-
25th February 2015, 09:48 PM
#1621
Junior Member
Diamond Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
Thanks for the posting, I do recall meeting Durai Murugan many times especially on Sundays. Pachaiyappa's college gate will be closed on Sundays, the compound wall was very small he used to come inside by climbing the wall. Yes, 99% of what he says is correct. One of his relative [ name ilengersol?] was staying and studying in Pachaiyappas collge at that time. Further he was a regular visitor for almost every function [ mostly DMK function] but we created History which everyone said not possible, we made it possible. Isari Ganesan was elected as General Secretary during his 3rd year [1987-88]. The first thing once the result was made know to be by the Inspector of Police, Kilpauk Police station [ I had finished my college period by that time] was I got on top of the wall gate and waived AIADMK Flag. We are devotees of Ninaithadhai Mudippavar afterall. The important fact is many persons who were with me [excluding self] to achieve/create History were from DMK!
Live live the name of SUPER COSMIC POWER.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th February 2015 09:48 PM
# ADS
Circuit advertisement
-
25th February 2015, 10:04 PM
#1622
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
நமது திரி நண்பர் தெனாலி ராஜன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு உள்ளார் வரும் வெள்ளிகிழமை அவருக்கு அறுவை சிகிச்சை நடை பெற உள்ளதால் அவர் மீண்டும் பூரண நலம் கண்டு மீண்டும் அவருடைய அன்றாட பணிகளும் மற்றும் திரிக்கு விரைவில் வரவேண்டும் என எல்லாம் வல்ல எங்கள் கடவுள் மக்கள்திலகத்தை வேண்டிகொள்கிறேன்
திரு. யூகேஷ் பாபு அவர்கள் அறிவது :
தாங்கள் பதிவிட்ட அடுத்த கணமே திரு. தெனாலி ராஜன் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர், தற்போது முகப்பேரில் உள்ள எம்.எம்.எம். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் அறுவை சிகிச்சைக்கான தயார் நிலையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தார். அவர், பூரண குணமடைந்து, விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி, ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.
நான் வணங்கும் எங்கள் குல தெய்வமாம், மக்கள் திலகத்தின் மகத்தான சக்தியாலும், அவரின் அருளாலும், அவர் நலமுடன் வந்து நமது திரியினில் தனது பங்களிப்புகளை தொடர்வார் என்று நம்புகிறேன்.
தங்களின் தகவலுக்கு நன்றி !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th February 2015, 10:38 PM
#1623
Junior Member
Veteran Hubber
திரு. சைலேஷ் பாசு அவர்கள் அறிவது :
பேரறிஞர் அண்ணா அவர்கள் பயின்ற பச்சையப்பன் கல்லூரியின் சென்னை நிர்வாகத்தில், தாங்கள் பட்டம் பெற்றது பெருமை வாய்ந்தது. அப்போதெல்லாம், பச்சையப்பன் கல்லூரி பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது ஒரு கவுரவ பிரச்சினையாக கருதப்பட்டது. 1987-88 கல்வியாண்டில், நமது புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த அ.இ.அ.தி.மு.க. சார்பில், திரு. ஐசரி கணேஷ் அவர்கள் வெற்றி பெற்ற போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. வெற்றி செய்தி அறிவிக்கப்பட்ட அந்த தருணத்தில், தாங்கள் படிப்பு முடித்த பட்டதாரியாக இருந்தாலும், மதில் சுவர் மீது ஏறி, நமது தலைவரின் வெற்றிக் கொடியை பறக்க விட்டது கண்டு அகமகிழ்ந்தேன்.
உலகத் தமிழர்களின் உண்மைத் தலைவரான நம் புரட்சித்தலைவருக்கு ரசிகர்களாய், பக்தர்களாய் இருப்பது, நாம் செய்த பாக்கியமே ! என்னைப் பொருத்தவரை, முதன் முதலாக 1974ம் வருடம், நம் மக்கள் திலகத்தை தரிசித்து, அவருடன் உரையாடும் பாக்கியம் பெற்று, எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன். அதற்கு பின்பும், சில முறை அவரை வெகு அருகில் தரிசனம் செய்ததும், நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே கருதுகிறேன். 1977 ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் சார்ந்த திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட "சுங்கச்சாவடி" பகுதிக்கு, தலைவர் சுமார் 1௦ மணி நேரம் தாமதமாக வந்தும், கூட்டம் கலையாமல், அவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததையும், அந்த பொன்மனசெம்மலுக்கு எனது கரங்களால் மாலை அணிவித்து மகிழ்ந்ததும், இன்றும் என் நெஞ்சில் பசு மரத்தாணி போல் பதிந்துள்ளது. அதற்கு பின்பும், "தனபதி" என்ற தொண்டனின் மறைவுக்கு, திருவொற்றியூரில் உள்ள குறுகலான கணக்கர் சந்துவில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியதும், அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி உதவியதையும், பின்னர் 1983 ம் ஆண்டு, திருவொற்றியூர் நகர் செயலாளர் தங்கசாமியின் அகால மரணத்துக்கு அஞ்சலி செலுத்தி, இடுகாடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் நடந்தே சென்றதும், நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். இப்படிப்பட்ட ஒரு தலைவர் இனி நம் தமிழகம் பெறுமா என்பது கேள்விக்குறியே ?
என்னதான் வளர்ந்து விட்டாலும், அந்த இனிய பழைய நாட்களை நினைவு கூறும் போது, அதில் ஏற்படும் சுகமே அலாதியானது. மறக்க முடியாத தங்களின் இளம்பருவத்து ஈடுபாட்டினை வெளிப்படுத்தியமைக்கு நன்றி !
Last edited by makkal thilagam mgr; 26th February 2015 at 08:54 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th February 2015, 10:44 PM
#1624
Junior Member
Veteran Hubber
திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது :
"விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினர் ஒளி பரப்பிய "மன்னாதி மன்னன்" நிகழ்ச்சி பற்றி தாங்கள் எழுதி வந்த தொடர் விறு விறுப்பாக இருந்தது. அதி அற்புதமாக, இந்த தொடரை, எழுதி முடித்த தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
மேலும், நான் பதித்த அரிய புகைப்படங்களை பாராட்டி, என்னை அவ்வப்போது ஊக்கப்படுத்தி வருவதற்கும், எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th February 2015, 10:47 PM
#1625
Junior Member
Veteran Hubber
இந்த திரியின் மாண்பு தொடர, நான் விடுத்த வேண்டுகோளை ஆமோதித்து பதிவுகளிட்ட திருவாளர்கள், சி. எஸ். குமார் எனப்படும் வரத சுந்தராமன், பெங்களூர் வினோத், புதுவை கலியபெருமாள், கலைவேந்தன், மற்றும் அலைபேசியில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்த திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி !
-
25th February 2015, 10:52 PM
#1626
Junior Member
Veteran Hubber
திரியின் பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அறியும் வண்ணம், நம் மக்கள் திலகத்தை போற்றி, பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளை அவ்வப்போது பிரசுரித்து, மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்து, பிரமிப்பை ஏற்படுத்தும் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி !
தங்களின் இந்த பணி மேலும் தொடரட்டும் !
-
26th February 2015, 02:38 AM
#1627
Junior Member
Platinum Hubber
TODAY 11.00 PM WATCH SUN TV
Last edited by Muthaiyan Ammu; 26th February 2015 at 06:58 AM.
-
26th February 2015, 02:40 AM
#1628
Junior Member
Platinum Hubber
TODAY 12.00PM WATCH JMOVIE
-
26th February 2015, 02:42 AM
#1629
Junior Member
Platinum Hubber
-
26th February 2015, 07:56 AM
#1630
Junior Member
Seasoned Hubber
Dina ethal 25-2-15
Bookmarks