Page 224 of 401 FirstFirst ... 124174214222223224225226234274324 ... LastLast
Results 2,231 to 2,240 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #2231
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹையாங்க்.. வந்துட்டேன்..

    ஓ.. ஃபர்காட் டு ஸே குட்மார்னிங்க்.. குட்மார்னிங்க் ஆல்..

    குளித்து விட்டு சமர்த்தாய் பக்கத்து பில்டிங்கில் இருக்கும் ஓமான் எக்ஸ்ப்ரஸ் போய் வடை, கீ மசாலா ரோஸ்ட் ஆர்டர் செய்தால் வழக்கத்துக்கு மாறாக சூடான வடை, தமன்னாவின் புன்சிரிப்பைப் போல சிவந்த இளம் முறுவலாய் ம.தோசை வந்த போதே நினைத்தேன்..அட நாள் நன்றாக இருக்கப் போகிறது என்று..

    வந்தால் எஸ்வி சார்.. மிக்க நன்றி.. கண்ணன் எனக்கொரு பிள்ளை பாட்டுக்கும்.. இன்னும் வெகு தூரம் போகவேண்டும் ஓகே கொஞ்சம் ஆங்கிலத்தில் மாற்றி ஐ ஹேவ் டு கோ எ லாங்க் டிஸ்டன்ஸ் சார்..(பைக் கொஞ்சம் தரேளா!)

    கோபால் சார்.. மிக்க நன்றி தங்கள் பாராட்டுக்களுக்கு….ஜல்லி அடிப்பதைத் தவிர்க்கவே இயலாது தான் இல்லையா..

    இது என் கொள்ளுத் தாத்தா
    நடந்த சாலை
    பின் என் தாத்தா சைக்கிளில்
    என் அப்பா மொபெட்டில்
    நான் பைக்கில்
    என் பையன் காரில்..

    அதே சாலை தான்
    காலங்கள் மாறத்
    தொடரத் தான் செய்கிறது பயணம்..

    என முன்பு ஜல்லி என்ற தலைப்பில் எழுதிப் பார்த்தது நினைவுக்கு வருகிற்து ஒன்ஸ் அகெய்ன் தாங்க்ஸ்..

    கோபு சார்.. அவ்வப்போது நீங்கள் இடும் லைக்ஸ் அண்ட் தாங்க்ஸ் ஒரு மிகப் பெரிய ஆதரவு என்பது தெரியுமா உங்களுக்கு... மிக்க நன்றி..

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2232
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே

    மிகச்சிறந்த பாடகியான ஸ்வர்ணலதாவின் நினைவு தினம். அவர் விட்டு சென்ற இடம் வெற்றிடமே ..

    அவர் நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது 2 பாடல்கள்




    ( i rate this even more than porale ponnuthayee)

  5. Likes Russellmai liked this post
  6. #2233
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    [QUOTE=chinnakkannan;1163970]

    காலை வணக்கம்.

    அன்பு நண்பர் சின்னகண்ணன் அவர்களுக்கு

    உங்கள் 5000 பதிவு சாதனைக்கு

    பாட்டு எழுதி பேர் வாங்கும் புலவர்கள் சிலர்,குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் , செண்பக பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்க தான் எழுதியதை தானே கொண்டு வராமல் ஒரு ஏழை புலவனிடம் கொடுத்து தமிழ் சங்கத்தில் வாசிக்க வைத்த சிவபெருமான்,சிவ பெருமானின் கோபத்திற்கு ஆளாகி பொற்றாமரை குளத்தில் சாம்பலாகி கிடந்த தமிழ் சங்கத்தின் தானை புலவர் நக்கீரன்,சிவ பெருமான் எழுதிய பாடலை கொண்டு கொடுத்து 1000 பொற்காசுகள் பரிசு பெற்ற தருமி புலவர் இப்படி பலவித கதாபாத்திரங்கள் நிறைந்த திருவிளையாடல் புராணம் நீங்கள் படித்து இருப்பீர்கள். சென்னைக்கு அருகில் இருக்கும் குன்றத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த சேக்கிழார் அவர்கள் எழுதியது. அந்த திருவிளையாடல் புராணம் போல் உங்கள் எழுத்து நடையில் சங்க கால பாடல்களின் அடிசுவடு நிறைய காண கிடைகின்றது. இது போல் மென்மேலும் பல பதிவுகள் எழுதி பல்வேறு சாதனைகள் புரிய உண்மையான வாழ்த்துகளை வழங்குகிறேன்.

    திருவிளையாடல் என்றவுடன் நினைவுக்கு வருகிறது .
    'பாட்டும் நானே பாவமும் நானே' கௌரி மனோஹரி ராகம் என்று நினைவு.சிலர் இதை கானடா ராகம் அடிப்படையில் அமைந்த பாடல் என்றும் சிலர் ஆபேரி ராகம் அடிப்படையில் அமைந்த பாடல் என்றும் சொல்வார்கள். ராகம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் உறுதி செய்யலாம்.
    இந்த பாடலை எழுதியவர் கா மு ஷெரீப்பா அல்லது கண்ணதாசனா ?

    ஜெயகாந்தனின் 'ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் ' புத்தகத்தில் பக்கம் 119-121 இந்த பாடலை எழுதியவர் கா மு ஷெரீப். ஆனால் திரை படத்தில் கண்ணதாசன் பெயரில் வெளி வந்தது என்று எழுதி உள்ளார்.

    நன்றி ராஜேஷ் சார்

    அருமையான காலை வணக்கம் .
    பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினத்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி
    Last edited by gkrishna; 13th September 2014 at 12:18 PM.
    gkrishna

  7. #2234
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஸ்வர்ணலதா (37). இவர் 1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி மெல்லிசை மன்னரால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.

    எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 1990ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... பாடல்தான் இவரை பிரபலபடுத்தியது. அதேபோல அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... பாடல் ஸ்வர்ணலதாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இப்பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பஞ்சாபி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கும் ஸ்வர்ணலதாவின் குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.

    நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி 12/09/2010 அன்று காலமானார்

    ஸ்வர்ணலதாவின் ஹிட்ஸ்களில் சில...

    ஆட்டமா தேரோட்டமா (கேப்டன் பிரபாகரன்)
    போவோமா ஊர்கோலம் (சின்ன தம்பி)
    மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)
    அடி ராக்கம்ம கையத் தட்டு (தளபதி)
    அந்தியில வானம் (சின்னவர்)
    உசிலம்பட்டி பெண்குட்டி (*ஜென்டில் மேன்)
    மலைக்கோயில் வாசலிலே... (வீரா)
    மாடத்திலே கன்னி மாடத்திலே (வீரா)
    என்னுள்ளே.. என்னுள்ளே (வள்ளி)
    உளுந்து விதைக்கையிலே... (முதல்வன்)
    எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே)
    முக்காலா முக்காபுலா (காதலன்)
    பூங்காற்றிலே உன் சுவாசத்தில்... (உயிரே)
    அக்கடா நாங்க (இந்தியன்)
    அன்புள்ள மன்னவனே (மேட்டுக்குடி)
    குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)
    மெல்லிசையே... (மிஸ்டர் ரோமியோ)
    கட்ட கட்ட நாட்டு கட்ட (ஜெமினி)
    நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா (உடன்பிறப்பு)
    ஒரு பொய்யாவது சொல் கண்ணே (ஜோடி)
    அஞ்சாதே ஜீவா (ஜோடி)
    காதலெனும் தேர்வெழுதி... (காதலர் தினம்)
    முத்தே முத்தம்மா... (உல்லாசம்)
    மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் (மே மாசம்)

    ஆர்ப்பரிப்பில்லாத மெலிதான இசையைக் கடந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஸ்வர்ணலதாவின் அந்த சோக நாதம். "அலைபாயுதே" படத்து "எவனோ ஒருவன் யாசிக்கிறான்" பாட்டு அதே அலைவரிசையில் பொருத்திப் பார்க்க வேண்டிய இன்னொரு வைரம். "காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாட்டில் ஸ்வர்ணலதாவுக்கு ஜோடி கட்டி அவரை இன்னொரு வடிவிலும் தன் இசையால் நிரப்பியவர் ரஹ்மான்.

    இசைஞானி இளையராஜாவுக்கு எண்பதுகளின் முதல் வரிசைப்பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றீடாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா. "குரு சிஷ்யன்" படத்தில் வரும் "உத்தமபுத்திரி நானு" என்ற பாடல் தான் ராஜாவின் பட்டறையில் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. சுனந்தா, மின்மினி ஆகியோர் அளவுக்கு ஒரு தேக்கம் இல்லாது கடகடவென்று உயரே உயரே பறந்து உச்சத்தை தொட்டார் ராஜாவின் மந்திர மெட்டுக்களோடு.

    நடிகை குஷ்பு பரபரப்பான ஒரு பிரபலமாக மாறிய போது கச்சிதமாகப் பொருந்திப் போனது சுவர்ணலதாவின் குரல். குறிப்பாக சின்னத்தம்பி, இது நம்ம பூமி, பாண்டித்துரை ஆகியவை சாட்சியம் பறையும். என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" பாட்டில் தன்னுடைய அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக் குவித்துப் படத்தின் பெருவெற்றியிலும் பங்காளி ஆனார்.

    வள்ளி திரை படத்தில் இடம் பெற்ற 'என் உள்ளே என் உள்ளே பல மின்னல் ' ஒரு அருமையான முக்கல் முனகல் இல்லாத விரக தாப பாடல் காதுகளை ஊடுருவும் போது மயிர்க்கூச்செறியும் நிகழ்வு ஒவ்வொரு முறையும் வாலிப கவிஞர் வாலியின் வாலிப வரிகள் .



    Last edited by gkrishna; 13th September 2014 at 12:04 PM.
    gkrishna

  8. Thanks Russellmai thanked for this post
  9. #2235
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    krishna ji arumai arumai. Swarnaltha writeup arumai

  10. Thanks gkrishna thanked for this post
  11. #2236
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி ராஜேஷ் சார்
    gkrishna

  12. #2237
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹையாங்க் கிருஷ்ணா சார்.. ஹேம நாத பாகவதருடன் நானா என த் திகைத்த டி.ஆர் மகாலிங்கம் நிலையில் இருக்கிறேன்..சேக்கிழாருடன் நானா.. நான் ஒரு சிறு குறு மணல்..ஓ.கே.. கொஞ்சம் குண்டு மணல்.. மிக்க நன்றி..இன்னும்வெ.தூ.போ.வே.,. உங்கள் ஆசியுடன்..

  13. #2238
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்.. ராஜேஷ் ஜி ஸ்வர்ணலதா நினைவு தினம் என்று பகன்றதும் நானும் ஒரு பதிவு எழுதிப் பார்த்தேன்..வந்து பார்த்தால் ஏற்கெனவே எழுதியிருக்கிறீர்கள்..அருமை.. நானும் இடுகிறேன் சற்றே எடிட் செய்து.. நன்றி

  14. #2239
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஸ்வர்ணலதா..

    ஒரு ச்சிலீர் வனிலா ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்பின் மீது இரண்டு நாவற்பழங்களை வைத்தாற்போலக் கண்கள்..வெளிர்மஞ்சள் சாத்துக்குடிச் சுளையைப் போன்ற மூக்கு..செம்மாதுளை முத்துக்களின் நிறத்தைக் கொண்ட உதடு..கொஞ்சம் கவர்ச்சிகரமான காட்டுப் பெண்ணின் உடையுடன் அந்த நாயகி ரம்யா கிருஷ்ணன் கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில் பாடிய பாடல் தான் ஸ்வர்ணலதாவின் குரலில் நான் கேட்ட முதல் பாட்டு..

    ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
    வெகு நாளாக உன்னைத் தான்
    கன்னி நான் வாடுறேன்.. நடை போடுறேன்..

    என்ற உச்சரிப்பு ர விற்கும் றவிற்கும் உள்ள அழகிய வித்தியாசம் ப்ளஸ் இனிமையான வித்தியாசமான குரல்..ஹை யார் இது..என்று பார்த்தால் ஸ்வர்ண லதா..

    அவர் பற்றி விக்கிப்பீடியா என்ன சொல்கிறது..

    கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், மற்றும் கீபோர்ட ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார். சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உயர் கல்வியையும் கற்றர்.
    சொர்ணலதா 1987 ஆம் ஆண்டில் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உயர்ந்த மனிதன் படத்தில் பி. சுசீலா பாடிய பால் போலவே என்கிற பாடலைப் பாடிக்காண்பித்தார். சொர்ணலதாவின் குரலில் தனித்துவம் தெரிய அதே ஆண்டில் மு. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்குத்தண்டனை படத்தில் பாரதியாரின் 'சின்னசிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை யேசுதாசுடன் விசுவநாதன் பாடவைத்தார். அப்பொழுது சொர்ணலதாவிற்கு 14வயது மட்டுமே. பின் இவர் 1988இல் வெளியான குருசிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி நானு என்னும் பாடலை இளையராஜாவின் இசையமைப்பில் பாடினார்.

    பின் தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.

    புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்" படம் தமிழில் "அனார்கலி" என்ற பெயரில் வெளியானது. இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். இப்போட்டிப் பாடலை இரு வெவ்வேறு குரல்களிலும் சொர்ணலதா, சங்கர் கணேசின் இசையமைப்பில் பாடினார். சொர்ணலதாவின் திறமையை நவ்ஷாத் அலி பாராட்டினார். அத்துடன், தன்னுடைய மோதிரத்தையும் சொர்ணலதாவுக்கு விருதுபோல வழங்கினார்.

    • 1994 - இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி
    • 1991 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்கோலம்
    • 1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி
    தமிழக அரசு சிறப்பு விருது
    • 1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான கலைமாமணி விருது
    சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
    • 1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்கோலம்
    • 1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
    • 1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க , மாயா மச்சிந்ரா
    • 1999 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : முதல்வன் , பாடல் : உழுந்து விதைக்கையில
    • 2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்
    ஃபிலிம்பேர் விருதுகள்
    • 1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
    • 1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
    • 1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க
    • 2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்
    • 2002 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது - படம் : பூவெல்லாம் உன் வாசம் , பாடல் : திருமண மலர்கள்
    நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவர்ணலதா 2010, செப்டம்பர் 12 தனது 37வது அகவையில் காலமானார்[3

    *
    அவர் பாடிய நீ எங்கே என் அன்பே.. யில் சிரிக்கின்ற கண்களைக் கொண்ட குஷ்பு உணர்ச்சி வசப்பட்டு அழுகையாய் வாயசைக்க அந்தக் குரல் டபக்கெனப் பொருந்திய அழகு.. சார்லி சாப்ளின் முதலாம் சந்திப்பில்.. ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு , குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா...எவ்வளவு அழகிய பாடல்கள்.. இந்த எவனோ ஒருவன் யாசிக்கிறான்.. இருட்டிலமர்ந்து நான் யோசிக்கிறேன் என உருக்கும் குரலாய் கதானாயகியின் மன நிலையைப் பிரதி பலிக்கும் அழகிய பாட்டு.. யாரது யாரது அன்பே – மேட்டுக்குடிப்பாட்டில்..இது கனவா கற்பனையா.. என வரும் குரல்..ம்ம் நிறையப் பிடிக்கும்.

    ஆறிலும் சாகலாம் அறியாத வயது நூறிலும் சாகலாம் அனுபவிச்ச வயது..இடைப்பட்ட வயசுல யாரும் சாகக் கூடாது – என நீலவானத்தில் கான்சர் பேஷண்ட்டான தேவிகா பேசுவதாக வசனம் வரும்..

    ஜஸ்ட் தர்ட்டி செவன்..அதற்குள் எவ்வளவு விருதுகள்.. எவ்வளவு இனிய பாடல்கள்.. வித்தியாசமான இனிய குரல்..

    கேட்பதற்காகவே காலன் அழைத்துக் கொண்டான் போலும்.. குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா இனி.. அவர் குரல் மட்டும் இசை விரும்புபவர்களின் மனதில் எந்தக்காலத்திலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்..
    Last edited by chinnakkannan; 13th September 2014 at 12:48 PM.

  15. Likes Russellmai liked this post
  16. #2240
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அந்த ஆணவம் பிடித்த ஹேமநாத பாகவதர் . ஓட ஓட விரட்டிய ஈசன் அருள் இருந்ததால் பாணபத்திரர் வெற்றி பெறும் போது நம்ம சி கே அவர்களுக்கு எல்லா அருளும் இருக்கு

    சி கே சார் ஜெயம் நம்ம பக்கம்தேன் . ஹேமநாத பாகவதர் சொன்ன உடன் நினைவு
    ஹேமா ஆனந்த தீர்த்தன் னு ஒரு ஆள் கதை எல்லாம் விடுவாரே அதாவது எழுதுவாரே இதயம் பேசுகிறது இதழில் நினைவு உண்டா ?
    gkrishna

  17. Thanks chinnakkannan thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •