-
14th January 2015, 09:38 PM
#2581
Senior Member
Senior Hubber
//நீங்க உங்க கவிதை மழையை தொடருவீங்களா?//
உடனே தொடர முடியாததற்கு ஸாரி கல் நாயக் (உண்மைப்பெயர் ஹரிஹர வேங்கட சுப்ரமண்யன் தானே
இதோ இன்றைய்ய ஸ்பெஷல் சுடச் சுட நெய்விட்டு இன்று முக நூலில் எழுதிய பாடல்கள்
கவிதையும் கானமும் -9
எமி ஜாக்ஸன் என்ற லண்டன் பெண்- சிச்சிறிது படங்களே நடித்திருக்கிறார்..அவரது- உலகமே எதிர்பார்த்த படமான ஐ- இன்று ரிலீஸ்.. என்ன ஆச்சுன்னா..
காலையில் முக நூலில் சின்னதாய் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேனா..
நண்பர் உடல் நிலை சரியில்லாத என்னைப் பார்க்க வந்திருந்தார். ’உடம்பு சரியானதுக்கப்புறம் எல்லாம் பார்க்கலாம்..சும்மா ஐ ஐ ந்னு குதிக்காதீர்!” என்றார்.. எப்படி இருக்க முடியும்.
எதுகையில் சிக்கா எமியாம் அழகுப்
பதுமையைப் பார்க்கலாம் பார்..
என்று தான் மனதில் தோன்றியது அவர் சென்ற பின்பு..(எதுகைன்னா ஒவ்வொரு வரியிலும் இரண்டாம் எழுத்தே வரவேண்டும்… எமி உமி சுமி என – கொஞ்சம் அப்ப எழுத வரலை)
எமி என ஆரம்பித்து வெண்பா எழுத மற்ற நண்பர்களை அழைக்கிறேன்! னு போட்டா ஃப்ரண்ட்ஸ் அழகாப் பாட்டும் எழுதிட்டாங்க. சரின்னு நானும் என் பங்குக்கோர் பாட்டு எழுதிட்டேன்..
தமிழுக் கழகூட்டும் சந்த விருத்தம்
எமிக்கோ எழிலென ஏது? - குமியும்
உதடென்றா இல்லை உதறும் நிலாவால்
புதனின்று பொன்னாச்சு போ..
இத்தோட நின்னுச்சான்னு பார்த்தா இன்னொரு நண்பர் – அவ்வளவு ஒண்ணும் சுவாரஸ்ய அழகு இல்லை ஓய்ன்னார்.. அப்படியே ஒரு பாட்டு – இறுதி அடி – எலி போல் இருக்கும் எமின்னு எழுதிட்டாருங்க! எனக்கோ சின்னக் கோபம்.
கலிகாலம் வந்ததைக் கண்டாயா தோழா
எலிபோல் இருக்காம் எமி ( நற நற..)
ந்னு எழுதிட்டேன்!
அப்புறம் அதே நண்பர் அந்த எமியின் ஸ்டில் பாத்துட்டு ஸாரி கேட்டு ஒரு பாட்டுப் போட்டார்..அதன் கடைசியிலே- என்று வரும் கோவில் எமிக்குன்னு கேட்டிருந்தாரா நான் என்ன சொன்னேன்..
கோவிலெல்லாம் ஏதுக்கு கொஞ்சும் குமரிக்காய்
பாவில் இசைப்போமே பண்ணை – தூவிடும்
சாரலாய் நெஞ்சைச் சரம்போல் நனைத்துதான்
தூறும் அழகோ சுகம்.
சரி தானுங்களே!
**
இனி நேயர் விருப்பமாக / விருப்பமாக இல்லாவிட்டாலும் கூட
மதராஸப் பட்டணத்திலிருந்து பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இலையே.. பாடல்..
http://www.youtube.com/watch?feature...&v=0e7sTaHxeQw
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th January 2015 09:38 PM
# ADS
Circuit advertisement
-
16th January 2015, 11:22 AM
#2582
Senior Member
Senior Hubber
சி.க.,
ஆக கடைசியா ஐ பார்த்தேளா, இல்லையா?
உங்க கவிதைகள் ரொம்ப நன்னாருக்கு பேஷ். பேஷ்.
எமிக்காக குமிறிக் குமிறி கவிதை வடிச்சிருக்கேள். (குமுறிக் குமுறி - எதுகைக்கா மாறிப்போயிட்டுது)
சமிக்ஞையாய் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
உமியாய் திரையில் இல்லாமலிருந்தால் சரி.
நமிதா போல் பருக்காமல் மெல்லியளாயிருக்கவும்
ஷமிதா போல் நிலைக்காமல் இல்லாமல், நிலைத்திருக்கவும்
அமிதாப் போல் புகழினை யாத்து பல்லாண்டு நடிக்கவும்
தமிழர் திரையில் பலநாள் வாழ வாழ்த்துவோம்.
அப்புறம் என்னோட பேரை எப்படி கண்டு பிடிச்சேள்? சின்ன கரக்ஷ்ன் பண்ணா போறும். வெளியே சொல்லிடாதீரும். ஷேமமா இருப்பேள்.
Last edited by kalnayak; 16th January 2015 at 11:41 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th January 2015, 12:00 PM
#2583
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th January 2015, 01:05 PM
#2584
Senior Member
Senior Hubber
ஆஹா, மரபுக்கவிதை என்பது இம்புட்டுத்தானா? நானும் 'என்னை மாதிரி ஆட்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது' என்று நினைத்திருந்தேன்.
விட்டால் என்னைக்கூட வைரமுத்து(!) போல ஆக்கி விடுவீங்க.
அப்புறம் என் பெயர் தெரியலை-ன்னு சொல்லியிருந்தீங்க. ஏற்கனவே விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி பலர் இருக்க, இல்லை, இல்லை, அவாள்ளாம் ஒருத்தரே-ன்னு சிலர் உண்மை தெரிந்தும் வேண்டுமென்றே சொல்ல, நான் யாரோவோட பினாமின்னு அவாள்ள சிலர் சொல்ல, அந்த எண்டர்டைன்மெண்ட் போயிடுமோல்லியோ!!! இந்தியா வாரப்போ சொல்லும் ஓய். ரகசியமாய் பப்ளிக்ல சந்திக்க முடியுமா பார்க்கலாம்.
Last edited by kalnayak; 16th January 2015 at 01:09 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th January 2015, 03:38 PM
#2585
Senior Member
Senior Hubber
ராஜண்ணாவுடன் ரயில் பயணம் தொடர்கிறது...
One of my favorite songs (train only at the start):
"அண்ணே, இப்ப நாம பஸ்ல போகைல. அதுவுமில்லாம நாம ரயில் என்ஜின்-ல பிரயாணம் பண்ணல, டிரைவர், தான் தூங்கினா எழுப்பச் சொல்றதுக்கு' என்றேன்.
"ஐயோ, இப்ப அதவிட ஆபத்தாச்சே, பக்கத்திலிருந்து நாம எழுப்ப முடியாதே' என்றார்.
அவர் முகத்தில் கலவரம் கூடியது.
"அதுக்கெல்லாம் பயப்படாதீங்க. அதிகமான ஆளுங்க இருப்பாங்க. ரயில் தண்டவாளத்தில் போவதால் நீங்க சொல்ற பிரச்சினை வராது" என்றேன்.
மேலே தூங்கியவரைப் பார்த்து "இவர் என்ன வேலை செய்யறாரு கேட்டியா?" என்றார்.
"கேட்கலை. ஆனால் இப்ப இவர் இந்த ரயிலை ஓட்டலியே, ஏன் பயப்படணும்?" கேட்டேன்.
"உனக்கு விவரம் பத்தாது" என்று மறுபடி சொன்னார். படுக்கையில் விழுந்தார்.
ரயில் விழுப்புரம் தாண்டி போய்க் கொண்டிருந்தது. மேல் படுக்கையிலிருந்தவர் கீழிறங்கி பாத்ரூம் போய்விட்டு வந்தார்.
நான் அவரைப் பார்த்து கேட்டேன்: "நீங்க என்ன வேலை செய்யறீங்க?"
"ரயில்வே டிபார்ட்மெண்ட்தான். என்ஜின் டிரைவரா" என்றார். படுத்துக் கொண்டார்
அண்ணனை திரும்பிப் பார்த்தேன்.
அவர் முகத்தில் கலவரம் திகிலாய் மாறிப் போயிருந்தது.
அவ்வளவுதான் இனி அண்ணன் உறங்கமாட்டார் என்பது தெளிவாக தெரிந்தது.
(தொடரும்)
Last edited by kalnayak; 16th January 2015 at 03:49 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
16th January 2015, 04:00 PM
#2586
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th January 2015, 04:05 PM
#2587
Senior Member
Senior Hubber
கல்நாயக் இப்படியா பயமுறுத்தறது..விஜயன் சுஜாதாவா.பாட் முன்னாடி கேட்டிருக்கேன்..இனிமே பாட் மட்டும் கேப்பேன் !சித்திரை மாதம் பெளர்ணமி நேரம் எனிடைம் ஃபேவரிட்.. குட்ஸ் வண்டியிலே இளவரசி. நல்ல பாட்டு..ஆமா கனிஹா வோட ரயில் பாட் ஒண்ணுஇருக்கே.
ரயிலே ரயிலே ஒரு நிமிடம்
http://www.youtube.com/watch?feature...&v=YK74lYzzOEQ
-
16th January 2015, 04:14 PM
#2588
Senior Member
Senior Hubber
ஹையோ ஹையோ, தமிழ்ழ எழுதியிருந்ததால தமிழ் இல்லைன்னு நெனச்சிட்டீங்களா? எதோ புறநானூறாமாங்களாம்.
நீங்க வேற மரபுக்கவிதை-ன்னு சொல்லிட்டீங்களா. அப்பப்ப பார்த்தா, எதாச்சும் என் மண்டையில ஏறுதான்னு பார்க்கிறேனுங்க.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
16th January 2015, 04:19 PM
#2589
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
கல்நாயக் இப்படியா பயமுறுத்தறது..விஜயன் சுஜாதாவா.பாட் முன்னாடி கேட்டிருக்கேன்..இனிமே பாட் மட்டும் கேப்பேன் !சித்திரை மாதம் பெளர்ணமி நேரம் எனிடைம் ஃபேவரிட்.. குட்ஸ் வண்டியிலே இளவரசி. நல்ல பாட்டு..ஆமா கனிஹா வோட ரயில் பாட் ஒண்ணுஇருக்கே.
ரயிலே ரயிலே ஒரு நிமிடம்
http://www.youtube.com/watch?feature...&v=YK74lYzzOEQ
பயப்படாமல் இப்படிதான் சில பாட் கேட்கணும்.
அடடா, அடுத்த பதிவிலே போட வைச்சிருந்த பாட்டை போட்டுட்டேளே!!!பரவாயில்லை. கைவசம் இன்னுங் கொஞ்சமிருக்கு. பயமில்லை.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
16th January 2015, 04:19 PM
#2590
Senior Member
Senior Hubber
//ஆக கடைசியா ஐ பார்த்தேளா, இல்லையா?// இன்னிக்கு ராத்திரி 11.30 தான்கிடைச்சது (இந்திய நேரம் 0200 ஹவர்ஸ்! )
பார்த்து சொல்றேன்
Bookmarks