-
3rd December 2014, 02:54 PM
#11
Senior Member
Devoted Hubber
சென்ற வாரம் கார்மேகம் சூழ்ந்த ஒரு மாலை நேரம். மயில் ஒன்று தோகை விரித்து ஆடும் அழகில் மயங்கி நின்றிருந்த போது சிறிது தூரத்தில் வெண்ணிற உடையில் ஒருவரும் அதை ரசித்து கொண்டிருந்தார். அவர் திரும்பியிருந்ததால் முகம் தெரியவில்லை. இளையராஜாவாக இருக்குமோ என்று மனதில் நினைத்த கணம் அவரும் திரும்பவே, இசை சுவாமிகளின் தரிசனம்! அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் தயங்கி நின்ற வேளையில் எனது மனைவி அருகில் சென்று உரையாட ஆரம்பித்துவிட்டார். நானும் அருகில் சென்று கைகூப்பி வணங்கினேன். எனக்கு பேச நா எழவில்லை. அவருடன் நிழற்படம் எடுத்துவிட்டு சிரமத்திற்கு மன்னிப்புக்கோரியதும், இதிலென்ன என்றார் அன்பான புன்முறுவலுடன். நன்றி கூறி விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தோம். திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் இசையின் தரிசனம் கிடைத்தது பெரும்பாக்கியம் தான்.
முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி.. மறுபடி மரண அடி!!!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd December 2014 02:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks