-
11th September 2014, 10:31 AM
#2161
சீர்காழி குரலில்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
இயற்றியவர்: மகாகவி பாரதியார்
இசை: ஜி. ராமநாதன்
திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014 10:31 AM
# ADS
Circuit advertisement
-
11th September 2014, 10:34 AM
#2162
காக்கை சிறகினிலே நந்தலாலா
இப்பாடலின் கடைசி வரிகளை கவனியுங்கள்...
தீக்குள் விரலை வைத்தேன் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடி நந்தலாலா!
ஜேசுதாஸ் லயித்து பாடி இருப்பார்! வரிகளுக்கு ஏற்ற இசையும், குரலும் அழகாக அமையப்பெற்ற ஒரு பாரதியின் பாடல்!
ஏழாவது மனிதன் l வைத்யநாதன் இசை
மகாகவி பாரதியார் இந்தப் பாடலை என்ன உணர்ச்சி நிலையில் பாடினாரோ ஒருவரும் அவ்வளவு சுலபமாக அதனைக் கையகப்படுத்திவிடமுடியாது. இந்தப் பாடலை கர்நாடக சங்கீத வித்வான்கள் முதல் சினிமா இசையமைப்பாளர்கள் வரை தங்களது கற்பனைக்கும், திரைக்காட்சிக்கும் பொருத்தமாக பாரதியின் இந்த அனாயாச அற்புத வரிகள் தகவமைக்கப்பட்டு டியூன் செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு இருந்தாலும் 1981ஆம் ஆண்டில் வெளிவந்த ரகுவரன் நடித்த ஏழாவது மனிதன் திரைப்படத்தில் எல். வைத்தியநாதன் அமைத்த டியூன் உண்மையில் எந்த ஒரு ரசிகரையும் உணர்ச்சிமயத்தில் ஆழ்த்துவது.
இதில் "Pathos" - உடன் கூடிய ஒரு வித நவீன வகை டியூனாக இதனை எல்.வைத்தியநாதன் வடிவமைத்துள்ளார். மிகவும் அற்புதமான டியூன் நீங்கள் கேட்டிருப்பீர்கள், இருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மனதை வருடும், இதமளிக்கும் ஒரு பாடலாகும் இது.
எல். வைத்தியநாதன் இவர் நிறைய திறமைகள் இருந்து பெரிய அளவில் வெற்றி பெறாத ஒரு இசையமைப்பாளர். ஓரிரு படங்களிலேயே இவர் இசை அமைத்திருந்தாலும் ஏழாவது மனிதனில் இவர் போட்ட அத்தனை பாடல்களும் மீண்டும் ஒருமுறை மறு உற்பத்தி செய்ய முடியாதது.! மறைந்த ரகுவரனின் இளமைக்கோலத்தையும் நாம் மறக்க முடியாது!
Last edited by gkrishna; 11th September 2014 at 10:38 AM.
gkrishna
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
11th September 2014, 10:34 AM
#2163
Senior Member
Senior Hubber
ஓ..சூலமங்கலம் ராஜலஷ்மியா..தவறாக எழுதிவிட்டேன்.. ந்ன்றி கோபால் சார்..
நிற்ப்துவே நடப்பதுவே எனக்குப் பிடித்தபாடல் கிருஷ்ணா ஜி..ஒரு சிறுகதை கூட எழுதியிருக்கிறேன்..(சுமாரான)..சுட்டும் விழிச்சுடர் கேட்ட நினைவு..பட் நண்பர்கள் கன்ஃபர்ம் பண்ணனும்..
-
11th September 2014, 10:36 AM
#2164
Senior Member
Senior Hubber
குரு.. எனக்கென்னவோ தீக்குள் விரலை வைத்தால்..சூலமங்கலத்தின் குரல் ரொம்ப உருக்கமாத் தெரியுது.. ( நல்ல தலைப்பு .. இதை வைத்து நாவல் எழுதியவர் .. வாஸந்தி)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 10:38 AM
#2165
Senior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
11th September 2014, 10:48 AM
#2166
Junior Member
Platinum Hubber
BHARATHIYAAR SONG- ANDHAMAN KAIDHI -1952
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
11th September 2014, 10:49 AM
#2167
பாரதியார் பாடல்கள் முதலில் திரையில் ஒலித்தது ஏவி.எம். தயா*ரித்த படத்தில் என்று இன்றளவும் கூறப்படுகிறது. அந்த கருத்து தவறானது. திருப்பூர் சண்முகானந்தா டாக்கீஸ் தயா*ரித்து ராஜா சாண்டோ இயக்கத்தில் கலைவாணர் நடித்த மேனகா திரைப்படத்தில்தான் முதல்முதலாக பாரதியார் எழுதிய
'வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி, வாழிய வாழியவே' பாடல் ஒலித்தது.
thanks to tamil.webdunia.com
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
11th September 2014, 10:52 AM
#2168

Originally Posted by
esvee
BHARATHIYAAR SONG- ANDHAMAN KAIDHI -1952
அருமை எஸ்வி சார்
அதிகமாக வெளியில் தெரியாத பாடல்
நினைவு ஊட்டலுக்கு நன்றி
-
11th September 2014, 11:07 AM
#2169
தற்போது வெளியாகி இருக்கும் மோகன்லால் நடித்த 'பெருச்சாளி' மலையாள படத்தின் இயக்குனர் திரு அருண் வைத்யநாதன் அவர்கள் நியூ ஜெர்சி யில் நடந்த சிந்தனைவட்டம் திரைப்பட விழாவில் திரு எல் வைத்யநாதன் (7வது மனிதன் இசை அமைப்பாளர் )
இசை அமைத்த ஒருத்தி என்ற திரைப்படம் பற்றி இவ்வாறு எழுதுகிறார்
ஒருத்தி என்றொரு முழுநீளத் திரைப்படம் கடைசியாகத் திரையிடப்பட்டது. அன்றைய தினத்தில் தயாரிப்பு நேர்த்தி (Production Values) மற்றும் இயக்க உத்திகளில் அற்புதமாகவும், கி.ராஜநாராயணின் கதையைத் தழுவியும் எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படம். இதன் இயக்குனர் அம்ஷன் குமாருக்கு மனமார்ந்தப் பாராட்டுக்கள். இதைத் தயாரித்தது திண்ணை ஆசிரியர் கோ.ராஜாராம் என்பதும், இணைத்தயாரிப்பு செய்தது காஞ்சனா தாமோதரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு தாழ்த்தப்பட்ட இளம் பெண், தனது புத்தி சாதுர்யத்தால் கிராமத்தைக் காப்பாற்றிய போதும், உயர்சாதிப் பையனோடு அவளுக்கேற்பட்டக் காதலைப் பெரியவர்கள் மறுக்கின்றனர். 'வேண்டுமென்றால் வேறு ஊரில் போய் கல்யாணம் செய்து கொள்' என்று பெருந்தன்மையாய் (?!) அனுமதியும் வழங்குகின்றனர். அவள் அதனைப் புறக்கணித்து, தன் மக்களுக்காகக் காதலைத் துறந்து ஊரோடு வாழ்வதில் மகிழ்ச்சி அடைகிறாள்.
படம் 1800ல் நடப்பது போல் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒரு காட்சிக் கூட தற்காலத்தைக் காட்டும் விதமாய் இல்லாமல், நன்றாக செய்திருந்தனர். செவனி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் நல்ல தேர்வு. படத்தில் பாலாசிங் போன்ற தெரிந்த முகங்களும் இருந்தது (நன்றாகச் செய்திருந்தார்) நல்ல பலம்! எல். வைத்தியநாதனின் பின்னணி இசை, காதல் காட்சிகளின் போது ரீங்காரமிட்டது.
அந்தக் காலத்தில், இரு தார மணத்தை சர்வசாதாரணமாய்ப் பெண்கள் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதை செவனிக் கதாபாத்திரம் மூலம் இயக்குனர் சொல்லும் போது, வருத்தமாகத் தான் இருந்தது. ஆங்கிலத் துரை சம்பந்தப்பட்டக் காட்சிகளில் எல்லாம், கொஞ்சம் பிசகியிருந்தாலும், மக்கள் பொசுக்கென சிரித்திருப்பார்கள். ஆனால், இயக்குனர் புத்திசாதுர்யமாக அவற்றைக் கையாண்டிருக்கிறார்.
செவனி, ஆடு மேய்க்கும் கம்பின் மூலம் நிலப்பரப்பை துரைக்கு விளக்கும் போது, கை தட்ட வேண்டும் போல் இருந்தது. (நல்ல உத்தி). படத்தில் மிக மிக யதார்த்தமான காட்சிகள், மெல்லிய நகைச்சுவை, அற்புதமான களம் என்று சகலமும் சரியாய் இருந்ததோடு, கல்வியறிவு தான் ஒடுக்கப்பட்டவர்களை மீட்க முடியும் என்ற நல்லக் கருத்தோடு (பிரச்சார நெடி இல்லாமல்) குறிப்பால் உணர்த்திய வண்ணம், படத்தை தூக்கி நிறுத்தியது.
இந்தப் படமானது அன்பே சிவத்தோடு போட்டியிட்டு இந்தியன் பனோரமாவில் விருது பெற்றது (?!) என்று அறிவிக்கும் போது சொன்னதாய் ஞாபகம், அப்படி நடந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இயக்கிய அம்ஷன் குமாருக்கும், தயாரித்த ராஜாராமுக்கும், பங்குபெற்ற அத்தனைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்தப் பாராட்டுக்கள். நல்ல படம் வேண்டும் என்று நினைப்பவர்கள், இது போன்ற படங்களைக் கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2014, 11:22 AM
#2170
Senior Member
Senior Hubber
//இது முன்பு வேறு ஒரு இழையில் எழுதியது..இங்கு கொடுக்கவில்லைஎன நினைக்கிறேன்//
தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவு தர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
..….களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பலகாட்டல்; கண்ணீர்த்
துளிவளர உள் உருக்குதல் இங்கிவையெல்லாம் நீயருளும்…தொழில்களன்றோ
..ஒளிவளரும் தமிழ்வாணி! அடியேனற்கு இவையனைத்தும் உதவுவாயே..!
*
மகாகவி பாரதி பிறந்தஃ நாளில் இன்று அவரை வணங்கி, அவருடைய பாடலை வைத்து ஆரம்பித்துவிட்டு..இப்போது.. திரையில் வந்த சில பாடல்கள்..
.***
ம்ம் முன்வரிசைகட்டி வருவது..கப்பலோட்டிய தமிழன் பாடல் + அந்தப் படத்தின் பாரதி..
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி
மேலைக் கடலென்றும் கப்பல் விடுவோம்..
பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் நம்
பாரத தேசமென்று தோள் தட்டுவோம்..
ம்ம் தீர்க்கமான கண்கள் தெளிவான பேச்சுடன் நடித்த எஸ்.வி.சுப்பையா..ப்ளஸ் படத்தில் இருக்கும் பாரதியார் பாடல்கள் மற்க்க முடியுமா.
.
**
ரொமான்ஸ் என்றால் – வீணையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு – ஏழாவது மனிதன், காற்று வெளியிடைக் கண்ணம்மா உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் – செக்கச் செவேல் ஜெமினியும் கொஞ்சம் நிறம் குறைந்த சாவித்திரியும் ப்ளாக் அண்ட் ஒய்ட்டாகப் பாடிய பாடல் என வரிசை கட்டுகையில்..இன்னொருபாடல் வந்து முன்னால் நிற்கிறது..
நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா..
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது..
**
இன்னும் சில..
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்..
*
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்..
(கொஞ்சம் சிரிக்கலாமா.. http://thiraipaadal.com/Lyrics.asp?l...gid=SNGOLD1044
இந்த லிங்க்ல தோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்னு எழுதியிருக்காங்க.. (கிரிக்கெட்ல இண்ட்ரஸ்ட் இருக்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா)கை நீட்டச் சொல்லி ஸ்கேலால நாலு போடுபோடணும்)
*
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்
(ஜானகியின் குரல் மெய்மறக்க வைக்கும்)
*
நல்லதோர் வீணை செய்தே அதை
நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ – உருக்கமான இந்தப் பாடல் பூர்ணம் வாயசைக்கும் போது இன்னும் உருக வைக்கும் – அந்த சூழ்நிலைக்கு த் தக்கபடி வந்த பாடல்.
*
ஏழாவது மனிதனில்.. அச்சமில்லை அச்சமில்லை…பாடல்..எல்.வைத்தியநாதன் இசை என நினைக்கிறேன்.. உச்சி மீது வானிடிந்து..வீழுகின்ற போதிலும் – என்பது ஹைபிட்சாக வரும் என்று நினைவு..(எஸ்.பி.பி)
*
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி – சகியே வாய்ச்சொல்லில் வீரரடி (உருக வைக்கும் பாடல்)
இன்னும் இன்னும் நிறைய மனதை முட்டுகின்றன.. நீங்கள் சொல்ல மாட்டீர்களா என்ன ?
*
பின்னூட்டம் பை ராஜ்ராஜ் சார்..
More Bharathiyar songs in movies:
-theeraadha viLaiyaattu piLLai
-thooNdil puzhuvinaipol veLiye sudar viLakkinaippol
-kaaNi nilam veNdum
-vetri ettu thikkum etta kottu murase
-aaduvome paLLu paaduvome
-senthamizh naadenumpodhinile
-chinnanchiru kiLiye kaNNammaa
-engirundho vandhaan
-nenju porukkudhillaiye
-sOlai malar oLiyo(suttum vizhi chudardhaan)
-Odi viLaiyaadu paappaa
-manadhil urudhi veNdum
ChinnakkaNNan: I think I gave you more than enough to write about. Some of these are from old movies - vEdhaaLa ulagam,Naam iruvar, Parasakthi,......
மதுண்ணாவின் பின்னூட்டம் :
சிக்கா... வேதாள உலகத்தில் கடேசில.. ராஜா ராணி ( டி.ஆர்.மஹாலிங்கம், யோகமங்களம் ) ரிசப்ஷனில் குமாரி கமலா டான்ஸ்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks