-
10th September 2014, 08:49 AM
#1
Junior Member
Devoted Hubber
இளையராஜா- King of Vibrating Veenai
இப்பதிவில் இளையராஜாவின் சினிமா பாடல்களில் இசைக்கப்படும் வீணை நாதங்களை பார்க்கப்போகிறோம்.

வீணை இசைக் கருவிகளின் ராணி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.இதன் முன்னோடி யாழ் என்ற இசைக்கருவி. திருவள்ளுவர் “குழல் இனிது யாழ் இனிது” என்று ஒரு குறளில் சொல்லி இருக்கிறார். ”மாசில் வீணையும்”அப்பர் பாடி இருக்கிறார்.
கல்வி கடவுள் சரஸ்வதியும் கையில் வீணையுடன். நாரதர் கையிலும் வீணை உண்டு.ராவணன் வீணை சாம கானப்ரியன்.அகஸ்தியரும் வீணை வாசிப்பார்.
சில எண்ணங்கள்:
பொது வழக்கில் கருவிகள் "வாசிக்கப்பட்டாலும்" வீணையின் நாதம் ஸ்பெஷலாக “மீட்டெடுக்கப்படுகிறது”
இதயத்தின் அருகே வைத்து மீட்டுவதால் ஆத்மார்த்தமாகவும் ஆழமாகவும் நாதம் வருகிறதோ?
பழைய படங்களில் பொதுவாக இது பரத நாட்டியத்திறகும், பக்திக்கும் நிறைய வாசிக்கப்பட்டிருக்கிறது.அடுத்துதான் டூயட் வருகிறது.
இளையராஜாவிற்கு முன்பு எல்லாம் 90%நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கும். fusion கம்மி.
பொது வழக்கில் பெண்ணுக்கு வீணையும் ஆணுக்கு புல்லாங்குழலும் தொடர்புப்படத்தப்படுகிறது
இதிலும் சோகம்,மகழ்ச்சி,தியானம்,புல்லரிப்பு,கனிவு இத்யாதி உணர்ச்சிகள் மீட்டெடுக்கப்படுகிறது
நேரடியாக,சந்தில் சிந்து,மின்னல்,நீண்ட,துளி எல்லா அளவுகளிலும் வீணை நாதம் ராஜா இசையில் கோர்க்கப்படுகிறது.
வயலினை exploit செய்தார் போல் இதை செய்யமுடியாது என்று என் கணிப்பு.முடிந்தவரை exploit செய்திருக்கிறார்
இளையராஜாவின் வீணை நாதம்............
பேசுதல்/நெகிழ்தல்/உருகுதல்/சிரித்தல்/வெட்கப்படுதல்/புலம்புதல்/சிலிர்த்தல்/அழுதல்/விரகதாபம் எல்லாம் இசைக்கிறது.
எல்லாவற்றிலும் “ஆத்மா” இருக்கிறது.

வீணையில் வாசிக்கப்படும் கர்நாடக இசையைக் கேட்பது ஒரு தனி சுகம்.அது ஒரு கடல்.கேட்பது எனக்கு சுலபம். எழுதுவதற்கு பண்டித ஞானம் இல்லை.
போவதற்கு முன்......
Veenai Ennule.mp3
துணை இருப்பாள் மீனாட்சி(1977)-சுகமோ ஆயிரம்
Veenai Sugamoaayiram.mp3
ஆறிலிருந்து அறுபதுவரை (1979)-கண்மணியே காதல்
VeenaiKanmaniye.mp3
தீபம்(1977) -அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
சாமந்திப் பூக்கள் மலர்கிறது.இரு சந்தன தேர்கள் அசைகிறது வீணையின் மீட்டலில்.0.21-0.24 வீணை வயலின் நாதப் பின்னல்கள் அருமை.இதுதான் மேஸ்ட்ரோவின் கற்பனை வளம்.
Veenai Anthapurathill.mp3
கண்ணே கலைமானே(1988)-நீர்விழ்ச்சி தீ மூட்டுதே
வித்தியாசமான மீட்டல்,தாளம்.அளவெடுத்து வீணையும் தாளமும் இசைக்கப்படுகிறது.
VeenaiNeervizhchi-KanneKalai.mp3
இசைஞானிக்குப் பிடித்த பழைய பாடல்.பாக்கியலஷ்மி(1961)
மாலைப்பொழுதில் மயக்கத்திலே.இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
இதில் 0.07-.10 அண்ட் 0.11-0.14 மீட்டல்களை கவனியுங்கள்.இதில் இன்ஸ்பயர் ஆகிறார் மேஸ்ட்ரோ.
VeenaiMalaipozhuthin.mp3
பிறகு தன் இசையில் கற்பனை கலந்து fusion ஆகி வருகிறது.
அது பகவதிபுரம் ரயில்வேகேட்(1983)- காலை நேரக்காற்றே
இதில் 0.02-0.04 அண்ட் 0.07-0.08 கவனியுங்கள்.மற்றொரு கருவி என்ன பெயர்? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
Veenai Kalainera katre.mp3
நீங்கள் கேட்டவை(1984)-ஓ வசந்த ரோஜா
இசைப் பூச்சரத்தில் மூன்று இடங்களில் அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
Veenai-O Vasantha Raja.mp3
சிந்துபைரவி(1985)-பூமாலை வாங்கி வந்தேன்
VeenaiPoomaalai-Sindhu.mp3
புதிய வார்ப்புகள்(1978)-தம்தனனம் தனனம்
வீணையும் வயலின்களும் உரையாடுகிறது. வித்தியாசமான துளிகள். வயலின் இசை உணர்ச்சிக்களுக்கு தோதாக வீணையின் நாதமும்.
Veenai thamthananam.mp3
கன்னிராசி(1985)-சுக ராகமே சுக போகமே
VeenaiSugaRagame.mp3
அலைகள் ஓய்வதில்லை(1981)-காதல் ஓவியம்
அட்டகாசமான Fusion.இசையின் போக்கு வெஸ்டர்ன் கிளாசிகலாக போகிறது.ஆனால் இடையே நம்ம ஊர் வீணை நாதம் இணைக்கப்பட்டு மீண்டும் வெஸ்டர்ன் கிளாசிலாக போகிறது.வேறோரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் இசை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.
Veenai NathiyiladumKathal Oviyam.mp3
இரண்டாவது ஆடியோ(இதில் துண்டாகிவிட்டது)
Veenai Kathal Oviyam.mp3
பழசிராஜா(2009)-குன்னத்தே
நாதத்தில் எத்தனைக் கனிவு.வயலினும் கனிவுக்கு பணிகிறது.அபாரம்.
VeenaiPazhazi-Kundrathu.mp3
இளமைகோலம்(1980)-ஸ்ரீதேவி என் வாழ்வில்
VeenaiSridevienvazhvil.mp3
மீண்டும் கோகிலா(1981)-சின்னஞ்சிறு வயதில்
0.06-0.09 மீட்டல் ஏதோ சொல்கிறது.
VeenaiChinnachiru-Vaya.mp3
எத்தனை கோணம் எத்தனைப் பார்வை(1983)-அலைப்பாயுதே கண்ணா
Veenai- Alaipayuthe Kanna.mp3
நிழல்கள்(1980)தூரத்தில் நான் கண்ட
Veenai Dhooraathil.mp3
வைதேகி காத்திருந்தாள்(1984)-இன்றைக்கு ஏனிந்த
நாட்டியத்திற்கு ஏற்ப வீணை இசை. 0.19-0.31 வரும் ஒரு நாதம் (வீணை அல்ல) உருக்குகிறது.வயோலா என்று யூகம்.
Veenai Indraikkuenintha.mp3
ராஜபார்வை(1981)-அழகே அழகே
VeenaiAzhake azhake.mp3
வியட்நாம் காலனி(1994) - கைவிணையை ஏந்தும் கலை
சிதார் மாதிரி இருக்கிறது. வீணை?
VeenaiVietnam Colony.mp3
மோகமுள்(1995) சொல்லாயோ வாய் திறந்து
எனக்குப்பிடித்த ஒன்று.Full of emotions.0.18ல் சொட்டும் வீணை நாதம் stunning
Veenai-Sollaayo-Moga.mp3
பயணங்கள் முடிவதில்லை(1982)-தோகை இள மயில் ஆடி
"அன்னமே இவளிடம் நடைபழகும்..இவள் நடை அசைவில் சங்கீதம் உண்டாகும்...”இசையில் காட்டுகிறார்.
VeenaiThogaiIlamayil.mp3
நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
VeenaiPaadumVanam.mp3
உனக்காவே வாழ்கிறேன்(1986)-இளம்சோலை பூத்ததோ
தமிழ்ப்படங்களில் காதலியை பரத நாட்டியம் ஆட விட்டு கதாநாயகன் ஜிப்பா சால்வையோடு (ரொமப் அனுபவித்து)பாடுவது ஆயிரம் காலத்துப் பயிர் ஆகிவிட்டது. மாத்துங்கப்பா..!
VeenaiThogaiIlamayil.mp3
பத்ரகாளி(1977) - கண்ணன் ஒரு கைக்குழந்தை
Veenai-KannanOru.mp3
தீர்த்தக்கரையினிலே(1987)-விழியில் ஒரு கவிதைப் படித்தேன்
சின்னத் துளிகள் அருமை.
Veenai- Vizhiyil Oru.mp3
கோயில்புறா(1981) வேதம் நீ
Veenai Vedham nee.mp3
நாயகன்(1987)-நீ ஒரு காதல் சங்கீதம்
Veenai Neeorukathal.mp3
காதல் ஓவியம்(1981)நதியில் ஆடும் பூவனம்
Veenai NathiyiladumKathal Oviyam.mp3
எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில் “வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு”படம்: வாழ்வு என் பக்கம்(1976).ரசிப்பது இதன் மெலடி/பாட்டின் கவித்துவம்/ஒரு ஹம்மிங்.
Veena(MSV) Veenai Pesum.mp3
டெயில் பீஸ்
பைனாகுலர் வைத்துப்பார்க்கிறேன் கடந்த 12 வருடத்தில் எவ்வளவு பாட்டுக்களில்(ராஜாவையும் சேர்த்து)வீணை நாதம் வந்திருக்கிறது என்று.சினிமா கதையெல்லாம் மாறிப் போய்விட்டது.நல்லதோர் வீணை செய்தேன்.அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..சொல்லடி சிவசக்தி?
Thanks to RA
-
10th September 2014 08:49 AM
# ADS
Circuit advertisement
-
10th September 2014, 08:56 AM
#2
Junior Member
Devoted Hubber
-
10th September 2014, 09:01 AM
#3
Junior Member
Devoted Hubber
இளையராஜா- King of Heavenly Hummings"
சினிமாவில் ஹம்மிங் பற்றி இந்தப் பதிவில் சினிமா ஹம்மிங தேவதைகள் பார்த்தோம்.அதில் இளையாராஜாவுக்கு முன்/பின்/சமகாலத்திய இசை ஜாம்பவான்களின் பாடலில் ஹம்மிங் பயன்படுத்தலைப் பற்றி பார்த்தோம்.
இளையராஜா புதுமை ஸ்பெஷலிஸ்ட் என்பதால் ஸ்பெஷலாக அவருக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு.மேஸ்ட்ரோ எதையுமே வித்தியாசமாகக் கொடுப்பவர்.ஹம்மிங்கை விட்டுவைப்பாரா?
இது தேவதைகளின் மொழி.பாடலை உணர்ச்சிகளால் ஒப்பனைச் செய்பவை.அதிலும் புதுமை புகுத்தி இருக்கிறார்.ஹம்மிங்கை ஒரு இசைக்கருவியாக உபயோகிக்கி்றார்.
உணர்ச்சிகள் கலையாமல். எந்த வித gimmicks இல்லாமல் அழகாக ஹம்மிங்கை spray paint செய்திருப்பார்.
ஜென்சி ஹம்மிங்கில் முன்னணி. பின்னுகிறார்.பிறகு ஜானகி/வாணி/சசிரேகா/ஷைலஜா/உமா/சித்ரா/சுஜாதா/ராதிகா/பூரணி/சுசிலா.
HUmm_AnnaiUnnaThed.mp3
”அன்னக்கிளி உன்னத்தேடுதே”-1976-அன்னக்கிளி
முதல் படம்.முன் இருந்த ஜாம்பவான்களின் சாயல் இல்லாதலட்சணமான ஹம்மிங்.இவர் யார் என்று தெரியாமலேயே மனதில் படிந்தது.
HUmm_RasaveUnnaNambi.mp3
”ராசாவே உன்னை”-1985-முதல் மரியாதை
ஜானகியின்ஆரம்ப கிராமத்து வெகுளி ஹம்மிங்.மனதில் “பச்சக்” என்று ஒட்டிக்கொள்ளும். வித்தியாசம் அன்ட் அட்டகாசம்.
”மஞ்சள் நிலாவுக்கு”-1979 -முதல் இரவு
Humm_manjalnilavukku.mp3
“ஊஊ......................” என்று ரயிலை கட்டி இழுத்துச்செல்வது மாதிரி ஹார்ன் பெண் ஹம்மிங் சூப்பர்.
”என் இனிய பொன்”-1980-"மூடுபனி”
Humm-EnIniya Pon.mp3
கிடாரைத் தொடர்ந்து தேவதைகள் அடுத்து புல்லாங்குழலைத் தொடர்ந்து தேவதைகள் வேறுவிதமாக. சூப்பர்.ஸ்டைல் ஹம்மிங்.
”ராத்திரியில் பூத்திருக்கும்"”--1983-தங்கமகன்
Humm-Rathiriyil Poo.mp3
இந்த ஹம்மிங் வருவதற்கு முன்/பின்/சேர்ந்து இசையை வாரி இறைக்கிறார்.stunning! அடுத்ததும் அசத்தல்.
"பூவில் வந்து”-1982-காதல் ஓவியம்
Humm_Poovilvandu.mp3
பாலுவின் ஆரம்ப மோகனராக ஹம்மிங் அருமை.ஹம்மிங் முடிந்தவுடன் வரும் இசையில் நம்மை வேறு உலகத்தில் மிதக்க விடுகிறார்.சின்னசாமி என்றால் ராசய்யா ஸ்பெஷல் உழைப்பு?

கிழ் வரும் ஹேம் ராம் பாட்டின் ஹம்மிங்கை கேட்காமல் போகாதீர்கள். மிகவும் வித்தியாசமானது.பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பு. Mindblowing composition by Isai Jnani Ilayaraja!
Humm - Neepaartha.mp3
”நீ பார்த்த பார்வை” -2000-ஹே ராம்
முன்னணியில் ராணி முகர்ஜி மனதை அள்ளும் குரலில் ஏதோ பெங்காலியில் பேசுகிறார்.பின்னணியில் மெலிதான பியானோ இசை. இரண்டும் இனிமையாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு தேவதை குரல் வருடிவிட்டுப் போகிறது. பிரமிப்பு.
பின் வரும் ஹம்மிங்கை கவனி்யுங்கள். இரண்டு விதமாக வருகிறது.அடுத்த பிரமிப்பு.
"செந்தாழம் பூவில்”-முள்ளும் மலரும்-1978
Humm_SenthaPoovil.mp3
யேசுதாசின் வித்தியாசமான hill station driving humming?. ஞானி சார் அட்டகாசம்!.என் பாட்டி(இப்போது உயிரோடு இல்லை) ஹம்மிங்கை ரசித்துக் கேட்பார்.பெண்களால் அதிக அளவில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாட்டு.
( மென்மையானஹம்மிங்கும், இதன் காட்சியும், பாடல் இனிமையும்,இசைக்கோர்ப்பும், ஹோம்லி ஷோபா/சிவப்பு கலர் புடவைப் பெண்/சரத்பாபுவின் ஆளுமைகள் மனஇயல்ரீதியாக பெண்களை ஒன்ற வைத்தன என்று சிலோன் ரேடியோவில் சொல்லக்கேட்டிருக்கிறேன்)
"காளிதாசன் கண்ணதாசன்”-1983-சூரக்கோட்டை சிங்கக்குட்டி
Humm-KalidasanKanna.mp3
ஆரம்பம் ஹம்மிங்.அட்டகாசம்.மேஸ்ட்ரோவின் குரலும் இழைகிறது.
”மெட்டி...மெட்டி”-1982-மெட்டி
Humm-Mettimetti.mp3
அற்புதமானஆண் ஹிந்துஸ்தானி டைப் ஹம்மிங் . இதே படத்தில்”மெட்டி ஓலி” பாட்டின் ஆரம்பத்தில் “கவுண்டர் பாயிண்ட்”ஹம்மிங் ராஜா ஒரு மெட்டிலும் ஜானகி வேறொரு மெட்டிலும் வித்தியாசமான ஹம்மிங்
"ஆனந்த தேன் காற்று”-1982-”மணிப்பூர் மாமியார்”
எஸ்.பி.ஷைலஜாவின் இந்துஸ்தானி ஹம்மிங் இனிமையோ இனிமை.
24Humm_anandthen.mp3
"என்னுள்ளே”-1993-வள்ளி Heavenly humming
Humm-ennulle ennule.mp3
"ஒரு ராகம்”-1982-ஆனந்தராகம்
Humm_OruRagam1.mp3
வித்தியாசமானக் கற்பனை. இதன் ஆரம்ப ஹம்மிங்கில் இதனுடன் பின்னி வரும் ”கும் கும்”தாளக்கட்டு இந்தப் பாடலுக்கு ஒரு சோக/ஏக்க effect கொடுக்கிறது.வேண்டிய இடங்களில் ஹம்மிங்கை அழகாக spray paint செய்திருக்கிறார் மேஸ்ட்ரோ.
"தெய்வீக ராகம்”-1980-உல்லாசப்பறவைகள்
(ஒலிப்பதிவு சரியில்லை) இதுவரைக் கேட்காத புதுமையான மனதை வருடும் தேவதை ஹம்மிங். It is absolutely out of the world humming!.எனன ஒரு அதீத கற்பனை!ஜென்சி சூப்பர்.
0.05-0.16 ஒரு வகையும் 0.45-1.04ல் வேறு வகையும்(ஹம்மிங் மற்றும் அதன் எதிரொலி)1.05 -1.10(ரிபீட்). “நீராட்டவா”2.20-2.23ல்கொஞ்சமாக 2.30-2.35 மீண்டும் பழைய ஹம்மிங்கிற்கு திரும்பும் தேவதைகள்.3.11 -3.20 ”தந்தானான”.
”தெய்வீக ராகம்” (0.51)என்ற வரியை ஜென்சி உச்சரிக்கும்போது பின்னணியைக் கவனியுங்கள்.”தெய்வீக....” என்ற எதிரொலி வரும்.ஆனால் 2.36ல் மீண்டும் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது எதிரொலி வராது.ஆனால் மறுபடியும் 4.04ல் ”தெய்வீக ராகம்”உச்சரிக்கும்போது வரும்.
ரூம் போட்டு உண்மையாக இசை(யோசி)க்கிறார் ராஜா.
3.45-3.54 ல் 2.20-2.23 ஹம்மிங் ரிபீட் ஆகும் என்று நினைப்போம்.ஆனால் அதேதான் ஆனால் கால அளவு மாறுபட்டு வித்தியாசமாக வரும்.அதான் மேஸ்ட்ரோ! பாடல் முடியும் போது மீண்டும் பழைய ஹம்மிங்.வளையம் முற்றுப்பெறுகிறது.
ஆடியோ சரி இல்லாததால்.பாட்டின் வீடியோவைப் பார்க்கவும்.
”ஆயிரம் மலர்களே”-1979-நிறம் மாறாத பூக்கள்
ஜென்சியின் மனதை உருக்கும் ஹம்மிங்.நேரடியாக கேட்காமல் எங்காவது காற்றில் மிதந்து வரும்போது கேட்டால் அள்ளிக்கொண்டு போகும்.
I love you Jency!
Humm-AayiramMalargale.mp3
”நான் ஒரு பொன்னோவியம்”--1980-கண்ணில் தெரியும் கதைகள்
Humm-Nan oru pon.mp3
இதில் குரூப் ஹம்மிங் இரண்டு அடுக்குகளாக வரும்.ஒரு நீண்ட அருமையான கிளாசிகல் ஹம்மிங்கும் உண்டு.
”ABC நீ வாசி”-1984-ஒரு கைதியின் டைரி
”வரைமுறை என உண்டு வாய் பொத்தி கேளு ”ஆரம்பிக்கும் முதல் சரணத்தில் வாணி/யேசுதாஸ மாறி மாறி பாடும்போது ”ஆஆஆஆஆ” பின்னணி ஹம்மிங்கும்,அடுத்து வரும் வரிகளில் இவர்கள் மாறி மாறி ஹம் செய்வார்கள்.
ஆரம்ப இசையை கவனியுங்கள் இசையோடு இசையாக ஹம்மிங்கும் ஒரு இசைக் கருவியாக பின்னிக்கொண்டுவரும்.
”கேளடி கண்மணி”-1989-புது புது அர்த்தங்கள்
Humm_KeladiKancom.mp3
எவ்வளவு வித்தியாசமான ஹம்மிங். அட்டகாசம்.எப்படியெல்லாம் ஹம்மிங்கு யோசிக்கிறார்.
இன்னும் பல அவற்றில் சில
1.தம் தம் தன்னம்
2.உறவெனும் -நெஞ்சத்தைக்கிள்ளாதே
3.பொன்வானம் பன்னீர்
4.எனதுவிழியில்
5.காற்றில் எந்தன் கீதம்
Thanks to RA
-
10th September 2014, 09:06 AM
#4
Junior Member
Devoted Hubber
-
10th September 2014, 09:15 AM
#5
Junior Member
Devoted Hubber
டைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.
முக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.
மிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.

இப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.
அந்தக் கவிதை ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.

இந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்
தெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.
காட்சி நேர்த்தியாக romanticize செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தக் கவிதைக்கு யதார்த்தமான பின்னணி உண்டு.
குற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.
மறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில் ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.
”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.
”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க" புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.
(ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)
மறுநாள்: ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER" என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக??) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.
வீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும் பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.

பியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..!" என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள் மீன்களாய் துள்ளி கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.
பாடல் முழுவதும் அவன் உடல்மொழி இயல்பாக இருக்கிறது.
காட்சி......
கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில் வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.
அர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.
அர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.
முதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..!
முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.
அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.
3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.

இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.
பாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும் கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.
காவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.
தமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.
Thanks to AR
-
10th September 2014, 09:26 AM
#6
Junior Member
Devoted Hubber
-
10th September 2014, 09:47 AM
#7
Junior Member
Devoted Hubber
Bookmarks