-
7th February 2015, 07:30 AM
#2791
Senior Member
Veteran Hubber
Jugalbandi 20
From Malliga(1957)
Mangaamal vaLarum singaara natanam.....
From the Hindi remake Paayal
Piya milan ko chali radhika.....
ChinnakkaNNan, kalnayak: Happy?
Whether you listen to the song or watch the song is entirely upto you!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
7th February 2015 07:30 AM
# ADS
Circuit advertisement
-
7th February 2015, 02:54 PM
#2792
எம்எஸ்வி டைம்ஸ் விழா தொடர்ச்சி
விழா நாயகரும் விருந்தினர்களும் மேடையிலிருந்து இறங்கி விட இசைக் குழுவினர் மேடையேறினார்கள். எம்எஸ்வியின் இசைக் குழ்விலும் தொலைக்காட்சிகளிலும் பாடும் திருமதி ஜெயஸ்ரீ மைக் பிடிக்க அவர் அருகில் இசையரசி! வாவ் என்று மனம் குதுகலிக்க பின்னணி இசை முழங்க இசையரசி இறைவன் இறைவன் இறைவன் வருவான் வருவான் வருவான் என ஆரம்பித்து சாந்தி நிலையம் படத்தில் இடம் பெற்ற இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் பாடலின் பல்லவியை பாடினார். பின்னணி இசை மாற தேடினேன் வந்தது பல்லவி பாடினார். தொடர்ந்து வயலின் மற்றும் ட்ரம்ஸ் அதிர ஆ ஹா அ ஹ ஹ அ என்று காலத்தால் அழியாத காவியப் பாடலாம் பார்த்த ஞாபகம் இல்லையோவின் முதல் வரி இசையரசியின் குரலிலிருந்து பிறக்க அரங்கம் அதிர்ந்தது. ஒன்றை சொல்ல வேண்டும். அகவை 80 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இசையரசியின் குரல் அந்த ஹம்மிங்கின் போது சற்று கூட பிசிறடிக்காமல் காற்றில் மிதந்து காதுகளை வந்தடைந்தபோது சிலிர்த்துப் போனது. பார்த்த ஞாபகத்தை அடுத்து சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து வந்தது. அதற்கு அடுத்து உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலேயும் அதை தொடர்ந்து காவேரி ஓரம் கவி சொன்ன காதல் பாடலை பாடினார். [கடைசியாக பாடிய இரண்டு பாடல்களும் எம்எஸ்வி இசை அமைத்தது அல்ல என்றாலும் சுசீலாம்மா பாடும்போது அதையெல்லாம் எவரும் பொருட்படுத்தவில்லை).
பாடல்கள மேடையில் தொடர இங்கே பார்வையாளர் பகுதியிலிருந்து நேயர் விருப்பங்கள் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்தன. அதிலும் ஒரு அன்பர் எழுந்து நின்றுக் கொண்டு விடாப்பிடியாக சரவண பொய்கையில் நீராடி பாடலை பாடும்படு கேட்டுக்கொண்டேயிருக்க சுசீலாம்மா தன் காதை தொட்டுக்காட்டி கேட்குது என்று சொல்ல அரங்கில் ஒரே சிரிப்பலை.
சுசீலாம்மா கீழே இறங்கிவிட இசைக் குழுவினரின் கச்சேரி தொடர்ந்தது. இசை நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய இசையமைப்பாளார் தாயன்பன் அடுத்த பாடலின் முன்னுரையை சொல்ல மேடைக்கு வந்தார் திரைப்பட பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ். அவருக்கு கொடுக்கப்பட்ட பாடல் காத்திருந்த கண்கள் படத்தில் இடம் பெற்ற ஓடம் நதியினிலே பாடல். உள்ளத்தில் ஊடுருவி உலுக்கக் கூடிய சீர்காழியின் இந்தப் பாடலை அதன் ஜீவன் கெடாமல் பாடினார் கிருஷ்ணராஜ்.
அடுத்த பாடல் பாக்கியலட்சுமி திரைப்படத்தில் என்றவுடன் நான் முன்பே சொன்னது போல் அனைவரும் மாலைப் பொழுதின் மயக்கத்திலே எதிர்பார்க்க காதலென்னும் வடிவம் கண்டேன் பாடல் பாடப்பட்டது. எம்எஸ்வி டைம்ஸ் இணையதளத்தின் விழாக்குழு உறுப்பினரான நமது ராகவேந்தர் சாரின் தேர்வு இது. இசையரசியின் அற்புதமான இந்தப் பாடலை பாடியவர் உஷாராஜ்.
அடுத்த பாடலுக்கு போவதற்கு முன் எம்எஸ்வியின் இசை மேதமையைப் பற்றி பேசுவதற்கு அவரின் பிரபலப் பாடல் ஒன்றை தாயன்பன் எடுத்துக் கொண்டார். அது?
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
7th February 2015, 05:08 PM
#2793
Senior Member
Senior Hubber
ராஜ்ராஜ் சார்… //மங்காமல் வளரும் சிங்கார நடனம் எங்களுக்கேதடி பெருமை//பியா மிலன் கோ சலி ராதிகா// ரெண்டு பாட்டும் கேட்டதில்லை..இப்போது தான் பார்க்கிறேன்.. மே அவ்ர் கல்நாயக்.. இருவரும் ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி!
முரளிங்ணா… //அகவை 80 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் இசையரசியின் குரல் அந்த ஹம்மிங்கின் போது சற்று கூட பிசிறடிக்காமல் காற்றில் மிதந்து காதுகளை வந்தடைந்தபோது சிலிர்த்துப் போனது// வாவ்..கொ.வை நீங்கள்.. அந்த ஆஆ எவ்ளோடஃப் பான ஹம்மிங்க்..ம்ம்
//அதன் ஜீவன் கெடாமல் பாடினார் கிருஷ்ணராஜ்// இவருடைய சில பாடல்களை டிவியில் கேட்டிருப்பதாக நினைவு..// காதலென்னும் வடிவம் கண்டேன் பாடல்// இதுவும் அழகான பாடல் தான்.. //நமது ராகவேந்தர் சாரின் தேர்வு இது// அதான்..
//அவரின் பிரபலப் பாடல் ஒன்றை தாயன்பன் எடுத்துக் கொண்டார். அது?// ஆணா பெண்ணா சொல்லீங்களே…சரி ஆணென்றால் – வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா… பெண் என்றால் – பல்லவி ஒன்றை மன்னவன் கேட்க பாடுவேனடி அல்லது கேள்வியின் நாயகனே.. கரெக்டா…
பல்லவி ஒன்றை மன்னவன் கேட்க –மீரா ஆ ஆ ஆ. மீரா பாடிய பாடல் கேட்க கண்ணன் வரவில்லையா என்ற வரி பாடிக்கொண்டு ஸ்ரீவித்யா சுபாவிடம் சேரும் போது… அப்படியே மனதை உலுக்கும் அப்புறம் – யாருக்கென்று யாரை என்று தெய்வம் சேர்க்குமோ என்ற வரிகளில் வரும் எல்லோரின் முகங்கள்..வெகு அழகு
எனக்கு மிகப்பிடித்த பாடல் இது..
நன்றி முரளி.. அடுத்த எபிசோடுக்குக் காத்திருக்கிறோம்.
-
8th February 2015, 12:48 PM
#2794
கண்ணா,
நீங்கள் சொன்ன இரண்டு பாடல்களும் இல்லை இது கருப்பு வெள்ளை படம் அல்ல. 50 வருடங்களுக்கும் முன்பு வெளியான கலர் படம். அதில் இடம் பெற்ற சுசீலாவின் பாடல். காதல் பாடல்
அன்புடன்
-
8th February 2015, 02:23 PM
#2795
Senior Member
Senior Hubber
இதயக் கமலம் - என்ன தான் ரகசியமோ இதயத்திலே நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே (எம் எஸ் வி தானே இசை)
அன்பே வா - லவ் பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ் தக தின்னத் தா (லஞ்ச்டைம் ஹிஹி)
வீட் போய் ஆராய்ச்சி பண்ணிப் பார்க்கறேன்..
-
8th February 2015, 03:33 PM
#2796
கண்ணா,
இதயக்கமலம் - மாமா இசை
அன்பே வா இல்லை.
நடிகர் திலகம் படம்.
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th February 2015, 08:09 PM
#2797
Junior Member
Seasoned Hubber
கல்நாயக்,
‘பாட்டிங்கள பப்ல உள்ளே போக விடுறாங்க இல்ல..’ ரசித்து சிரித்தேன். கேர்ள் பிரண்ட் பாட்டி என்றால் நான்...? கூறாமல் கூறும் சொல்விளையாட்டு எனக்கு பிடிக்கும். பாராட்டுக்கள். ஆனால், நீங்கள் சொன்னதை நான் ரசித்ததாலேயே அது உண்மை என்று அர்த்தமல்ல. வி ஆர் யூத் யா.
சின்னக்கண்ணன்,
நீங்கள் பஞ்ச் வைப்பீர்கள் என்று தெரியும். ஆனால், அது எங்கு என்பது தெரியாமல் இருப்பதுதான் சுவாரசியம்.
....மூன்று இட்லிகள் இரண்டு தோசைகள் ஒரு கப் கேப்பைக் கஞ்சி ஒரு கப் ஓட்ஸ் ஒருஸ்கூப் உப்புமா மட்டும் உண்டுவிட்டு....
காலையில் டிபன் கொஞ்சம் ஹெவியாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே அடுத்த வரிகளைப் படித்தால்..
..( நிற்க இந்த மூ.இ இதோ ஒககே ஒகஓ ஒஸ்கூப் உப்மா என்பதில் நடுவில் அல்லது என்று போட்டுக் கொள்க!).............. குபீர்.
முரளி,
எம்எஸ்வி டைம்ஸ் விழா நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்தளிப்பது அருமையாக இருக்கிறது. ராகவேந்திரா சாரின் விருப்பமான ‘காதலெனும் வடிவம் கண்டேன்..’ எனக்கும் மிகவும் பிடிக்கும். இதேபோல, கடந்த மாதம் சரோஜாதேவி அவர்களின் பிறந்தநாளின்போது, என் கடமையில் எனக்கு விருப்பமான ‘இரவினிலே என்ன நினைப்பு..’ பாடலை போட்டு அசத்தினார். தொடரும் ... என்று போட்டு மேலும் பதிவுகளை உறுதிப்படுத்தியதற்கு நன்றி.
தாயன்பன் எடுத்துக் கொண்ட பாடல்...
கண்கள் எங்கே.....?
கண்ணுக்கு குலமேது...?
--------
சின்னக் கண்ணன்,
தமிழ் கற்றறிந்த உங்கள் நாவில் கலைவாணி குடிகொண்டிருக்கிறாள். கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு ‘நீங்கள் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்...’ என்று எனக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்பு வந்திருக்கிறது. மகிழ்ச்சிதான் என்றாலும் வேலையும் கடமைகளும் மேலும் அதிகம். அதனால், நான் அடிக்கடி வரமுடியாவிட்டால் தவறாக நினைக்காதீர்கள். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் மக்கள் திலகம் திரிக்கும் பங்களிக்க வேண்டியுள்ளது. நேரமில்லை என்றால், அன்பு சகோதரரர்கள் விடமாட்டார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கே வருவேன். கல்நாயக்குடனும் உங்களுடனும் எந்தவித மரியாதை முறைமை (protocol) இல்லாமல் உரிமையுடன் சுதந்திரமாக உரையாடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தரும் ஒன்று.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
8th February 2015, 09:51 PM
#2798
Senior Member
Senior Hubber
கலைவேந்தன் - மப்ரூக், கங்க்ராட்ஸ்.கையைக் கொடுங்க்ணா..எல்லாம் உம்ம உழைப்பு தான்.இன்னும் உயர்வீர்கள்.. எப்போ முடியுமோ அப்ப வந்து போய்க் கொண்டிருங்கள். ரசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி. (ரொம்ப லீவ் போட்டுடாதீங்க)
முரளி.. வர்றேன் வர்றேன். கொஞ்சம் தேடணும்.. ஐம்பது வருடங்களுக்குமுந்திய கலர் எம் எஸ் வி ந.திபடம்னா...புதிய பறவை பார்த்த ஞாபகம் இல்லையோவா அதில் தான் இரண்டு பாட்டுக்கும் வித்தியாசம் காட்டி இருப்பார். ஆனால் அதை சுசீலாம்மா ஏற்கெனவே பாடி விட்டதாகச் சொல்லிவிட்டீர்கள்..உன்னை ஒன்று கேட்பேனா.
சரி கொஞ்சம் ரெஃப்ரஷ் பண்ணிக்கிட்டு வந்துடறேன்
Last edited by chinnakkannan; 8th February 2015 at 10:06 PM.
-
8th February 2015, 10:44 PM
#2799
Senior Member
Senior Hubber
முரளி... கலைவேந்தன் சொன்னது போல - கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே யா கண்ணுக்குக் குலமேது -ஆ..திருவிளையாடல் என்றால் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் முத்து.தேவிக்கா..வா.ஆனா பிபிஎஸ் செண்பகப் பாண்டியனா வந்துடுவாரே..
கர்ணன்ல என்னுயிர்த் தோழியா.. அரண்மனை அறிவான் அரியணை அறிவான் அந்தப் புரமொன்று இருப்பதை அறியான் என அசோக் துரியனுக்காக நடிகையர்திலகம் கொழுக் மொழுக்கென்று மனமுருகி வாயசைக்கும் பாடலா.. ஊ.வ உறவு தேடினேன் வந்தது என்றால் அது 67ம் வருடம்(அப்போ கண்ணா ஒருகைக்குழந்தை!) ம்ம் நீங்களே சொல்லி விடுங்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th February 2015, 07:16 AM
#2800
Senior Member
Veteran Hubber
Naadhar mudi melirukkum.........
ChinnakkaNNan: Here is another "Naathar Mudi...." song from the 65 year old movie, Thigambara Saamiyaar
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks