-
5th October 2014, 05:30 PM
#681
Junior Member
Seasoned Hubber
5.10.1984
அக்டோபர் - 5
30 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 3வது பிறவி எடுத்து தான் ஒரு தனிப்பிறவி என்பதை நிரூபிப்பதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தலைவர் சேர்ந்த நாள். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளோ, உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன், இணையதளம் ஆகியவை கிடையாது. மாலைப் பத்திரிகையில்தான் தலைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியை பார்த்தேன். சிறியதாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதை விரும்பாத தலைவர் அதுவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பாமல் அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.... லேசாக பொறி தட்டியது.
அதற்கேற்பவே அடுத்தடுத்த நாட்களில் தலைவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்காக செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. பிரதமர் இந்திரா காந்தியே அப்பல்லோ வந்து தலைவரை சந்தித்து அமெரிக்க பயணத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.
பிறகு தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கிருந்தபடியே தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து திரும்பி வந்து 3வது முறையாக முதல்வராகி 3 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது வரலாறு.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
5th October 2014 05:30 PM
# ADS
Circuit advertisement
-
5th October 2014, 08:17 PM
#682
Junior Member
Newbie Hubber

திரியில் என்னை வரவேற்ற அனைத்து அ்ன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் விழாவின் போது ஆல்பட் தியேட்டரில் வைத்திருந்த பேனர்.
-
5th October 2014, 08:22 PM
#683
Junior Member
Seasoned Hubber
ஊருக்கு உழைப்பவன்
நண்பர்களுக்கு,

ஊருக்கு உழைப்பவன் திரைப்படத்தை ஜெயா மூவிசில் நேற்று முன்தினம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிகபட்சமாக சென்னையில் 63 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் அது. இம்முறை படத்தை பார்த்தபோதும் புதுப்படம் பார்ப்பதுபோலவே இருந்தது. ஒவ்வொரு முறையும் தலைவரின் ஏதாவது ஒரு நுட்பமும் நுணுக்கமும் நடிப்பும் தொழில்நுட்பத் திறனும் புலப்படுவதே அந்த உணர்வுக்கு காரணம்.
இம்முறை நான் பார்த்தபோது புலப்பட்டது.... கோயிலுக்கு வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் தலைவர் செல்லும்போது(அவருக்கு கணவராக நடித்துக் கொண்டிருப்பார்) அங்கு தனது மனைவி வாணி ஸ்ரீ எதேச்சையாக வந்ததைக் கண்டு மலையில் இரு பிளவுகளுக்கிடையே நின்று கொண்டு கீழே பார்ப்பது போல முகத்தை மறைத்துக் கொள்வார். வாணி ஸ்ரீ சென்றவுடன் நிர்மலாவும் குழந்தையும் இருக்கும் இடத்துக்கு வேகமாக வருவார். வாணி ஸ்ரீயை பற்றி நிர்மலா கூறும்போது, அங்கிருந்து சீக்கீரம் புறப்பட வேண்டும் என்ற வேகத்தில் (வாணி ஸ்ரீக்கு தெரியக்கூடாது என்பதற்காக) வீட்டுக்கு போய் பேசிக் கொள்ளலாம் என்று அவரையும் குழந்தையையும் அவசரப்படுத்தி காரில் ஏறுவார்.
அவசரத்தில் அண்டாவில் கூட கை நுழையாது என்பார்கள். அதுபோல, காரில் ஏறி அமர்ந்த பின்னும் பதட்டத்தில் தோளில் போட்டிருக்கும் துண்டு காருக்கு வெளியே தரையில் விழுந்து புரள்வதைக் கூட கவனிக்காமல் அமர்ந்திருப்பார். கார் கதவை சாத்த வரும் டிரைவர்தான் அதை கவனித்து துண்டை எடுத்து காருக்குள் போடுவார். தனது அவசரத்தையும் பதட்டத்தையும் தலைவர் எப்படி நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று வியந்தேன்.
அதேபோல, எம்.என்.ராஜம் இறந்தபிறகு, தாயை இழந்த வாணி ஸ்ரீக்கு ஆறுதல் கூறி இலையில் சோறு பரிமாறி ஊட்டிவிடும் காட்சி. பிறந்தவங்க எல்லாரும் ஒரு நாளைக்கு செத்துத்தான் ஆகணும். நாம எவ்வளவுதான் அன்பு செலுத்தி பிரியமா இருந்தாலும் ஒரு நாள் அவர்கள் நம்மை விட்டு பிரியத்தான் செய்வார்கள். இதை புரிஞ்சுகிட்டு சகிச்சுக்கிறதுதான் வாழ்க்கை என்று தலைவர் கூறுவது, அவ்வளவு இயல்பாக இருக்கும். வாணி ஸ்ரீ சாப்பிடத் தொடங்கியதும் இன்னும் சாப்பிட வேண்டும் என்பதற்காக சாப்பாடு அப்படியே இருக்கே என்று கூறும் இடம் குழந்தைக்கு தாய் ஊட்டி விடுவது போல இருக்கும்.
சினிமாவுக்காக முயற்சி எடுத்துக் கொண்டு, திறமையைக் காட்டும் பா(bha)வங்களைக் காட்டி நடிப்பது போல இல்லாமல், நெருங்கிய உறவினரை இழந்த, நமக்கு வேண்டிய ஒருவருக்கு நாம் எப்படி ஆறுதல் கூறுவோமோ அப்படித்தான் இந்தக் காட்சியில் தலைவர் கூறுவதும் இருக்கும். ஏதோ போட்டிக்கோ, யாரையும் புண்படுத்த வேண்டும் என்றோ, நமக்கு பிடித்தவரான தலைவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்றோ இல்லாமல் விருப்பு வெறுப்பின்றி இதைக் கூறுகிறேன். அந்தக் காட்சியை பார்த்தால் உண்மை புரியும்.
அதிலும், தலைவர் கையில் சோற்றை எடுத்து நீட்டும்போது, இறந்து போன தாயின் நினைவு வந்தவராக அந்தக் கையைப் பார்த்து கதறி அழும்போது வாணி ஸ்ரீயும் மனதில் நிற்பார். எந்தப் படத்திலும் சிறப்பாக நடிக்கும் எல்லாருமே மனதில் நிற்கத்தான் செய்வார்கள். நாம்தான் எல்லாக் கலைஞர்களையும் அவர்களது திறமைகளையும் போற்றுபவர்களாயிற்றே?
ஆனால், அவர்களுக்கும் நமது தலைவருக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுதான். சிறப்பாக நடித்த மற்ற நடிகர்கள் மக்கள் மனதில் நிற்பார்கள் என்றால், தலைவர் மட்டும் மக்களின் மனதில் நிற்கமாட்டார். ...............சிம்மாசனமிட்டு கால்மேல் கால் போட்டபடி அமர்ந்திருப்பார்.
அதனால்தான், உண்மையாகவே மக்கள் அவரை ஆட்சி சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தனர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
5th October 2014, 08:28 PM
#684
Junior Member
Veteran Hubber
நன்றி கலைவேந்தன் சார் மிகவும் துயரமான நினைவலைகள் அதில் நமது தலைவர் வெற்றி கண்டது தர்மதேவதையின் அருளால்

Originally Posted by
KALAIVENTHAN
அக்டோபர் - 5
30 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில்தான் 3வது பிறவி எடுத்து தான் ஒரு தனிப்பிறவி என்பதை நிரூபிப்பதற்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தலைவர் சேர்ந்த நாள். அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகளோ, உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் செல்போன், இணையதளம் ஆகியவை கிடையாது. மாலைப் பத்திரிகையில்தான் தலைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியை பார்த்தேன். சிறியதாகத்தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும், மருத்துவமனைக்கு செல்வதை விரும்பாத தலைவர் அதுவும் பரிசோதனை முடிந்து உடனே திரும்பாமல் அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றால்.... லேசாக பொறி தட்டியது.
அதற்கேற்பவே அடுத்தடுத்த நாட்களில் தலைவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும் மேல் சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்காக செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. பிரதமர் இந்திரா காந்தியே அப்பல்லோ வந்து தலைவரை சந்தித்து அமெரிக்க பயணத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.
பிறகு தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அங்கிருந்தபடியே தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்து திரும்பி வந்து 3வது முறையாக முதல்வராகி 3 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது வரலாறு.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
5th October 2014, 08:29 PM
#685
Junior Member
Platinum Hubber
SUPER WRITE UP KALAIVENTHAN SIR
-
5th October 2014, 08:38 PM
#686
Junior Member
Platinum Hubber
WELCOME CS SIR
-
5th October 2014, 09:08 PM
#687
Junior Member
Veteran Hubber
[QUOTE=KALAIVENTHAN;1169775]நண்பர்களுக்கு,

ஊருக்கு உழைப்பவன் திரைப்படத்தை ஜெயா மூவிசில் நேற்று முன்தினம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிகபட்சமாக சென்னையில் 63 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் அது. இம்முறை படத்தை பார்த்தபோதும் புதுப்படம் பார்ப்பதுபோலவே இருந்தது. ஒவ்வொரு முறையும் தலைவரின் ஏதாவது ஒரு நுட்பமும் நுணுக்கமும் நடிப்பும் தொழில்நுட்பத் திறனும் புலப்படுவதே அந்த உணர்வுக்கு காரணம்.
இம்முறை நான் பார்த்தபோது புலப்பட்டது.... கோயிலுக்கு வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் தலைவர் செல்லும்போது(அவருக்கு கணவராக நடித்துக் கொண்டிருப்பார்) அங்கு தனது மனைவி வாணி ஸ்ரீ எதேச்சையாக வந்ததைக் கண்டு மலையில் இரு பிளவுகளுக்கிடையே நின்று கொண்டு கீழே பார்ப்பது போல முகத்தை மறைத்துக் கொள்வார். வாணி ஸ்ரீ சென்றவுடன் நிர்மலாவும் குழந்தையும் இருக்கும் இடத்துக்கு வேகமாக வருவார். வாணி ஸ்ரீயை பற்றி நிர்மலா கூறும்போது, அங்கிருந்து சீக்கீரம் புறப்பட வேண்டும் என்ற வேகத்தில் (வாணி ஸ்ரீக்கு தெரியக்கூடாது என்பதற்காக) வீட்டுக்கு போய் பேசிக் கொள்ளலாம் என்று அவரையும் குழந்தையையும் அவசரப்படுத்தி காரில் ஏறுவார்.
அவசரத்தில் அண்டாவில் கூட கை நுழையாது என்பார்கள். அதுபோல, காரில் ஏறி அமர்ந்த பின்னும் பதட்டத்தில் தோளில் போட்டிருக்கும் துண்டு காருக்கு வெளியே தரையில் விழுந்து புரள்வதைக் கூட கவனிக்காமல் அமர்ந்திருப்பார். கார் கதவை சாத்த வரும் டிரைவர்தான் அதை கவனித்து துண்டை எடுத்து காருக்குள் போடுவார். தனது அவசரத்தையும் பதட்டத்தையும் தலைவர் எப்படி நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று வியந்தேன்.
Superbly pointed out sir. Very good.
-
5th October 2014, 09:09 PM
#688
Junior Member
Veteran Hubber
-
5th October 2014, 09:11 PM
#689
Junior Member
Veteran Hubber
-
5th October 2014, 10:06 PM
#690
Junior Member
Diamond Hubber
Bookmarks