-
20th March 2015, 07:25 PM
#681
Senior Member
Seasoned Hubber
தடையறத் தகவல்கள்
இடையூறின்றிப் பகிர்ந்து கொள்ள
கட்டபொம்மனின் கர்ஜனை
இப்புவியெங்கும் உரத்தொலிக்க..
காத்திருக்கும் புது இழை
கட்டபொம்மனுக்கான தகவல் பேழை
கர்ஜிக்கும் கட்டபொம்மன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th March 2015 07:25 PM
# ADS
Circuit advertisement
-
20th March 2015, 08:22 PM
#682
வீரபாண்டிய கட்டபொம்மன் ட்ரைலர் வெளியீட்டு விழா- Part II
ஒரு விஷயத்தை குறிப்பிட மறந்து விட்டேன். மேடையில் ஒரு நாற்காலி மட்டும் காலியாக விடப்பட்டு அங்கே நடிகர் திலகத்தின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அவரின் அந்த இடத்தை நிரப்புவதற்கு யாருமே இல்லை என்பதனால் அப்படி அமைக்கப்பட்டிருப்பதாக மதுவந்தி குறிப்பிட்டார்.
இந்த படத்தை டிஜிட்டல் மெருகேற்றம் செய்வதில் முக்கிய பணியாற்றிய சித்ரா லட்சுமணன் அந்த முயற்ச்சியில் சந்திக்க நேர்ந்த இன்னல்களைப் பற்றி குறிப்பிட்டார். தாங்களுக்கு கிடைத்த எந்த பிரிண்டும் முழுமையாக இல்லை என்பதை சொன்ன அவர் லாப் வேலைகள் சிலவற்றை சென்னை பிரசாத் லாபிலும் சிலவ்ற்றை மும்பை ரிலையன்ஸ் லாபிலும் செய்ததாக சொன்ன அவர் அதன் பிறகும் ஒரு சில காட்சிகளை மேம்படுத்த வேண்டி பூனா பிலிம் இன்ஸ்டியுட்ல் இருக்கும் Archive -லிருந்து எடுத்தாக சொன்னார்.
சிவகுமார் இந்தப் படத்தின் முழு வசனங்களையும் சொல்வார் என்று குறிப்பிட்ட சித்ரா லட்சுமணன் இப்போது தாணு போட்டிக்கு வந்திருக்கிறார் என்று கிண்டலடித்தார்.
சிவாஜியின் நடிப்பைப் பற்றி பேசிய சித்ரா லட்சுமணன் அவர் தலை முதல் பாதம் வரை நடிக்கும் என்றார். எந்த நடிகரையும் சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட லட்சுமணன் சிவாஜி மாதிரி நடிப்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். சிவாஜி மாதிரி நடக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். கட்டபொம்மன் தெருக்கூத்தை பார்த்துவிட்டுத்தான் நடிப்பு ஆசை நடிகர் திலகத்தின் மனதில் வேர்விட்டதை சொன்ன அவர் அதை சிவாஜி நாடக மன்றத்தின் சார்பில் நாடகமாக வெற்றிகரமாக நடத்தப்பட்டதை சொன்னார். அதன் பிறகு அவர் வந்திருந்த audience -ஐ பார்த்து " உங்களில் எத்தனை பேருக்கு இந்த விஷயம் தெரியும் என்பது எனக்கு தெரியாது. கட்டபொம்மன் நாடகம் சிவாஜி நாடக மன்றத்தால் 116 முறை நடத்தப்பட்டு அதன் மூலம் 30 லட்சம் ரூபாய் வசூலானது. அந்த தொகை மொத்தத்தையும் பல்வேறு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி விட்டார். அன்றைய நாளில் 30 லட்சம் என்றால் சவரன் 80 ரூபாய்க்கு விற்ற காலம், இன்றைய தேதியில் 75 கோடி ரூபாய் வரும். 100 ரூபாய் கொடுத்தால் அதை photographer வைத்து படம் எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் இவ்வளவு பெரிய தொகையை வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் கொடுத்த தர்மசீலன் சிவாஜி" என்று அவர் சொன்னபோது அரங்க கூரையே இடிந்து விழுவது போல் ஆரவாரம் அணை உடைந்து பாய்ந்தது.
அடுத்து சிவகுமார் பேசுவதற்கு முன் தான் பேசி விடுவதாக சொல்லி பேசினார் பிரபு. பெங்களூரில் தாங்கள் படித்துக் கொண்டிருந்த அந்த சிறிய வயதில் இந்தப் படம் வெளிவந்ததாகவும் படத்தை தியேட்டரில் பார்த்த அனுபவம் அவ்வளவாக இல்லை என்றும் பின்னாட்களில் ராஜ் டிவி வெளியிட்ட VHS காசட்டில்தான் அதிக முறை பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர். பார்த்திபன் விழாவிற்கு வந்திருப்பதை சுட்டிக் காட்டிய பிரபு அவர் தன்னுடனும் கோழி கூவுது படத்தில் நடித்ததை நினைவு கூர்ந்தார். அவர் பேசிய மற்றவை எல்லாம் வழக்கமான பேச்சுதான். மேடையில் இருந்த அண்ணன் சிவகுமார் அண்ணன் தாணு, அக்கா கமலா செல்வராஜ் ஆகியோரை சொன்ன அவர் வழக்கம் போல் அண்ணன் ரஜினி, அண்ணன் கமல் ஆகியோரையும் நினைவு கூர்ந்தார். பிறகு வழக்கம் போல் ரசிகர்களுக்கு நன்றி. அப்பா காலத்திலிருந்து நீங்கள்தான் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட். உங்கள் ஆதரவு என்றும் வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
சிவகுமார் பேச வரும்போது பெரிய வரவேற்பு. என் கேள்விக்கென்ன பதில் என்று ஒரு ரசிகர் சத்தமாக கேட்க, சொல்கிறேன் என்றார். சித்ரா லட்சுமணன் சொன்ன கட்டபொம்மன் நாடகமாக நடத்தப்பட்டு அதற்கு கிடைத்த வசூல் நிதியாக வழங்கப்பட்டது எல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்று சொன்ன சிவகுமார் பலருக்கும் தெரியாத சில விஷயங்களை சொல்ல வேண்டும் என்றார் படம் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியில் கலந்துக் கொண்டபோது அதில் பங்கெடுக்க சிவாஜி, பந்துலு, பத்மின, ராகினி ஆகியோர் சென்றிருந்தனர். அன்றைய நாட்களில் வெளிநாடு செல்பவர்கள் மருத்துவரிடம் தங்கள் உடலை பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெற்று எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாடு விமான நிலையத்தில் கொடுக்க வேண்டும். ஆனால் கிளம்பும் அவசரத்தில் பத்மினி அதை மறந்து விட்டாராம்..
பத்மினியை விமான நிலையத்திலேயே சிறை வைப்பது போல் வைத்து விட்டார்களாம். யார் சொல்லியும் விடவில்லையாம். அவரை எப்படியாவது விழாவில கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நினைத்த ராகினி அன்றைய தினம் பஞ்சாபி உடை அணிந்து விமான நிலையம் சென்று பத்மினியை தனியாக சந்தித்து சினிமாவில் வருவது போல் இருவரும் போட்டிருந்த உடையை மாற்றி ராகினி உள்ளே தங்க பத்மினி விழாவில் கலந்துக் கொண்டாராம்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை முதல் பசும்பொன் வரை .15 படங்களில் நடிகர் திலகத்துடன் நடித்திருப்பதை குறிப்பிட்ட சிவகுமார் நடிகர்களில் தன்னளவிற்கு அவருடன் நெருங்கி பழகியவர்கள் யாரும் இல்லை என்பதை பெருமையுடன் சொல்வதாக் சொன்னார். அவரின் மகன் போலவே தன்னை நடத்தியதை நினைவு கூர்ந்தார். எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாத சிவாஜி கெய்ரோ விழாவில் விருது வாங்கும் போது தலை சற்றே கிறுகிறுத்தையும் பத்மினி அவரை சட்டேன்று பிடித்துக் கொண்டதையும் சொன்னார். எகிப்து அதிபர் நாசர் சென்னைக்கு வந்தபோது அவருக்கு நடிகர் திலகம் பாலர் அரங்கில் அளித்த வரவேற்பில் தானும் கலந்துக் கொண்டதை சொன்னார்.
அதன் பிறகு கட்டபொம்மன் வசனங்கள். பற்றி பேசிய அவர் ஜாக்சன் துரையிடம் பேசுவது, இறுதிக் காட்சியில் எட்டப்பனுடன் பேசும் வசனங்களை அதே ஏற்ற இறக்கதோடு பேசி கைதட்டலை அள்ளிய அவர் அடுத்து கந்தன் கருணை பற்றி சொல்ல ஆரம்பித்தார். முதன் முதலில் சிவாஜியுடன் தூய தமிழ் வசனங்களை பேசிய அந்த படத்தைக் குறிப்பிட்டு அதில் சூரபத்மனுக்கும் வீரபாகுவிற்கும் நடக்கும் வாக்குவாதக் காட்சி படமாக்கப்ப்படும்போது தன்னை ஷூட்டிங்கிற்கு ஏபிஎன் வரச் சொன்னதையும் தான் சென்று பார்த்ததையும் நினைவு கூர்ந்த அவர் நடிகர் திலகத்திற்கும் அசோகனுக்கும் நடக்கும் அந்த வாக்குவாதத்தை அப்படியே அதே modulation-ல் பேச பேச அரங்கமே அதிர்ந்தது. அவ்வளவாக பேசப்படாத ஆனால் ஏபிஎன்னின் அற்புதமான அடுக்கு மொழி வசனங்களை அதன் சுவை குன்றாமல் வழங்கிய சிவகுமார் தமிழ் உள்ளவரை என் தலைவன் பெயர் நிலைக்கும் என்று சொல்லி பட வெளியிட்டளார்களை வாழ்த்தி விடை பெற்றார்
விழாவிற்கு தாமதமாக வந்த கவிபேரரசு வைரமுத்து இறுதியாக உரையாற்ற எழுந்தார். அது
(தொடரும்)
. .
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th March 2015, 08:42 PM
#683
Senior Member
Seasoned Hubber
சென்னை மகாலட்சுமியில் தினசரி நண்பகல் காட்சியாக தற்பொழுது
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்
இரு துருவம்
தகவல் உறுதிப்படுத்தப் படவேண்டும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
20th March 2015, 09:08 PM
#684
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st March 2015, 04:04 PM
#685
Junior Member
Seasoned Hubber
kaட்டபொம்மன் கன்னத்தில் அறைந்து சொல்லும் உண்மை - வைரமுத்து பேச்சு
சிவாஜி கணேசன் நடித்து, பி.ஆர்.பந்துலு டைரக்டு செய்து 1959-ம் வருடம் வெளிவந்த வரலாற்று சிறப்பு மிகுந்த படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்.’ 56 வருடங்களுக்குப்பின் இந்த படம் ‘சினிமாஸ்கோப்’பில் புதிய தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது்-
‘‘வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற வரலாற்று கலைப்படத்தின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நிகழ்கால திரையுலகம் குறித்த தகவல் அறிவு வாய்த்திருக்க வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு திரைப்படம் மூன்றாம் காட்சியில் நிலைத்திருந்தால், ஆஹா என்கிறார்கள். சனி, ஞாயிறு நீடித்தால், அபாரம் என்கிறார்கள். திங்கட்கிழமையும் மாற்றப்படாமல் இருந்தால், வெற்றிப்படம் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு திரைச்சூழலில் ஒரு படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தொழில்நுட்பத்தோடு தமிழர் வீட்டு கதவுகளை மீண்டும் தட்டுகிறதென்றால், வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழையும், சிவாஜி கணேசனின் பெருமையையும் உணர்ந்து கொள்ளலாம்.
தமிழ் திரை வரலாற்றின் நெடுங்கணக்கில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்து போயிருக்கிறார்கள். ஆனால், ஆண்மையை ஆர்ப்பரிக்கும் தமிழ் குரல் சிவாஜி கணேசனைப்போல் வேறு எவருக்கும் வாய்த்ததில்லை. அவரை, ‘சிம்மக்குரலோன்’ என்று அழைத்தார்கள். சிங்கத்தின் கர்ஜனைக்கு கூட ஒரே தொனிதான் உண்டு. ஆனால், நூறு குரலில் பேசிய சிம்மம், சிவாஜி கணேசன்.
மறைந்த பிறகும் ஒளியாக, ஒலியாக, உருவமாக, அசைவாக வாழ்ந்து கொண்டே இருப்பதால் நடிகர்கள் சாகா வரம் பெற்றவர்கள். பொதுவாக நடிகர்கள் ஒப்பனையை அணிந்து கொண்டு நடிப்பார்கள். ஆனால், சிவாஜியோ ஒப்பனையை அணிந்து கொண்ட பிறகு பாத்திரத்துக்குள் புகுந்து கொண்டு நடித்தவர்.
இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் இளைய நடிகர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு சேதி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்ப்பதற்கு இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும்? என்ற கேள்வியை வீரபாண்டிய கட்டபொம்மன் எழுப்புகிறது.
அன்னிய முதலீடுகள் எந்த நாளும் இந்தியாவுக்கு ஆபத்து என்பதைத்தான் கட்டபொம்மன் வரலாறு நமக்கு போதிக்கிறது. இன்னொரு சுதந்திர போருக்கு இந்தியா தள்ளப்பட்டு விடக்கூடாது. இதைத்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் நிகழ்காலத்தின் கன்னத்தில் அறைந்து சொல்கிறான்.’’
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
விழாவில் நடிகர்கள் சிவகுமார், ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, பட அதிபர் சித்ராலட்சுமணன், ராஜ் டி.வி. ராஜேந்திரன், டாக்டர் கமலா செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்
Courtesy :Webdunia Tamil
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
21st March 2015, 09:19 PM
#686
Junior Member
Veteran Hubber
VEERAPANDIYA KATTABOMMAN TRAILER & SONGS RE-RELEASE LAUNCH FUNCTION @ SATHYAM on 20th March.
KALAIPULI THAANU's HEART FELT SPEECH !!!!
Last edited by RavikiranSurya; 21st March 2015 at 09:23 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st March 2015, 09:21 PM
#687
Junior Member
Veteran Hubber
VAIRAMUTHU's HEART FELT HONEST OPINION ABOUT THE MANLY VOICE AND MANLY HERO NADIGAR THILAGAM SIVAJI GANESAN. WATCH FROM 3.18 onwards.....
Last edited by RavikiranSurya; 21st March 2015 at 09:24 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st March 2015, 09:39 PM
#688
Junior Member
Veteran Hubber
HONEST & TRUE HEART FELT SPEECHES OF Mr. SIVAKUMAR, Mr. RAMKUMAR, Mr. CHITRA LAKSHMANAN etc., during the launch of VEERA PANDIYA KATTABOMMAN - DIGITAL ROARING OF A LION !
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
21st March 2015, 11:28 PM
#689
Junior Member
Veteran Hubber
As Patriotism is the crux of this movie, tax free edition of VPKB possible? Also, educational institutions shall have to be approached and apprised of the freedom struggle as a nostalgia to rope in the student community thronging the theatres to pay respect to such sacrifices made by our ancestors!
-
22nd March 2015, 08:48 AM
#690
Junior Member
Veteran Hubber
Originally Posted by
sivajisenthil
As Patriotism is the crux of this movie, tax free edition of VPKB possible? Also, educational institutions shall have to be approached and apprised of the freedom struggle as a nostalgia to rope in the student community thronging the theatres to pay respect to such sacrifices made by our ancestors!
Sir,
It is better that they don't use that because there is always one segment of people who will say, because of tax free this film ran...! We know about them right ?
We want the film to be screened at Rs.150 and Rs.120 Tickets like Karnan.
Regards
RKS
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks