-
1st February 2015, 01:22 AM
#2711
பிறந்த நாள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கண்ணா!
பிறந்த நாள் பரிசாக கொடுத்த இரண்டு பாடல்களுக்கும் குறிப்பாக மேள தாளம் கேட்கும் காலம் படத்திற்கு மனமார்ந்த நன்றி! எங்கள் குழு நண்பர்களுக்கே வாணிஸ்ரீ மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த பாடலில் கிளப்பியிருப்பார். அந்த காலத்து நாயகியர் எல்லோரும் புடவை கட்டும்போது தலைப்பை Floating - ல் தான் விட்டிருப்பார்கள். அனால் இந்தப் பாடலில் வாணிஸ்ரீ தலைப்பை இடுப்பில் சொருகி கொண்டு ஆடுவது attractive - ஆக இருக்கும். நடிகர் திலகம் கேட்கவே வேண்டாம்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை மறக்கவே முடியாத விஷயம் நமது ஸ்ரீதேவியில் 1974 ஜனவரி 26 அன்று ஓபனிங் ஷோ காலை 7 மணிக்கு பார்த்தது. பயங்கரமான கூட்டம். படம் முடிந்து வரும்போது பின்பக்கம் கருப்பையா பிள்ளை ஸ்டோர் வழியாக வெளியே வந்தோம்.
அது போல் சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் பாடலுக்கும் நன்றி. [நன்றி நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கும்] இன்று மாலை MSV times இணையதளத்தின் ஆண்டு விழாவில் கலந்துக் கொண்டேன். அருமையான பாடல்கள் பாடினார்கள். பாராட்டு பெற்ற இசையரசி தன் சொந்தக்குரலில் 4, 5 பாடல்களின் பல்லவி பாட அதில் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்கை இந்த வயதிலும் அப்படியே பாடினார் பாருங்கள், My Day was Made!
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st February 2015 01:22 AM
# ADS
Circuit advertisement
-
1st February 2015, 10:16 AM
#2712
Senior Member
Senior Hubber
//கருப்பையா பிள்ளை ஸ்டோர் //சி.செ ஸ்ரீ தேவியில் தான் பார்த்தேன் விவரம் தெரியாத வயதில் .. அப்புறம் வளர்ந்த பிறகு வே.கி பிறகுதான் பார்க்க முடிந்தது! இந்த க.பி ஸ்டோர்ஸ் இன்னும் இருக்கிறதா.. அந்தச் சாக்கடை.. அந்தத் தெரு தான் வில் லீட் டு பேச்சியம்மன் கோவில் அண்ட் பேச்சியம்மன் படித்துறை.. அங்கு ஒரு கடலைக் கடை (உப்புக்கடலை ஃபேமஸ்) அதே போல் மேலமாசி வீதி நேரு பிள்ளையாருக்கு டயகனாலா பார்த்தா அங்கும் ஒரு கடலைக் கடை-சூடாக வறுத்துத் தருவார்கள்..ம்ம்//இன்று மாலை MSV times இணையதளத்தின் ஆண்டு விழாவில் கலந்துக் கொண்டேன்// கொடுத்துவைத்தவர் முரளி நீங்கள்..
க.பி ஸ்டோர்ஸ் வழியாக மக்கள் தப்பிப்பதாக ஹவுஸ்ஃபுல்லில் பார்த்திபன் எடுத்திருப்பார் இல்லியோ..
-
1st February 2015, 04:52 PM
#2713
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
umaramesh
Thanks for remembering this song.Ever green one with entirely different orchestra scored by MSV. You have mentioned about everyone in the song except MSV.
So sad.
Thanks
Ramesh
திரு.ரமேஷ் அவர்களுக்கு,
பணிகளுக்கு இடையே கிடைத்த கொஞ்ச நேரத்தில் டீயை உறிஞ்சிக் கொண்டே போட்ட பதிவு அது. நானும் மெல்லிசை மன்னர்களின் ரசிகன்தான். 2 ஆண்டுகளுக்கு முன் ஜெயா டி.வி.சார்பில் மெல்லிசை மன்னர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஃபோர்ட் பியஸ்டா காரும் பொற்காசுகளும் வழங்கி அப்போது முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா அவர்கள் கவுரவித்தார்.
மெல்லிசை மன்னர்கள் வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய விருது இதுதான் என்பது எனக்கு வேதனை. அந்த விழாவில் செல்வி. ஜெயலலிதா பேசும்போது, பத்ம விருதுகளுக்காக இவர்களது பெயரை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், நிராகரிக்கப்பட்டு விட்டது என்று கூறினார். பத்ம விருதுகள் கூட அவர்களுக்கு கிடைக்காதது மிகப் பெரிய வருத்தம்.
வேண்டுமென்றே இல்லாவிட்டாலும் கூட, எனது பதிவில் மெல்லிசை மன்னரின் பெயரை குறிப்பிட மறந்தது தவறுதான். மன்னிக்கவும். தவறை சுட்டிக்காட்டியமைக்கும் தங்களின் பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st February 2015, 04:54 PM
#2714
Junior Member
Seasoned Hubber
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் பாடலை தரவேற்றியதற்கு நன்றி சின்னக் கண்ணன்.கொஞ்சம் வேலை. விரைவில் பாட்டோடு வருகிறேன்.
தங்கள் பாராட்டுக்கு நன்றி திரு.ராகவேந்திரா சார். சில நாட்களுக்குப் பின் வழக்கம்போல தொடர உள்ளேன் என்று நீங்கள் கூறியிருப்பது தெம்பளிக்கிறது. நன்றி.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st February 2015, 04:57 PM
#2715
Junior Member
Seasoned Hubber
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
தாங்கள் எமனுக்கு எமனாய் இருந்து சிரஞ்சீவியாய் வாழ்ந்து சாதனை படைக்க மக்கள் திலகம் திரி சகோதரர்களின் சார்பில் எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றுதான் திரியை பார்த்தேன். தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
2nd February 2015, 10:40 AM
#2716
Senior Member
Senior Hubber
எல்லாருக்கும் வணக்கம். வருகின்றவர்கள் தொடர்ந்து வாருங்கள். நின்றவர்கள் நிற்பதை நிறுத்தி வாருங்கள். பார்ப்பவர்கள் பதிக்கவும் வாருங்கள். புதிதாகவும் வாருங்கள். இன்றைய பொழுதை இந்த பாடலுடன் ஆரம்பிப்போம்.
இந்த பாட்டின் முதல் வரி இப்போதுதான் எனக்காக எழுதப்பட்டதாக நினைக்கிறேன். அதனால்...
விரைவில் எதிர் பாருங்கள்.
Last edited by kalnayak; 2nd February 2015 at 11:30 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd February 2015, 01:10 PM
#2717
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கலைவேந்தன். அன்றைய தினம் (அதாவது 31-ந் தேதி சனிக்கிழமை) நான் முன்னரே குறிப்பிட்டது போல் MSV Times இணையதளத்தின் ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கே இந்த சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் பாடலை மேடையில் பாடினார்கள். அதற்கு முந்தைய நாள்தான் நீங்கள் அந்தப் பாடலை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். ஆகவே அந்த நாளில் அன்றைய நேரம் என் நினைவில் நீங்கள் வந்து போனீர்கள். அதனால் பிறந்த நாளன்றே நீங்கள் வாழ்த்தி விட்டதாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். மீண்டும் நன்றி.
அன்புடன்
-
2nd February 2015, 01:26 PM
#2718
கண்ணா,
நான் கொடுத்து வைத்தவன் என்று சொல்லியிருக்கிறீர்கள். சென்னையில் வசிப்பதால் இது சாத்தியமாகிறது. நாளையே வேறு ஊர் போகவேண்டி வந்தால் இந்த வாய்ப்பு கிடைக்காது. ஆகவே இருக்கும்வரை இவற்றையெல்லாம் ரசிப்போம்.
இந்த இணையதளத்தைப் பற்றி [ MSV Times ] சொல்ல வேண்டும். இதன் பின்னில் இருப்பவர்கள் அனைவரும் மெல்லிசை மன்னரின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல அவரின் இசையைப் பற்றி அணு அணுவாக விவரிப்பார்கள். ஒவ்வொரு பாடலிலும் அவர் எப்படியெல்லாம் புதுமைகள் செய்திருக்கிறார் பாடல் இடம்பெறும் அந்த காட்சி சூழலை தன இசையால் எப்படி மெருகேற்றியிருக்கிறார் என்பதையெல்லாம் மேடையில் விளக்குவார்கள். அது ஒரு காரணம் என்றால் அவர்கள் விழா தினத்தன்று மேடையில் பாடும் இசைக் குழுவினரிடம் எந்தெந்த பாடல்களைப் பாட வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டு கொடுத்து விடுவார்கள். அது எப்படி இருக்கும் என்றால் அருமையான பாடல்கள் ஆனால் சந்தர்ப்ப சூழலால் அவற்றின் தரத்திற்கேற்ப சிலாகிப்படாதவையாக இருக்கும்.
ஞான ஒளி என்றால் எல்லோரும் தேவனே பாடலை நினைக்கும்போது இவர்கள் மணமேடை மலர்களுடன் தீபம் பாடலை தேர்வு செய்திருப்பார்கள். கலைக்கோவில் என்றால் தங்கரதம் வந்தது வீதியிலே என்று நாம் எதிர்பார்க்க தேவியர் இருவர் முருகனுக்கு பாடல் பாடப்படும். அது மட்டுமல்ல மேடையில் கேட்கவே முடியாத அற்புதமான பாடல்களை அளித்து அசத்துவார்கள். வாழ்வு என் பக்கம் படத்தில் வீணை பேசும் அது மீட்டும் விரல்களை கண்டு, ஒரு கொடியில் இரு மலர்கள் படத்தில் கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னைகையில், சங்கர் சலீம் சைமன் படத்தில் இது உந்தன் வீட்டு கிளிதான் போன்ற பல பாடல்கள் இவர்கள் மேடையில்தான் கேட்டிருக்கிறேன்.
பலருக்கும் தெரியாத நுணுக்கங்களை இவர்கள் சொல்லும் அழகே தனி. சில வருடங்களுக்கு முன் இது போன்ற விழா மேடையில் இவர்கள் சொன்ன தகவல். கர்நாடக இசைக் கச்சேரிகளில் அநேகமாக ஒரு சின்ன விருத்தமாவது மத்யமாவதி ராகத்தில் பாடுவார்கள் அதன் காரணம் என்னவென்று சொன்னார்கள். ஒரு சில ராகங்களை குறிப்பிட்ட நேரத்தில்தான் பாட முடியும். [காலை மாலை, இரவு நேரங்கள்]. குறிப்பிட்ட நேரத்தில் இல்லாமல் வேறு சமயத்தில் பாடினால் ராக தோஷம் பாடகரை பாதிக்குமாம். இது உண்மையா இல்லை மூட நம்பிக்கையா என்று தெரியவில்லை. ஆனால் கச்சேரி என்று வந்துவிட்டால் இதை பாடலாம் இதை பாடக் கூடாது என்று ஒதுக்கி வைக்க முடியாது. பாடித்தான் ஆக வேண்டும். அதற்கு பரிகாரம்தான் மத்யமாவதி. காரணம் அது தோஷ நிவாரணியாம். இதை சொல்லிவிட்டு மத்யமாவதி ராகத்தில் அமைந்த வேலாலே விழிகள் பாடினார்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு மெல்லிசை மன்னரின் மேதமைக்கு ஒரு உதாரணம் சொன்னார்கள். அன்பே வா படத்தில் வரும் வெட்கமில்லை நாணமில்லை பாடலை எடுத்துக் கொண்டார்கள். பொதுவாக திரைப்பாடல்களில் பல்லவி slowவாக இருக்கும். சரணத்தில் வேகம் கூடி மீண்டும் slow பல்லவிக்கு திரும்பி வருவார்கள். ஆனால் இந்தப் பாடலில் நேரெதிர். பலலவி செம ஸ்பீட். சரணம் slow. Fast பீட்ஸிலிருந்து slow பீட்ஸிற்கு வருவது எளிது. ஆனால் ரிவர்சில் எப்படி இதை செய்வது?
சரணம் இப்படி இருக்கும்
பருவ நிலா அருகில் வர
பழம் நழுவி பாலில் விழ
உறக்கம் வந்தே விலகிச் செல்ல
தலைவன் வந்தான் உறவைச் சொல்ல
இந்த slow பீட்ஸிலிருந்து பல்லவியின் ஸ்பீட் tempoவிற்கு போக MSV என்ன செய்தார்? பாடலே நாயகியும் தோழியரும் பாடுவதாக சூழல் என்பதனால் உடனே அங்கு ஒரு கோரஸ் ஹம்மிங் வைத்தார்.
ஆ...ஹா...ஆ...ஹா...ஆ...ஹா...ஆ...ஹா...ஆ ஆ ஆ ஆ ஆ...
அது land ஆகும் இடத்தில பல்லவியின் ஸ்பீட் பீட்ஸ் துவங்குவது போல் வைத்தார்.
இந்த நுணுக்கமான விஷயத்தை அவர்கள் மேடையில் சொல்ல பிரமித்து போய் கேட்டுக் கொண்டிருந்தேன். அன்று மட்டுமல்ல அதன் பிறகு எப்போது இந்தப் பாடல் கேட்டாலும் மெல்லிசை மன்னரின் அந்த நுணுக்கம்தான் மனதில் ஓடிவரும்.
மேற்சொன்னவையெல்லாம் முந்தைய வருடங்களில் கேட்டது. இந்த வருட விழா பற்றி அடுத்த பதிவில்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
2nd February 2015, 06:03 PM
#2719
Junior Member
Seasoned Hubber
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
எம்எஸ்வி டைம்ஸ் நிகழ்ச்சியின்போது என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி முரளி. உங்களுக்கு 31ம் தேதி பிறந்த நாள் என்று எனக்கு தெரியாது. தாமதமாக வாழ்த்து சொல்கிறேனே என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் கூறியபிறகுதான் எனக்கே தோன்றியது. 30ம் தேதியே ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்..’ பாடல் பற்றி குறிப்பிட்டதன் மூலம் முதல் நாளே, எல்லாருக்கும் முன்னதாகவே வாழ்த்து சொல்லிவிட்ட மகிழ்ச்சி எனக்கு.
எம்எஸ்வி டைம்ஸ் நிகழ்ச்சியில், அன்பே வா படத்தின் பாடலுக்கு அவர்கள் கூறியிருக்கும் விளக்கம் அருமை. மெல்லிசை மன்னர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதோடு, அவர்களது இசைப் புலமையை நம் மக்கள் அணுஅணுவாய் நுணுக்கமாய் ரசிக்கவில்லை என்பதே என் கருத்து.
சித்ரா பவுர்ணமி படத்தில் ‘வந்தாலும் வந்தாண்டி ராஜா... ’ பாடலுக்கு (இதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்)கதாநாயகனின் எண்ண ஓட்டத்துக்கேற்ப உற்சாகமாகவும் பழிவாங்கும் உணர்வோடும் கம்பீரமாக திரு. டிஎம்எஸ் அவர்கள் பாடும்போது அதற்கேற்ப ஆர்ப்பாட்டமாக ஒலிக்கும் பின்னணி இசை, பழிவாங்கலை தடுக்க நினைக்கும் நாயகிக்காக இசையரசி பாடும்போது அமைதியும் கருணையுமாய் தவழும்.
நான் படத்தில் (இசை டி.கே.ராமமூர்த்தி) ‘போதுமோ... இந்த இடம்...’ பாடல் வெளியே மழை பெய்யும் நிலையில், நாயகனும் நாயகியும் காருக்குள் பாடுவதாக படமாக்கப்பட்டிருக்கும். காருக்கு வெளியே காட்சி காட்டப்படும்போது பாடல் சற்று ஒலி குறைவாக கேட்பதாக (கார் ஜன்னல் கண்ணாடிகள் உயர்த்தப்பட்டிருப்பதால்) காட்டப்படும். இதற்காக ஒலியைக் குறைத்து வாசித்திருக்க மாட்டார்கள். ரீ ரெக்கார்டிங்கின் போது ஒலி அளவை குறைத்திருப்பார்கள். என்றாலும், இந்த நுணுக்கம் புரியாமல் அந்தக் காட்சியின் போது தியேட்டரில் ஆபரேட்டர் ரூமை பார்த்து, ‘ஏய்..... சவுண்டு...’ என்று கத்தியவர்களை பார்த்து வேதனைப்பட்டிருக்கிறேன்.
எம்எஸ்வி டைம்ஸின் இந்த ஆண்டு விழா பற்றி எழுதுங்கள். இசையால் இணைவோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd February 2015, 09:52 PM
#2720
Senior Member
Senior Hubber
//ஞான ஒளி என்றால் எல்லோரும் தேவனே பாடலை நினைக்கும்போது இவர்கள் மணமேடை மலர்களுடன் தீபம் பாடலை தேர்வு செய்திருப்பார்கள். கலைக்கோவில் என்றால் தங்கரதம் வந்தது வீதியிலே என்று நாம் எதிர்பார்க்க தேவியர் இருவர் முருகனுக்கு பாடல் பாடப்படும். அது மட்டுமல்ல மேடையில் கேட்கவே முடியாத அற்புதமான பாடல்களை அளித்து அசத்துவார்கள்// முரளீ ஈ ஈங்க்ணா… வெகு அழகிய பதிவு. எம்.எஸ்.வி டைம்ஸ் பார்த்ததில்லை..இப்போது தான் பார்த்தேன் நிதானமாகப் படிக்கவேண்டும்
//மத்யமாவதி ராகத்தில் அமைந்த வேலாலே விழிகள்// ஆக்சுவலா இதத் தான் கிஃப்டா கொடுக்கறதா நினைச்சுருந்தேன்.. கார்த்திக் வந்தார்னா வெல்கம் பேக்னு கொடுக்கலாம்னு விட்டுட்டேன்.. பட் உங்க மேளதாளம் பாட்டுக்காக த் தேடிய போது இந்தப்பாட்டையும் முழுக்கப் பார்த்தேனே
//இந்த slow பீட்ஸிலிருந்து பல்லவியின் ஸ்பீட் tempoவிற்கு போக MSV என்ன செய்தார்? பாடலே நாயகியும் தோழியரும் பாடுவதாக சூழல் என்பதனால் உடனே அங்கு ஒரு கோரஸ் ஹம்மிங் வைத்தார்.
ஆ...ஹா...ஆ...ஹா...ஆ...ஹா...ஆ...ஹா...ஆ ஆ ஆ ஆ ஆ...// நிஜம்மாகவே எனக்குத் தெரியாத அபூர்வமான விஷயம் முரளி.. நன்றி..
//மேற்சொன்னவையெல்லாம் முந்தைய வருடங்களில் கேட்டது. இந்த வருட விழா பற்றி அடுத்த பதிவில்// சொல்லுங்க சொல்லுங்க..
கலைவேந்தன்,
//நான் படத்தில் (இசை டி.கே.ராமமூர்த்தி) ‘போதுமோ... இந்த இடம்...’ பாடல் வெளியே மழை பெய்யும் நிலையில், நாயகனும் நாயகியும் காருக்குள் பாடுவதாக படமாக்கப்பட்டிருக்கும். காருக்கு வெளியே காட்சி காட்டப்படும்போது பாடல் சற்று ஒலி குறைவாக கேட்பதாக// இது எனக்குப் படம் பார்க்கும் போது புரிந்து வியந்திருக்கிறேன்.. நல்ல பாட்டு.. இது மாதிரி இன்னொரு பாட் நினைவுக்கு வருது.. அது கட்டக் கடசீல சொல்றேன்..
//சித்ரா பவுர்ணமி படத்தில் ‘வந்தாலும் வந்தாண்டி ராஜா... ’ பாடலுக்கு (இதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்)// ஹையா..ஜாலி..
ஏதோ எழுதணும்னு நினைச்சு மறந்துபோனதுனால கட்டக் கடசி இப்பவே வந்துடுத்து!
அந்தப் பாட்டு பெட்டியிலே பூட்டிவைத்த கட்டுச் சேவல் கட்டுச் சேவல் பக்கத்திலே பெட்டைக்கோழி..( ஹையா நானும் கல் நாயக்கும் கோழிப்பாட்டா பாடப் போறோமே
இந்தாங்க கலை உங்களுக்குப் “போதுமோ இந்த இடம்..!
https://www.youtube.com/watch?featur...-ts=1422579428
**
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks