Page 336 of 397 FirstFirst ... 236286326334335336337338346386 ... LastLast
Results 3,351 to 3,360 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3351
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பருவமே பழைய பாடல் பாடு – 2

    பருவங்கள்னு பார்த்தீங்கன்னா மொதல்ல பொண்ணுங்களோட பருவம் தான்வரும்.. பின்ன (ஏற்கெனவே ஆளில்லா டீக்கடை..கூட்டம் வரவேணாமா..ஒரு மார்க்கெட்டிங்க் தான்..!)

    ஏழு பருவம்
    பேதை..
    ஒன்று முதல் எட்டு வயது வரையாம்..

    எல்லாவற்றையும் நம்பிவிடும், அம்மா அப்பா தான் உலகம்..அப்புறம்..ஐஸ்க்ரீம்…!



    > பெதும்பை :

    9 முதல் 10 வயது வரை...

    நாலங்கிளாஸ் அஞ்சாங்க்ளாஸ் பருவமா இல்லை அஞ்சு ஆறா.. எப்படி ஆகிலும் கொஞ்சம் தெளிவு வரும் என நினைப்பதால் ரெண்டு வருஷத்துக்கு ஒருபருவமா என்ன

    மஞ்சு முகட்டினில் மான்போல மேகங்கள்
    கொஞ்சியே முட்டுதற்போல் கோதையிவள் – விஞ்சி
    மனதாரச் சிரிக்கின்றாள் மஞ்சுளாவென் பேராம்
    கனவுலகைக் கண்களிலே காண்..





    பத்து பதினொன்னு வயசு தானே மஞ்சுளாக்கு அப்போ.. யாரங்கே..

    மிச்ச பருவங்கள் நாளைக்கு

    வரட்டா..

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3352
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Dear Gopalj

    My heartfelt condolences to you and your family. May the God be with you.

  5. Thanks Gopal.s thanked for this post
  6. #3353
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பறவைப் பாடல்கள் 8
    சரி சரி திட்டாதீங்க. .கொக்கு பாட் லேடஸ்ட் தான் இருக்கு கொக்குப் பற பற, கொக்கு சைவக் கொக்கு, கொக்கு மீனைத் திங்குமான்னு தான் இருக்கு..எனில் பழைய கொக்கு இருந்தால் நீங்கள் போடுங்கள்
    அந்தக் குறை எதற்கு சிக்கா.. இந்தாங்க நீங்க தேடிய பாட்டு.. ராதா ஜெயலக்ஷ்மி ஆதி பராசக்தியிலிருந்து...


  7. Thanks chinnakkannan thanked for this post
  8. #3354
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுண்ணாவ்.. வாங்க தாங்க்ஸ் ஃபார் த பாட்..ஈவ்னிங்க் கேக்கறேன்..(குறையொன்றுமில்லை மறைமூர்த்தி மதுண்ணா )

  9. #3355
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம். சற்றே நேரம் கிடைத்தது. இந்த சிறிது நேரத்தில் ஒரு நிலாப் பாடல் அடுத்த பதிவில்.

    சி.க., "பருவம் உங்கள் பாடல்கள்" - நன்றாக இருந்தது.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  10. #3356
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நிலாப் பாடல் 64: "ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு"
    ----------------------------------------------------------------------------------------

    தலைப்பை பார்த்ததும் எல்லோரும் சொல்வீர்கள் "ஆஹா, என்ன அருமையான பாடல்" என்று.

    சிரிது இடைவெளிக்குப் பின் வரும்போது ஒரு நல்ல பிரபலமான பாடல் வேண்டுமென விரும்பி போடுகிறேன். அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.

    இந்த பாடல் பற்றிய விபரங்கள் நான் கொடுத்து தெரியவேண்டியதில்லை. ஆனால் சூபர் ஸ்டாரின் தங்கையாக நடித்தவர் பெயர் தெரியவில்லை. ராஜாவின் இசை. இது போதும். மலேஷியா வாசுதேவன் பாடியது. இன்னும் நம்மையெல்லாம் தாலாட்டிக் கொண்டுதான் உள்ளது.

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலில் குறுந்தொகையில் இருந்து ஒரு கருத்தை எடுத்து கையாண்டு இருப்பதாக சொல்லப் பட்டிருக்கிறது. அந்த வரிகல் "செம்மண்ணிலே தண்ணீரை போல்" செம்மண்ணுடன் தண்ணீர் சேர்ந்தால் பிரிக்க முடியாததாக மாரும் என்பது தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கருத்தை கூட தமிழை சுட்டிக்காட்டி ஃப்ரன்ச் தலைநகர் பாரிசில் ஒடும் ரயிலில் போட்டிருப்பதாக ஒரு செய்தியில் நான் படித்தேன்.

    தங்கையை நிலவாக பாடும் இந்த பாடல் வித்தியாசமானது தான்.

    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

    செம்மண்ணிலே தண்ணீரை போல் உண்டான சொந்தம் இது
    சிந்தாமணி ஜோதியை போல் ஒன்றான பந்தம் இது
    தங்கை அல்ல தங்கை அல்ல தாயானவள்
    கோடி பாடல் நான் பாட பொருள் ஆனாள்
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

    கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
    முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
    என் ஆலயம் பொன் கோபுரம்
    ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

    ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேனேம்மா
    தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேனேம்மா
    மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    என் தெய்வம் தந்த என் தெய்வம் தந்த என் தங்கை
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு



    தர்மயுத்தம் நடத்தி இந்த பாடலை பதிவிடுகின்றேன் என்று யாரும் நினைத்து விடாதீர்கள்.
    Last edited by kalnayak; 23rd April 2015 at 05:53 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  11. Likes chinnakkannan liked this post
  12. #3357
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக்.. வாங்க அழகு ப் பாடல் தந்திருக்கிறீர்கள்..

    யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    யாயும் நீயும் எவ்வுளதறிதும்
    செம்புலப் பெயல் நீர் போல
    அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவேங்கறது சங்கப் பாடல்.. காதல்ர்களுக்காக எழுதியது..

    இதையே கவிஞர் மீரா

    உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
    வாசுதேவ நல்லூர்
    உன் தந்தையும் என் தந்தையும்
    உறவின் முறை
    திருநெல்வேலி சைவப் பிள்ளை மார்
    உனக்கும் எனக்கும் உறவு
    நீ எனக்கு அத்தை பெண்
    எனவே
    அன்புடை நெஞ்சம் தான் கலந்தனவே !

    என எழுதியிருந்தார் பிற்காலத்தில்..

    கவிஞர் வைரமுத்து நறுமுகையே பாட்டில்

    யாயும் யாயும் யாராகியரோனென்று நேர்ந்ததென்ன
    யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
    ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
    செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

    என்று எழுதியிருப்பார்..

    கவிஞர் கண்ணதாசன் அண்ணன் தங்கை உறவுக்கு எடுத்திருக்கிறார்.. அம்புட்டுதான்.. பட் இதை நான் இதுவரை நினைத்ததில்லை.. நன்றிங்க்ணா

  13. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post
  14. #3358
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சொல்ல விட்டுப் போச்..தங்கையாய் நடித்தவ்ர் பெயர் லஷ்மிஸ்ரீ என நினைவு..படம் வந்த சிலமாதங்களில் தற்கொலை செய்து கொண்டார் என நினைவு..

  15. Likes kalnayak liked this post
  16. #3359
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க. கேட்ட நிலாப்பாடல் (நிலாப்பாடல் 65): "வெண்ணிலா வெள்ளித்தட்டு வானிலே முல்லை மொட்டு"
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    சி.க. நீங்கள் எழுதியதை பார்த்து உற்சாகமாகி உங்களுக்காக இந்த பாடல் தருகிறேன்.

    பிரபலமானது என அறிவேன். பலமுறை கேட்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த பாடலை நீங்கள்தான் நினைவு படுத்தினீர்கள்.

    இந்த பாடலும் சென்ற பாடலைப் போல் கவியரசர் எழுதி மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்.
    இசையமைத்தவர் ராஜேஷ். மேல் விவரங்கள் நமது மதுரகானத் திரி ராஜேஷ்தான் தரவேண்டும் என்பதில்லை, தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

    கேட்க இனிமையாகவே இருக்கிறது. சி.க. சொன்னது போல ஹிந்தியில் இருந்து வந்துள்ள பாடல். கேட்க இனிமையாகவே இருக்கிறது. சி.க. சொன்னது போல ஹிந்தியில் இருந்து வந்துள்ள பாடல். யாரோ தமிழின் குடும்பப் பாட்டு வகையில் இந்த பாட்டை குறிப்பிட்டிருந்தார்கள்.






    காளி கோயில் கபாலி இன்னா பண்ணாராம்? சிலையை கடத்தினாரா? சி.க. மேல் விவரங்கள் நீங்கள் தருகிறீர்களா?
    Last edited by kalnayak; 23rd April 2015 at 06:20 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  17. Likes chinnakkannan liked this post
  18. #3360
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காளிக் கோவில் கபாலி மதுரையில் ஸ்ரீதேவியில் தான் ரிலீஸ் ( சரியாங்க முரளி).. ஜெய்கணேஷ் மட்டும் நினைவு.. மாடர்ன் தியேட்டர்ஸ் படம் வழக்கமான அப்பொழுதே ரொம்ப தடவை பார்க்க கேட்கப்பட்ட பழி வாங்கும் கதை என நினைக்கிறேன்.. சரி க்யாஹீவாவையும் பார்த்துடலாமா..



    போன போஸ்ட் எக்கச் சக்க வேலைக்கு நடுல்ல சந்துல சிந்து பாடினது.. அப்புறம் இப்ப வீட்கு வந்தப்புறம் தான் பார்க்கிறேன்..தாங்க்ஸ் கல்ஸ்
    Last edited by chinnakkannan; 23rd April 2015 at 09:21 PM.

  19. Likes rajeshkrv liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •