-
21st April 2015, 07:12 AM
#1211
Senior Member
Seasoned Hubber
எச்சரிக்கை [துக்ளக் பாணியில்...]
திலக சங்கமம்

திரை இசைத் திலகம் நடிகர் திலகம்.... தோல்வியே காணாத கூட்டணி... இவர்கள் இணைந்த பாடல்கள் சோடை போனதாக சரித்திரமே இல்லை... மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. ஒரு புறம் என்றால் திரை இசைத் திலகம் அவர்களின் பங்கு மறுபுறம் என நடிகர் திலகத்தின் படங்களில் கோலோச்சியவர் கே.வி.மகாதேவன்.
இவர்கள் இணையில் உருவான பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அமரகாவியங்களாய்த் திகழ்பவை.
பாடல்கள் மட்டுமல்ல... பின்னணி இசையிலும் கே.வி.எம். அவர்களின் பணி சிறப்பானது. அதுவும் அவ்வப்போது இடம் பெறலாம்..
இவற்றைப் பற்றிய ஒரு குறுந்தொடர்....தொடங்க உத்தேசம்...
Sivaji Ganesan - Deinition of Style - அதுவும் தொடரும்...
அவ்வப்போது வந்து போகும் சிலருள் ஒருவனாக அடியேனின் இந்த சிறிய காணிக்கை.
Last edited by RAGHAVENDRA; 21st April 2015 at 07:57 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
21st April 2015 07:12 AM
# ADS
Circuit advertisement
-
21st April 2015, 07:45 AM
#1212
Senior Member
Seasoned Hubber
திலக சங்கமம்

1954ம் ஆண்டு வெளிவந்த கூண்டுக்கிளியில் உருவானது நடிகர் திலகம் கே.வி.எம். இணை.. கொஞ்சும் கிளியான பெண்ணை என்ற இந்தப் பாடலின் மூலம் டி.எம்.எஸ். அவர்கள் மிகப் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. தூக்குத்தூக்கியின் சுனாமியில் இந்தப் பாடல் சற்றே பின்தங்கி விட்டாலும் பின்னாளில் இதற்கான வரவேற்பினைப் பெறத் தவறவில்லை. இப்பாடலை எழுதியவர் தஞ்சை ராமய்யா தாஸ் என ராகா இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விந்தன் அவர்கள் எழுதியதாக அந்நாளைய பாட்டுப்புத்தகத்தில் படித்த நினைவு. தகவல் சரிபார்த்து பின்னர் கூறப்படும்.
கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளியாக்கி விட்டு கெட்டி மேளம் கொட்டுவது சரியா தப்பா எனப் பாடலின் பல்லவி இசைத்தட்டில் அமைந்திருக்க, திரைப்படத்தில் கூண்டுக்கிளி கூட்டுக்கிளியாகவும், கெட்டி மேளமம் கொட்டுவது என்ற வரி காலமெல்லாம் சுற்றுவது எனவும் மாறியுள்ளது, தணிக்கையின் கைங்கரியமாயிருந்திருக்க வேண்டும்.
பாடலைப் பார்ப்போம்... டி.எம்.எஸ். ரசிகர் இப்பாடலைத் தரவேற்றியுள்ளார். அவருக்கு நமது உளமார்ந்த நன்றி.
இப்பாடலின் இசைத்தட்டு வடிவம்...
பல்லவியில் மட்டுமின்றி, அங்கங்கே சில வார்த்தைகளும் படத்தில் மாறியுள்ளதை கவனிக்கலாம்.
http://play.raaga.com/tamil/album/Ko...songs-T0001656
Last edited by RAGHAVENDRA; 21st April 2015 at 07:54 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 6 Likes
-
21st April 2015, 08:12 AM
#1213
Junior Member
Senior Hubber
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பாவமன்னிப்பு திரைப்பட கோலாகலம் ஆரம்பம்.
மதுரை மத்திய பகுதி சமூகநலப் பேரவை சார்பில் தலைவர் பாண்டி அவர்கள் சென்ற முறை தர்மம் எங்கே திரைப்படத்திற்கு 40 அடிக்கு 4 அடி ராட்சத போஸ்டர் அடித்திருந்தார். தற்போது பாவம்ன்னிப்பு படத்திற்கு அதற்கும் மேலாக 50 அடிக்கு 4 அடி என்ற மிகப் பிரமாண்டமான ராட்சத போஸ்டர் அடித்துள்ளார். திரு.பாண்டி அவர்களுக்கு நன்றி.

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
21st April 2015, 08:22 AM
#1214
Junior Member
Senior Hubber
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு. விநியோகஸ்தருக்கு நன்றி நன்றி நன்றி......

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
21st April 2015, 08:28 AM
#1215
Junior Member
Senior Hubber
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு. விநியோகஸ்தருக்கு நன்றி நன்றி நன்றி......

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st April 2015, 08:29 AM
#1216
Junior Member
Senior Hubber
பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கபட்டுள்ள போட்டோ கார்டு. விநியோகஸ்தருக்கு நன்றி நன்றி நன்றி......

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
21st April 2015, 08:32 AM
#1217
Junior Member
Junior Hubber

Originally Posted by
senthilvel
தனிப்பட்ட நபர்கள் குறிப்பாக இந்த மய்யத்தில் உறுப்பினராக இல்லாதவர்களின் பெயர்களை குறிப்பிட்டு எதிர்மறை விமர்சனம் செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தன்னை தற்காத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத ஒருவரை விமர்சிப்பது அதிலும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும்.
அன்புடன்
முரளி
__________________________________________________ __________________________________________________ ________
ராகவேந்திரரே எப்பவாவது வந்து போகும் ஆள்னா நான்லாம் எந்த மூலை? பேசாம நாமளும் பேஸ் புக் தொடங்கலாமா? கோபாலய்யா மாதிரி எனக்கும், மத்தவங்களுக்கும் எழுத வேற தெரியாது. முடி வெட்டத் தெரியாதவனுக்கு ஆலமரத்துக்குக் கீழே என்ன வேலை? என்ன நான் சொல்றது?
Last edited by Murali Srinivas; 4th May 2015 at 11:19 AM.
-
21st April 2015, 08:37 AM
#1218
Junior Member
Senior Hubber
அவன் ஒரு சரித்திரம் 007.
கெளரவம் - பாரிஸ்டர் ரஜினிகாந்த். தனது வாதத் திறமையால் தான் எடுத்துக் கொண்ட வழக்குகளில் எல்லாம் வெற்றி. வெற்றி பெறுவது ஒன்றே அவரது லட்சியம். அதனால் சற்று இறுமாப்பு. ஒரு கொலை வழக்கில் குற்றவாளியின் சார்பில் வாதாடி அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். இதனால் அவருக்கும், தன மகன் போல வளர்த்து வந்த அவரது தம்பி மகனுக்கும் கருத்து வேறுபாடு. மறுபடியும் அதே குற்றவாளி இன்னொரு வழக்கில் தனக்கு விடுதலை பெற்றுத் தர இவரை நாடுகிறான். இம்முறை அவன் நிரபராதி. ஆனாலும் அவன் செய்த பழைய குற்றத்துக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பது அவரது வளர்ப்பு மகனின் வாதம். வாதம் முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. இம்முறை தனது பெரியப்பாவையே எதிர்த்து வாதிடுகிறான் வளர்ப்பு மகன். தீர்ப்பு கூறுவதற்கு முதல் நாள் இரவு. பலவித உணர்ச்சிக் கலவைகளுடன், மனக்குழப்பத்துடன் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருந்தபோதும் தனது வாதத்தின் மீது தீராத நம்பிக்கை. இந்த இடத்தில்
"கண்ணா நீயும் நானுமா, நீயும் நானுமா" என்று உணர்ச்சி ததும்ப பாடுகிறார். "ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே, அறுபதை இருபது வெல்லுமா உலகிலே" என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறார். படம் பூராவுமே சிவாஜியின் பல்வேறு உணர்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள். வியட்நாம் வீடு சுந்தரத்தின் கூரான வசனங்கள். "நெருப்பு எனக்கா, பைப்புக்கா" என்று பெரிய சிவாஜி கேட்கும்போது, "இரண்டுக்கும் நான்தானே பெரியப்பா" என்று சொல்லுமிடம், கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியவுடன், "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, அது பறந்து போயிடுத்து" என்று மனைவியிடம் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் இடம் என்று காட்சிக்கு காட்சி சிவாஜியே வியாபித்திருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் வரும் பாடலான "கண்ணா நீயும் நானுமா"

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
21st April 2015, 08:39 AM
#1219
Junior Member
Senior Hubber

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசயம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st April 2015, 08:52 AM
#1220
Senior Member
Diamond Hubber

Originally Posted by
RavikiranSurya
Dear Sir,
Am extremely sorry for our heated exchanges few days back.
It just happened without any intention. Sorry about that !
விரும்பத்தகாத அந்த நிகழ்வுக்கு நானும் வருந்துகிறேன்.
ஒரு வகையில் நேரடியாக இனிக்க இனிக்க பேசிக்கொண்டு முதுக்கு பின்னர் வஞ்சகம் செய்வோரை விட நினைப்பதை கடுமையாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசிவிடுபவர்களை நான் விரும்புவேன் என்ற வகையில் நேருக்கு நேர் எதிர் கொண்டமைக்கு பாராட்டுகிறேன்.
இந்த நேரத்தில் மற்றவர்க்கு உவப்பானதோ இல்லையோ ,மனதில் பட்ட சில விடயங்களை பதியலாம் என நினைக்கிறேன்.
பொதுவாக ஒரு கலைஞன் மீது அபிமானம் கொள்வதற்கு அவனின் ரசிகனாக இருப்பதற்கு அவனின் கலைத்திறமை மட்டுமே அளவுகோல் என்பது என் தனிப்பட்ட கொள்கை . நானறிந்த வகையில் நமது சமூகத்தில் ஒரு கலைஞனின் ரசிகர்களாக இருப்பவர்களில் பெரும்பான்மையோர் நீங்கள் ஏன் இவரின் ரசிகராக்க இருக்கிறீர்கள் என வினவும் போது ..அவர் நல்லவர் , பண்பாளர் , அடக்கமானவர் , இந்த அரசியல் கருத்தை கொண்டவர் , நல்ல குடும்பஸ்தன் போன்ற புறக்காரணிகளையே அதிகம் குறிப்பிடுகிறார்கள் என்பது என் அனுபவம் .
என்னைப் பொறுத்தவரை , இந்த புறக்காரணிகள் சாதகமாக இருந்தால் நல்லது என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் , ஒரு கலைஞனை மதிப்பிடும் போது இந்த புறக்காரணிகள் கலைஞன் என்ற மதிப்பீட்டை கூடுதலாகவோ குறைவாகவோ மாற்றுவதில்லை.
விபரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை நான் சிவாஜி ரசிகனாக இருக்கிறேன் என்றால் அது முழுக்க முழுக்க அவர் கலைத்திறமை மீது நான் கொண்டுள்ள அபிமான்னம் மட்டுமே . அவர் ரசிகன் என்பதால் அவர் சார்ந்துள்ள கட்சியை ஆதரிக்க வேண்டியது கடமையாக நான் கொள்வதில்லை . நான் சார்ர்ந்திருக்கும் அரசியல் கட்சியை அவர் சாராததால் அவர் ரசிகன் என்பதில் கிஞ்சித்தும் குறை ஏற்பட்டதில்லை .
இன்றைக்கு கூட முன்னணி நடிகர்கள் பலரின் ரசிகர்கள் போர்டுகளுக்கு பின்னர் ஒரு நுண்ணிய சாதி அரசியல் பின்னணி உண்டு என்பது கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும் .ஆக இங்கே ஒரு நடிகனின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர் சாதி உள்ளிட்ட புறக்காரணிகளை கவனத்தில் கொள்வது யதார்த்தத்தில் உண்மை.
நாமெல்லாம் சாதி , மதங்களை கடந்து நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருப்பவர்கள் .ஆனால் பல முறை பலரோடு விவாதித்தலில் பல அதிர்ச்சிகரமான சமூக எதார்த்தங்கள் வெளிப்பட்டதை மறுப்பதற்கில்லை. சிவாஜி என்னும் தமிழ் சமூகத்தின் மாபெரும் கலைஞன் , திரைக்கு வெளியே பலரால் சாதிய பார்வையில் பார்க்கப்பட்டார் என்பது நிதர்சனம் . ஒரு பக்கம் தமிழகத்தில் மிகப்பெரும் சமூகத்தில் அவர் பிறந்ததால் ஒரு சாராரால் அவர் அந்த சமூகத்தினராக பார்க்கப் பட்டார் . அதே நேரத்தில் அவர் ஏற்றுக்கொண்ட தலைவர் வேறெரு பெரிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் , தன் சொந்த சமூகத்தாலேயே அந்நியமாக பார்க்கப்பட்டார் .
திரையுலகில் மிகச்சமமாக செல்வாக்கு பெற்றவர்களாக மக்கள் திலகமும் , நடிகர் திலகமும் திகழ்ந்தாலும் , பின்னர் அரசியல் களத்தில் மக்கள் திலகம் அடைந்த உயர்வை நடிகர் திலகம் அடைய முடியாமைக்கு அரசியல் காரணங்களைத் தாண்டி சாதிய மனப்பான்மையும் முக்கிய காரணம் என நான் நம்புகிறேன் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பொறுத்தவரை தமிழகத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க சமூகத்தையும் சார்ந்தவரல்ல .அதுவே அவரின் பலமாக அமைந்தது . அவரை யாரும் எந்த சாதியோடும் தொடர்பு படுத்தி ஆதரிக்கவோ , அதனால் இன்னொரு சமூகம் தள்ளி வைக்கவோ நிகழவில்லை . இப்படி பல்ல உண்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம் (இங்கிருக்கும் பலருக்கு அவை பிடிக்காது என்றாலும்)
ஆக என்னைப் பொறுத்தவரை , சிவாஜி என்னும் கலைஞன் சாதி , மதம் , அரசியல் சார்புகளைத் தாண்டி ஒரு தமிழ் சமூகக் கலைஞன் என போற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கம் உண்டு .. அதற்கு எதிராக ஒரு குறிபிட்ட அரசியல் சித்தாந்தத்துக்கோ அல்ல்லது எந்த குழுவுக்குமோ சொந்தக்காரராக அவர் அடையாளப்படுத்துவது .. வந்து சேர்பவர்களை விட தள்ளிச் செல்பவர்களையே அதிகப்படுத்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு .
என்னுடைய கருத்துக்கள் எப்போதும் இதன் அடிப்படையில் தான் இருக்கும் .அதனால் நான் தவறாக புரிந்து கொள்ளப்படுவது குறித்து என்றைக்கும் நான் இம்மியும் பொருட்படுத்துவதில்லை . அதன் அடிப்படையில் வெளிப்படையாக நேருக்கு நேர் பேசுவதை நான் வரவேற்கிறேன்.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
Bookmarks