-
28th October 2014, 04:05 PM
#841
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2014 04:05 PM
# ADS
Circuit advertisement
-
28th October 2014, 05:09 PM
#842
நேற்று இரவு நீண்ட நாள் கழித்து பார்த்த (முழு படமும்) ரசித்த பலே பாண்டியா திரை படத்தில்
நடிகர் திலகம் 3 வேடங்கள் பாண்டியன்,மருது,விஞ்ஞானி சங்கர்
எம் ஆர் ராதா 2 வேடங்கள் ka பாலி ,அமிர்தலிங்கம்
கே பாலாஜி - ரவி
தேவிகா - கீதா
வசந்தி - வசந்தி
சந்தியா (ஜெயலலிதாவின் அம்மா) - விஞ்ஞானி சங்கர் மனைவி.
இவ்வளவு தான் முக்கிய கதாபாத்திரங்கள் . இயக்குனர் பந்துலுவின் இயக்கத்தில் தொய்வில்லாத திரைகதை,மெல்லிசை மன்னர்களின் மனதை வருடும் இதமான இன்னிசை ,கவிஞர் கண்ணதாசனின் அனுபவ மற்றும் யதார்த்த பாடல் வரிகள் இத்துடன் இந்நாளைய crazy மோகன் ஸ்டைல் காமெடி யினால் படம் சூப்பர் பாஸ்ட்.
தேவதை தான் இந்த படத்தில் .யாரை எல்லாமோ காதல் தேவதை என்று சொல்கிறார்கள்,சொல்லியிருக்கிறார்கள் .ஆனால் இந்த படத்தை பொறுத்த வரை உண்மையான காதல் தேவதை தேவிகா தான்.தேவிகா துள்ளலில் இந்நாளைய பல கதாநாய்கி நடிகைகள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள் .கருப்பு வெள்ளையில் இவ்வளவு அழகா என்று மிரள வைக்கிறது
நகைச்சுவையான திரைக்கதை; மூன்று வேடங்களில் சிவாஜியின் அசர வைக்கும் பொருத்தம்; பத்தொன்பது வயது தேவதையாக தேவிகா; நவீன விவேக்காக எம்.ஆர். ராதாவின் நையாண்டி; படம் முடியும் வரை அசர வைத்து ரசிக்க வைக்கிறது.
லுங்கி கட்டி அதை காலில் இடுக்கி கொண்டு பீடியை வாயில் இடமிருந்து வலமாக நகர்த்தும் ரௌடி மருதுவின் ஸ்டைல் 1962 கால கட்டத்தில் சாத்தியமா ? சாத்தியம் என்று நிருபிக்கிறார் நடிகர் திலகம் (2)
பாண்டியனின் அண்ணனாக மூக்குக் கண்ணாடி, நரைத்த முடி, இயல்பான ஆங்கிலம் ஷங்கர் (சிவாஜி-3).
நிஜமான வெள்ளித்திரை விருந்து
மூன்று வேடங்களிலும் டிரேட்மார்க் மேனரிசங்களுடன் சிவாஜி அசத்தியிருக்கிறார். உருவ அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், கடைசி நிமிடங்களில் ஒரே ஆடையில் வந்தாலும், பாவனைகளிலேயே 'மருதுவா', 'பாண்டியனா', 'ஷங்கரா' என்று தெரிவிக்கிறார்.
அசின் போன்ற துள்ளலுடன் தேவிகா. அழுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும், அறுபதுகளின் துடுக்கான இளம்பெண்ணாக வளைய வந்திருக்கிறார்.
பலே பாண்டியாவின் 'மாமா அவர்களே' குறிப்பிடத்தக்க சொற்றொடர். கண்ணாடி முன் டூப்ளிகேட்டுடன் ஒத்திசைவோடு வரும் காட்சிகள் பின்னாட்களில் பல படங்களில் வந்துவிட்டாலும், எம். ஆர். ராதாவின் அங்க சேஷ்டைகளுடனும் வசனங்களுடனும் பார்க்கும்போது தனி சிறப்பைப் பெறுகிறது.
மூன்று கெட்டப்களில் வந்து - நாயகனை மிஞ்சும் விதத்தில் குணச்சித்திர நடிகர் எம். ஆர். ராதா பின்னியிருக்கிறார்.
படத்தில் இடம் பெற்ற என்னை கவர்ந்த நினைவில் வந்த சில வசனங்கள்
'தேர்தல்ல போனாத்தான் ஜெயிக்க முடியலியே... எனக்கும் அரசியலுக்கும் ராசியில்ல. நான் இனிமே அரசியல் பக்கமே எட்டிப் பார்க்கப் போவதில்லை!'
'நான்கு நாள்களாக எதுவுமே சாப்பிடவில்லை; கொலைப்பட்டினி' (பாண்டியன் 'சிவாஜி')
பாண்டியனின் உருவத்தை கண்ணால் மதிப்பிட்டுக் கொண்டே 'பட்டினி கிடக்கிற உடம்பாத் தெரியலியே?' (கபாலி 'எம்.ஆர். ராதா')
'எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்தான் கணவன்' (தேவிகா)
'நாளைக்கே என்னன்னு தெரியாது... ஜென்மக் கணக்கில் ப்ளான் போடுறியா?' (அமிர்தலிங்கம் 'எம் ஆர் ராதா')
'தங்கள் இதயமென்ன கல்லா...
வாயிலிருந்து உதிர்வதென்ன சொல்லா...
இந்த மருமகனோடு மல்லா...'
'குறிக்கோளில்லாமல் கோட்டுவாய் கூட விடமாட்டேன்'
'நாம் நினைப்பதெல்லாம் நடக்காவிட்டால், நினைக்காததெல்லாம் கூட நடக்கலாம் அல்லவா?'
கேட்க கேட்க திகட்டாத பாடல்கள்
1. வாழ நினைத்தால் வாழலாம் கண்ணதாசன் t.m.s., p.s.
2. நான் என்ன சொல்லி விட்டேன் கண்ணதாசன் t.m.s.
3. யாரை எங்கே வைப்பது என்று - கண்ணதாசன் t.m.s.
4. நீயே உனக்கு என்றும் நிகரானவன் கண்ணதாசன் t.m.s., m.ராஜு
5. ஆதி மனிதன் காதலுக்குப் பின் கண்ணதாசன் p.b.s., k.ஜமுனா ராணி
6. அத்திக்காய் காய் கண்ணதாசன் - t.m.s., p.s. P.b.s., k.ஜமுனா ராணி
7. வாழ நினைத்தால் வாழலாம் பி. சுசீலா
8. அத்திக்காய் காய் கண்ணதாசன் - t.m.s., p.s. P.b.s., k.ஜமுனா ராணி, எம்.ராஜு
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சலிக்காத திரைப்படம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th October 2014, 05:39 PM
#843
நன்றி தினமணி கதிர் 26/10/14

இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ், ராஜாஜியின் "திக்கற்ற பார்வதி' கதையைப் படமாக்க விரும்பினார். படம், ஆர்ட் பிலிம் போலவும் இருக்க வேண்டும்; அதே சமயம் மக்கள் விரும்பிப் பார்க்கக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, ராஜாஜியின் கதைக்கு, திரைக்கதை - வசனம் எழுத நல்ல எழுத்தாளரைத் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது காரைக்குடி நாராயணன் எழுதிய "அச்சாணி' என்ற நாடகத்தை சிங்கீதம் சீனிவாசராவ் பார்த்தார். அதன் கதை அமைப்பும், வசனமும் அவருக்குப் பிடித்திருந்தன. எனவே, "திக்கற்ற பார்வதி'க்கு திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பை காரைக்குடி நாராயணனிடம் ஒப்படைத்தார். அப்போது நாராயணனுக்கு வயது இருபது.
தன் கதைக்கு வசனம் எழுதும் நாராயணனைப் பார்க்க வேண்டும் என்று ராஜாஜி விரும்பினார். பார்த்தசாரதி சபாவின் செயலாளராக இருந்த சேஷாத்திரி, நாராயணனை ராஜாஜியிடம் அழைத்துச்சென்றார்.
நாராயணனைப் பார்த்த ராஜாஜி, "இவ்வளவு சின்னப்பையன், திரைக்கதை - வசனத்தை ஒழுங்காக எழுதுவானா?' என்று மனதுக்குள் சந்தேகப்பட்டார்.
"குடியினால் ஒரு குடும்பம் எப்படிச் சீரழிகிறது என்பதை விளக்க, இந்தக் கதையை எழுதினேன். குடிப்பதால் சில நன்மைகளும் உண்டு என்று நீங்கள் மாற்றி எழுதிவிட மாட்டீர்களே?' என்று சிரித்துக்கொண்டே நாராயணனிடம் ராஜாஜி தமாஷாகக் கூறினார்.
அதற்கு நாராயணன், "இல்லை ஐயா... கதையில் நீங்கள் வலியுறுத்தியுள்ள கருத்து அணுவளவும் மாறாதபடி வசனத்தை எழுதுகிறேன்' என்று பதிலளித்தார்.
"திக்கற்ற பார்வதி'யில் லட்சுமி, ஸ்ரீகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு ராஜாஜியின் சொந்த ஊரான ஓசூரிலேயே நடந்தது. 18 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி முடித்தார், சிங்கீதம் சீனிவாசராவ்.
லட்சுமி அற்புதமாக நடித்திருந்தார். அவருக்கு ஜனாதிபதி பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நூலிழையில் பரிசு வேறொருவருக்குச் சென்றது.
"திக்கற்ற பார்வதி' வெளியாகும் முன்னரே, ராஜாஜி காலமாகிவிட்டார். ராஜாஜி கூறியபடி அவர் கருத்துக்களை நன்கு வலியுறுத்தும் வகையில், படம் அமைந்திருந்தது.
"திக்கற்ற பார்வதி'யில் பங்கு கொண்ட அனைவரும் புகழ் பெற்றனர்.
-ரவிவர்மா
-
28th October 2014, 11:07 PM
#844
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
அபூர்வமான அவர் எனக்கே சொந்தம் படப்பாடல்களைப் பற்றி எழுதி இளையராஜாவின் இசை ராஜ்ஜியத்தை நடத்திச் செல்கிறீர்கள். பாராட்டுக்கள்.
கிருஷ்ணாஜீ
சுராங்கனி பாடலைப் பற்றிய தங்களுடைய மலரும் நினைவுகள் சுவையோ சுவை. சுவாரஸ்யமாக இருக்கிறது.. பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th October 2014, 11:16 PM
#845
Senior Member
Seasoned Hubber
இசைக்கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர்.பாப்பா
இத்தொடருக்கு வரவேற்பைத் தந்து ஊக்கமான வார்த்தைகளைக் கூறிய வாசு சாருக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
அடுத்து
அந்நாளைய பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரன் தயாரிப்பாளராக பல படங்களை எடுத்து இயக்கினார். அவருடைய ஒளிப்பதிவில் ஒரு கவித்துவம் இருக்கும். பின்னாளில் கேமிரா கவிஞர் என அறியப்பட்ட பாலு மகேந்திரா அவர்களின் பாணிக்கு இவருடைய படங்கள் ஒரு வகையில் முன்னோடி எனச் சொன்னால் மிகையன்று. இவர் இயக்கத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ஜமுனா நடிக்க வெளிவந்த படம் தான் தாய் மகளுக்குக் கட்டிய தாலி.
இத்திரைப்படத்திலும் டி.ஆர்.பாப்பா அவர்களின் இசை ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. பாடல்கள் இப்படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக ஆடி வரும் ஆடகப் பொற்பாவை பாடல் இலக்கிய ரசம் மிகுந்த பாடல். ஒவ்வொரு வரியும் இலக்கிய நயத்தில் ஒன்றை ஒன்று மிஞ்சும் என்றால் பாடல் காட்சி அமைப்பும் மிகவும் கவித்துவமாக இருக்கும். எம்.ஜி.ஆர். ஜமுனா அபூர்வ ஜோடி.
இந்த இனிமையான பாடல் சற்றும் அலுக்காது, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது..
நாயகிக்கு தான் பொருளாதார வசதியில் தாழ்ந்தவள் என்கின்ற தாழ்வு மனப்பான்மை உண்டு. அதைப் போக்கும் வண்ணம் ஒரு சரணத்தில் பல்வேறு சிறப்புகளை அவளிடத்தில் நாயகன் கண்டறிந்து அவள் ஏழையில்லை எனக்கூறி அவளுடைய தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதாக அமைக்கப் பட்டுள்ள வரிகள் மொழியின் சிறப்பை எடுத்தியம்பும் சான்றுகள்.
Last edited by RAGHAVENDRA; 28th October 2014 at 11:23 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th October 2014, 11:29 PM
#846
Senior Member
Seasoned Hubber
இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதர்கள் - டி.ஆர். பாப்பா
டி.ஆர்.பாப்பாவிற்கு மட்டுமின்றி நடிகர் ஆனந்தனையும் புகழின் உச்சியில் கொண்டு சென்ற படம் விஜயபுரி வீரன். இதற்குப் பிறகு, இன்று வரை இவர் விஜயபுரி வீரன் என்று தான் அழைக்கப்படுகிறார். உள்ளத்திலே உரம் வேண்டுமடா பாடல் அந்நாட்களில் ஒவ்வொரு இதழும் முணுமுணுத்த பாடலாய் பிரபலமானது. அந்த அளவிற்கு விஜயபுரி வீரன் பாடல்கல் பிரபலமாயின.
இப்படத்தின் இசையைப் பற்றி நான் சொல்ல வேண்டுமா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
29th October 2014, 06:35 AM
#847
Senior Member
Seasoned Hubber
ராகவ் ஜி,
அருமையான தொடர். வாழ்த்துக்கள்
வாசு ஜி, தேனில் ஆடும் ரோஜா .... தேனை ஊற்றிய ராஜா .. தேனே குரலால் பொழியும் இசையரசி என எல்லாமே தூள்
அதே படத்தில் வி.கே.ஆர் அவர்களின் கபி கபி மேரே பாடல் அருமையோ அருமை. டி.எம்.எஸ் குரலில் ஹிந்தி பாடலை கேட்க சூப்பர்
-
29th October 2014, 07:16 AM
#848
Senior Member
Seasoned Hubber
தேனிசை தென்றலின் முத்துக்கள்-14
சில பாடல்கள் அந்த காலத்தில் வானொலிகளில் மட்டுமே ஒலித்தது உண்டு. அப்படி ஒரு பாடல்
90களில் சில படங்களில் வருண்ராஜ் என்ற நடிகர் நடித்தார். பாவம் அப்புறம் என்னா ஆனாரோ.. இதோ வருண்ராஜ் மற்றும் ரூபஸ்ரீ பாடும் பாடல்
தேவாவின் அழகான இசையும், பாலுவும் சித்ராவும் இசைக்கும் காதல் கீதம்.

-
29th October 2014, 07:33 AM
#849
Senior Member
Veteran Hubber
Jikki's first Tamil movie song (with P.A.Periyanayaki)
From Gnaanasoundhari(1948)
AruL Thaarum Dheva Maathaave Adhiye Inba Jothiye........
One of my favourite childhood days songs. It was very popular. One of my distant uncles in my mother's village used to sing. He used to frequent a touring talkies about three miles away and come back with songs !
That was his pastime during summers.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
29th October 2014, 08:38 AM
#850
Senior Member
Seasoned Hubber
Ankil my fav too.
வாசு ஜி
இதோ இசையரசியின் இன்னொரு கன்னட முத்து.
விஜயபாஸ்கர் அவர்களின் இசை..
கல்பனா, கல்யாண்குமார் திரையில்
மெல்லகே மெல்லகே என இசையரசி பாடும்விதமே ஹ்ம்ம்
Bookmarks