சமீபத்தில் பாவமன்னிப்பு திரைப்படம் பார்த்தேன். படம் பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகம் நினைவுக்கு வந்தது அப்பொழுது உறுதிமொழி படபிடிப்பு தேக்கடியில் நடைபெற்றது. மதுரையில் மாவட்ட பிரபு ரசிகர் மன்ற பொருளாளர் அழகர் அவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த இளையதிலகம் பிரபு அவர்கள் என்னையும், ரமேஷ்பாபு அவர்களையும் தேக்கடி வரும்படி சொன்னார். இருவரும் இரண்டு நாள் கழித்து தேக்கடி சென்றோம்.
அண்ணன் பிரபு அவர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். அண்ணனுடைய ஷாட் வரவும் அவர் ஏரியின் நடுவில் படகுக்குள் படபிடிப்பு நடந்ததால் அருகில் இருந்த சிவகுமார் அவர்களிடம் பேசிக்கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நங்கள் சிவகுமார் அவர்களிடம் எங்களை நாங்கள் சிவாஜி மற்றும் பிரபு அவர்களின் ரசிகர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டோம்.
உடனே அவருடைய முகத்தில் ஒரு பிரகாசம் காரணம் அவரே சொன்னார் நல்லவேளை நீங்கள் சிவாஜி ரசிகர், நான் சிவாஜி வெறியர் என்னை விட சிவாஜி வெறியர் யாரும் இருக்கமாட்டார்கள் என்று. நாங்கள் சிவாஜி அவர்கள் நடித்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்று கேட்டோம். அவர் சொன்னார் சிவாஜி படங்களில் ஒரு படம் தேர்ந்தெடுக்க சொன்னால் எப்படி முடுயும் பாசமலரை சொன்னால் பாகபிரிவினை வந்து நிற்கும் படிக்காதமேதையை சொன்னால் பார் மகளே பார் வந்து நிற்கும் என்று சொல்லிக்கொண்டே போனாரே அன்றி ஒரு படத்தை மட்டும் அவரால் சொல்லமுடியவில்லை.
அப்பொழுது நாங்கள் கேட்டோம் நீங்கள் கருப்பு வெள்ளை படங்களையே சொல்லுகின்றீர்களே வசந்த மளிகை, சிவகாமியின் செல்வன், தீபம் போன்ற கலர் படங்கள் வரிசையில் ஏதும் சொல்லவில்லையே என்றோம், உடனே, அவருக்கே உண்டான ஸ்டைலில் அட போங்கப்பா... என்னால் 60க்குள் வந்த படங்களை விட்டே வரமுடியவில்லை என்றார். அப்பொழுது நடிப்பு என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டார். நாங்கள் இருவரும் நன்றாக தெரியும் என்று சொன்னோம். உடனே அவர் எங்களை திருப்பி உங்களுக்கு சிவாஜியின் எந்த நடிப்பு பிடிக்கும் என்று கேள்வி கேட்டார்,
நாங்கள் சிவாஜி அவர்கள் சிரித்துகொண்டே அழுவார் அந்த நடிப்பு பிடிக்கும் என்றோம்.
அவர் எங்களை கோயம்பதூர்காரர்களுக்கே சொந்தமான நையாண்டி பார்வையால் எங்களை பார்த்தார். பார்த்துவிட்டு அவரே தொடர்ந்தார் தம்பி நடிப்பு என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாவமன்னிப்பு படத்தில் ஒரு காட்சியை சொல்லுகிறேன். அந்த படத்தில் தனது தந்தை ராதா அவர்கள் தாய் ராஜம்மா அவர்கள் என்பதை தெரிந்து கொள்வார். தனது தாயிடம் பேசும்போது கண்களில் தண்ணீர் தெப்பம் போல் தேங்கி நிற்கும் ஆனால் ஒரு துளி கண்ணீர் கூட வெளியே வராது. அந்த கண்ணீரே சிவாஜி அவர்கள் சொன்னால் தான் வெளிவரும். உலகத்தில் கண்ணீரையும் தன நடிப்பால் கட்டிபோட கூடிய ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அது சிவாஜி ஒருவரை தவிர வேறு யர்ரும் கிடையாது என்று ஒரே போடு போட்டார் . இப்பொழுது பாவமன்னிப்பு படம் பார்த்தபோது சிவகுமார் அவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது நண்பர்களே நீங்களும் பார்த்து மகிழ விரைவில் தமிழகமெங்கும்
உயிருள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
Bookmarks