-
23rd September 2014, 06:24 PM
#31
Moderator
Diamond Hubber
>> ஆவதென்று மனிதனாக ஆகிவிட்ட போதினில்
…ஆடியாடி அங்குமிங்கும் உழைத்துபல சேர்க்கையில்
ஆவலுடன் அல்லிமலர் விழியமுதம் பருகியே
..அன்புமிக இல்லறத்தில் பாதிநாட்கள் போய்விட
பாவமெனப் பலபுரிந்து பணம்சேர்த்தே நின்றதில்
…பக்குவமும் மறைந்துமனம் பாழ்மனமாய் ஆகிட
போவதென்ற கால(ம்)வந்த பொழுதினிலே நெஞ்சமும்
…பேரின்பப் பரம்பொருளின் பதத்தினையே நாடுதே..<<
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தானே சொல்லித்தந்தாங்க பெரியவங்க (?)
நீங்க இப்படி சலித்துக் கொள்கிறீர்கள்
ஒன்றுமே புரியுவில்லை. எது வாழ்க்கை ?
-
23rd September 2014 06:24 PM
# ADS
Circuit advertisement
-
23rd September 2014, 06:27 PM
#32
Moderator
Diamond Hubber
Originally Posted by
pavalamani pragasam
ம்ம்ம்... விதி...சதி..
ம்ம்ம்
நம் விதியை நாம் தானே எழுதுகின்றோம்.
-
23rd September 2014, 09:18 PM
#33
Senior Member
Senior Hubber
//"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தானே சொல்லித்தந்தாங்க பெரியவங்க (?)
நீங்க இப்படி சலித்துக் கொள்கிறீர்கள்ஒன்றுமே புரியுவில்லை. எது வாழ்க்கை ?//ஆனா… இந்தப் பாவம் புரிஞ்சு மனசு பக்குவமிழக்குதில்லையா அதைத்தான் சொன்னேன்..திரைகடல் ஓடித் திரவியம் சேர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான் நான்..
-
24th September 2014, 09:56 PM
#34
Moderator
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
//"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தானே சொல்லித்தந்தாங்க பெரியவங்க (?)
நீங்க இப்படி சலித்துக் கொள்கிறீர்கள்ஒன்றுமே புரியுவில்லை. எது வாழ்க்கை ?//ஆனா… இந்தப் பாவம் புரிஞ்சு மனசு பக்குவமிழக்குதில்லையா அதைத்தான் சொன்னேன்..திரைகடல் ஓடித் திரவியம் சேர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் தான் நான்..
தவறாகப் புரிந்துவிட்டீர்கள்/ புரிந்துகொள்ளவேண்டாம்.
தடங்களுக்கு மன்னிக்கவும்.
Last edited by aanaa; 30th September 2014 at 07:34 PM.
"அன்பே சிவம்.
-
9th October 2014, 11:55 AM
#35
Senior Member
Senior Hubber
பாசுரம் பாடி வா தென்றலே…
எட்டு
குழந்தை எக்காலத்திலும் ஒரு அதிசயம்.. வளர்ந்து பெரியவன் பெரியவள் ஆகி எப்படி மாறு பட்டாலும் பிறந்து வளரும் சிறுவயதில் எல்லாமும் தெய்வம் தான்..
குழந்தை பற்றி எழுதிப்பார்த்தேன்..
விடாது அழும்
அடம்பிடிக்கும்
“யே” என்று கூக்குரலிடும்
கூடமெல்லாம் கிறுக்கும்;
எல்லாவற்றையும் போட்டுடைக்கும்
சாப்பிட ஆரம்பித்தால் தான்
கக்கா போகும்..
பிடிவாதத்தால் கோபத்தைக் கிளறும்,
வாயைத் திறக்காமல்
சாதத்தை முகத்தில் ஈஷிக் கொள்ளும்
அறிவு கெட்ட ஜென்மம்!
இருந்தாலும்,
அந்தக் குட்டிச் சிரிப்புக்குக்
கோடிப் பொன் கொடுக்கலாம்!
குழந்தை இப்படி என்றால் அதன் அம்மாவின் நிலை என்ன..
உம்மென்று அதுமுகத்தை வைத்துக் கொண்டால்
..ஓடிவந்து பதறித்தான் தூக்கிக் கொள்வாள்
பம்மென்று வயிறிருக்கா என்று எண்ணி
..பக்குவமாய்த் துணிவிலக்கித் தடவிப் பார்ப்பாள்
விம்மாதே வலிக்கிறதா சொல்டா செல்லம்
..வேண்டியதைச் செய்திடுவேன் நானும் என்றே
அம்மாவாய் அவளும்தான் பதறிக் கேட்பாள்..
..அழகான உயிர்த்தெய்வம் அவளே அன்றோ..
ஆனாலும் குழந்தை வளரும் போது இந்த அம்மாக்கள் படும் கஷ்டம் இருக்கிறதே சொல்லி மாளாது..
கோகுலத்தில் கண்ணன் சிறு குழந்தையாய் இருந்த போது பக்கத்து வீட்டுப் பெண் யசோதையைப் பார்க்க வந்தாள்..பார்த்தவள் திகைத்தாள்.. காரணம் யசோதையின் நிலை..
அழகாய் லட்சணமாய் இருந்த யசோதையானவள் இளைத்திருந்தாள்..கண்களில் மட்டும் மின்னற் கோலம்..
என்ன ஆச்சு யசோதாக்கா..
ஒண்ணுமில்லைடி – யசோதையின் முகத்தில் வெளிர் சிரிப்பு..
குட்டிக் கண்ணா எங்கே காணோம்..அட இதோ தொட்டில்ல இருக்கானே..சின்னு பட்டூ செல்லப்பாப்பு.. எவ்ளோ அழகாச் சிரிக்கிறான் பாருங்களேன்.. ஆமா இது சமர்த்தாத் தானே இருக்கு..
யசோதையிடம் மறுபடி புன்னகை..
சொல்லுங்கக்கா.. என்றபடி குட்டிக் கண்ணனைத் தூக்கிக் கொள்ள கண்ணன் செல்லமாய் அந்த பக்கத்துவீட்டுகோபிகையின் முடி பிடித்து இழுக்க..ஷ்ஷ்..ஆ.. சரியான விஷமக் காரக் கண்ணன் இல்லியாக்கா..
ஒழுங்கா காலைச் சாப்பாடு சாப்பிட்டேளா.. நீங்க ஒழுங்கா சாப்பிடறதில்லைன்னு நினைக்கறேன்.. நீங்க சாப்பிட்டாத் தான் கண்ணா சாப்பிட முடியும்.. என்னடாச் செல்லம் படுத்தப் படாது..போய் வேணும்னா சாப்பிட்டுட்டு வாங்க.. நான் கண்ணாவை பார்த்துக்கிறேன்..
அவ்வளவு தான் கோபிகையின் வார்த்தைகள் மனதுள் போக யசோதைக்குக் பொங்கி வருகிறது.. அப்படிப் பொங்கி வருவதாக ப் பெரியாழ்வார் சொல்கிறார்..
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்
”அழகான விழிகளையும் மேலான குணங்களையும் கொண்ட கோபிகையே.. நான் என்ன சொல்லுவேன்..
இந்த மாயக் கண்ணன் இருக்கிறானே..அவனை தொட்டிலில் இட்டு விட்டு இங்கிட்டு அங்கிட்டு என்னால் போக இயலாது.. தொட்டில் துணி கிழிந்து போகும் அளவுக்கு உதைக்கிறான்..
சரி பாவம் போரடிக்கிறது போல..என நினைத்து “வாடா செல்லம்” என இடுப்பில் வைத்துக் கொண்டால் அவ்வளவு தான்..ஒரே துள்ளல் தாவல் தான்.. அவன் போடும் ஆட்டத்தில் என் விலா எலும்புமுறிந்து விடுகிறது என்றால் பார்த்துக்கோயேன்..
”சரிடாப்பா வா.. தாச்சிக்கலாம்” என்று சொல்லி அவனை ஒடுக்கி என்னருகில் படுக்க வைத்து அணைத்துத் தழுவிக் கொண்டால் என்ன செய்கிறான் தெரியுமா இந்தபடவா.. டபக் டபக்கென என் வயிற்றில் கதக்களி ஆடுகிறான்..
ஹச்சோ..இவ்ளோ பொல்லாத குறும்பு எல்லாம் இவன் செய்வதால் தான் நான் மிக மெலிந்து போய்விட்டேன்..தெரிகிறதா பெண்களில் சிறப்புடைய கோபிகா..”
என்கிறாளாம் யசோதை..
என்கிறார் பெரியாழ்வார்..
ம்ம் அந்தக் கண்ணனின் லீலைக்ள் தான் என்னே..!
(அப்புறம் வரட்டா)
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th October 2014, 02:39 PM
#36
சின்ன கண்ணன் சார்
'தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்து சிறுவன்
மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளாயோ '
பாடல் நினைவில் வருகிறது . மிக அருமை
-
10th October 2014, 12:59 AM
#37
Moderator
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
பாசுரம் பாடி வா தென்றலே…
(அப்புறம் வரட்டா)
(தொடரும்)
நிச்சயம் ...
-
10th October 2014, 09:46 PM
#38
Senior Member
Senior Hubber
கிருஷ்ணா சார் ,திரு.ஆனா – நன்றி..
கிட்டத் தட்ட பதின்மூன்று வருடங்களுக்கு முன் திருப்பாவை பாசுரங்கள் பற்றி சிறு உரை எழுதிப் பார்த்தேன்..தினம் ஒருகவிதை என்ற மின்னஞ்சற்குழுவில்..
அவற்றுக்கான மென்காப்பி என்னிடம் இல்லை..எனில் இருக்கின்ற ஹார்ட்காப்பியைப் பார்த்து இங்கு தட்டச்சு செய்து பதிவிடுகிறேன். முப்பது பாசுரங்களையும்..
இடையில் நான் படித்து எழுதும் பாசுரங்கள் பற்றிய எனது சின்ன உரைகளையும் இடுகிறேன்.. சரியா..
-
10th October 2014, 09:48 PM
#39
Senior Member
Senior Hubber
பாசுரம் பாடி வா தென்றலே…
ஒன்பது – a)
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
முன்னுரை
*
முந்தி வணங்கிடுவோம் முக்கண்ணன் மைந்தனாம்
தொந்திக் கணபதியின் தாள்..
*
மனதிற்குள் உட்காரலாமா
******
உலகில் ஆசைப் படாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?
ஆசையே அழிவுக்குக் காரணம் என்பார்கள். அது தவறு. ஆசைப்பட்டுக் கனவு கண்டு அதற்கான முயற்சி செய்தால் வேண்டியதை அடைய முடியும் என மனதத்துவ ரீதியாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
(மனச் சாட்சி: என்ன தான்யா சொல்ல வர்றே நீ)
அந்தக் காலத்தில் காதலன் காதலி மீது இருந்த ஆசையால் ஆர்வங்கொண்டு “கண்ணே, மணியே, கற்கண்டே, தேனே!” என வர்ணிப்பான்..
இதுவே தவறு. கண் அடிக்கடி கோபத்தால் சிவந்து விடும். இரவில் மூடிக் கொள்ளும். சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்து கண்ணாடியும் மாட்டி விடுவார்கள்!
மணியில் ஒலிப்பது இனிமையான நாதம் தான். ஆனால் அதுவே அடிக்கடி ஒலித்தால், “என்ன நான் லொட லொட என்று பேசுவதைக் கிண்டல் செய்கிறாயா” என்பாள் காதலி.
கற்கண்டை நிறையச் சாப்பிட்டால் திகட்டி விடும். சர்க்கரை வியாதி வரும் அபாயமும் உண்டு..
தேன்.. கேட்கவே வேண்டாம். இன்னும் மோசம். அதிகம் உண்டால் குளியலறையை விட்டு வெளியில் வர முடியாது!
இந்தக் காலத்திலும் காதலன் காதலியை வர்ணிப்பது தொடர்கிறது- வேறு விதமாக. தொலைபேசி மணிபோல் சிரிப்பவன் நீ என்கிறான் காதலன். தொலைபேசிக்கு கண்,காது,மூக்கு, வாய் வைத்து சிரிப்பதாகக் கற்பனை செய்யுங்கள். பயங்கரமாக இருக்கும்.
(ம.சா. இன்னும் விஷயத்துக்கு வரலை நீ)
காதலன் காதலியை ஆசை கொண்டு வர்ணிப்பது எல்லாம் சிற்றின்பத்தில் அடங்கும். எனக்கும் ஒரு ஆசை வந்தது. என்னவென்றால் பேரின்பப் பொருளான இறைவனைப் பற்றி எழுதுவதற்கு.
புதியதாகப் பாட்டு, கவிதை எழுதலாம் என்றால் இன்னும் மனது பக்குவப் படவில்லை..
கோயிலில்
அம்பாளுக்கு
அழகிய அலங்காரம்
பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்கள்
தேஜஸ் அப்படியே
முகத்தில் ஜொலிக்கிறது
பார்க்க இருகண்கள் போதாது
இந்த நிறச் சேர்க்கையில்
எங்கு பட்டுப் புடவை வாங்கினார்கள்
விசாரிக்க வேண்டும்
என்று தான் எழுத வருகிறது. இந் நிலையில் இறையைத்துதிபாடி நானே எழுதுவது என்பது இப்பொழுதுகொஞ்சம் கஷ்டம். எனில் என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒன்று தோன்றியது..
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2014, 09:49 PM
#40
Senior Member
Senior Hubber
பாசுரம் பாடி வா தென்றலே…
ஒன்பது – b)
பூ மாலை தொடுத்த பாமாலை (ஆண்டாள் திருப்பாவை)
*
முன்னுரை – தொடர்ச்சி
உலகில் பார்க்க, கேட்க, படிக்கச் சலிக்காத விஷயங்கள் பல உள்ளன.
(ம.சா. போச்சுடா மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்)
பார்க்கச் சலிக்காத விஷயங்கள் என எடுத்துக் கொண்டால்:: இயற்கை விண்ணிலும் மண்ணிலும் வரைந்திருக்கும் அழகிய ஓவியங்கள், சின்னக் குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பு, சூல் கொண்டு சில நாட்களே ஆன பெண்ணின் முகம் என பலவற்றைச் சொல்லலாம்.
கேட்கச் சலிக்காத விஷயங்கள்: சின்னஞ் சிறுவன்/சிறுமி பெற்றோரிடம் கூறும் பொய்கள், இனிய இசையில் அழகான கருத்தாழம் மிக்க பாடல்கள் (உதா: பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும்), பாருவப் பெண்ணின் சிரிப்பு இன்னும் பல.
படிக்கச் சலிக்காத விஷயங்கள் : அழகிய கவிதைகள், நல்ல நாவல்கள், அடிப்படை விஷயங்கள் மாறாத தினசரிப் பத்திரிகைகள் இன்னும்பல.
ஆனால் எந்தக் காலத்திலும் எல்லாத் தரப்பினருக்கும் அலுக்காத ஒரு விஷயம் உண்டு. அது தான் ஆண்டவனும் அவன் சார்பான விஷயங்களும். ஒவ்வொரு மதத்தவரும் தத்தம் வழிகளில் இறையைத்துதிப்பதும், அவர் புகழ் பாடி கவிதைகள் பாடல்கள் எழுதுவதும் அவற்றைப் பாடுவதும் செய்கிறார்கள்.
இந்து மதத்தைப் பொறுத்தவரை பல தெய்வங்கள் உண்டு. அவற்றுக்காக எழுதப்பட்ட பல பாடல்கள் உண்டு. மார்கழி மாதம் என்றால் தமிழ் நாட்டவருக்கு நினைவுக்கு வருவது திருப்பாவை மற்றும் அதிகாலை நாலரை மணிக்கு தெருமுனை அம்மன் கோவிலில் போடப்படும் “கற்பூர நாயகியே கனகவல்லி” பாட்டு.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி எழுதிய திருப்பாவைக்கு பலர் அழகிய உரைகள் எழுதியிருக்கிறார்கள். இறை சம்பந்தப் பட்ட விஷயம் என்பதால் எத்தனை பேர் எவ்வளவு விதமாக எழுதினலும் அலுக்காது. எனில் நானும் திருப்பாவைக்கு உரை எழுத முயற்சிக்கலாம் என நினைத்தேன்..
திருப்பாவைக்கு உள்ளே சென்றால், பல விஷயங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. மனம் உருகி சிலிர்ப்பு ஏற்படுகிறது.
என்னையும் மீறிய ஏதோ ஒரு சக்தி தான் எனை ஆசைப் பட வைத்திருக்கிறது. அதுவே என்னை ஒழுங்காக எழுத வைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இந்தச் சிறியவனும் ஆண்டாள் மீதும் அவளை ஆட்கொண்ட ஸ்ரீ ரங்க நாதன் மீதும் பாரத்தைப்போட்டு இந்த உரை எழுதுகிறேன்.
கொஞ்சம் எளிமையாக எனக்குள் தோன்றிய எண்ணங்கள், நான் படித்து, கேட்டு, பார்த்தறிந்த விஷயங்களை வைத்து ஆண்டாளின் திருப்பாவையின் மூலம்கெடாமல் இந்த உரையைத் தர முயன்றிருக்கிறேன்.
அடுத்து, பெரியாழ்வாரையும், ஆண்டாளைப் பற்றியும் சிறிது அறிந்துவிட்டு திருப்பாவை முதல் பாசுரத்திற்குச் செல்வோம்..
(தொடரும்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks