-
4th March 2015, 11:32 AM
#3001
Senior Member
Senior Hubber
குட்மார்னிங் சி.க.,
சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நாட்களாக திரிக்கு வரமுடியவில்லை. அது கிடக்கட்டும். இங்குதான் நீங்கள் கலக்கிக்கொண்டு இருக்கிறீர்களே.கூடவே ராஜ்ராஜ் அவ்வப்போது தனது ஜுகல்பந்தியுடன் பங்குகொள்ள, சிறிது நாட்களுக்குப் பிறகு நேரம் எடுத்துக்கொண்டு ராகவேந்திரா அவர்களும் கைவண்ணம் காட்ட, அரிதாய் தனது சங்கராபரணத்துடன் கோபால் வர ஆக நன்றாகவே மதுரகானத் திரி களை கட்டியிருக்கிறது. நீங்கள் வாசுவை வரவேற்று எழுதியுள்ள கவிதையைக் கண்டாவது அவர் திரிக்கு உடனடியாக வரவேண்டும்.
Last edited by kalnayak; 4th March 2015 at 04:31 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
4th March 2015 11:32 AM
# ADS
Circuit advertisement
-
4th March 2015, 11:53 AM
#3002
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 29: "ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ"
---------------------------------------------------------------------------------------------------------
மறுபடி ஒரு காதல் பாட்டுதான். வெண்ணிலா கீழே இறங்கி வந்ததாக காதலன் காதலியை பாடுவதாக ஒரு பாடல். பாசிலின் படத்திற்காக பிரபு, ரேவதி நடிப்பில் கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன் பாட இளையராஜா இசையமைத்த்து கிறக்கினார். பாடல் நெறய உவமைகளாக கொண்டிருக்கிறது. காதல் இல்லாம படம் எடுத்து நிலா இல்லாமல் பாடல் எழுதுறதை விட, காதலை படமெடுத்த்து நிலா மற்றும் மலர் இல்லாம பாடல் எழுதுவதுதான் சிரமம் என்று நினைக்கிறேன். மலர்களை பற்றி அடுத்த தொடர் துவங்கினால் தமிழில் 60-லிரிந்து 70 சதவீத பாடல்களை குறிப்பிட்டு விடலாம்.
பாடல் வரிகள்:
----------------------
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
(ஆகாய வெண்ணிலாவே)
ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
( ஆகாய வெண்ணிலாவே )
பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட
(ஆகாய வெண்ணிலாவே)
-----------------------------------------------------------------------------------------------------------
பாடல் காட்சி:
---------------------
சாயங்கால வேளையில் இரவு நேரங்களில் பாடலாம். எல்லா அரங்கேற்றவேளைகளில் இப்பிடியெல்லாம் பாட முடியுமா?
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
4th March 2015, 01:33 PM
#3003
Senior Member
Senior Hubber
//சில தவிர்க்க முடியாத காரணங்களினால் சில நாட்களாக திரிக்கு வரமுடியவில்லை// குட் மார்னிங் கல் நாயக் நோ ப்ராப்ளம்..வீகேன் அண்டர்ஸ்டாண்ட்.. எனக்கும் கூட கொஞ்சம் சூழ் நிலை அப்படி அமைந்து விடுகிறது..இரண்டு தொடர் ரெண்டு அத்தியாயம் பெண்ட்டிங்க்.. எழுதணும்..
இந்த ஆகாய வெண்ணிலாவே எனக்குப் பிடித்த பாடல். ரொம்ப நாள் முன்னால பார்த்த படத்தில் திடுதிப்பென ஆட்கொண்ட மெலடி.. வி.கே.ஆர் பழைய நாடகக் கலைஞர் அண்ட் அவ்ர் பிரபு ரேவதி பற்றிக் கனவு காண்பது போல வரும்.. கொஞ்சம் நெற்றிச் சுருக்கி உற்றுக் க் கேட்டால் தான் பாடல் புரியும்..அதன் ஆழமான அர்த்தமும்..
பட ஆரம்பத்திலும் கூட ஒரு பாட்டு வரும் குண்டு ஒண்ணு வெச்சுருக்கேன் என ஆரம்பிக்கும்.. மலையாள ரீமேக் என நினைக்கிறேன்..
வந்ததுக்கு காலையிலருந்து ஓடிக்கிட்டிருக்கற பாட்டு - மனசுல தான் (அது யார் அந்த ஜீவன் நு கேக்காதீங்க எனக்கே கன்ஃப்யூஷ்னா இருக்கு!)
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம்
இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th March 2015, 04:15 PM
#3004
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 30: "வெண்ணிலாவின் தேரில் ஏறி"
----------------------------------------------------------------------
இன்னொரு வெண்ணிலாப் பாடல், அதே பிரபு, அதே கே.ஜே.ஏசுதாஸ். ஆனால் என்ன இங்கு காதல் சோகத்துடன், தம்பியின் மீதான பாசத்தை காட்டும் பாடல். வைரமுத்துவின் பாடலுக்கு A.R. ரஹ்மான் இசையமைக்க அமரர் கே.பீ இயக்கியிருந்தார். இங்க வெண்ணிலாவோட தேரை எடுத்துகினு காதல் தேவி நேரில வந்திட்டா. நீதான் குறுக்கால நிக்கிற தம்பி-ன்னு எம்மாஞ் சோகமா சொல்றாரு பாருங்க. இதுவும் கேட்க சுகமாகத்தான் இருக்கிறது.
பாட்டு வரிகளைப் பாருங்களேன்:
--------------------------------------------------
வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே!!
மானமுள்ள ஊமைபோல
நானும் கேட்க கூசி நின்றேனே!
நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டு நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
நிறம்கண்டு முகம்கண்டு நேசம் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல்கண்டே நான் பாசம் கொண்டேன்.
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல்தெய்வம் நேரில் வந்தாளே!
காலழகும் மேலழகு கண்கொண்டுக் கண்டேன்
அவள் நூல் அறியும் இடை அழகும் நோகாமல் தின்பேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சைகாயம் செய்து மாயம் செய்தாளே
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
அவள் சிக்கெடுக்கும் கூந்தல் சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும் கொண்ட காதல்
கொள்கை மாறாது.
அட கைநீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே....
சரி பாட்டைப் பார்த்திடுங்க:
-------------------------------------------
இந்த பாட்டு டூயட் இல்லைங்கன்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க. நான் சொல்றது தப்பா?
Last edited by kalnayak; 4th March 2015 at 04:59 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th March 2015, 04:21 PM
#3005
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
வந்ததுக்கு காலையிலருந்து ஓடிக்கிட்டிருக்கற பாட்டு - மனசுல தான் (அது யார் அந்த ஜீவன் நு கேக்காதீங்க எனக்கே கன்ஃப்யூஷ்னா இருக்கு!)
என்ன சி.க. யாரு அந்த ஜீவன்னு கண்டு பிடிச்சு கன்ஃப்யூஷ்ன் போச்சா இல்லையா? முடியலைன்னா தெரிஞ்சவங்க மூலமா கண்டுபிடிங்க!!! நான் யாருன்னு கேட்கமாட்டேன். பயப்படாதீங்க.
மத்தபடி எனக்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். நானும் நெறைய நாளா விரும்பிக் கேட்ட பாட்டுதான்.
Last edited by kalnayak; 4th March 2015 at 04:27 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th March 2015, 10:31 AM
#3006
Senior Member
Senior Hubber
ரொம்ப நாளா கேட்க நினைத்திருந்த கேள்வி..
உத்தம புத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடல் பல காலம் முன் இசைக்களஞ்சியத்தில் கேட்ட போது - அன்பே வா வா ..என் அன்பே வா வா வா வரிகள் முடிந்த பிறகு..
நானும் நீயும் நல்ல ஜோடி
தேனும் பாலும் போன்ற ஜோடி
கூட்டமாகப் பாட்டுப்பாடி
ஆசையாக ஆடி ஆடி...
.... அப்புறம் பலவரிகள்..மன்னா இங்கே நீயே வாவா என முடிந்து பின் அன்பே வா வா..வந்து க்ளாப்ஸில் முடியும்
ஐ திங்க்..அதற்கப்புறம் தான் நினைவு தெரிந்து கல்லூரிப் பருவத்தில் பரமேஸ்வரியில் படம் பார்த்தேன்.. அந்த வரிகள் இல்லை..பின்னும் இன்று வரை இல்லை..
கேள்வி.. அப்படி வரிகள் இருந்தது தானே..?
-
5th March 2015, 11:20 AM
#3007
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
ரொம்ப நாளா கேட்க நினைத்திருந்த கேள்வி..
உத்தம புத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடல் பல காலம் முன் இசைக்களஞ்சியத்தில் கேட்ட போது - அன்பே வா வா ..என் அன்பே வா வா வா வரிகள் முடிந்த பிறகு..
நானும் நீயும் நல்ல ஜோடி
தேனும் பாலும் போன்ற ஜோடி
கூட்டமாகப் பாட்டுப்பாடி
ஆசையாக ஆடி ஆடி...
.... அப்புறம் பலவரிகள்..மன்னா இங்கே நீயே வாவா என முடிந்து பின் அன்பே வா வா..வந்து க்ளாப்ஸில் முடியும்
ஐ திங்க்..அதற்கப்புறம் தான் நினைவு தெரிந்து கல்லூரிப் பருவத்தில் பரமேஸ்வரியில் படம் பார்த்தேன்.. அந்த வரிகள் இல்லை..பின்னும் இன்று வரை இல்லை..
கேள்வி.. அப்படி வரிகள் இருந்தது தானே..?
சி.க.,
இந்த கேள்வியை, நடிகர் திலகம் திரியில் இட்டிருந்தால் இந்நேரம் பதில் கிடைத்திருக்கக்கூடும்.இருக்கட்டும். பரவாயில்லை. ராகவேந்திரரோ, இல்லை முரளியோ வந்தால் பதில் கிடைத்துவிடும். ஏன் கலைவேந்தன் கூட பதில் அளிக்கலாம். நாம் காத்திருக்கலாம். எனக்கும் நீங்கள் சொல்கின்ற வரிகளை முன்பு எங்கேயோ கேட்டது போல் தோணுகின்றது. என்னிடம் உள்ள cd காபியும் சரியாக இல்லை- பார்த்து எதையாவது சொல்வதற்கு!!!
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th March 2015, 11:36 AM
#3008
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் கல் நாயக் வாங்க..கேகே கமெண்ட்ஸ் திரி பார்த்தீங்களா
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th March 2015, 04:17 PM
#3009
Senior Member
Senior Hubber
"நிலவே நீ சாட்சி.." : நிலாப் பாடல் 31
----------------------------------------------------------
K.R. விஜயாவை ஏற்கனவே இரண்டு சோகப்பாடலில் பார்த்து விட்டோம். (ராமன் எத்தனை ராமனடி மற்றும் ராமு படப் பாடல்களில்). இப்போது ஒரு சந்தோஷப் பாடலில் பார்க்கலாம். இசையரசியின் குரலில் அழகானப் பாடல். மெல்லிசை மன்னர் இசை.*என்ன இங்கே நிலாவை சாட்சியாக்கப் பார்க்கிறாங்க.
பாட்டு வரிகளை பார்க்கலாமா இப்ப:
------------------------------------------------------
நிலவே நீ சாட்சி..
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி..
( நிலவே )
அலையும் உறங்க முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன
( நிலவே )
ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு
( நிலவே )
கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை
( நிலவே )
படத்தோட பாக்கலாமா இப்ப:
பாடும் நிலாவுடன் இசையரசி பாடின சோகப் பாடலும் உண்டு. அது இதோ:
என்ன படத்தோட பேரை கேக்கிறீங்களா நீங்க. .அங்க தானே ஆரம்பிச்சோம்.
Last edited by kalnayak; 5th March 2015 at 07:04 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th March 2015, 10:56 PM
#3010
Senior Member
Senior Hubber
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கொஞ்சம் சொல்லுங்கள் என் கண்ணா. வெ.ஆ நி ஜெய்ஷங்கர்.காதலித்தால் போதுமா அப்போ வாணி யார்.கன்ஃபீஷன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks