-
22nd September 2014, 07:17 PM
#1071
Junior Member
Veteran Hubber
Originally Posted by
PARAMASHIVAN
Narayana
Intha kosu tholla thaanga mudiyala ! Ithu satharana kosu illa, ithu ratchasa kosu, Ranguski!
Premji amaran silarai kalaachitrunthapla. Avar tweets read panni tune aagi irunthen so unga post ellaam verai maathiri read panni vilunthu vilunthu sirichen.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2014 07:17 PM
# ADS
Circuit advertisement
-
22nd September 2014, 08:38 PM
#1072
Senior Member
Diamond Hubber
Originally Posted by
ajaybaskar
Yaara Param solreenga?
ada namma Osthi da mass pathi than ! lol
Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye
-
23rd September 2014, 01:23 AM
#1073
Senior Member
Veteran Hubber
#Simbu saved this small boys life, sponsoring his emergency medical expenses
10415703_782026675173011_1138951183205022878_n.jpg
SIMBU in IRON MAN getup
-
23rd September 2014, 04:02 PM
#1074
Senior Member
Veteran Hubber
ஏழைச் சிறுவனின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு நிதியுதவி: தந்தையின் நெகிழ்ச்சிப் பேட்டி - hindu
"என் மகன் அசுவத்தாமன் தற்போது நன்றாக இருக்கிறான் என்றால், அதற்கு காரணம் சிம்பு சார்தான்" என்று திருவண்ணாமலையைச் சேர்ந்த சண்முகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள ஒரு சிறுவனின் மருத்துவச் செலவை நடிகர் சிம்பு ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது அச்சிறுவன் நன்றாக இருப்பதாக தகவல்கள், புகைப்படத்தோடு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.
இதை உறுதி செய்யும் விதமாக, சிம்புவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வந்த ஒரு நிலைத்தகவலை ரீ-ட்விட் செய்தார். சிம்புவின் இந்த நல்லெண்ண நடவடிக்கை, அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
உண்மையில் என்ன தான் நடந்தது, என்பதை அறிய அசுவத்தாமனின் தந்தை சண்முகத்தினைத் தொடர்பு கொண்டு பேசினேன். தனது மகனுக்கு சிம்பு செய்த உதவியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
"எனது பெயர் சண்முகம். திருவண்ணாமலையில் உள்ள கோயிலில் தற்காலிகமாக பணியாற்றி வருகிறேன். எனது மகன் அசுவத்தாமனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தோள்பட்டையில் பயங்கர வலி ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். ஆனால், வலி குறையவில்லை என்றவுடன் திருவண்ணாமலையில் பெரிய மருத்துவமனையை அணுகினோம்.
சிறுவயதில் விளையாடும் போது கீழே விழுந்ததில், நோய்த்தொற்று ஏற்பட்டு ரத்தம், நுரையீரல் மற்றும் எலும்பு ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அதிர்ச்சியளித்தார்கள். உடனே சென்னைக்கு கொண்டு செல்லுங்கள் என்றவுடன் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தோம்.
ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள இலவச பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தோம். நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், செயற்கை சுவாசம் கொடுத்தாக வேண்டும் என்று கூறி, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் என்றார்கள். ஒரு நாளைக்கு ரூ.25,000 ஆகும் என்றவுடன், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னுடைய நண்பர்கள்தான் பண உதவிகள் செய்து வந்தார்கள். ஆனால், பணம் அதிகம் தேவைப்பட்டது.
எனக்கு திருவண்ணாமலை கோயிலுக்கு வரும்போது நடிகர் சிம்புவோடு பரிச்சயம் ஏற்பட்டது. அவருடைய நண்பர் தீபனுக்கு இரவு 11:30 மணிக்கு போன் செய்து எனது மகன் பற்றிய விவரங்களை கூறினேன். 12:30 மணிக்கு என்னை சிம்பு அழைத்தார். ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நானே மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். மிகவும் சந்தோஷப்பட்டேன்.
சிம்புவே ராமச்சந்திரா மருத்துவமனையில் தெரிந்த மருத்துவர்களுக்கு போன்செய்து, அவரே பேசி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். இப்போது சிகிச்சை முடிந்து, எனது மகன் நன்றாக இருக்கிறான். அவனை பார்க்கும்போது எல்லாம் சிம்பு செய்த உதவி தான் ஞாபகம் வருகிறது. இன்றைக்கு எனது மகன் நன்றாக இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிம்பு சார் தான்.
சந்தானம் சாரும் கொஞ்சம் உதவிகள் செய்தார். எனது மகனுக்கு அதிகமான உதவிகள் செய்தது சிம்பு சார் தான். அவருக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் எல்லாம் சொல்லிவிட முடியாது.
மருத்துமனையில் இருந்து சிம்பு சாரைப் பார்க்க எனது மகனை அழைத்து சென்றேன். அப்போது எனது மகனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள், வேறு ஏதாவது உதவி என்றால் தயங்காமல் கேளுங்கள் என்றார். அவர் பேசியவுடன் கண்கள் குளமாக நின்றுக் கொண்டிருந்தேன்" என்றார்.
-
17th October 2014, 11:51 AM
#1075
Senior Member
Veteran Hubber
யாருடன் வேண்டுமானாலும் நடப்பது கல்யாணம் அல்ல: சிம்பு பேட்டி - hindu
உங்களுக்கு வரப்போற மனைவி ஹன்சிகா மாதிரி இருக்கணுமா, நயன்தாரா மாதிரி இருக்கணுமா? என்ற கேள்விக்கு, ‘‘என் மனைவி மாதிரி இருக்கணும். ஹன்சிகா, நயன்தாரா மாதிரியெல்லாம் எனக்கு மனைவி எதுக்கு?’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிம்பு. சர்ச்சையான கேள்வியாக இருந்தால் வேண்டாம் என்னும் நடிகர்கள் மத்தியில், எந்தக் கேள்வி என்றாலும் பளிச்சென்று பதில் சொல்லிவிடுவார் சிம்பு. அவருடன் பேசியதிலிருந்து..
‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் எப்போ ரிலீஸ்?
‘வாலு’ படத்தில் ஒரு பாட்டு மட்டும் பாக்கி இருக்கு. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டேன். தேதி முடிவு பண்ணிட்டுச் சொல்றேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர். ‘இது நம்ம ஆளு’ முக்கியக் காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. இன்னும் மூணு பாட்டு மட்டும் பாக்கி. ஒரு மாதத்தில் இசை தயாராகிவிடும்.
உங்களோட படங்கள் வருதோ இல்லயோ, ஆனா சர்ச்சைகள் மட்டும் வந்துகிட்டே இருக்கே. உதாரணமா அந்த வீடியோ?
வேறு யாருக்காவது இந்த மாதிரி வந்திருந்தால் அவர் க்ளோஸ். ஆனா, நமக்கு வீடியோ வந்தா அது மாஸ். நான் எதற்கு பீல் பண்ணிட்டு இருக்கணும்? நான் எதுவுமே பண்ணவில்லை என்றாலும், வாராவாரம் என்னைப் பற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறார்கள். வாராவாரம் எழுதிட்டு, அதுக்குப் பதில் சொல்லுங்க, இதுக்குப் பதில் சொல்லுங்க என்று சொன்னால், நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க? திடீரென்று பாம் வெடிச்சா பதற்றம் இருக்கும். தினமும் பாம் வெடித்துக்கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதுக்குப் பயப்படணும்.
வீடியோ வந்த அன்றைக்கு, என்னிடம் பதற்றமாகக் கேட்டர்கள். “அப்படியா.. வீடியோவில் நான் என்ன பண்றேன்” என்று கேட்டேன். நீங்க ஒரு பொண்ணை கிஸ் பண்றீங்க என்றார்கள். யாரையாவது கத்தி எடுத்துக் குத்திட்டேனா... கிஸ்தானே பண்ணினேன். எல்லாரும் பண்ணினதுதானே. அடுத்த தடவை நல்ல லைட் எஃபெக்ட் எல்லாம் பண்ணி வீடியோ எடுத்துப் போடலாம் என்று இருக்கிறேன். ஆனா அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை.
உதவி செய்யும் விஷயத்திலும் அஜித்தை பாலோ பண்ணுகிறீர்கள் போல?
உதவி பண்ண வேண்டும் என்று தோன்றியது பண்ணினேன். எனக்கு உதவி செஞ்சா போட்டோ எடுத்துக்கிறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அரசியல் ஆசை இருந்தால், உதவிகள் பண்ணும்போது போட்டோ எடுத்து விளம்பரம் பண்ணிக்கொள்ளலாம். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது. அஜித் சாரை இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறேன் என்று இல்லை. எப்போதுமே உதவி பண்ணியிருக்கேன். அதைப் பற்றி எல்லாம் சொல்லணும், பேசணும் என்று அவசியமில்லை.
நயன்தாராவுடன் காதல் பிரிவுக்குப் பிறகு நடிக்கிறீங்க. இப்போ பார்ட்டி போற அளவுக்கு நெருக்கமாகிவிட்டீர்களே?
முதல் விஷயம், நாங்க இரண்டு பேருமே சண்டை எல்லாம் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஒத்துப்போகவில்லை, பிரிந்துவிட்டோம். அவ்வளவுதான். எங்கள் இருவரது மனதிலும், இப்போது எதுவுமே இல்லை. அவங்க வேலையை அவங்க பாக்குறாங்க, என் வேலையை நான் பாக்குறேன். அதனால்தான் எங்களால் இணைந்து நடிக்க முடியுது. நான், தனுஷ், நயன்தாரா, அனிருத் எல்லாருமே நட்பா இருக்கோம். அன்றைக்கு எல்லாருமே ப்ரீயா இருந்தோம். வெளியே போனோம். அவ்வளவுதான்.
இந்திப் படங்கள், தயாரிப்பு நிறுவனம் எனப் போய்க்கொண்டிருக்கும் உங்களது நண்பர் தனுஷ் வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?
ரொம்ப சந்தோஷப்படுறேன். தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவிற்குப் போனது கொஞ்ச ஆட்கள்தான். அவரது முதல் படம், அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு. இப்போ அங்கேயும் தொடர்ச்சியா படங்கள் பண்றார். வேறொரு மொழி பேசும் திரையுலகுக்குப் போய் ஒரு நடிகர் நடிச்சு, பெயர் வாங்குறது பெரிய விஷயம். அந்த விஷயத்தில் தனுஷ் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு.
தங்கச்சி கல்யாணம் முடிந்தவுடன் எனது கல்யாண அறிவிப்பு இருக்கும் என்றீர்கள்?
அப்போ ஒரு பெண்ணைக் காதலித்தேன். இப்போதான் இல்லையே. வீட்டில சொன்னா உடனே கல்யாணம் வைப்பாங்க. யாரை வேண்டுமானாலும் பண்ணுவது கல்யாணம் இல்லயே. என்னைப் புரிஞ்சுக்கிட்டு வர்ற ஒரு பெண் வர்ற வரைக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா கிடையாது.
இயக்குநர் சிம்பு என்ன ஆனார்?
அடுத்த வருஷம் ஒரு படம் இயக்க இருக்கிறேன். வரும் நாட்களில் நான் எந்த மாதிரி இருப்பேன், படங்கள் பண்ணுவேனா என்பதெல்லாம் சந்தேகமே. சினிமா ஈடுபாடு வரும் காலங்களில் எப்படியிருக்கும் என்பது தெரியாததால், அடுத்த வருஷம் நானே இயக்கி, நடிக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கேன்.
ஆன்மிகப் பாதையில் இருந்துகொண்டே பார்ட்டிக்குப் போவது நியாயமா?
ஆன்மிகத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன. நான் ஆன்மிகத்திற்குள் போனதுக்குப் பிறகுதான் நிறைய பார்ட்டிகளுக்குப் போக ஆரம்பித்தேன். முதல்ல நான் யாருக்காக வாழ்கிறேன்? நான் முதல்ல என்னைச் சந்தோஷமா வைச்சுக்கணும். நான் சந்தோஷமா இருந்தால்தான், என்னைச் சுற்றி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்க முடியும். ஆன்மிகத்திற்குள் போன பிறகுதான், நான் வெளியே போக ஆரம்பித்தேன்.
காதலித்துத் தோல்வியடையாமல் இருக்க என்ன பண்ணணும்?
காதல் அப்படின்னாலே இரண்டு பேர் கிடையாது. காதலிக்க ஆரம்பித்த உடனே நீங்க ஒருத்தர்தான் அப்படின்னு ரெண்டு பேருமே உணரணும். ஒருத்தருக்கு அது புரியல, புரிய வைக்க முடியலன்னாலும் அது வேலைக்கு ஆவாது. எல்லா விஷயத்தையும் நாம கட்டாயப்படுத்த முடியாது. ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்துதான் ஆகணும்.
உங்களுடைய காதல் கதையை ஒரு படமாக எடுத்தால் என்ன?
என்னோட காதல் கதையைப் படமா எடுத்தால், பலருக்கு நெஞ்சு வலிதான் வரும். நிறைய சர்ச்சைகள் இருக்கும், சோகங்கள் இருக்கும். என்னோட சோகம் எல்லாம் என்னோடயே இருக்கட்டுமே.
ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா?
யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு பொண்ணு வந்து, எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும். உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா பண்ணிப்பேன். 100% எனக்குப் பிடிக்கணும். அதுதான் விஷயம்.
-
11th November 2014, 01:32 PM
#1076
Senior Member
Veteran Hubber
கேப்டன் மகனுக்காக பாடல் பாடிய சிம்பு !
விஜயகாந்தின் ’வல்லரசு’, ’நரசிம்மா’, ’தென்னவன்’, ’சுதேசி’, ’அரசாங்கம்’, ’விருதகிரி’ போன்ற வெற்றி படங்களை தயாரித்த திரு.எல்.கே.சுதீஷ் இப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ’சகாப்தம்’ படத்தை மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான ஆளியார் டேம், வால்பாறை, ஆனைமலை போன்ற பகுதிகளில் 25 நாட்களும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்திலும் 20 நாட்கள் நடைபெற்றுள்ளது.
தற்போது இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு சென்றுள்ளார்கள். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், லங்காவி மற்றும் பேங்காக்கிலும் 35 நாட்கள் படமெடுத்து படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் நாயகிகளாக மிஸ்-இந்தியா பட்டம் வென்ற நேகாவும், மிஸ் பெங்களூர் பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம்புலி, ஜெகன், பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன், தேவயாணி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன், பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்காக சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இதில் சிறப்பு தோற்றத்தில் விஜய்காந்த் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
10th December 2014, 05:48 PM
#1077
Senior Member
Veteran Hubber
Yearender 2014: Most shocking celebrity splits this year - IBN
Hansika Motwani and Simbu: Hansika Motwani called it quits with Simbu in February. The reason behind their breakup was the entry of another woman in Simbu's life.(???)
http://ibnlive.in.com/photogallery/17415.html
-
15th December 2014, 07:44 AM
#1078
Senior Member
Senior Hubber
Originally Posted by
balaajee
Yearender 2014: Most shocking celebrity splits this year - IBN
Hansika Motwani and Simbu: Hansika Motwani called it quits with Simbu in February. The reason behind their breakup was the entry of another woman in Simbu's life.(???)
http://ibnlive.in.com/photogallery/17415.html
Nayantara re-entry :P
"aaj ka mera hey, kalka thera hey, side-dish pagoda hey, ye hey life hey"
-
23rd January 2015, 02:07 PM
#1079
Senior Member
Veteran Hubber
எனக்கும் ரசிகர்களுக்கும் இடையே உள்ள பந்தத்தை பலப்படுத்துவேன் - சிம்பு! பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு , நயன்தாரா, ஆண்ட்ரியா சூரி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இது நம்ம ஆளு’. படம் கோடைகால விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் டீஸர் கடந்த ஜனவரி 15ம் தேதி பொங்கல் தினத்தில் வெளியானது. இதுவரை படத்தின் டீஸரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.டீஸரில் சூரியின் கவுண்டர் டயலாக்குகளும், காதல், பெண்கள் குறித்து சிம்பு பேசும் வசனங்களும் இளைஞர்களை சற்றே கவர்ந்திழுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்களித்த ஆதரவால் மகிழ்ச்சியடைந்துள்ளார் சிம்பு. இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, 'என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் பிடித்த வகையில் இருப்பது எனக்கு மிக்கவும் மகிழ்ச்சி.இடைவெளிக்கு பிறகும் எனக்கும் என் படங்களுக்கும் இந்த அளவுக்கு வரவேற்ப்பு கொடுத்து இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் அவர்களுக்கும் உள்ள பந்தத்தை பலப்படுத்தி அவர்களுக்காகவே மேலும் நல்ல படங்கள் தர வேண்டும் என உறுதியாக இருக்கிறேன்' என்று தன்னம்பிக்கை கண்ணில் மிளிர கூறினார் எஸ் டி ஆர்.
-
1st February 2015, 10:49 PM
#1080
Senior Member
Veteran Hubber
Bookmarks