார்பில் வெளியான புத்தகத்தில் அந்த உரையின் ஒரு பகுதி வெளியிடப்பட்டிருந்தது. அதை வெளியிட்டவர், இப்போதும் தலைவர் பெயரில் மாத இதழ் நடத்தி வருகிறார். ஒரு காலத்தில் ராஜபாளையத்தில் எதிர் முகாம் நடிகர் பெயரில் பத்திரிகை நடத்தியவர் என்பதாலோ என்னவோ அந்த பழைய பாசத்தில் எப்படி எல்லாம் நடிக்கக் கூடாது என்று தலைவர் பேசியிருந்த பகுதிகளை எடிட் செய்து வெளியிட்டிருந்தார்.
    அது இருக்கட்டும்....சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.
    எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?

    மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்...

    அன்புடன்: ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் படைத்து அவற்றில் எப்படி பரிமளிக்க வேண்டும் என்பதற்காக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டிச் சென்ற ஆண்டவராம் எங்கள் கலை வேந்தரை கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணக்கும்............கலைவேந்தன்.

  8. Thanks Russellisf, orodizli thanked for this post
    Likes Russellisf, orodizli liked this post
  9. #3226
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes orodizli liked this post
  11. #3227
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை மகாலட்சுமியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் , சத்யா மூவிசின்
    "காவல்காரன் ".

    48 வது ஆண்டு தினம். வெளியான தேதி(07/09/1967)

  12. Thanks orodizli thanked for this post
  13. #3228
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    Post kaavalkaaran


  14. #3229
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    anaithulaga m.g.r. pothunalasangam

    ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா - வெற்றி விழா
    கொண்டாட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி.

    பேராசிரியர் திரு.செல்வகுமார் நடிகர் திரு. சரத்குமார்
    அவர்களிடமிருந்து நினைவு பரிசு பெறுகிறார்.அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக
    அருகில் திரு. பி.எஸ். ராஜு, திரு. எம்.எஸ். மணியன்,
    நடிகர் திரு. கே. ராஜன் , திரு. லஷ்மண் , திரு. எஸ். ராஜ்குமார். ஆகியோர்.


  15. Thanks orodizli thanked for this post
  16. #3230
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    nikil

    திரு.நிகில் (மக்கள் தொடர்பாளர் ) திரு. ஆர்.கே. சண்முகத்துடன் உரையாடல் .


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •