-
11th February 2015, 01:11 PM
#2851
Senior Member
Senior Hubber
//நீங்க மதுரையை பத்தி முரளி கிட்ட பேசறதை பாக்கறச்சே நீங்க மதுரைக்காரர் தானான்னு சந்தேகமே வருது. // சந்தேகமே படாதீங்காணும்.. நா மதுரைக்காரன் தான் - அந்தக்கால.. மறந்து போச்சுங்கோ ரொம்ப் நாளாச்சு.. இந்த வருடமாவது ஒரு ட்ரிப் அடிக்கணும்..
-
11th February 2015 01:11 PM
# ADS
Circuit advertisement
-
11th February 2015, 01:15 PM
#2852
Senior Member
Senior Hubber
நிலாப்பாடல் 8. "நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு..."
இது என்ன இங்க நிலாப் பாட்டு குரூப் சாங்கா மாறி இருக்கு. அது சரி இப்ப வர்ற பாட்டெல்லாம் இப்பிடிதானே இருக்கு. பாடலாசிரியர்: பழனி பாரதி; பாடியவர் : ஹரிஹரன்.
விஜய் நிலவுப்பாட்டை ஒருநாள் கேட்டுட்டு மூங்கில் காட்டில் தினமும் படிச்சாராமே. அந்த பாட்டை நான் போட்டுட்டேனா இல்லையா தெரியலையே. யாராவது கேட்டு சொன்னா நல்லா இருக்கும்.
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு…ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப்
பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
—
கனவுகள் வருவது விழிகளின் விருப்பமா
கவிதைகள் வருவது கவிஞனின் விருப்பமா
குயில்களின் இருப்பிடம் இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம் கனவுகள் கவிதைகள் ரகசியம்
—
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
—
நிலவொன்று நடந்தது சுவடுகள் மனதிலே
மழை வந்து நனைத்தது இசையன்னை செவியிலே
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்தத் தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம் மயக்குது இசையென்னும் அதிசயம்
—
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப்
பார்த்ததில்லையோ
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
ராஜா இசையில இதுவும் நல்லா கேட்கிறமாதிரிதானே இருக்கு.
இவர் சொல்ற நிலவு கண்ணுக்குள் நிலவு அப்பிடின்னு எல்லாரும் சொல்றாங்களே. உண்மையா?
Last edited by kalnayak; 11th February 2015 at 05:31 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th February 2015, 04:29 PM
#2853
Senior Member
Senior Hubber
ராஜேஷ் கண்ணன் பிறந்த வேளையிலே எனக்குப் பிடிக்கும்.. மற்ற பாடல்களும் கேட்டு ச் சொல்கிறேன் ..தாங்க்ஸ்..
கல் நாயக் நிலாப்பாட்டு ஜரூரா வந்துக்கிட்டு இருக்கு.. தாங்க்ஸ்..போட்டு முடிங்க பின் விட்டதைச் சொல்கிறேன் 
**
முக நூலில் படித்த பதிவு:
நன்றி : சுப்ரமணியம் கிச்சா கிச்சா என்பவர் எழுதியது..
//கொஞ்சம் நிதானமா படிங்க. எம்புட்டு பெரிய சொத்த எழந்துருக்கோம்னு புரியும்..
பல்லாங்குழிங்குறது வெளையாட்டா சொல்லிக் குடுத்த குடும்ப நிர்வாகம்.
மொதல்ல எப்படி வெளையாடணும்னு பாப்போம்.
ஒரு பக்கத்துக்கு ஏழு குழி. குழிக்கு அஞ்சு முத்து (பண்ணெண்டு முத்து போட்டும் வெளையாடுவாக)ஒரு குழில இருந்து எடுத்து அடுத்து வார குழிக்கு ஒன்னொன்னா போடுவாக. முத்து முடிஞ்சதும் அடுத்த குழில இருந்து முத்துகள எடுத்து அதே மாதிரி போடணும். ஒரு வேள, அடுத்த குழி காலியா. இருந்தா, அதுக்கு அடுத்த குழில எம்புட்டு முத்து இருக்கோ அம்புட்டும் முத்தும் போட்டு வந்தவுகளுக்குச் சொந்தம். (செல சமயம் அது நெறையாவும் இருக்கும் செல சமயம் ஒன்னுமில்லாமையும் கூட போகலாம்.)
காலியான குழியில, அடுத்து சேந்து வார முத்துகள் மொத்தமா நாலு சேந்துருச்சுனா, அதுக்குப் பேரு “பசு” அது ஆரு பக்கம் இருக்கோ அவுகளுக்குச் சொந்தம்.
வெளையாட்டுல ஒரு பக்கம் செயிக்கச் செயிக்க இன்னொரு பக்கம் தெக்கம்(தொக்கம், தக்கம், பற்று) விழும். கடைசில தோத்தவுகட்ட அஞ்சு முத்துக்கும் கொறவா இருந்தா, அஞ்சு முத்துக்குப் பதிலா, ஒரு ஒரு முத்தா போட்டு கஞ்சி காச்சி வெளயாடுவாக.
சரி இத எதுக்கு வெளையாண்டாக?
தன்கிட்ட இருக்குற பொருள எப்படி பெருக்கணுங்குறதுதேன் இந்த வெளையாட்டோட சூச்சுமம்.
எந்தக் குழில ஆரம்பிச்சா எந்தக் குழில எம்புட்டு சேருங்குறது, வெளையாட வெளையாட நெனவுல சேத்துக்கிட்டே போகணும்.
“பசு” சேர்க்கணும் (அதுக்கேத்தாப்ல வெளையாடணும்) பசுங்குறது நாலு முத்துதேன்னு சாதாரணமா நெனைக்கக் கூடாது. “பசு”னா செல்வம்னு அர்த்தம். அதச் சிறுகச் சிறுக சேர்த்துப் பழக்குறதுதேன் நோக்கம்.
கடைசில கஞ்சி காச்சுறதுனு ஒரு வாய்ப்பிருக்கு. தான் செயிச்சா எதிராளிக்கு கஞ்சி காச்சுற வாய்ப்பு குடுக்கணும். எல்லாம் தோத்துப்புட்டானு மிதப்பா வெளையாண்டா, அடி மட்டத்துல இருந்து கூட எதிராளி செயிச்சு வந்துரலாம். ஒரு வேள நம்ம கஞ்சி காச்சுற நெலைக்கு வந்துட்டாலும் சோர்ந்து போயிறக் கூடாது. அங்கன இருந்து கூட (வறுமையில இருந்து கூட) மேடேறிடலாம். மேடேறிடணும். அதேன் ஒரு குடும்பத்தக் காக்கப் போறவளுக்கு அழகு.
இது வாழ்க்கைக்கான வெளையாட்டு. அதுனாலதேன். சடங்குக்குச் சீரா, தன் வீட்டுக்கு வரப் போற பொண்ணுக்கு பல்லாங்குழி வாங்கிக் குடுக்குறது தாய்மாமன் வழமையா வச்சிருந்தாக. கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்குப் போறப்ப கட்டாயம் பல்லாங்குழிய சீர் வரிசைல சேத்துக் குடுத்தாக.
ஒன்னொன்னா தொலைச்சுக்கிட்டு வாரோம்//
அழகாச் சொல்லியிருக்கி்றார் இல்லியா.. ம்ம்
அந்த்க் கால ப் பாட்டுல பல்லாங்குழி இருக்கா என்ன.. எனக்குத் தெரிஞ்சு பல்லாங்குழி வந்தது இந்த ஒரு பாட்டுல தான்..சினேகாவின் இரண்டாவது படம்..
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th February 2015, 05:29 PM
#2854
Senior Member
Senior Hubber
சி.க.,
சிறுவயதில் நான் கூட பல்லாங்குழி விளையாடி இருக்கேன். எங்க அம்மா பொறந்த வீட்டுல எஞ்ஜோட்டு பசங்க கூடத்தான். எப்பிடின்னு தான் தெரியலை. நீங்க இங்க குடுத்து இருக்கறது எல்லாம் புதுசா இருக்கு. இல்லை ஒண்னும் தெரியாமலேதான் விளயாண்டிருக்கேன் போல.
சரி பாட்டுக்கு வருவோம். பல்லாங்குழி-ன்னு ஆரம்பிக்கற பாட்டு இது ஒண்ணா மட்டும் இருக்கலாம். மத்த பாட்டுல நடுவில வந்திருக்கான்னு தெரியலையே. சரி இந்த பாட்டு இந்த வட்டத்தை வச்சே எழுதி இருப்பாங்க. கேட்டால் நல்லா இருக்கிற மாதிரிதான் இருக்கு.ஆனால் ஏதாவது அருத்தம் பொருத்தம் இருக்கான்னு உங்களை மாதிரி விவரம் தெரிஞ்சவங்கதான் சொல்லணும்.
என்ன நீங்க நிலாப் பாட்டை அதுக்குள்ள முடிக்க சொல்றீங்க. இன்னும் எனக்கு தெரிஞ்ச 25 பாட்டாவது இருக்கு. அதுக்குள்ள அவசரப் பாடலாமோ. நான் இந்த ஒரு மாசத்துக்கு இந்த டைடில் புக் பண்ணி வெச்சி இருக்கேன். கொஞ்சம் பொறுத்திருங்க.
Last edited by kalnayak; 11th February 2015 at 06:52 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th February 2015, 05:48 PM
#2855
Senior Member
Senior Hubber
நிலாப்பாடல் 9. "ஈர நிலா விழிகளை மூடி ..."
இதுவரைக்கும் வெறும் நிலாவையும், வெண்ணிலாவையும் மட்டுமே கேட்ட நமக்கு வித்தியாசமா ஒரு ஈர நிலாவை நம்ம ராஜாவோட புத்திரர் யுவன் ஷங்கர் ராஜா கொடுத்திருக்கிறார் பாருங்க. இந்த ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் தூங்குதுங்களாம். சரத்குமாருக்கும் ஊர்வசிக்கும் பின்னணி பாட்டா வருதுங்க. SPB குரல் சொக்க வைக்குதுங்க. கூட யாரோ ஷோபனா பாடி இருக்காங்களாம், யாருன்னு தெரியலையே.
முதல் படத்திலேயே நல்லா மெலடி கொடுத்திருக்கிறார் பாருங்க YSR. இளையராஜா வீட்டு இட்லிப் பானையும் இசையமைக்கும்-னு சும்மாவா சொன்னாங்க. பாட்டை படிங்க. நல்லா கேளுங்க.
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது
என் நெஞ்சில் பாலூரும் அன்புத் தவிப்பு
தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு
சேரும் நதி ரெண்டுதான் பாதை இனி ஒன்று தான்
வெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
என்ன படம்னு கேட்டா அரவிந்தன்-னு தெரியாதான்னு சொல்லுங்க. பாட்டை எழுதுனது யாருன்னு தெரிஞ்சா இங்கேயே சொல்லுங்க.
Last edited by kalnayak; 11th February 2015 at 05:57 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th February 2015, 06:22 PM
#2856
எம்எஸ்வி டைம்ஸ் விழா தொடர்ச்சி
செல்வின் சேகர் பின்னணி இசைக் குழுவில் பணியாற்றியவர் என்பதனால் அவர் பேச்சு பெரும்பாலும் ரிரெகார்டிங்கிலும் பாடலுக்கு முன்பு வரும் prelude, பாடலுக்கு இடையே வரும் interlude போன்றவற்றில் எம்எஸ்வி எப்படிப்பட்ட அற்புதங்களை செய்திருக்கின்றார் என்ற pattern-ல் அமைந்திருந்தது. அவர் உதாரணமாக குறிப்பிட்ட அந்த இசைக் கோர்வைகளை வாயினாலே வாசித்துக் காட்டி விட்டார்
அடுத்ததாக தாயன்பன் எடுத்துக் கொண்டது போல் சேகர் ஒரு பாடலை எடுத்துக் கொண்டார்.. அது காத்திருந்த கண்கள் படத்தில் வரும் காற்று வந்தால் தலை சாயும் நாணல் பாடல். அந்தப் பாடலின் அடுத்த வரி காதல் வந்தால் தலை சாயும் நாணம் பாடலை அமைத்திருக்கும் முறையை விளக்கிய சேகர் தலை சாயும் நாணல் என்ற வார்த்தைகளின்போது இசையும் வரிகளுமே சாய்வது என்ற உணர்வை பாடல் கேட்பவனுக்கு எப்படி கொண்டு வந்து விடுகிறது என்பதை எடுத்து சொன்னார். இதை அவர் சொல்லும் நேரத்தில் வந்திருந்த பார்வையாளர் ஒருவர் இந்தப் பாடலை MP 3 வடிவத்தில் play செய்ய பாடலின் இடையிசை சிறப்பு பற்றியெல்லாம் சேகர் விளக்கினார். எனக்கு அந்த அளவிற்கு இசைக் கருவிகளைப் பற்றிய ஞானம் இல்லை என்பதால் என்னால் அதை இங்கே விவரிக்க முடியவில்லை
அந்த நேரத்தில் விழாவின் மற்றொரு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உள்ளே நுழைந்தார். எர்ணாகுளம் நகரில் ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு விமானம் ஏறிய அவர் விமானம் தாமதமானதால் விழாவிற்கு தாமதமாக வந்தார். அவர் வரும்போது மற்ற சிரபூ விருந்தினர்கள் அனைவரும் (எம்எஸ்வி உள்பட) விடை பெற்று சென்று விட்டனர். மேடையேறிய ஜெயச்சந்திரன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தன்னைப் பொறுத்தவரை எம்எஸ்வியை விட ஒரு சிறந்த இசையமைப்பாளரை பார்த்ததில்லை என்றார். தன் சொந்த கிராமத்தில் [கேரளத்தில் பாலக்காட்டிற்கு அருகில் என்று அவர் குறிப்பிட்ட நினைவு.) டூரிங் டாக்கிஸ் கொட்டகையிலிருந்து பதி பக்தி படத்தின் சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர் பாடலை கேட்டேனோ அன்று முதல் எம்எஸ்வி ரசிகன் ஆகி விட்டேன் என்றார். இப்போதும் தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் எம்எஸ்வி இசையில் சுசீலா பாடல்களை கேட்டுவிட்டுதான் தூங்க போவதாக சொன்னார்
அதன் பிறகு அவரும் ஜெயஸ்ரீ அவர்களும் அந்த 7 நாட்கள் படத்திலிருந்து கவிதை அரேங்கேறும் நேரம் பாடலை பாடினார்கள். அதை பாடி முடித்தவுடன் மேடையை விட்டு இறங்க முற்பட்ட ஜெயச்சந்திரனிடம் மற்றுமொரு பாடலைக் கொட்ட பாட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்க மூன்று முடிச்சு படத்தில் அந்தாதி பாணியில் கண்ணதாசன் எம்எஸ்வி அமைத்திருந்த ஆடி வெள்ளி தேடி உன்னை பாடலையும் பாடினார். இரண்டு பாடல்களுக்கும் அமோக வரவேற்பு.
விழாவிற்கு வருகை தந்த ஜெயச்சந்திரனை கௌரவிக்கும் விதமாக முத்தான முத்தல்லவோ படத்தில் எம்எஸ்வி இசையில் அவர் பாடிய பாலபிஷேகம் செய்யவோ பாடலை ஈரோட்டை சேர்ந்த பேராசிரியர் ஞானசேகர் பாடினார்.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
11th February 2015, 08:59 PM
#2857
Senior Member
Senior Hubber
என்ன நீங்க நிலாப் பாட்டை அதுக்குள்ள முடிக்க சொல்றீங்க. //நான் எங்க ஓய் சொன்னேன்..நீங்க எப்ப முடிச்சாலும் ஒண்ணு ரெண்டு நிலா விட்டுப்ப்போயிருக்கும்லா.. அதச் சொல்லாம்னு தான்
-
11th February 2015, 09:11 PM
#2858
Senior Member
Senior Hubber
//சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர்// -நைஸ் முரளிங்க்ணா..ம்ம் இந்தப்பாட்டு வெகு அழகான பாட்டு.
ஆடி வெள்ளி தேடிவருமும், வசந்தகால நதிகளிலேயும் அருமையான பாடல்கள்..மூ.மு..சிந்தாமணியில் தான்பார்த்தேன்..(கல் நாயக்.. சிந்தாமணி தியேட்டர் இருக்கும் இடத்தின்பெயர் வெத்தலைப் பேட்டைஅதற்கு முந்தின ஸ்டாப் நெல் பேட்டை.கூகுள்ளலாம் பார்க்கலை! ) – அம்சவல்லி ஹோட்டல் என்று ஒன்று உண்டு நான்வெஜ்.. நான் சாப்பிட்டதில்லை.. பிரியாணி நன்றாக இருக்கும் எனச் சொல்வார்கள்.இன்னும் இருக்கிறதா தெரியவில்லை
பாலாபிஷேகம் செய்யவோ உனக்குத் தேனாபிஷேகம் செய்யவோ வும் நல்ல பாட்டு.. வீடியோகிடைக்கலை..
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய் மலர் சிந்திடும் மலரே வாராயோ…இதுவும் இங்கு வரவில்லை என நினைக்கிறேன்
https://www.youtube.com/watch?featur...&v=FsRfUMhZPOI
நைஸ்ங்க்ணா. தொடருங்கள்
-
11th February 2015, 09:46 PM
#2859
Senior Member
Senior Hubber
//சரி பாட்டுக்கு வருவோம். பல்லாங்குழி-ன்னு ஆரம்பிக்கற பாட்டு இது ஒண்ணா மட்டும் இருக்கலாம். மத்த பாட்டுல நடுவில வந்திருக்கான்னு தெரியலையே. சரி இந்த பாட்டு இந்த வட்டத்தை வச்சே எழுதி இருப்பாங்க. கேட்டால் நல்லா இருக்கிற மாதிரிதான் இருக்கு.ஆனால் ஏதாவது அருத்தம் பொருத்தம் இருக்கான்னு உங்களை மாதிரி விவரம் தெரிஞ்சவங்கதான் சொல்லணும்//
இப்படியா கிளறி விடறது..
**
அதுல பாருங்கோ கல் நாயக்… காதலன் அப்புறமா வர்றேன் டியர்னு சொல்லிட்டுப் போய்டறான்…போறதுக்கு முன்னாடி அவன் நினைவா என்ன வேணும்னு கேக்கறான். இன்னொஸண்ட் ஃபெல்லோ..பின்ன பிரியற சோகத்துல அப்படியே இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்க வேண்டாமோ
செய்யலை..சரி..இந்த இளவட்டப் பொண்ணுக்காவது தெரியப்படாதோ.. முழியும் முழியுமா பாவாடை சொக்கா தாவணில்ல நல்லாத் தான் இருக்கா..காலேஜ் போற பொண்ணு தான்.. ஹேய் ஒரு தெளஸண்ட் ருபீஸ் கொடுத்துட்டுப் போயேண்டா ஆர் எம் கேவிலெ லேட்டஸ்ட் சுடிதார் வந்துருக்கு நீ வர்றச்சே ஜோரா அதப் போட்டுண்டு வருவேனே..ஒனக்குப் பிடிக்குமே’ன்னு ஐஸாவது வைக்கலாம்.
இந்தப் பொண்ணு என்னடான்னா அந்தக்கால நங்கைகள் மாதிரி கிவ் மீ ஒன்லி ஒன் ருபீ…உன் நினைவா வச்சுக்குவேன்..னு கேக்க அவனும் அல்பமேன்னு பாத்து பேண்ட்பாக்கெட்ல தேடி ஒரு ரூபா கொடுத்துட்டுப் போய்டறான்
இந்த ஆம்பளைங்களுக்கு ஏகப் பட்ட டைவர்ஷன்ஸ் இருக்கு. படம், நண்பர்கள் அலுவலக வேலை என. அப்படி இப்படின்னுகாதல் நினைவை க் கொஞ்சம் அமுக்கிக்கலாம் தான் இல்லியோ..ஆனா இந்தப் பொம்மனாட்டிகள் மனசுல வளர்ற காதல் இருக்கு பாருங்க
நாட்பட மேலுமே நன்றாய்ப் பெருகிடும்
ஆட்கொல்லி ஈதேதான் ஆம்
அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க.. பொண்ணாகப் பட்டவளுக்கு கண்,மனம் செவி, உடல் எல்லாம் இந்தக் காதல் புகுந்து புறப்பட்டு காதலன் மேல நினைவு மேவிமேவி எழுந்து கொண்டே இருக்கும்.
பாதகத்தைச் செய்துவிட்டே போய்விட்டான் கண்ணனவன்
…பருவங்கள் எனையொன்றும் செய்வதில்லை கேள்தோழி
ஆதவனும் நன்றாக அருங்கொடுமை செய்கின்ற
…அழகான கோடையிலே குளிர்ந்துடுதே மேனியடி
சாதகமாய் வீசுகின்ற வாடையெனுங் குளிர்காற்று
…தக்கபடி உடல்நோக உளம்நோக வைக்குதடி
பாதகத்தி! போனவுயிர் எப்பொழுது வருமென்று
.பரிதவிக்கும் மனவோசை அவருக்குக் கேட்டிடுமோ.
அப்படின்னு தோழியை எல்லாம் திட்டிக்கிட்டு இருப்பாங்கண்ணா இந்தப் பொண்ணுங்க!
ஸோ இந்தப் பாட்டுல கைல காசு அதான் ஒத்த ரூபா தட்டுல வச்ச தோசை காசும் வட்ட்ம தோசையும் வட்டம்.. சாப்பிடலாம்னு பார்த்தா கள்ளக் கண்ணன் கண்சிமிட்டறாம்ப்பா.. தோசைக்கு மிளகாப்பொடித் தொட்டுக்கலாம்னு பார்த்தா ஓ காதலனுக்குக் காரமேறுமேன்னு தொட்டுக்காமயே சாப்புடறா… ..ம்ம்
அந்த மாதிரி வட்டமா எதைப் பார்த்தாலும் (டிவில வட்டச் செயலாளர் வண்டு முருகன்னு ஜோக் படம் பார்த்தாலும்) அவன் கொடுத்த ஒரு ரூபாய் நாணயம் கூடவே இலவச இணைப்பாய் அவன் முகம்..என்னபண்ணுவா பாவம்!
அவனும் என்னபண்ணுவான்
வட்டவட்டத் தட்டினிலே வாகாகக் கனிவகைகள்
…வாய்த்திருக்கச் சும்மாதான் வாலிபனும் இருப்பானா
கிட்டகிட்டப் பார்த்திருக்கும் கன்னியவள் இருவிழிகள்
…கொட்டகொட்ட ஏக்கத்தைக் கொட்டுவதும் புரியாதா
தொட்டுதொட்டுப் பேசவந்தால் வெக்கபட்டு ஓடுகிறாள்
..தோரணமாய் நாணத்தைப் பின்னலிலே ஆடவிட்டு
சுட்டாலும் பொன் தானே நம்முடைய பெண்ணென்று
..தொடப்பார்க்க முடியாமல் எசப்பாட்டு பாடுகிறான்
எனில் அவனும் பாட ஆரம்பிச்சுடறான்.ஃபைனலா காண்றது கண்டது கனவுன்னு காரிகைக்குக் கண்ல கண்ணீர் மல்குது (எத்தனை க!)..
**
ஆமாங்க்ணா இந்தப்பாட்டுல அவனும் பாடிடறான்.கனாலயே..
அப்படின்னு யுகபாரதி எழுதியிருக்கார்.
//அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுதது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்ல காசு தந்தாய் எண்ணி எண்ணி பார்க்கிறேன்
அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரே உனக்கு உபயம் எதற்கு ஆராய்ச்சி //
நல்லாத் தானே இருக்குங்க..
( இனிமே விளக்கம் கேப்பேன்..என நீங்கள் முட்டிக்கொள்வது என் மனக்கண்ணில் தெரிகிறது
)
Last edited by chinnakkannan; 11th February 2015 at 10:14 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th February 2015, 09:52 PM
#2860
Senior Member
Senior Hubber
//சிறுவயதில் நான் கூட பல்லாங்குழி விளையாடி இருக்கேன். எங்க அம்மா பொறந்த வீட்டுல எஞ்ஜோட்டு பசங்க கூடத்தான். எப்பிடின்னு தான் தெரியலை. நீங்க இங்க குடுத்து இருக்கறது எல்லாம் புதுசா இருக்கு. இல்லை ஒண்னும் தெரியாமலேதான் விளயாண்டிருக்கேன் போல.// நானும் விளையாடி இருக்கேன்..அனேகமா புளியங்கொட்டை, அப்புறம் இந்த சிகப்பு முத்து குட்டிக்குட்டியா இருக்குமே.. ஆனா எனக்கும் இது கொஞ்சம் புதுசாதான் இருக்கு..மறந்து போச்சு என நினைக்கிறேன்..பசு நினைவிருக்கு.. ஒரு குழி விட்டு மத்த முத்துக்கள்ளாம் எடுத்துக்கறது.அப்புறம் ஒவ்வொரு முத்தா எல்லா ப் பக்கமும் போட்டு வர்றது .என.அதெல்லாம் நினைவிருக்கும்ம்..
Bookmarks