-
12th March 2015, 12:40 PM
#3061
Senior Member
Senior Hubber
கல் நாயக் குட் மார்னிங்.டு யு,. கிவ் டுடே நிலா சாங்க் டு மதுர கானத் திரி
-
12th March 2015 12:40 PM
# ADS
Circuit advertisement
-
12th March 2015, 12:48 PM
#3062
Senior Member
Senior Hubber
சி.க.,
சத்தியமாக சொல்கிறேன். மருத காசி இவ்வளவு நிறைய நல்ல பாடல்களை வழங்கியுள்ளார் என்று எனக்கு தெரியாது. அதுவும் நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரபலமான பாடல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக சொல்லும் போது அவர் எழுதியுள்ள எல்லாப் பாடல்களையும் நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது.
பாவை விளக்கு குற்றாலத்துப் பாடல் நல்ல அழகானப் பாடல். குற்றாலக் குறவஞ்சியுடன் போட்டி போடும் பாடல்தான். நல்ல தேர்வு. Kvm-ன் நாட்டுப் புறப் பாடல் எனப் பெயர் பெற்ற "சிட்டு போல பென்ணிருந்தா..." tms குரலில் மயக்குமே.
வாலியின் இரங்கற்பாவில் அவரது வழக்கமான டச்சிங் தெரிகிறது.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th March 2015, 12:50 PM
#3063
Senior Member
Senior Hubber
குட் மார்னிங் சி.க.,
பிரபலமான நிலாப் பாடல் தயாராகிக் கொண்டு இருக்கிறது. விரைவில் பதிந்து விடுகிறேன்.*
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th March 2015, 01:11 PM
#3064
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 38: "என் வானிலே ஒரே வெண்ணிலா"
-------------------------------------------------------------------------------
தலைப்பைப் பார்த்தவுடனே பலருக்கு இந்த பாட்டை இன்னுமா எழுதலை. இது இல்லாம நிலாப் பாடல் முழுமையே அடையாது அப்படின்னு சிலருக்கு சொல்லத் தோன்றும். அதுதான் எழுதிட்டேன். மகேந்திரன்-இளையராஜா கூட்டணியில் என்றும் நிலைத்து நின்று மனத்தை மயக்கும் ஆற்றல் கொண்டால் பாடல்களை கொண்ட ஜானி' 'திரைப்படத்திலுருந்துதான் இப்பாடல். இளையராஜாவின் பத்து சிறந்த பாடல்கள் கொண்ட ஒரு திரைப்படங்களில் இடம் பெறத் தகுதி கொண்டது.
ரஜினி-ஸ்ரீதேவி நடிப்பில் பாடகி ஜென்சி அவர்கள் குரலில் இன்னும் நம்மை கட்டிப் போட்டிருக்கும் காவியப் பாடல். காதல் பாடலாயினும் சற்றே சோகம் கலந்து வருவதை காணவும், உணரவும் முடியும். வரிகள் சாதாரணமாகத் தோன்றினாலும் ஒவ்வொரு முறையும் ஒன்றை நினைக்கத் தோன்றுகிறது. எழுதியவர் கவியரசர். அவரின் இந்தப் பாடல் வரிகள் இதோ:
என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....
என் வானிலே ஒரே வெண்ணிலா
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா
ஆஆஆஆஆ
என் வானிலே ஒரே வெண்ணிலா
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா
ஆஆஆஆஆ
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....
என் வானிலே ஒரே வெண்ணிலா
----------------------------------------------------------------------------------
காணொளிக் காட்சி இதோ:
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th March 2015, 01:26 PM
#3065
Senior Member
Senior Hubber
//மருத காசி இவ்வளவு நிறைய நல்ல பாடல்களை வழங்கியுள்ளார் என்று எனக்கு தெரியாது.// எனக்கும் கல் நாயக்..
என் வானிலே ஒரே வெண்ணிலா ஓ.கே சாங்க் தான்..ஸ்ரீ தேவியை சோகமாகப் பார்க்கப் பிடிக்காது எனக்கு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th March 2015, 01:55 PM
#3066
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
கோபால்.. காலையிலிருந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பாடல் -அடடா அடடா அடடா எனை ஏதோசெய்கிறாய்” என்ன இது என இங்கு வந்து பார்த்தால் உங்கள் எம்.எஸ்.வி கட்டுரைகள்.. நீங்கள் தான் ஏதோ செய்கிறீர்கள்..எங்களை..
எழுதுங்கள் படிக்கக் காத்திருக்கிறோம் ( நான் செய்வதெல்லாம் ரோடு ரோலர் போவதற்கு முன் செய்யப் படும் விஷய்ம் - ஜல்லி

) உங்கள் அனலிஸிஸ் அப்ப்டி இல்லை..எழுதுங்கள்..
கொஞ்சம் உடல் நிலை சரியில்லை..இருப்பினும் அலுவ்லுக்குக் கிளம்பிக் கொண்டே இருக்கிறேன்..விரிவாய் பின்னர் எழுதுகிறேன்..தொடருங்கள்
(இப்படிக்கு..
சினா கனா

சி.க.,
நன்றி.
நீங்கள் இங்கே செய்வது ஜல்லி போடுவதென்றால் நான் செய்வது என்ன என்று எனக்கே தெரியவில்லை. அதையும் நீங்களே சொல்லியிருக்கலாம்.
உங்கள் உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதா? பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலையும் பார்த்து, வீட்டு வேலைகளையும் பார்த்து நான் நன்றாகவே உங்கள் சிரமம் உணர்கிறேன். உடல் நலம் மிக விரைவில் சீராக வாழ்த்துகிறேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
12th March 2015, 02:16 PM
#3067
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 39: "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா"
----------------------------------------------------------------------------------------------------------------------------
போனப் பாட்டு சோகப்பாட்டு. அதனால இந்தப் பாட்டு ஜாலிப் பாட்டு. பிரபுதேவாவும், காஜோலும் வெண்ணிலாவை விண்ணைத் தாண்டி வந்து எங்க கூட ஜோடியா விளையாட வான்னு கூப்பிட்டு என்னா ஆட்டம் போடுறாங்க. அது சரி பிரபு தேவா காஜோலைத் தானே வெண்ணிலான்னு கூப்பிடறார். என்னமோ போங்க இந்த காதல் பாட்டுக்கு இவ்வளவு ஆட்டம். அதனால்தான் இந்த பாடல் நல்ல பிரபலமானது.
AR ரஹ்மான் இசையில் ஹரிஹரன், சாதனா சர்கம் பாட வைரமுத்துவின் வரிகள் இந்த பாடலுக்கு.
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே..)
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உனை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே..)
இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்
பெண்ணே பெண்ணே
பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே
புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்
தாலாட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே..)
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
பெண்ணே பெண்ணே
பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும்
நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே..)
------------------------------------------------------
காணொளிக் காட்சி:
------------------------------
மின்சாரக் கனவு கண்டால் வெண்ணிலாவை இப்படி அழைத்து ஆடுவதைக் காணலாம். யாரும் மறுக்க முடியுமா?
Last edited by kalnayak; 12th March 2015 at 05:07 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th March 2015, 02:55 PM
#3068
Senior Member
Senior Hubber
ராஜண்ணாவின் சிந்தனைகள்:
--------------------------------------------
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று சாயங்காலம் எனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் - ராஜண்ணா எனது அலுவலகத்த்துக்கு நேரா வந்திட்டார். எனது எதிர் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
ஷூ-க்களை கழற்றினார். பார்த்தால் இரண்டு கால்களிலும் வேறு வேறு வண்ணங்களில் சாக்ஸ் அணிந்திருந்தார்.
"என்ன அண்ணே. சாக்ஸை பார்க்காமல் வேற வேற கலர்-ல போட்டுட்டு வந்துட்டீங்க?"
"ஆமாம் கல்நாயக். எத்தனை ஜோடி சாக்ஸ் வாங்கினாலும் உங்க அண்ணி மாத்தி மாத்தி போட்டிர்ராங்க" என்று வருத்தப் பட்டார்.
"ஏன் என்ன ஆச்சுண்ணே?"
"வீட்டிலேயே, ஒரே கலர்ல சாக்ஸ் போட்டிரலாம்னு தேடிப் பார்த்தேன். அங்கேயும் இதே மாதிரி கலர் மாறின ஒரு ஜோடி தான் இருந்தது. என்ன பண்றது? இதையே போட்டுட்டு வந்துட்டேன்."
"ஏன்ணே நீங்களா அதுல இருக்கிற ஒரு சாக்சையும் இதுல இருந்து ஒரு சாக்சையும் ஒரே கலர்ல எடுத்து போட்டு வந்திருக்கலாம்ல" என்றேன்.
"அவ மாத்தி மாத்தி வச்சே இப்பிடி மாறிப் போயிருக்கு. இன்னும் நான் வேற நீ சொல்ற மாதிரி மாத்தினால் அவ்வளவுதான். ஜோடி திரும்ப கிடைக்கவே கிடைக்காது" என்று மிகவே உறுதியாய் இருந்தார்.
"அண்ணி கிட்ட சொன்னால் அவங்க எடுத்து தருவாங்களே?" என்றேன்.
"'இது கூட எடுத்து தர நான்தான் வரணுமா'ன்னு கேட்கிறா" என்றார். நான் இதற்கு மேல் என்ன செய்வது.
சற்று நேரத்துக்குப் பிறகு ஒரு அப்ளிகேசன் எழுதணும். ரெண்டு வெள்ளைத் தாள்கள் வேண்டுமென்றார். அப்போது அலுவலகத்தில் எல்லோரும் போயிருந்திருந்தார்கள். என்னிடம் வெள்ளைத் தாள்கள் வைத்துக் கொள்வதில்லை.
"இதோ எடுத்து வருகிறேன்." என்று சொல்லி போய் தேடினேன்.
எல்லா ரேக்குகளும் பூட்டப் பட்டிருந்தன. நல்ல வேலையாக ஜெராக்ஸ் மெசின் அருகிலேயே இருந்தது. சென்று அதன் தாள்கள் இடும் இடத்தில் தேடினேன்.
ஒன்றே ஒன்று தான் கிடைத்தது.
அண்ணனிடம் கொடுத்து "மன்னியுங்கள். ஒன்றுதான் கிடைத்தது.அதுவும் ஜெராக்ஸ் மெசினில் இருந்துதான்" என்றேன்.
"என்ன கல்நாயக் நீ, ஒரு ஃவைட் ஷீட் ஜெராக்ஸ் எடுத்தவன் இன்னொரு ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்கக் கூடாதா?" என்றார்.
அதிர்ந்து போனேன் என்றால் சாதாரணம்.
Last edited by kalnayak; 12th March 2015 at 03:31 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th March 2015, 08:21 PM
#3069
Senior Member
Senior Hubber
ஹையாங்க்..கல் நாயக் அதெல்லாம் தன்னடக்கத்துல சொல்றது….அப்புறம் உமக்கென்ன குறைச்சல்..
அப்புறமேல்ட்டுக்கு ஒங்க ராஜண்ணாவுக்காக காகிதம் நானும் தேடிப் பார்த்தேனா இதான் அம்புட்டுச்சு (அகப்பட்டது) நயாகரா கனடா சைட்ல இருந்து சிம்மி, பிரஷாந்த்..
ஜோடியில் உன்னிமேனன் எஸ். ஜானகி.. வரிகள் வைரமுத்து..(குமுதத்துல இப்ப ஜோரா சிறுகதைகள் எழுதிக்கிட்டிருக்கார்.. படிக்கறீங்களா)
அப்புறம் இங்க வானில கருமேகங்கள் எல்லாம் மீட்டிங்க் போல ஒண்ணாக் கூடி இருக்கு.. அப்பப்ப சீக்கிரம் கலைஞ்சுடு என்று சொல்லும் வண்ணம் மெல்லிய குளிர் காற்று அடிச்சுக்கிட்டிருக்கு..என்னாச்சு ஓமானுக்கு..
https://www.youtube.com/watch?featur...&v=2hGON9d3_Gk
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல் காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்.(ஹை நல்லா இருக்கே)
கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லவோ
பொன்னே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ
**
டேப்லட்ஸ் கொஞ்சம் ஹெவி டோஸ்..(இத்தனைக்கும் ஆண்டிபயாடிக்ஸ் இல்லை) மத்யானம் ஜூட் விட்டுட்டு வீட்டுக்கு வந்து கொர்ர்ர்ர்..இப்பத் தான் எழுந்தேன்..கொஞ்சம் ஓகே.. ( ரெண்டு நாள் வீக் எண்டில தூங்கினா அல்லதுஏதாவது உருப்படியா (?!) எழுதினா சரியாய்டும்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th March 2015, 11:56 PM
#3070
Senior Member
Senior Hubber
பாடினார் கவிஞர் பாடினார் - 6
*
மனதுள் பொதிந்து
மலர நினைக்கும்
வார்த்தை அரும்புகளின் மணம்
வெளிவிழுந்து வாடிய மலர்களை விட
மேலானது..
*
ஹலோ.. ஏன் மெளஸ க் கீழ தள்ளறீங்க.. இது நா எழுதினதுங்க்ணா..அதுவும் இப்ப..
சரீ ஈ..இப்போ ஒரு நிகழ்வு (கற்பனையூர் தான்!)
*
நமஸ்காரம்
நமஸ்காரம்..
இவர்…. இன்னவர்… கல்லூரியில் பேராசிரியரா இருக்கார்…
ஓஒ…. அந்த… எழுதினது இவர் தானே.. கேள்விப் பட்டிருக்கேன்.. – என்றார் இசையமைப்பாளர்.. சரி பாட்டு எழுதறீங்களா.. தைரியமா எழுதுங்க..இப்பக்கூட இந்தப் புதுப்படத்துக்குத் தான் ட்யூன் போட்டிருக்கேன்..கிராமியக் காதல் கதை.. கிராமத்துப் பொண்ணு ஹீரோயின் ஹீரோ – டூயட்.. பொண்ணு பாடறா மாதிரி ஸ்டார்ட் ஆறது..இந்த…”
சொல்லிக்கொண்டு போன இசையை மறித்தார் பேராசிரியர்.. இது சரியா பாருங்க..
காத்து வீசுது புது காத்து வீசுது
இங்கே
கதிர்கள்கூட வயல்வரப்பில்
காதல் பேசுது
“வாவ்..” என்றார் இசை.. கவிஞரோன்னோ அதான் வார்த்தைகள் குளத்து மீன்களாட்டம் துள்ளி வருது ஸீ.. உங்க கவிதையக் கேட்டும் எனக்கு இப்படி ப் பேசற வர்றது.. சரி..ப்ரொபஸர் சார்..இந்த மெட் கேளுங்க..
தானனா தானேனா தனனனானே தானேனா.. இந்த பாருங்க..இதுக்கு நானும் குட்டியா எழுதியிருக்கேன்.. சின்னம்மா பொன்னம்மா ஆத்தோரம் போய்ட்டு வரலாமாம்மா.. இந்த மாதிரி வார்த்தை போடப் பாருங்க..”
கேட்ட பேராசிரியருக்கு நெற்றிக்குள் சுர்ர்ர்ர்.. மன்னிக்கவும்..எனக்கு இப்படி வராதுன்னு நினைக்கறேன்..
ஓ.. நீங்க கோச்சுக்கிட்டீஙன்னு நினைக்கறேன்.. ஒங்க காத்து வரியை அப்படியே வெச்சுக்கிட்டு ஆரம்பிக்கலாம்.. ஆனா இந்த மாதிரி பாட்டுக்கள் தான் ஜனங்களுக்குப் பிடிக்குது..இப்ப பாருங்க.. வீட்ல வீட்டுக்காரி நமக்காக வார்த்துக்கொடுக்கற தோசை சட்னி எல்லாம் நாம சாப்பிடுவோம். நம்ம ஃப்ரெண்ட்ஸூக்கு வீட்டுக்கு வர்றச்சே கொடுப்போம்.. இதுவே வஸந்தபவன் பார்த்தீங்கன்னா ஹோட்டல்…அது பிஸினஸ்..வர்ற எல்லாருக்கும் பிடிச்சா மாதிரி பண்ணனும்.. அப்பத் தான் நிறையபேர் சாப்பிட வருவாங்க..அதே மாதிரி தான் சினிமாவும்..
இங்க காதல், சோகம், பாசம், நேசம், துரோகம்,, சண்டை எல்லாமே விஷூவல்ல தூக்கலாத்தான் காட்டப் படும்..ஏன்னாக்க பிஸினஸ்ங்க.. உட்காருங்க எழுதுங்க..”
பேராசிரியர் அரைமனதாய் எழுதினார்.. செல்லம்மா சின்னம்மா ஒம்மேல ஆசை இருக்குதம்மா.. அப்படியும் அவருக்கு அவருடைய வரிகள் வந்து விழுந்தன..
ஆத்தங்கரையில் மஞ்சவரப்பில்
ஒன் ஆசைய உடம்புல பூசிக் குளிச்சேன்.
பாடல் எழுதி முடித்து படம் பேர் என்னங்க.. அனிச்ச மலர்..ம்ம் தொட்டால் சுருங்கற மலர்.. படம் ஓடணுமே.. “ என மனதுள் ஒரு எண்ணம்..
அது போலவே அந்தப் படம் பிரபலமடையவில்லை.. கவிஞரின் முதல் பாடல் இடம்பெற்ற படம் என்ற பெருமையை மட்டும் பெற்றது..(அந்தப் படத்தை எடுத்தவர் உடையப்பா என்ற நாடக நடிகர்..)
http://freetamilmp3.in/load/A%20to%2...hu%20Puthu.mp3
*
இப்ப ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லியே ஆகணும்
மன பி.எம்.டபிள்யூ காரை டபக்கென ரிவர்ஸ் கியர் எடுத்து முன்னால் ஸ்க்ரீனில் பார்த்தபடியே பலவருடங்கள் தள்ளிப் பின்போனால்..
தெரியுமே.. தலைகீழ்ப் ப மீசை.. கொஞ்சம் காதைத்தாண்டி நீண்டிருக்கும்கிருதா, ஒல்லி ஒல்லி உடம்பு பளீர் மின்னற்கண்கள்.. வெள்ளை மனசு, வெளிர் கருமை உதடு என அழகாய் இருக்கும் இளைஞனான கல்லூரிக் கண்ணன் என்பீர்கள் தானே..
எஸ்.. அவனுடைய கையில் உள்ள நோட்புக்கில் முதற்பக்கத்தில் ச்சும்மா மனசுல பதிந்ததுஎன எழுதப்பட்டிருப்பது என்ன..
என் இதயத் தோட்டத்தில்
ரோஜாக்களினால் பதியனிட்டேன்
அறுவடை செய்ய
உனை அழைத்தேன்
நீ அரிவாளோடு வந்த பிறகு தான்
என் தவறு எனக்குப் புரிந்தது..
இதை எழுதியவர் கவிஞர் மு. மேத்தா.. அவரது கண்ணீர்ப் பூக்கள் கவிதைத்தொகுப்பில் மயக்காத கல்லூரி இளைஞரில்லை இளைஞியில்லை..
எனக்கு மிகப்பிடித்த கவிஞர்.. இவரது தேசப்பிதாவிற்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி பாடல் தமிழ் அன்சிலியரியில் பாடமாக வந்தது..
விழிகள் நட்சத்திரங்களை
வருடினாலும்
விழிகள் என்னவோ
ஜன்னல் கம்பிகளுடன் தான்
என்ற வரிகள்பேசும் கதை தான் எத்தனை எத்தனை..
ச்ரி சரி ..தலைகீழ்ப் ப மீசை குட்டிக்கண்ணனைத்தவிக்க விடுவானேன்.. அந்தக் காலகட்டத்தில் சினிப்ரியாவில் கல்லூரியை விட்டுப் போய்ப்பார்த்த படம் என நினைக்கிறேன்.. என் கூட இருந்த நண்பன் மிஸாணஷ்ருகி (கிஷ்ணஸ்வாமியின் தலைகீழ்) என்னடா இந்தப் படம்பார்க்கலாம் என்கிற..
படம் சுமார் தான்… ஆனால் கேள்விப்பட்டது மு.மேத்தா பாட்டு எழுதுகிறார் என்று.. போனால் முன்னுக்கு வந்துகொண்டிருந்த – பக்கத்துவீட்டுப் பெண் சாயல் எனப் பேசப்பட்ட சுகாசினி அவரது ஸோ ஸோ நடனம் – பரப்ப்ரம்மமே என ப் பாடும் கார்த்திக் எல்லாம் ஈர்க்கவில்லை பாடல்..பாட்டு வரிகள்.. தனியாய்த்தெரிந்தன..
அவை..
தீம் திரனனன்
தேனருவியில் நனைந்திடும் மலரோ.. தொடரும் கதையோ
எது தான் விடையோ
மன வீணை நான் இசைத்திட..
முக வாசல் மீது தீபம் இருகண்கள் ஆனதோஓஒ ம்ம்.
மனவாசல் கோலமே தினம் போடுதோ
துறையாகும் தேவியை க் கொடி தேடுதோ
புன்னகையோ பூமழையோ
உன் நடையோ தேர்ப்படையோ
வரமோ அறமோ நான் வளம் பெற
நாளும் ஒவ்வொரு நாடகமோ இது மேடையோ
இனி மைவிழி நாட்டியமோ எனை வாட்டுமோ
ஏன் தொலைவோ நீ நிலவோ
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட
தீம் திரனன
தேனருவியில் நனைந்திடும் மலரோ (பாட் கேட் பிடிச் வரி அடிக்கறதும் ஒரு இன்பம்).
https://www.youtube.com/watch?featur...&v=lrCmn2WdRSE
ஸோ இவ்ளவு அழகாப்பாடல் எழுதின மு மேத்தா அவருடைய திரைப்பயணம் அப்புறம் என்ன ஆச்சு…..
*
அனிச்ச மலருக்கப்புறம் வெகு நாட்களாக எழுதவில்லை.. பின் ஆகாய கங்கை.. பாடல் பிரபலமானாலும் படம் பிரபலமாகவில்லை ( இப்பொழுது நகைச்சுவையில் தனியாகத் தெரியும் மனோபாலா இயக்கியபடம்)
அதன் பிறகு பாலச்சந்தர்.. வேலைக்காரனில் பாட்டு..
படம் பார்த்த போது இவர் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்க்கவில்லை நான்.. (சொர்ண புஷ்பம் இருக்கே) .. ஆனால்
தோட்டத்துல பாத்தி கட்டி
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்தியைக் கட்டுற பட்டணம் பட்டணமே
மனம்
கெட்டியாக இல்லாட்ட மனசு கெட்டுடும் கெட்டுடுமே வரிகள் நிமிரவைத்தன என்றால் வா வா வா கண்ணா வா… வும் ஈர்த்தது..
அதில் சில வரிகள்..
காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னைக் கண்டால்
சீதை என்று துள்ளுவான்
தாஜ்மகாலின் காதிலே
இராம காதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்றுசேரலாம்
**
உதய கீதத்தில் இளையராஜாவின் இசை.. பாடல் பாடு நிலாவே.
எழுத ஆரம்பித்தார் கவிஞர்..
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன்.. என எழுதிவிட்டு ஆண்பாடும் பாட்டிற்கும்
அதே வரி போட.. இளையராஜா.. கவிஞரே.. இது கொஞ்சம் இயல்பா இல்லையே..
என்ன .
இந்தப் பொண்ணு பாடுது தன்னோட எண்ணத்தை. அந்தப் பாட்டக் கேட்டு ஹீரோபாடறான்..இல்லியோ
ஆமம்
இந்தப் பொண்ணு பாடறது நிலாவப் பாத்து அதுவும் ஹீரோக்கு கேக்கணும்னு பாடுது.. ஆனா ஹீரோ இவபாட்டைக் கேட்டுட்டுத் தானே பாடறான்..அதனாலே.
கவிஞருக்குப் புரிய..சரி பாடும் நிலாவேன்னு ஹீரோபாடறதா வெச்சுக்கலாமா..உங்களுக்கு ஆட்சேபணையில்லியே..
ஷ்யூர் என்றாராம் மேத்தா..
இவர் எழுதிய இன்னும் சில பாடல்கள்..
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
வா வா வா கண்ணா வா
வேலை இல்லாதவன் தான் வேலை தெரிந்தவன் தான் வீரமான வேலைக்காரன்
யார் வீட்டில் ரோஜா பூப் பூத்ததோ
கற்பூர பொம்மை ஒன்று
பொன் மானே சங்கீதம் பாடிவா
*
எதற்காகப் பாலச்சந்தரிடம் போனாராம்.. கவிதைகள் எழுதினால் சிலபேரை மட்டும் சென்றடைகிறது..திரைப்பாடல்களின் ரீச் எல்லாரையும் சென்றடைகிறதே.. – என்கிறார் கவிஞர்..
இளையராஜா பாடலுக்கு பல பல்லவிகள் கொடுக்க இளையராஜா தேர்ந்தெடுத்தபல்லவி ஒரு பாடலுக்கு என்ன தெரியுமா..
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்..
அதில் சில வரிகள்
உல்லாச மேடை மேலே
ஓரங்க நாடகம்..
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்.
கள்ளூரப் பார்க்கும் பார்வை
உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே.
மனதை வருடும் மெல்லிசை, வெகு அழகியபிக்சரைசேஷன் , மின்னற் வரிகள் என்றும் மறக்காது..
*
அவரது வரிகள் தனியாகத் தெரிவது தான் ஸ்பெஷாலிட்டி மு.மேத்தாவிடம்..
மரபுக்கவிதையில் தேர்ந்த அவர் எளிமையாகச் சொல்லப்படும் புதுக்கவிதை மூலம் மரபிற்கும் பாலம் கட்டினார் எனலாம்
அவர் எழுதிய ஒரு மரபு க்கவிதை..
வ்ரலாறு என்பது தலைப்பு..
சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!
ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!
வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
புகன்றிடும் மூலங்கள்!
செப்டம்பர் 5 வந்தால் எழுபது வயதாகிடும் கவிஞர் இன்னும் திரைப்பாடல் எழுதவேண்டும் என்பது என்னுடைய உள்மன ஆசை..
**
அடுத்து வரப்போகும் கவிஞர் இந்தப் பாட்டெல்லாம் இவரா எழுதினார் என ஆச்சரியப்பட வைத்தவர்..அவரும் ஒரு இசையமைப்பாளர், டைரக்டர்..
அவர்ர்ர்ர்ர்ர்……
(அப்புறம் வாரேன்)
Last edited by chinnakkannan; 13th March 2015 at 08:41 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks