-
6th April 2015, 06:37 AM
#3261
Junior Member
Platinum Hubber
Originally Posted by
chinnakkannan
பல பல ரகமாய் பூட்டு - வீடியோ கிடைக்கலை கலைவேந்தன்..கல் நாயக்,மதுண்ணா தருவாங்க..
பல பல ரகமாய் பூட்டு - வீடியோ-pl watch from 1.35.00 onwards
-
6th April 2015 06:37 AM
# ADS
Circuit advertisement
-
6th April 2015, 11:15 AM
#3262
Senior Member
Senior Hubber
குட் மார்னிங் டு யூ ஆல்.
சி.க.,
நான் ஊருக்கும் போகலை, ஆபிசிற்கும் வரலை. வீட்டிலே மாட்டிக்கினேன். அங்கிங்கேன்னு லோக்கல்லயே மூணு நாளா ஒரே அலைச்சல். மையத்திற்கு வரமுடியலை. நீங்கள்லாம் சொல்றமாதிரி சந்திர கிரகணம் காரணமோ என்னவோ தெரியலை!!!
'உன்னிடம் மயங்குகிறேன்', 'மாசி மாசம் முகூர்த்த நேரம்', ' ஆகாய கங்கை இன்று மண்ணில் வந்தது' பாடல்கள் நினைவூட்டலுக்கு நன்றி. நல்ல பாடல்கள்.
இப்பிடி கோட்டு, சூட்டு போட்டு நடித்து பெரிய நடிகராக தொடர முடியாமல், தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை நடிகராக மாறிப் போனது சுதாகரின் திரை வாழ்வு.
'கண்ணெல்லாம் உன்வண்ணம்' கேட்டது போல் என் நினைவில் இல்லை. ஆனாலும் இப்போது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
உங்கள் தொடர்களைப் பற்றிய எனது கருத்துக்களை அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th April 2015, 11:53 AM
#3263
Senior Member
Senior Hubber
Originally Posted by
kalaiventhan
கல்நாயக், சின்னக்கண்ணன்,
உங்கள் இருவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். புரட்சித் தலைவரின் உரை பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். அந்த ஒலிப்பதிவு ஒரு நண்பரிடம் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அது மக்கள் திலகம் திரியில் தரவேற்றப்படும் என்று நம்புகிறேன். உலகெங்கும் உள்ள தமிழர்கள் அந்த உரையை கேட்க முடியும். காணாமல் போன பொக்கிஷம் மறுபடியும் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு. இருவருக்கும் நன்றி.
அதேநேரம், நாம் எழுதுவது எல்லாம் கவனிக்கப்படுகிறது என்பதும், சின்னக்கண்ணன் சொன்னது போல மதுரகானம் திரியை பலர் மவுனப் பார்வையாளர்களாக படிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இங்கே வருவதே ஆறேழு பேர்தான் என்று நினைத்திருந்தேன். அந்த தைரியத்தில் உங்கள் இருவருடனும் கொஞ்சம் விளையாட்டுத்தனமாக பேசுவேன்.
இனி அப்படி பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறது. நேற்று கூட என் வயது 28 என்று குறிப்பிட்டிருந்தேன்.பலர் பார்க்கும் திரியில் உண்மையை சொல்லிவிடத்தான் வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? பொய் சொல்கிறான் என்று நினைக்க மாட்டார்களா? எனவே, உண்மையை சொல்லி விடுகிறேன் என் வயது 18. (அடிக்க வராதீர்கள் கல்நாயக்)
புரட்சித் தலைவர் உரையை நான் மட்டுமின்றி அனைவரும் கேட்க காரணமாக இருக்கப்போகும் உங்கள் இருவருக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலை வேந்தன்,
உங்கள் வயது 18 என்று நீங்கள் அறிவித்தததை பார்த்ததும் அதிர்ந்து போனேன், எப்போதுதான் நீங்கள் உண்மையான வயதை அறிவிப்பீர்கள் என்று. இன்னும் அதிகமானவர்கள் மதுரகானம் திரியில் வந்து எழுதி போய்க் கொண்டிருந்தால் உங்களுக்கு வயது 8 என்று அறிவிப்பீர்கள். கேட்டால் 8 வயது சிறுவன் (மன்னிக்கவும்) சிறுவர் என்றால் அனுமதி மறுப்பார்கள், மற்றவர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்காக 18 வயது என்று பொய் சொன்னேன் என்பீர்கள். இருக்கட்டும் பரவாயில்லை. உங்களைப் பற்றிய பேருண்மையை சொல்வதற்கு முன் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.
உங்கள் பெரிய தாத்தா, அதாவது உங்கள் தாத்தாவின் அப்பா (அவரது பெயரைத்தான் உங்களுக்கும் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.) இதே கலைவேந்தன் ஐடி-இல் அவருடன் நீங்களும் பகிர்ந்து கொண்டு எழுதுகின்றீர்கள். அவர் தன் காலத்து தியாகராஜ பாகவதர், p.u. சின்னப்பா படங்களை பார்த்ததைப் பற்றியும், அந்த அனுபவங்களையும் எழுதுவதையும், அரசியல் நிகழ்வுகளோடு பழைய திரைப் பாடல்களை சம்பந்தப் படுத்தியும் எழுதி பார்த்திருப்பீர்கள்.அத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்த காலத்திலும் பாட்டிகளோடு பப்-க்கு போவதைப் பற்றி எழுதுகிறாரே. அதையெல்லாம் நீங்கள் கொஞ்சம் கேட்கக் கூடாதா?
'அவரிடம் நான் ஏன் கேட்க வேண்டும்? நான் கேட்காமலேயே வேண்டுமளவிற்கு வாங்கித் தருகிறாரே!' என்று நீங்கள் ஒரு திரைப் பட காமடி செய்ய மாட்டீர்கள், இந்த வயதிலாவது உடல் நிலையை கருத்தில் கொள்ள அவர் முயற்சிக்க வேண்டும் என்று நம்பி ஆவன செய்யுமாறு கோருகிறேன். மிக வயதானவர் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
சரி உங்களைப் பற்றிய பேருண்மைக்கு வருவோம். நீங்கள் எப்போதுதான் 'நான் இன்னும் பிறக்கவே இல்லை' என்ற பேருண்மையை ஃபோரத்தில் ஒப்புக் கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே இதை அறிவித்து விடுங்கள். உங்களுக்கு முன்னதாக இந்த உண்மையை நான் போட்டு உடைத்ததற்கு என்னை மன்னியுங்கள். நீங்கள் உங்கள் வயதை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருப்பதாலும், உங்கள் பெரிய தாத்தாவின் பங்களிப்பாலும் எனக்கு வேறு வழியில்லை. சொல்லிவிட்டேன். அதுதான் தொலைக் காட்சி விளம்பரங்களில் பிறந்த உடன் குழந்தைகள் இன்டெர்நெட் தேடி ஒடுகின்றனவே!!! இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அதற்குள் நீங்கள் நன்றி சொல்கிறீர்களே என்பதுதான்.
Last edited by kalnayak; 6th April 2015 at 12:21 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
6th April 2015, 12:18 PM
#3264
Senior Member
Senior Hubber
சி.க.,
கங்கை அமரனின் எழுதிய பாடல்கள் பற்றிய பதிவு அருமை. நான் கூட இவரைப்பற்றி இவ்வாறு யோசிப்பதுண்டு - இவரும் இளையராஜைவைப் போல ஏதேனும் ஒரு துறையில் இருந்திருந்தால் 'இளையராஜாவை விட பெயர் பெற்று விளங்கி இருப்பாரோ என்னவோ என்று. ஏனென்றால் அத்தனை துறைகளிலும் கால்வைத்து சிறப்பாக செய்து இருக்கிறார். ஆனாலும் ஒரு வருத்தமும் உண்டு - அவர் பாடல்களில் சிலவற்றில் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவ்வளவாக புரிய முடிவதில்லை. உதாரணம் - 'சிறுபொன்மணி அசையும்'. கேட்க கேட்க இனிமை, அதைப் பிரித்து பொருள் தேடக் கூடாது என்பது போல் உள்ளது. கேட்டால் அதுக்கெல்லாம் ஞானம் வேணும் என்பார். எதற்கு இந்த வம்பு. நீங்கள் அவர் இசையமைத்த பிரபல பாடல்களையும் சொல்லுங்கள்.
திருமந்திரப் பாடல் அழகு. எனக்குப் புதுசு. அப்பப்ப இப்பிடி ஒரு பிட்ட போடுங்க. நானும் தேறிக்கிறேன். மோகமுள் தேசிய விருது பெற்ற படம் இல்லையா, அதனால் எனக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 'கமலம் பாத கமலம்' - நல்ல அழகான பாடல்தான்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th April 2015, 12:49 PM
#3265
Senior Member
Senior Hubber
சந்திரன் பாடல் 59: "சந்திரனை கூப்பிடுங்க தாலாட்டுப்பாட"
----------------------------------------------------------------------------------------
படத்தின் தலைப்புப் பாடல். ஏதோ ஒரு பெரியவர் தாலாட்டி கொண்டே சந்திரனை தாலாட்டுப் பாடவும், சூரியனை சமைத்துப் போடவும் கூப்பிடச் சொல்கிறார். என்ன ஒரு கிராமத்துச் சூழ்நிழையை பாடல் முழுதும் காட்டுகிறார்கள். பிரபுவும், குஷ்புவும் நடித்த படம் என்று சொல்கிறது தலைப்புகள். தேவாவின் இசை. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். வாலியின் பாடல். தப்பே செய்யமுடியாது பாருங்க, தலைப்பிலே இந்த விவரம் வருவதினால்.
காணொளி:
படத்தோட பேரையும் நான் சொல்லனுமாக்கும்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
6th April 2015, 01:02 PM
#3266
Senior Member
Senior Hubber
கல் நாயக் வாங்க வாங்க..வந்தவுடனே குழப்பிட்டீங்களே..
சிறுபொன் மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் தான் சொல்லுதேன்.. கிராமத்துப் பொண்ணு அவ தன் மனசுக்குப் பிடிச்ச ஆளப் பார்க்கறா அவனோ உச்சாணிக்கொம்புல இருக்குற பட்டணத்து ஆளு..அவள பாத்தவுடனே மனசுல படபடத்து மணி அடிக்குது அதுல எழும்புற இசைல தன்னையும் அறியாம அவ கண்ணு படபடக்குது தாளம் தவறாம.. அப்படின்னு வச்சுக்கலாமா..
சரீ..விலாவாரியா அப்புறம் அனலைஸ் பண்றேன்
சந்திரன் பாட் ஈவ்னிங் கேட் சொல்லுதேன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th April 2015, 02:49 PM
#3267
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
kalnayak
கலை வேந்தன்,
உங்கள் வயது 18 என்று நீங்கள் அறிவித்தததை பார்த்ததும் அதிர்ந்து போனேன், எப்போதுதான் நீங்கள் உண்மையான வயதை அறிவிப்பீர்கள் என்று. இன்னும் அதிகமானவர்கள் மதுரகானம் திரியில் வந்து எழுதி போய்க் கொண்டிருந்தால் உங்களுக்கு வயது 8 என்று அறிவிப்பீர்கள். கேட்டால் 8 வயது சிறுவன் (மன்னிக்கவும்) சிறுவர் என்றால் அனுமதி மறுப்பார்கள், மற்றவர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்காக 18 வயது என்று பொய் சொன்னேன் என்பீர்கள். இருக்கட்டும் பரவாயில்லை. உங்களைப் பற்றிய பேருண்மையை சொல்வதற்கு முன் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.
உங்கள் பெரிய தாத்தா, அதாவது உங்கள் தாத்தாவின் அப்பா (அவரது பெயரைத்தான் உங்களுக்கும் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.) இதே கலைவேந்தன் ஐடி-இல் அவருடன் நீங்களும் பகிர்ந்து கொண்டு எழுதுகின்றீர்கள். அவர் தன் காலத்து தியாகராஜ பாகவதர், p.u. சின்னப்பா படங்களை பார்த்ததைப் பற்றியும், அந்த அனுபவங்களையும் எழுதுவதையும், அரசியல் நிகழ்வுகளோடு பழைய திரைப் பாடல்களை சம்பந்தப் படுத்தியும் எழுதி பார்த்திருப்பீர்கள்.அத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்த காலத்திலும் பாட்டிகளோடு பப்-க்கு போவதைப் பற்றி எழுதுகிறாரே. அதையெல்லாம் நீங்கள் கொஞ்சம் கேட்கக் கூடாதா?
'அவரிடம் நான் ஏன் கேட்க வேண்டும்? நான் கேட்காமலேயே வேண்டுமளவிற்கு வாங்கித் தருகிறாரே!' என்று நீங்கள் ஒரு திரைப் பட காமடி செய்ய மாட்டீர்கள், இந்த வயதிலாவது உடல் நிலையை கருத்தில் கொள்ள அவர் முயற்சிக்க வேண்டும் என்று நம்பி ஆவன செய்யுமாறு கோருகிறேன். மிக வயதானவர் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
சரி உங்களைப் பற்றிய பேருண்மைக்கு வருவோம். நீங்கள் எப்போதுதான் 'நான் இன்னும் பிறக்கவே இல்லை' என்ற பேருண்மையை ஃபோரத்தில் ஒப்புக் கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே இதை அறிவித்து விடுங்கள். உங்களுக்கு முன்னதாக இந்த உண்மையை நான் போட்டு உடைத்ததற்கு என்னை மன்னியுங்கள். நீங்கள் உங்கள் வயதை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருப்பதாலும், உங்கள் பெரிய தாத்தாவின் பங்களிப்பாலும் எனக்கு வேறு வழியில்லை. சொல்லிவிட்டேன். அதுதான் தொலைக் காட்சி விளம்பரங்களில் பிறந்த உடன் குழந்தைகள் இன்டெர்நெட் தேடி ஒடுகின்றனவே!!! இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அதற்குள் நீங்கள் நன்றி சொல்கிறீர்களே என்பதுதான்.
கல்நாயக்,
ரசித்து சிரித்தேன். அதிலும் குறிப்பாக,..............
உங்கள் பெரிய தாத்தா, அதாவது உங்கள் தாத்தாவின் அப்பா (அவரது பெயரைத்தான் உங்களுக்கும் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.) இதே கலைவேந்தன் ஐடி-இல் அவருடன் நீங்களும் பகிர்ந்து கொண்டு எழுதுகின்றீர்கள். அவர் தன் காலத்து தியாகராஜ பாகவதர், p.u. சின்னப்பா படங்களை பார்த்ததைப் பற்றியும், அந்த அனுபவங்களையும் எழுதுவதையும், அரசியல் நிகழ்வுகளோடு பழைய திரைப் பாடல்களை சம்பந்தப் படுத்தியும் எழுதி பார்த்திருப்பீர்கள்.அத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்த காலத்திலும் பாட்டிகளோடு பப்-க்கு போவதைப் பற்றி எழுதுகிறாரே. அதையெல்லாம் நீங்கள் கொஞ்சம் கேட்கக் கூடாதா?
................. என்ற வரிகள். கண்களில் நீர் கோர்க்க சிரித்தேன். நல்ல நகைச்சுவை உணர்வு, உங்களுக்கு பாராட்டுக்கள். அன்று கூட அவசரத்தில் சொல்ல மறந்து விட்டேன். ‘சந்திரோதயம் இதிலே’... பாடல் சங்கராபரணம் ராகம் என்று கூறியிருக்கிறீர்கள். நல்ல இசைஞானம் உள்ளவர் நீங்கள் என்று நினைக்கிறேன். அதுசரி... உங்கள் உண்மையான பெயர் என்ன? என்ற பேருண்மையை எப்போது சொல்லப் போகிறீர்கள்? அதை தெரிந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இல்லையா?
சின்னக்கண்ணன்,
பலப் பல ரகமாய் பூட்டு பாடலை பதிவிட தேடி முயற்சி எடுத்துக் கொண்டதற்கு நன்றி.
திரு.எஸ்.வி.சார்,
தரவேற்றலுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th April 2015, 03:40 PM
#3268
Senior Member
Senior Hubber
Originally Posted by
KALAIVENTHAN
அன்று கூட அவசரத்தில் சொல்ல மறந்து விட்டேன். ‘சந்திரோதயம் இதிலே’... பாடல் சங்கராபரணம் ராகம் என்று கூறியிருக்கிறீர்கள். நல்ல இசைஞானம் உள்ளவர் நீங்கள் என்று நினைக்கிறேன். அதுசரி... உங்கள் உண்மையான பெயர் என்ன? என்ற பேருண்மையை எப்போது சொல்லப் போகிறீர்கள்? அதை தெரிந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இல்லையா?
ஆஹா, எப்பிடி உங்களை நம்ப வச்சேன் பார்த்தீங்களா?
இதை வெளியில யாருகிட்டயும் சொல்லிடாதீங்க. அப்புறம்......
.
.
.
.
.
.
யாரும் எனக்கு சொல்லித் தரமாட்டாங்க......
.
.
.
.
.
.
.
நான் கர்நாடக சங்கீதத்துல ஒரு பெரிய ........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஞானசூனியம்-னு தெரிஞ்சுட்டா.
அப்புறம் என்ன கேட்டீங்க. என்னோட உண்மையான பேரு என்னன்னுதாதானே. அத அப்புறமா இன்னொரு நாள் வச்சிக்கலாம். உங்க பேரு என்னன்னு உண்மை முடிவாக தெரிஞ்சதுக்கு அப்புறம்!!!
Last edited by kalnayak; 6th April 2015 at 04:36 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
6th April 2015, 04:20 PM
#3269
Junior Member
Seasoned Hubber
கல்நாயக்,
இப்போதுதான் என்னை நம்ப வைக்க பார்க்கிறீர்கள். நீங்கள் மறைத்துக் கொள்ள முயற்சித்தாலும் உங்கள் திறமை உங்களை அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
6th April 2015, 04:35 PM
#3270
Senior Member
Senior Hubber
வடிவேலு பாணியில் சொல்லிக்கொள்கிறேன் "இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு?"
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
Bookmarks