-
3rd February 2015, 04:44 PM
#2741
Senior Member
Senior Hubber
கலைவேந்தன்,
என்ன சொன்னீங்க? இன்னும் நெறைய கோழி பாட்டு இருக்கணும். எனக்கு கெடச்சத எடுத்து போட்டேன். எனக்கு தெரிஞ்ச இன்னொரு பழைய கோழிப்பாட்டு இருக்கு. நேத்து முரசு டிவியில் ஒளி பரப்பினார்கள். O.a.k. தேவர் நடித்திருந்தார். கள்ளபார்ட்டும் நடனம் ஆடியிருந்தார். ஒரு தாய்கோழியும், மூன்று குஞ்சுகளும் தங்களை கொல்ல வேண்டாமென்று கெஞ்சி பாடுவதாக ஒரு நடன நிகழ்ச்சி. என்ன படம், பாடல் முதல் வரி இரண்டும் ஞாபகத்தில் வர மாட்டேன் என்கிறது. உங்களுக்கு தெரிஞ்சால் சொல்லுங்களேன்.
Last edited by kalnayak; 3rd February 2015 at 04:46 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
3rd February 2015 04:44 PM
# ADS
Circuit advertisement
-
3rd February 2015, 05:19 PM
#2742
Junior Member
Seasoned Hubber
உரிமைக்குரல் பாடலை தரவேற்றியதற்கு நன்றி கல்நாயக். நீங்கள் குறிப்பிட்ட பாடலை நானும் பார்த்திருக்கிறேன். (நேற்று பார்க்கவில்லை). நல்ல பாடல், ஆனால் நினைவு வரவில்லை.
நேரு படிக்க விரும்பி அண்ணா படித்த அந்த புத்தகம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன் சென்னை வானொலியில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் மறைந்த திரு. தென்கச்சி சுவாமிநாதன் கூறினார். புத்தகத்தின் பெயரை அவர் சொன்னார். கேட்டபோது, நோட் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பின்னர், அதை மறந்ததால் புத்தகத்தின் பெயரையும் மறந்து விட்டேன். அவரைப் போன்றவர்களின் மறைவால் எவ்வளவு தகவல்களை நாம் இழக்கிறோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd February 2015, 06:59 PM
#2743
எம்எஸ்வி டைம்ஸ் விழா.
மாலை 6 மணிக்கு விழா துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எல்லா வருடமும் முதலில் 5,6 பாடல்கள் பாடி விட்டு பிறகு ஒரு பிரேக் விட்டு விழா நாயகன் மற்றும் சிறப்பு விருந்தினர்களை மேடையேற்றி அவர்களை கௌரவித்து பின் அவர்களெல்லாம் பேசி முடித்த பிறகு மீண்டும் பாடல்கள் பாடப்படும். எப்படி இருந்தாலும் விழா முடிவதற்கு இரவு 10.30 அல்லது 11 மணி ஆகிவிடும். 4,5 வருடங்களாகவே இதை பார்த்து வருகிறேன்.
சனிக்கிழமையன்று அலுவலகம் எல்லாம் முடிந்து வேறு சில வேலைகளையும் முடித்து விட்டு விழா நடைபெற்ற தி.நகர் ராமகிருஷ்ணா ஸ்கூல் போவதற்கு 7-7.15 ஆகிவிட்டது. .பாடல்களின் முதல் தவணை முடிந்து விட்டது. விண்ணோடும் முகிலோடும், வளர்ந்த கலை மறந்து விட்டாள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீரோடும் வைகையிலே மற்றும் இரண்டு பாடல்களும் பாடப்பட்டதாக அறிந்தேன்.
நான் செல்லும்போது பிரபல கர்நாடக இசைக் கலைஞர் திரு G S மணி அவர்கள் பேசி முடிக்கிறார். அடுத்து பேசியது இசையரசி. சாதாரணமாக பேசுவதை விட அதிக நேரம் பேசினார். உட்கார இடம் தேடி அலைந்ததனால் முதலில் அவ்வளவாக கவனிக்க முடியவில்லை. எம்எஸ்வியுடனான அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். எந்தளவிற்கு அவர் perfectionist என்பதை அவருடன் பணியாற்றியிருந்தால்தான் புரிந்துக் கொள்ள முடியும் என்றார். தனக்கு வேண்டியது கிடைக்கும் வரை பாடகர்களை விட மாட்டார் என்றார். ஒரு முறை ரெகார்டிங் ரூமில் எலி ஒன்று வந்துவிட அதற்கு பயந்து அலறி ஓடி வந்தது, எலிதானே திரும்ப போய் பாடு என்று எம்எஸ்வி சொன்னது, ஒரு பாடலுக்கு ரிகர்சல் மற்றும் ரெகார்டிங் 2 நாட்கள் ஆனது, அப்போது கூட எம்எஸ்வி காட்டிய சுறுசுறுப்பு என்று பல விஷயங்களை சொன்னார்.
குரல் சரியில்லாமல் ரெகார்டிங் வந்தது, இந்த வாய்ஸ்தான் வேண்டும் என்று அத்தான் என்னத்தான் பாடலை பாட வைத்தது, நாளை இந்த வேலை பாடல் ரெகார்டிங் முடிந்த பிறகு போகிற போக்கில் இந்த பாட்டுக்கு உனக்கு அவார்ட் கிடைச்சாலும் கிடைக்கலாம் என்ற வார்த்தைகள் எப்படி உண்மையானது அதே போன்று இரண்டாவது தேசிய விருதும் சவாலே சமாளி படத்திற்கு கிடைத்தது அதுவும் எம்எஸ்வி இசையிலே கிடைத்தது என்று பல்வேறு நெகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூர்ந்தார். தேடினேன் வந்தது பாடல் இரவு இரண்டு மணிக்கு பதிவு செய்யப்பட்தையும் நகைச்சுவையாக சொன்னார்.
அடுத்து பேசியவர் சிவிஆர். மொத்தம் 40 படங்களை இயக்கியிருப்பதாகவும் அவற்றில் 32 படங்கள் எம்எஸ்வி இசையமைத்தது என்றார். எம்எஸ்வி போல எத்தனை ட்யூன் கேட்டாலும் சலிக்காமல் போட்டுத் தருபவர்கள் யாருமே இல்லை என்றார். கொஞ்சம் கூட சலிப்படையாமல் இயக்குனருக்கு திருப்தி வரும்வரை ட்யூன் போடுவார் எம்எஸ்வி என்றார். வெறும் பணத்திற்காக வேலை செய்யாமல் செய்யும் தொழிலை தவமாக செய்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்ற சிவிஆர் கண்ணதாசன் எம்எஸ்வி கூட்டணியை மெச்சினார். அதே போன்று இசையரசியையும் பெரிதும் பாராட்டினார்.
இறுதியில் பேச வந்தவர் காந்தி கண்ணதாசன். கையில் சில குறிப்புகளை வைத்துக் கொண்டு பேசினார். எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் தன் தந்தைக்கும் எம்எஸ்விக்கும் உள்ள நட்பை சிலாகித்தார். எம்எஸ்வியின் வாரிசுகளோடு தனக்கு இருக்கும் நல்லுறவை வெளிப்படுத்தினார். முதலில் பேசியவர்கள் எல்லோரும் அவரது பாடல்களைப் பற்றி பேச இவர் எம்எஸ்வியின் ரிரெகார்டிங்கை எடுத்துக் கொண்டார். எம்எஸ்வி போல் ரீரெகார்டிங் செய்ய ஆளே இல்லை என்றார். ரீரெகார்டிங் நடக்கும் நேரத்தில் யார் வருகிறார் யார் போகிறார் என்பது கூட தெரியாமல் மூழ்கி இருப்பார் என்றார். ஒரு நேரம் கல்லூரி நண்பர்களை அழைத்துக் கொண்டு ரீரெகார்டிங் போய் விட்டு எப்படி எம்எஸ்வி தன்னை கண்டுக் கொள்ளவேயில்லை என்பதை சொன்ன காந்தி அதனால் தன் நண்பர்கள் உண்மையிலே அவருக்கு உன்னை தெரியுமா என்று சந்தேகப்பட்டதையும் பிறகு அன்றைய நாள் வேலை முடிந்தவுடன் இவரை பார்த்து நீ எப்போயா வந்தே? என்று கேட்டதையும் பலத்த சிரிப்புக்கிடையில் பகிர்ந்துக் கொண்டார்.
பேச்சுக்கிடையே காந்தி பகிர்ந்துக் கொண்ட ஒரு விஷயம் சுவையாக இருந்தது. இரவில் அவர்கள் வீட்டின் முன்னறையில் கண்ணதாசன் படுத்திருப்பாராம். அதற்கு அடுத்த அறையில் இவர்கள் (காந்தி மற்றும் அவரது சகோதர்கள்) படுத்திருப்பார்களாம். கண்ணதாசன் அறையில்தான் தொலைபேசி இருக்குமாம். இரவில் அவருக்கு போன்கால் வருமாம்.
"என்னய்யா? இந்த நேரத்திலே" என்று கண்ணதாசன் பேசினால் எதிர் முனையில் கருணாநிதி.
" என்ன சாமி? இந்த நேரத்திலே" என்றால் எதிர் முனையில் எம்ஜிஆர்.
" என்னண்ணே? நான் முத்து பேசறேன்" என்றால் எதிர் முனையில் ஏஎல்எஸ்.
" என்னடா? இந்த நேரத்திலே" என்றால் எம்எஸ்வி.
பேச்சை நிறைவு செய்யும் முன் எம்எஸ்வி டைம்ஸ் இணையதளத்திற்கு ஒரு வேண்டுகோளை வைத்தார் காந்தி. இணையதளத்தின் விளம்பர பதாகையில் [banner] அவர்களின் ஸ்லோகனாக
Mortal Man Immortal Music .
என்று எழுதியிருப்பதை சுட்டிக் காட்டிய காந்தி Only Immortal Man Make Immortal Music என்றார். எனவே தான் சொன்னது சரி என்று தோன்றினால் ஸ்லோகனை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
இத்துடன் மேடை பேச்சு முடிவடைந்து மீண்டும் பாடல்கள் ஆரம்பித்தன.
இனியும் ஒரு பதிவு தேவைப்படும் என நினைக்கிறேன்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
3rd February 2015, 08:31 PM
#2744
Junior Member
Seasoned Hubber
திரு. முரளி,
எம்எஸ்வி டைம்ஸ் விழா நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை உங்கள் பதிவு போக்கியது. நன்றி. தெரிந்தவர் வந்திருக்கிறார் என்பது கூட தெரியாமல் மனிதர் (எம்எஸ்வி) என்ன ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியுள்ளார்.
கவியரசருக்கும் அவரோடு பேசியவர்களுக்கும் உறவுமுறையும் நெருக்கமும் மரியாதையும் எப்படி இருந்தது? என்பது போனில் அவர் பேசியதிலிருந்து தெரிகிறது.
மதியம் விவரமாக எழுத முடியவில்லை. திரு.டி.எம்.எஸ். அவர்கள் திரு.எம்.ஜிஆர். திரு.சிவாஜி ஆகியோருக்கேற்ப குரலை மாற்றிப் பாடுவது எல்லாருக்கும் தெரியும்.
நீங்கள் குறிப்பிட்டபடி,
--------------------
இங்கே நான் சொல்ல வந்தது இசையரசியின் குரல் ஜாலம். Adaptability என்று சொல்லுவார்களே அதாவது யாருக்கு பாடுகிறாரோ அவர் போன்ற குரலுக்கே தன் குரலை மாற்றிக் கொள்வதில் அவருக்கு இணை அவரே. குறிப்பாக ஜெயலலிதாவிற்காக பாடும்போது அப்படியே கலைச்செல்வியின் குரலைப் போலவே இருக்கும். வெண்ணிற ஆடை ஆயிரத்தில் ஒருவன் படங்களிலேயே இதை நாம் உணரலாம். நான் இரண்டு பாடல்களை கேட்கும்போது குரல் ஒற்றுமையை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போவேன். ஒன்று மோட்டார் சுந்தரம் பிள்ளையில் வரும் காத்திருந்த கண்களே பாடல். அதிலும் ஒரு சரணத்தின் இறுதியில்
செவ்விதழரோம் தேன் எடுக்க இந்த நாடகம் நடிப்பது என்ன
என்ற வரியை கவனியுங்கள்.
மற்றொரு பாடல் கந்தன் கருணை படத்தில் வரும்
குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே
இந்த பாடலைக் கேட்கும்போதும் குரல் ஒற்றுமை பளீரென்று தெரியும். பாட்டும் பரதமும் படத்தில்
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
பாடல் ஆரம்பிக்கும்போது பின்னணி இசை இல்லாமல் சுசீலாம்மா மட்டும் பாடுவார். படத்தில் ஜெயலலிதா பாட சிவாஜி அதே வரியை திருப்பி பாடுவார். உடனே ஜெயலலிதா " ஆச்சரியமாயிருக்கே! உங்களுக்கு பாடக் கூட தெரியுமா?" என்று கேட்பார். அப்போது ஜெயலலிதாவின் சொந்தக் குரல். அதற்கு நடிகர் திலகம் " நான் எங்க பாடினேன்? நீ பாடினதை அப்படியே திருப்பி சொன்னேன்" என்றவுடன் சட்டென்று சுசீலாம்மா மாப்பிளை பெண்ணுக்கு ஏன் இந்த மோகம் என்று பாடுவார். முதல் வரி சுசீலா, இரண்டாம் வரி ஜெயலலிதா மூன்றாம் வரி சுசீலா. ஆனால் பாடலைக் கேட்கும்போது இவை மூன்றுமே ஒரே குரலாக ஒலிக்கும்.
--------------------
இசையரசியும் நடிகைகளுக்கேற்ப தன் குரலை மாற்றிப் பாடுவார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதில் ‘அவருக்கு இணை அவரே’ என்று நீங்கள் சொல்வது எனக்கும் உடன்பாடே. பாட்டும் பரதமும் பாடலையும் செல்வி. ஜெயலலிதா அவர்களின் குரலையும் ஒப்பிட்டு நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி. மிகவும் அருமையான பாடல். படத்தில் எல்லா பாடல்களுமே அற்புதமாக இருக்கும். ‘கற்பனைக்கு மேனி தந்து....’ பாடலுக்கும் ‘மாந்தோரண வீதியில்..’ பாடலுக்கும் டிஎம்எஸ் குரலில்தான் என்ன ஒரு வேறுபாடு?
நான் மதியம் குறிப்பிட்டபடி எனக்கு (நமக்கு) பிடித்த ‘வந்தாலும் வந்தாண்டி ராஜா...’ பாடலை உங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் ரசிக்க விரும்புகிறேன்.
எம்.எஸ்.வி. டைம்ஸ் விழா பற்றி ‘இனியும் ஒரு பதிவு தேவைப்படும் என நினைக்கிறேன் ’என்று கூறியுள்ளீர்கள். அதை மூன்று, நான்கு பதிவுகளாக விரித்தால் மகிழ்ச்சி. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
3rd February 2015, 08:57 PM
#2745
Junior Member
Seasoned Hubber
முரளி,
கற்பனைக்கு மேனி தந்து.... சக்கரவாகமா?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
3rd February 2015, 09:39 PM
#2746
Senior Member
Senior Hubber
கல் நாயக்.. எல்லாக் கோழிப் பாடல்களுக்கும் நன்றி..மிக்க நன்றி. நான் தேடும்போது இவ்ளோ கிடைக்கலீங்க்ணா.. அப்புறம் சற்று சமயமெடுத்து இப்ப எல்லா வீடியோவையும் சில கொஞ்சம் சில முழுக்கன்னு பார்த்தேனா..( நீங்க ஒரு கோழி விட்டுப்புட்டீங்களே..ஆனா அது செத்துப் போன கோழி.. அது கடசீல சொல்றேன்..)
கொண்ட சேவல் கூவும் நேரம்.. குக்குக்கூ அதெப்படி அது கொக்கரக்கோன்னு தான் கூவுமே.. பாக்யராஜ் ராதா.. ஓகே சாங்க் தானில்லையா..
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே.. ஹை இது எனக்குத் தெரியுமே.. பாப்பா பாட்டுங்கறதால ரிஜக்ட் பண்ணிட்டேன்!!
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே
வந்திருக்கும் அன்பிலே அக்கறை காட்டினா தேவலை ( நல்ல பாட்டுங்க்ணா.. ரொம்ப அழகா இருக்கு… யூத் ந .தி அண்ட் எம்.என் ராஜம்.. கேக்க மட்டும் செய்திருக்கிறேன்.. இப்ப தான் பார்க்கிறேன்… (கொஞ்சம் காதைக் கிட்டக்க கொண்டுவாங்க.. என்னபடம்னு கேட்டா அடிப்பீங்களா))
கில்லி பாட்டும் அழகு
கொக்கரக் கொக்கரக்கோ கூவுற சேவலுக்கு – லக்கி மோகன் அப்புறம் ஏனோ தானோ நதியா. – பாடு நிலாவே பார்த்தேனா என்ன… நினைவுக்கே வரலை..
.
போதோட கோழி கூவுற வேளை – எப்படிமறந்தேன் ஒரு தலை ராகத்திலேயே எனக்கு மிகப்பிடித்த பாடல் இது..
கொக்கரக்கோ கோழி கலைஞன் – கமல் சிவரஞ்சனி..ம்ம்
கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டுப் பாக்க நான் வாரேன் – ப்ரஷாந்த் மெளனிகா.. முதல் தடவையாய் கேட்கிறேன் என நினைக்கிறேன்..படம் பார்த்த சமயத்திலெல்லாம் பாடல் எஃப் எ ஃப் தான் – அந்தக் காலத்தில்..…. அது போலவே இதையும் செய்திருப்பேன் என நினைக்கிறேன். நல்லபாட்டு
வெடக்கோழி வெடக்கோழி – இது தெரியுமே.
உரக்கக் கத்துது கோழி தண்ணி இறைச்சுக் கொட்டுது வாளி –அடடா என்னா தத்துவம்.. இதுவும் மறந்து போயிருந்ததுங்க..
அகெய்ன் தாங்க்ஸ் கல் நாயக்.. ஒரு கலகல உணர்வைக் கொணர்ந்து விட்டீர்கள் ஐயா.. (ரொம்பத் தமிழோ).
அப்படியெல்லாம் எந்தப் பாடலைப் பற்றி எழுதவும் எதுவும் குறித்து வைக்கவில்லை நான்.. எனில் கவலைப் படாதீர்கள்
இன்னும் சாமக்கோழி ஹஸ்கி வாய்ஸில் கூவும் பாட்டு நினைவுக்கு வந்தாலும் இன்னொரு பாட்டு கொஞ்சம் டேஸ்டா இருக்கறா மாதிரி இருக்கு என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்.
ஏனெனில்,
ஹி ஹீ. இது மீன் வறுத்த கோழி..
சரக்கு வச்சிருக்கேன் சரக்குவச்சிருக்கேன் வறுத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் – ஃபாஸ்ட் சாங்க்..இல்லியோ..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
3rd February 2015, 09:43 PM
#2747
Senior Member
Senior Hubber
முரளி அந்தக் காத்திருந்த கண்களே.. செவ்விதழோரம் தேனெடுத்து ரொம்ப அழகா இருக்கும் குரல்..எப்போது கேட்டாலும் இனிக்கும்
கலைவேந்தன்.. இப்படி கடைசி வரை அவர் படித்த புத்தகம் தெரியாமல் போய்விட்டதே.. தென்கச்சி சொல்லியிருக்கிறாரா. அவர் எழுதிய இன்று ஒருதகவல் எல்லா பாகமும் படித்திருக்கிறேன் (என்னிடம் இப்போதும் இருக்கின்றன) எழுதியிருக்கிறாரா என்பது நினைவிலில்லை…. Thanks for the good post.
//ஒரு முறை ரெகார்டிங் ரூமில் எலி ஒன்று வந்துவிட அதற்கு பயந்து அலறி ஓடி வந்தது, எலிதானே திரும்ப போய் பாடு என்று எம்எஸ்வி சொன்னது, ஒரு பாடலுக்கு ரிகர்சல் மற்றும் ரெகார்டிங் 2 நாட்கள் ஆனது, அப்போது கூட எம்எஸ்வி காட்டிய சுறுசுறுப்பு என்று பல விஷயங்களை சொன்னார்.// "என்னய்யா? இந்த நேரத்திலே" என்று கண்ணதாசன் பேசினால் எதிர் முனையில் கருணாநிதி.
" என்ன சாமி? இந்த நேரத்திலே" என்றால் எதிர் முனையில் எம்ஜிஆர்.
" என்னண்ணே? நான் முத்து பேசறேன்" என்றால் எதிர் முனையில் ஏஎல்எஸ்.
" என்னடா? இந்த நேரத்திலே" என்றால் எம்எஸ்வி.//
முரளீங்ணா.. வெகு நன்னா எழுதியிருக்கேள்… தாங்க்ஸ்.. க.வே (இப்படியா நீளமா பேர்வெச்சுப்பா!) சொன்னது போல நேரில் பார்த்தது போலவே இருந்தது. இன்னும் என்னென்ன பாடல்கள் பாடினார்கள் இன்னும் தகவல்களை எழுதினால் நாங்கள் இன்னும் தன்யா (ச்சீ அது கீழ்ஃப்ளாட் பொண் பேருன்னா) தன்யனாவோம்.. இன்னும் மகிழ்வோம்..அகெய்ன் தாங்க்ஸ்..
-
4th February 2015, 03:09 AM
#2748
Senior Member
Seasoned Hubber
Ci Ka kozhi padalgal super
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th February 2015, 06:49 AM
#2749
Senior Member
Veteran Hubber
Jugal Bandi 19 - for a change
From Avan (1953)
Anbe vaa azhaikkindradhendhan moochche........
From the Hindi original Aah
Aa Ja Re ab mera dil pukara......
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
4th February 2015, 10:08 AM
#2750
Senior Member
Senior Hubber
வாங்கோ ராஜேஷ் ராஜ்ராஜ்சார்..
ராஜ் ராஜ் சார்..பனிப்பொழிவெல்லாம் நின்னுடுச்சா இன்னும் இருக்கா..உங்கள் ஜூகல் பந்தி பார்க்காம என்னமோ போல இருந்துது..
Bookmarks