-
3rd November 2014, 12:00 PM
#961
Senior Member
Senior Hubber
பேசாதே வாயுள்ள ஊமை நீ பாடலுக்கு தாங்க்ஸ் ராகவேந்தர் சார்..
சிவாஜியின் ஸோலோ ரொம்ப நாளுக்கப்புறம் வந்த படம்..விஜயகாந்த கோபாலரைப் போல் புள்ளிவிவரம் சொல்லி என்னால் நினைக்க முடியாவிட்டாலும் படம் பார்க்கையில் வித்யாசத்தை உணர முடிந்தது..சுஜாதா விஜியின் ஜோடி எனும்போதுகொஞ்சம் அதிர்ச்சி.. அப்புறம் ஓ.கே..
-
3rd November 2014 12:00 PM
# ADS
Circuit advertisement
-
3rd November 2014, 12:24 PM
#962
உண்மை சி கே
மூன்றாவது கண் மணிவண்ணன் இயக்கம் . கிட்டத்தட்ட 24 மணி நேரம்,நூறாவது நாள் போன்று எடுக்கப்பட்ட படம். ஆனால் 1993 கால கட்டத்தில் சத்தம் இல்லாமல் வெளி வந்து காணாமல் போன படம் . நல்ல திர்ல்லர். நிழல்கள் ரவி வில்லன் ஆக வருவார். பூக்கள் விடும் தூது மோனிஷா கீச்சு குரலில் (டப்பிங்) பேசுவார். மோனிஷா வாயில் விரல் வைத்து கொண்டு கத்தும் ஒரு அதிர்ச்சி ஸ்டில் நினைவில் உண்டு. பாரதி ராஜாவின் ராஜா ஜோடி . சரத் அப்ப தான் ஹீரோ ஆக முயற்சிக்கும் நேரம். இந்த படத்தில் இன்ஸ்பெக்டர் ஆக வருவார். தேவா இசை என்று நினைவு . பாடல்கள் எல்லாம் சுமார் ரகம்.
இந்த படத்தில் யுவஸ்ரீ என்று ஒரு நடிகை வருவார்.சின்ன தம்பி படத்தில் குஷ்புவின் அண்ணன் உதயகுமர்க்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டி விடுவார் பின்னாட்களில் கொஞ்சம் சீரியல்களில் பார்த்ததுண்டு .டூயட் படத்தில் கூட கூலிங் கிளாஸ் (குருடி வேடம்) ஒன்று போட்டு கொண்டு உட்கார்ந்து இருப்பார். டூயட் படத்தில் இவர் ரோல் என்ன என்றே தெரியாது. முன்னாட்களில் தினசரி கோடம்பாக்கம் அண்ணா பார்க்கில் வாக்கிங் போகும் போது பார்த்த ஞாபகம்
அவரைத்தான் நிழல்கள் ரவி கொல்வார்.நிறைய கொலைகள் நடக்கும் படத்தில்.சதக் சதக் .நமக்கு படம் எப்ப முடியும் என்று பதக் பதக்.
அதே மாதிரி யுவஸ்ரீன் சகோதரர் ஆக ஒருவர வருவார். அவர் பெயர் நினைவில் இல்லை.
மணிவண்ணின் ஆஸ்தான சத்யராஜ் அதே போன்று இளையராஜா பின்னணி இசை எல்லாமே படத்தில் மிஸ்ஸிங்.
நன்றி சி கே
Monisha

yuvashree
Last edited by gkrishna; 3rd November 2014 at 12:31 PM.
gkrishna
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd November 2014, 12:55 PM
#963
-
3rd November 2014, 01:35 PM
#964
Senior Member
Senior Hubber
Wow..இதான் அடிக்கடி நான் குண்டூசியை எடுத்துக்கிட்டு வரணும்கறது
ஸ்லைட்டா டச் பண்ணாலே எவ்வளவு விஷயம் கிளம்புது..தாங்க்ஸ் க்ருஷ்ணாஜி..
1.மூன்றாவது கண்.. மோனிஷா பத்தி ஒண்ணுமே சொல்லலையே..பாவம் சின்ன வயதுலேயே கண்மூடிடுச்சு பொண்ணு..ஒரு விபத்துன்னு நினைவு..அண்ட் மங்கா, சுதாங்கன் கொலைகள் வித்யாசமா இருக்கும்..யுவஸ்ரீ பிரபுவின் சித்தி தானே டூயட்டில்..
ஆனால் சரத்குமார் அந்த இன்ஸ்பெக்டர் ரோலில் சப்பக் என ப் பொருந்தி இருப்பார்..
//சரத் குமார் ம்லேஷியா போலீஸாக நடித்த நீ நான் நிழல் பார்த்தீர்களா.. கொஞ்சம் இந்தக்கால சைபர் க்ரைம் பற்றிய படம்..கொஞ்சம் பகீர் எனத் தான் இருக்கும்//
2 இளமைக் காலங்களில் அந்தபடிப்பிலே சீரோவும் நினைவில் இருக்கிறது.. சசிகலா ரோகிணி மணிவண்ணன் நினைவில்..கதை (என்று ஒன்று இருக்கிறதா) தான் நினைவில் இல்லை..!
-
3rd November 2014, 01:48 PM
#965

Originally Posted by
chinnakkannan
Wow..இதான் அடிக்கடி நான் குண்டூசியை எடுத்துக்கிட்டு வரணும்கறது

ஸ்லைட்டா டச் பண்ணாலே எவ்வளவு விஷயம் கிளம்புது..
1.மூன்றாவது கண்.. மோனிஷா பத்தி ஒண்ணுமே சொல்லலையே..பாவம் சின்ன வயதுலேயே கண்மூடிடுச்சு பொண்ணு..ஒரு விபத்துன்னு நினைவு..அண்ட் மங்கா, சுதாங்கன் கொலைகள் வித்யாசமா இருக்கும்..யுவஸ்ரீ பிரபுவின் சித்தி தானே டூயட்டில்..
ஆனால் சரத்குமார் அந்த இன்ஸ்பெக்டர் ரோலில் சப்பக் என ப் பொருந்தி இருப்பார்..
2 இளமைக் காலங்களில் அந்தபடிப்பிலே சீரோவும் நினைவில் இருக்கிறது.. சசிகலா ரோகிணி மணிவண்ணன் நினைவில்..கதை (என்று ஒன்று இருக்கிறதா) தான் நினைவில் இல்லை..!
மோனிஷா கார்த்திக் நடித்து ஒரு படம் 'உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்' நினைவில் உண்டு சி கே . நேஷனல் அவார்ட் வாங்கிய நடிகை . கார் விபத்து என்று நினைக்கிறேன். அவங்க அம்மா கூட (அவங்களும் மலையாள நடிகை) பயணிக்கும் போது சேர்த்தல என்று ஒரு ஊர் எர்னாகுளம் ஆலப்புழ ரூட் இல் வரும். அங்கே கூட நம்ம விஜய் மல்லையாவிற்கு சொந்தமான ஒரு சாராய பாக்டரி அல்லது கோடான் ஒன்று உண்டு. 85 களில் பார்த்த நினைவு. அங்கு தான் விபத்து நடந்ததாக ஞாபகம்.
இளமை காலங்கள் கதையே இல்லாமல் வெறும் பாடல்களை வைத்து பின் பாடலுகளுக்க்காகவே கதை எழுதி வெளி வந்த படம் .
-
3rd November 2014, 01:52 PM
#966
சி கே
திருநெல்வேலி பூர்ணகலா திரை அரங்கு வளாகத்தின் உள்ளே 'ராக மாலிகா ரெகார்டிங் சென்டர்' என்று ஒன்று உண்டு. இப்ப இருக்கா தெரியவில்லை.நண்பர் கோபு சார் அவர்கள் தான் உறுதி செய்யணும். 80 90 களில் cd வருவதற்கு முன் மொட்டையின் யானை படம் போட்ட echo கம்பெனி கேசட் ரிலீஸ் ஆகும். இந்த சென்டர் இல் காத்து கிடந்து வாங்க ஒரு கூட்டமே அலையும். இளமை காலங்கள்,வைதேகி காத்து இருந்தாள் ,காக்கி சட்டை,தம்பிக்கு எந்த ஊரு, விக்ரம்,நானும் ஒரு தொழிலாளி, பின்னாட்களில் கரகாட்டக்காரன்,சின்ன தம்பி நிறைய ராமராஜன் படம் என்று நிறைய படங்களுக்கு கேசட் collection சேர்த்த கூட்டம் திருநெல்வேலியில் ரொம்ப famous.
சில சமயம் திருநெல்வேலியில் பாடல் கேசட் ரிலீஸ் ஆக ஓரிரண்டு நாட்கள் கால தாமதம் ஆகும் . ஒரு கூட்டம் மதுரைக்கு பாண்டியன் (உங்களுக்கு வேண்டியவன்) பஸ் பிடித்து போய் பெரியார் பஸ் நிலையம் முகப்பில் கிஷ்டு கானம் என்று ஒரு கடை இருக்கும். அங்கே போய் ராத்திரியோட ராத்திரியாக வாங்கி கொண்டு வந்து காலையில் சுப்ரபாதம் போல் பாட வைத்த காலங்கள் உண்டு .68 முதல் 80 வரை திரை அரங்குகளில் கூடி படங்களை சிலாகித்ததை போல் 80 களுக்கு பின் சந்திக்கும் பொது இடங்களில் எல்லாம் இளையராஜாவின் பாடல்களை எல்லாம் பற்றி அரட்டை அடித்த காலம்.
தேங்க்ஸ் சி கே
-
3rd November 2014, 01:53 PM
#967
Senior Member
Senior Hubber
//இந்த படத்தில் வந்த சசிகலா ஊமை விழிகள் ..// yeah..கார்த்திக்கின் ஜோடியாய் திடீரென வந்து ரவிச்சந்திரனால் கடத்தப் படுவார்..கார்த்திக்குக்கும் கைவிலங்கெல்லாம் போட்டு வைத்திருப்பார்கள்..
திடுமென அவர்கள் பாட்டுடன் படத்தில் நுழைவார்கள்!! மாமரத்துப் பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா..(நல்லாவா இருக்கும்!)
-
3rd November 2014, 02:01 PM
#968
.யுவஸ்ரீ பிரபுவின் சித்தி தானே டூயட்டில்..

டூயட் இல் பிரபுவின் சித்தியாக வருவது நடிகை சுதா சி கே நிறைய தெலுகு படங்களில் வருவார்
வருவான் வடிவேலன் திரை படத்தில் சின்ன முருகர் என்று ஞாபகம்

டூயட் இல் யுவஸ்ரீ சார்லி ஜோடி என்று நினைக்கிறேன்
Last edited by gkrishna; 3rd November 2014 at 02:04 PM.
gkrishna
-
3rd November 2014, 02:12 PM
#969

80 களில் விஜயகுமார், லத்து நடித்து ;'ஒரு இரவு ஒரு பறவை ' அப்படின்னு ஒரு படம் பூஜை போட்டாங்க. படம் வந்ததா ? என்று நினைவு இல்லை
உங்களுக்கு நினைவு உண்டா சி கே .
வாசு சார்,ராகவேந்தர் சார் ஹெல்ப் ப்ளீஸ்
-
3rd November 2014, 02:20 PM
#970
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த நான் ஏன் பிறந்தேன் மற்றும் இதயவீணை இரண்டு படங்களுக்கு இசை அமைத்த இரட்டையர்கள் சங்கர்- கணேஷ் நமக்கு தந்த பாடல்கள்
நான் ஏன் பிறந்தேன் ..நாட்டுக்கு
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு - மகிழ்ச்சி
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு- சோகம்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
உனது விழியில் எனது பார்வை ..
என்னம்மா சின்ன பொண்ணு ....
சித்திர சோலைகளே .....
தலை வாழை இலை போட்டு .....
.................................................. .........
வணக்கம் வந்தனம் ..காஷ்மீர் ....
பொன்னந்தி மாலை பொழுது ...
திரு நிறைசெல்வி ...
நீராடும் அழகெல்லாம்
ஆனந்தம் இன்று ஆனந்தம் ... மெல்ல சிரித்தால் என்ன
ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே
.................................................. ......................................
Bookmarks