-
9th September 2014, 01:49 PM
#2091
Senior Member
Senior Hubber
//அவள் - யார் சொல்வது
அவன் - எங்கும் மௌனமே
அவள் - மௌனமே
அவன் - மௌனமே // நிஜம்மாகவே உங்க அனலிஸிஸ் வெகு அழகு கிருஷ்ணா சார்.. அந்தப் படத்தில் எல்லாப் பாட்டும் ஹிந்தியைத் தழுவவே இல்லை என நினைக்கிறேன்..கடைசி பாட்டு நானில்லை தழுவலோ..(லத்துவிற்கு இன்னும் நல்ல டிரஸ் கொடுத்திருக்கலாம் //
-
9th September 2014 01:49 PM
# ADS
Circuit advertisement
-
9th September 2014, 02:09 PM
#2092
சி கே சார்
சிவகாமியின் செல்வன் படத்தில் லத்து இடம் பெற்றதே நடிகர் திரு மனோகர் அவர்களால் தான் என்று கேள்வி பட்டேன்.
நடிகர் திலகம் 'சிவகாமி சிவகாமி' என்று அழைக்கும் போது ஒரு ஹம்மிங் வருமே 'ஹே ஹே ஹே ஹே ' மறக்கமுடியுமா ?
-
9th September 2014, 02:12 PM
#2093
Senior Member
Senior Hubber
மறக்க முடியாது கிருஷ்ணா சார்.. நல்லா இருக்கும்..
ஓ மனோகர் ரெக்கமெண்டேஷனா..
அந்தப் புரத்தில் ஒரு மகாராணி - படம் பார்த்தப்ப பாட்டு ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜா இருந்தது..பிற்காலத்துல வானொலியில் சரி தமிழ்ல ரேடியோவில் கேட்டபோது யாராயிருக்கும் என வியந்திருக்கிறேன்..
-
9th September 2014, 02:30 PM
#2094
சுஜாதா பிலிம்ஸாரின் தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – சுஜாதா திரையில் தோன்ற வெள்ளித்திரையில் வெளியான ‘தீபம்’ திரைப்படத்திற்காக எழுதப்பெற்ற பாடல்! தீண்டும் இன்பத்தைப் போல் தினம் கேட்கத் தூண்டிநின்ற பாடல்! டி.எம்.சௌந்தரராஜன் எஸ். ஜானகி பாடியிருக்க இராகதேவன் இளையராஜா இசையை வார்த்தெடுக்க.. புலவர் புலமைப்பித்தன் வரிகள் மின்னுகின்றன!..
வழக்கமான காதல் பாடல் என்றாலும் கதகதப்பில் வார்த்தைகளைவிட கவித்துவங்கள் விளையாடிக்கிடக்க.. கலிங்கத்துப்பரணிகண்ட காட்சிக்கு வார்த்தைகள் வழங்கியதுபோல.. இன்பத்தின் மத்தளங்கள் இனிதாய் முழங்க.. மூன்றாம் பால் மோகனத்தை இப்பாடல் முழுவதும் காணலாம்!
கவிஞர் ஒருவர் திரைப்பட ஊடகத்தில் கிடைக்கும் வாய்ப்பினை திறமை இருக்கும்போது எப்படியெல்லாம் கையாளலாம் என்பதற்கு புலவர் இலக்கணம் வகுக்கிறார்.
ஏதோ சரித்திர காலத்திற்கு தள்ளப்பட்டவர்களாய் நாம் இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கடத்தப்படுகிறோம்!
காதலன் தோளில் காதலி சாய்ந்து காதலைப் பாடிடச் சொன்னால்.. அந்தப்புரமும் தெரியும் அதன் அந்தரங்கமும் புரியும் என்கிறாரோ புலமைப்பித்தன்!
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ
அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்
சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்
அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்
அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ…ஆராரி…ராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ
Thanks to kaverimainthan
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
9th September 2014, 03:02 PM
#2095
Senior Member
Senior Hubber
தாங்க்ஸ் கிருஷ்ணா சார் அந்தப்புரத்தில் ஒரு மகாராணி பாடல் இட்டமைக்கு.. இந்த முத்துச்சிப்பிய எடுத்து ஆராய்ந்தா கொஞ்சம் இலக்கியமாப் போகும்!..கண்ணதாசனே கையாண்டிருக்கிறார்.. கண்ணேபாப்பா பாட்டு், அப்புறம் முத்துச்சிப்பி மெல்ல மெல்லத் திறந்து வரும் முத்தும் ஒன்று தத்தை ..பிரிந்துவரும்.. அம்மம்மா அப்பப்பா தித்திக்கும் சேதிவரும்
//அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு// என்ன வரிகள்..புலமைப் பித்தன்..
கல்யாணத் தேன் நிலாவும் இவர் தான்..
//கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா -
உனைக்கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமா//
//தூக்கமருந்தினைப் போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள் -
நோய் தீர்க்கும் மருந்தினைப் போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள்// ஓ..ஓ. அழகிய வரிகள்..
-
9th September 2014, 03:25 PM
#2096
வைர முத்து
மனசு மயங்கும்.... மனசு மயங்கும்
மெளன கீதம்... மெளன கீதம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு
மன்மதக் கடலில்... மன்மதக் கடலில்
சிப்பிக்குள் முத்து... சிப்பிக்குள் முத்து
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு
gangai amaran
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கன்னமா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
செலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
-
9th September 2014, 03:40 PM
#2097
Senior Member
Senior Hubber
முத்தான முத்தல்லவோ - கண்ணதாசன்
ஆழ்க் கடலில் தேடிய முத்து - வாலி?
சிப்பியிலே முத்து அது சிப்பிக்கென்ன சொந்தம் - கண்ணதாசன்?
கத்தும் கவியினிமை கண்களிலே புன்சிரிப்பு
பத்து விரலழகைப் பார்ப்பதுவும் பூரிப்பு
சித்தம் மகிழ்ந்திடவே சீர்மிகுந்த மத்தாப்பும்
முத்தாக வந்ததுவே ஆம்..
-
9th September 2014, 03:44 PM
#2098
'சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி சொல்லாமல் என்னிடம் மறைத்தாளே தேவி மடியல்லவோ பூஞ்சோலை உன் மகனாய் நான்'
இந்த பாடல் யார் எழுதியது சி கே சார்
-
9th September 2014, 03:52 PM
#2099
Senior Member
Senior Hubber
தெரியலையே கிருஷ்ணா சார்..யாருக்கு யார் காவல் படம் என்று தெரிந்தது.. (அது சுஜாதா எழுதிய ஜன்னல் மலர் என்ற குறு நாவலை பேஸ் பண்ணி வந்தது - வெளிவந்த தியேட்டர் மதுரை ஸ்ரீ தேவி.. படம் பார்க்கலை..இவ்ளோ டீடெய்ல் கொடுத்திருக்கினில்ல ( பாடலாசிரியர் தெரியலைங்கறதுக்கு சமாளிக்கறாங்களாம்)
-
9th September 2014, 04:08 PM
#2100
Senior Member
Veteran Hubber
சொல்ல வந்தது ஒரே விஷயத்தை, கையாண்ட வார்த்தைகள் மட்டுமே சற்று வித்த்யாசம்....
1) பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து
வந்தது முத்து என மன்னவன் சொத்து.
(கண்ணே பாப்பா என் கணிமுத்து பாப்பா - கண்ணே பாப்பா)
2) பனித்துளி விழ விழ முத்து விளையும் - ஆஹா
(கண்கள் இரண்டும் விடி விளக்காக - கண்ணன் என் காதலன்)
3) முத்துச்சிப்பி வாய்திந்து மோகம் கொண்டு களித்திருக்க
கொட்டும் பனித்துளி விழுந்து கொஞ்ச கொஞ்ச என்ன வரும்
ஆ.ஆ.ஆ.ஆ.. முத்து ஒன்று பிறந்து வரும்
(வெண்ணிலா வானில் வரும் வேளையில் - மன்னிப்பு)
4) முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப்பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
(அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - தீபம்)
5) சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
(பூந்தோட்ட காவல்காரன்)
கொசுறாக...
தாமரை பூவினில் தேன் சிதற.. நீ கொஞ்ச கொஞ்ச நான் கெஞ்ச கெஞ்ச,,
(நீ கேட்டால் நான் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா - இளமை ஊஞ்சலாடுகிறது)...
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks