-
23rd April 2015, 11:08 PM
#431
Junior Member
Diamond Hubber


WORLD BOOK DAY
-
23rd April 2015 11:08 PM
# ADS
Circuit advertisement
-
23rd April 2015, 11:30 PM
#432
Junior Member
Diamond Hubber

Originally Posted by
makkal thilagam mgr
" குடியிருந்த கோயில் ' காவியத்துக்கான ஒப்பனையில் உள்ள நம் மக்கள் திலகத்துடன் தோற்றமளிப்பது .... இளம் வயது சுப வீர பாண்டியன்.
courtesy : Facebook
thanks to prof selvakumar sir - thiru subha veera pandian - film director thiru s p muthuraman's brother.
-
23rd April 2015, 11:50 PM
#433
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
KALAIVENTHAN
‘உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்..... அஹம் பிரம்மாஸ்மி ’
தலைவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற, கவியரசரின் வரிகளில், ‘மாமா’ மகாதேவன் அவர்களின் இசையில், தெய்வப்பாடகரின் கம்பீரக் குரலில் கேட்டாலே தன்னம்பிக்கையும் எழுச்சியும் கொடுக்கும் ‘உன்னை அறிந்தால்...’ பாடல் பற்றி இன்று எழுதலாம் என்று தோன்றிவிட்டது. காரணம் பிறகு சொல்கிறேன். இரண்டு நாட்கள் முன்பு நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் இந்தப் பாடலை நமது திரியில் தரவேற்றியிருந்தார்.
‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்...
மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?
தன்னைத் தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?....
மானத்திலே மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் போல இருக்க வேண்டும். தன்னையும் அறிந்து கொண்டு ஊருக்கும் வழிகாட்டும் அறிவுரைகளை சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா? அப்படி ஊருக்கு நல்லது சொல்லி தலைவர் ஆனவருக்கு நம் தலைவரே உதாரணம்.
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளையில்லையா?.....
இப்புவியில் நேராக, நேர்மையாக வாழும் எல்லோருமே சாமிக்கு நிகர்தான். இதைத்தான் வள்ளுவரும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார். பெரியவர்கள் சொல்வார்கள். தெய்வத்திடம் அதுவேண்டும், இது வேண்டும் என்று கேட்காதீர்கள். உனக்கு எது வேண்டும்? என்று தெய்வத்துக்கு தெரியாதா? என்று. அது போல பிறரின் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளைகள். அப்படி மக்களுக்கு தேவை அறிந்து வாரிக் கொடுத்த தலைவரும் தெய்வத்தின் பிள்ளைதானே?
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாற்றுக் குறையாத
மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்...
இந்த வரிகளுக்கு பொருத்தமானவர் தலைவர்தான் என்றாலும், நம்மையும் இதுபோல சபைகளில் நடக்கும்போது மாலைகள் விழுவதற்கும் மாற்றுக்குறையாத மன்னவன் என்றும் மற்றவர்கள் போற்றிப் புகழும் அளவுக்கும் உயர்ந்திட வேண்டும் என்கிறார். தான் உயர்ந்தது போல நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கு பயன்பட்டு அதன் மூலம் பாராட்டு பெறும் அளவுக்கு உயர வேண்டும் என்கிறார்.
இந்தப் பாடலில் தலைவரின் கெளபாய் டிரஸ்சும் ஸ்டைலும் அட்டகாசம். ‘மா.... ஹூ.. ஹா.. என்ற ஏ.எல்.ராகவனின் தாளக்கட்டு குரலுக்கேற்ப குதிரையில் இருந்து லாவகமாக தலைவர் இறங்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தலைவர் எப்போதுமே நடித்துக் கொண்டிருக்கும்போதும் கூட, சூழ்நிலை குறித்து கவனமாக இருப்பவர். கடைசி பாராவின் போது, நடிகையர் திலகம் சாவித்திரியுடன் தலைவர் வேகமாக, ஸ்டைலாக நடந்து வருவார். சாவித்திரியின் பின்னால் குதிரை வந்து கொண்டிருக்கும்.
ஒரு கட்டத்தில் சாவித்திரியின் முதுகை முட்டுவது போல அவரது நடையை விட வேகமாக குதிரை வரும். பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும் கூட, குதிரை தன் முகத்தால் சாவித்திரியின் முதுகை தள்ளினால் அவர் கீழே விழலாம். அல்லது தடுமாறி ரீ டேக் எடுக்கும் நிலை ஏற்படலாம்.
குதிரை சாவித்திரியின் பின்னால் முட்டுவதைப் போல வருவதை ஓரக்கண்ணால் கவனிக்கும் தலைவர், அதன் முகத்தை பிடித்து பக்கவாட்டில் தள்ளிவிடுவார். குதிரையும் தள்ளிச் செல்லும். இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் திரு.சிவாஜி செந்தில் தரவேற்றிய இந்தப் பாடலில் இக்காட்சியை கவனித்தால் தெரியும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாடல் வரிகளுக்கும் சரியாக வாயசைத்துக் கொண்டே குதிரையையும் கவனித்து அதன் முகத்தைப் பிடித்து தள்ளிவிடும் கவனமும், நுட்பமும், திறமையும், விழிப்புணர்வும் தலைவருக்கே சொந்தம்.
சரி... இப்படி உலகத்தில் போராடி, உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் வாழ வேண்டும், பூமியில் நேராக வாழ வேண்டும், மாபெரும் சபையில் நடந்தால் மாலைகள் விழ வேண்டும், பிறர் தேவையறிந்து வாரிக் கொடுக்க வேண்டும், ஊருக்கும் நல்லது சொல்லி தலைவர்கள் ஆக வேண்டும் ..........இந்த வேண்டும்கள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... என்று தலைவர் வழிகாட்டுகிறாரே. அப்படி நம்மை அறிய வேண்டும். அப்படி அறிந்தால் இந்த சிறப்புகளைப் பெறலாம். அது மட்டுமல்ல....
‘ஜீவாத்மா (மனிதன்) வேறு, பரமாத்மா (தெய்வம்) வேறு அல்ல, இரண்டும் ஒன்றே’ என்று அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரரும் நம்மை நாம் அறியச் சொல்கிறார். (நாம் வேறு, தெய்வம் வேறு என்பது இரண்டாக பார்க்கும் கொள்கை. நாமும் தெய்வமும் வேறு அல்ல ஒன்றே, என்பதை விளக்குவதே அத்வைத கொள்கை. த்வைதம் என்றால் இரண்டாக காண்பது, அத்வைதம் என்றால் இரண்டல்லாமல் ஒன்றாக பார்ப்பது. சாத்தியம் என்பதற்கு எதிர்ப்பதமாக முன்னாலே ஒரு ‘அ’ சேர்த்து அசாத்தியம் என்கிறோமே. அதேபோல த்வைதம், அதற்கு எதிர்ப்பதம் அத்வைதம்)
அப்படி, தெய்வம் வேறு நாம் வேறு அல்ல, என்பதை நாம் உணர்ந்தால் உபநிடதங்களில் ஒன்றான பிரகதாரண்ய உபநிடதத்தில் ஆதிசங்கரர் போதித்த ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற முடிவுக்கு வருவோம். அதாவது நாமே கடவுள் என்று பொருள். மனிதனே கடவுள். மகாகவி பாரதியாரும் ‘தெய்வம் நீ என்று உணர்’ என்று கூறியிருக்கிறார்.
கடவுள் தனியாக எங்கும் இல்லை. இதைத்தான் ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்றார் பேரறிஞர் அண்ணா.
அதன்படி, மக்களை, ஏழைகளை... தெய்வமாக அவர்களுக்கு செய்யும் சேவையையே இறைவன் தொண்டாக உணர வேண்டுமானால், நம்மை உணர வேண்டும். அப்படி நம்மை உணர்ந்தால்
அதாவது.....
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்..... அஹம் பிரம்மாஸ்மி.
இந்தப் பாடலை இன்று எழுதலாம் என்று தோன்றி விட்டது என்று முதலில் கூறினேனே. அந்த உந்து சக்தி ஏற்படக் காரணம், மேலே கூறியபடி அத்வைத தத்துவத்தை போதித்த ஆதிசங்கரர் அவதரித்த நாள் இன்று.
‘அஹம் பிரம்மாஸ்மி’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன் - உங்கள் இந்த பதிவு எல்லா பதிவுகளையும் போல இனிமையாகவும் , அழுத்தமாகவும் இருந்தது . இந்த பதிவை படிக்கும் போது , ஒரு வேட்டைக்காரனை ஆதிசங்கரர்க்குள் நுழைத்து அதன் மூலம் , அத்வைதியத்தை வெளிக்கொண்டுவந்து அதை பரமாத்மாவுடன் இணைத்து , இரண்டும் வேறு அல்ல என்பதை எவ்வளவு ஆழமாக , சுருக்கமாக எடுத்து சொன்னீர்கள் - hats off - உங்கள் இந்த பதிவு ஒரு அலசலுடன் முடிந்து விடக்கூடாது . இன்னும் தொடர வேண்டும் என்பதனால் என்னுடைய கருத்துக்களையும் உங்கள் பதிவுடன் இணைக்க விரும்புகிறேன் - உங்கள் அனுமதியுடன் ..
"நீ உன்னை அறிந்தால் " மிகவும் நெஞ்சை தொடும் பாடல் - இப்படி பட்ட பாடல்களை நாம் சுவைக்கும் போது , அந்த அந்த நடிகர்களை நினைவு கூர்ந்து , பிறகு மறந்து விடுகிறோம் - நமக்காக அவர்கள் பாடிய பாடல்கள் - 1000 புத்தகங்கள் சொல்ல முடியாத தத்துவங்களை கண்ணதாசனும் , வாலியும் சில வரிகளில் சுலபமாக சொல்லிவிட்டு சென்று விட்டனர் - ஒரு சின்ன உதாரணம் : " ஒருவரது துடிப்பினில் வருவது கவிதை ; இருவரது துடிப்பினில் வருவது மழலை " இதை விட ஒரு தாம்பத்தியத்தை அழகாக விளக்க முடியுமா அருவருப்பு இல்லாமல் ???
ஆதிசங்கரரை நினைவு கூறும் இந்த நாளில் உங்களுக்கு இன்னுமொரு சம்பவத்தை சொல்ல ( உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ) விரும்புகிறேன் .
ஒருமுறை அவர் , தன்னுடைய சீடர்களுடன் அடுத்த ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார் - இடையே ஒரு காட்டுவாசி , கிழிந்த உடைகளுடன் , சுத்தம் என்றால் என்ன விலை என்று கேட்பவனாக , தனது நான்கு நாய்களுடன் அவர் நடுக்கும் பாதையில் எதிராக வந்து கொண்டிருந்தான் - இவரின் சீடர்கள் அவனை ஓரம் போக சொன்னார்கள் - ஆதி சங்கரரும் தன் நிலையை மறந்து அவனை சற்று தள்ளி செல்லும்படி சொன்னார் - அந்த காட்டுவாசி வினவினான் " யாரை தள்ளி போக சொல்கிண்டீர்கள் , நானாகிய ஜீவாத்மாவையா அல்லது என்னுள் இரண்டற கலந்துள்ள பரமாத்மாவையா ? " பொறி தட்டியது ஆதிசங்கரருக்கு , ஒன்றும் சொல்லாமல் அவன் காலில் சாஷ்ட்டாங்கமாக விழுந்தார் - என்னை மன்னித்து விடு , அறியாமை இன்றுடன் என்னை விட்டு அகன்றது " என்றார் - அந்த காட்டுவாசி சிரித்துவிட்டு மறைந்து விட்டான் - " நீ உன்னை அறிந்தால் " இதில் இந்த கதையும் அடக்கம் !!
இப்படிப்பட்ட பொன்னான வரிகள் நடிகர் திலகம் பாட்டுக்களிலும் உண்டு - " தூங்கும் கண்களில் ஒளி இல்லை ; துள்ளி நடந்தால் வலி இல்லை " ; " உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை மதிக்கும் !. இந்த வரிகளுக்கான ஒரு குட்டி கதை இராமாயணத்தில் இருந்து ( இதுவும் உங்களுக்கு தெரிந்திருக்கும் )
ஒரு முறை மகாவிஷ்ணு வைகுண்டத்தில் தனது பள்ளியறையில் கால்களில் அணித்துள்ள காலணிகளை கழட்டாமல் உறங்க சென்று விட்டார் - இத பார்த்து கொண்டிருந்த சங்கும் , சக்கரமும் , அந்த காலணிகளை பார்த்து கேலி செய்ததாம் " என்ன திமிரு உனக்கு - நீ இருக்க வேண்டிய இடம் அறைக்கு வெளியே - அவர் மறந்து உன்னை கழட்டாமல் வந்து விட்டார் - உனக்கு எங்கே போனது புத்தி - எப்படி எங்களுக்கு சமமாக படுக்கை அறைக்குள் வருவாய் ? " இப்படி மனதை நோக வைக்கும் வார்த்தைகளால் அந்த காலனிகளை வசை மாறி திட்டினவாம் .. காலணிகள் அழுவதை தவிர ஒன்றும் தெரியாமல் முழித்தன . இறைவன் எல்லாம் அறிந்தும் அறியாதவனைப்போல எழுந்தவுடன் , சங்கையும், சக்கரத்தையும் பார்த்து சொன்னான் " நான் இன்னும் சில நாட்களில் இராம அவதாரம் எடுக்க போகிறேன் - நீங்கள் இருவரும் எனக்கு தம்பிகளாக வருவீர்கள் , ஆதிசேஷனும் எனக்கு ஒரு தம்பியாக வருவான் "
இதைக்கேட்டு விட்டு சங்கிர்க்கும் சக்கரத்திற்கும் தலை கால் புரியவில்லை , காலணிகளை இன்னும் எப்படி நோக வைக்கலாம் என்று திட்டம் போட்டன . காலணிகள் இறைவன் பாதத்தை இன்னும் அழுத்தமாக பற்றி கொண்டு அழுதன .. இறைவன் சிரித்தான் --
சங்கு பரதனாகவும் , சக்கரம் சத்ருகரனாகவும் வளர்ந்தன - இராமன் 14 ஆண்டுகள் வன வாசம் சென்றான் - பரதன் அங்கு சென்று அவனை மீண்டும் அயோத்திக்கு வரும்படி கெஞ்சினான் - கடைசியில் அண்ணன் தந்த பாதுகைகளை தன் தலையில் சுமந்துகொண்டு அயோத்திக்கு எடுத்து வந்து அவைகளை இராமன் அமரும் சிம்மாசனத்தில் வைத்து 14 வருடங்கள் பூஜித்து வந்தான் . ஒருமுறை காலணிகளை கேவலமாக பேசினதிர்க்காக 14 வருடங்கள் அவைகளை பூஜிக்கும் நிலைக்கு இரண்டு சகோதர்களும் ஆளானார்கள் - இந்த பெரிய தத்துவத்தை ஒரே வரியில் கண்ணதாசன் நடிகர் திலகம் மூலம் சொல்வார் - உயரும் போது பணிவும் வர வேண்டும் என்பதை - இல்லையென்றால் இந்த உலகம் உன்னை திரும்பி கூட பார்க்காது .
இராவணனை பார்க்கும் போது நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் , மாற்றான் மனைவி மீது மோகம் கொண்டவன் என்பதே - அதனால் அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான் என்று சொல்பவர்கள் பலர் -அவன் செய்தது மாபெரும் தவறு தான் - இருந்தாலும் அவனிடம் இருந்த ஒழுக்கங்கள் , பண்புகள் , உண்மையான பக்தி , பிறருக்கும் உதவும் குணம் இவைகள் அவன் உயிரை வேலி போட்டு காத்து நின்றன - கடவுளே , நேரில் மனிதனாக வந்த பின் தான் அவனை கொல்ல முடிந்தது - தூங்கும் அவன் கண்களிலிருந்து ஒளியை எடுத்தவனும் இறைவனே - அந்த ஒளியை முதலில் அவனுக்கு தந்தவனும் அந்த இறைவனே .
ஒவ்வொரு தத்துவ பாடல்களையும் உங்களை போல ஆராய முயன்றால் எவ்வளவு புதைந்து கிடக்கும் உண்மைகள் , பிறருக்கு உதவியாக இருக்கும் தத்துவங்கள் வெளியே கொண்டு வர முடியும் ! - இந்த இரு திலகங்களின் பாடல்கள் மூலமே 100க்கும் மேலாக திரிகளை நாம் வெற்றிகரமாக உருவாக்கலாம் - சாரி சார் - என் பகுதி என்னையும் அறியாமல் சற்றே நீண்டு விட்டது . பொறுமையுடன் படித்த எல்லோருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் .
" Where there is righteousness in the heart , there is beauty in character "
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
23rd April 2015, 11:59 PM
#434
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Yukesh Babu
திரு ரவி சார் அவர்களே தங்களுடைய 800 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய 800 பதிவுகள் 8 இலட்சம் பதிவுகளுக்கு சமம் சார் . உங்களுடைய எழுத்துக்கள் எல்லோரையும் திருப்தி அடைய வைக்கிறது
மிக்க நன்றி திரு யோகேஷ் - நீங்கள் அங்கு வந்து பதிவுகளை போடுவது மனதிற்கு மிகவும் ஆனந்தத்தை தருகின்றது - கூடவே ஒரு இனம் தெரியாத பயமும் வருகின்றது - இந்த நட்பு எந்த சுறாவளிக்கும் பழுது ஆகாமல் , கண் படாமல் இருக்க வேண்டும் - மனம் ஆரோக்கியமாக இருந்தால் , அதிலிருந்த வெளி வரும் வார்த்தைகளும் ஆரோக்கியமாகவே இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து . உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியா பாலைத்தான் தருவீர்கள் என்பது என் எண்ணம் - சரி தானே ?
அன்புடன்
ரவி
-
24th April 2015, 06:29 AM
#435
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
800 பதிவுகள் கடந்த சகோதரர் திரு. ரவி அவர்களுக்கு நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களின் ஆசியுடன், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி சார் - சின்ன சாதனைகளைகூட பெரிய மனது பண்ணி பாராட்டும் இந்த திரியில் பங்கு கொள்வதற்கு , என் கருத்துக்களை தெரிவிக்க ஒரு வாய்ப்பு அளிப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் . இன்னும் நான் , உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது முதல் படிக்கட்டில் தான் நின்று கொண்டுருக்கிறேன் . அண்ணாந்து பார்க்கும் ( கழுத்து வலிக்கின்றது சார்) உயரத்தில் நிற்கும் உங்கள் எல்லோரையும் வந்து அடைய - திரு கலைவேந்தனுக்கும் , எனக்கும் , மற்றும் எல்லோருக்கும் பிடிக்கின்ற - கண்கள் இரண்டும் --- பாடலில் வரும் யுகம் யுகமாக , பல யுகங்கள் நான் கடக்க வேண்டியிருக்கும் .
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th April 2015, 08:08 AM
#436
Senior Member
Diamond Hubber

Originally Posted by
saileshbasu
Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema - Chiranjeevi
My sincere request to STAR VIJAY is please do not make the same blunder which Indian Government did with NT. There are many deserving persons NTR, ANR, Dr.Rajkumar. If the intention is to give the award only to the Living Legends why not Manorama/MSV. What Indian Government did to NT should never be the case from Tamil Nadu.
Chiranjeevi, deserves the award, but can wait. First we need to respect our own Legends, why not make a good start from now on?
I am sorry If the above is going to hurt anyone, but facts are facts.
நான் இந்த கருத்தை முழுமையாக வரவேற்கிறேன்.
எம்.எஸ்.வி , இளையராஜா , மனோரமா போன்ற ஜாம்பவான்களுக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th April 2015, 08:41 AM
#437
Junior Member
Seasoned Hubber
DR. RAJKUMR'S BIRTH DAY 24.4.2015
-
24th April 2015, 09:40 AM
#438
Junior Member
Veteran Hubber
-
24th April 2015, 10:38 AM
#439
Junior Member
Diamond Hubber
The above song used to broadcast by AIR during 1970's between 3:30 to 4:30 very frequently in the afternoon [ two songs from each language].
May appear to have see this song. Yes NT's Thirisoolam [Malar koduthen]:
Last edited by saileshbasu; 24th April 2015 at 03:41 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th April 2015, 11:07 AM
#440
Junior Member
Veteran Hubber
Birthday remembrance of MGR of Kannada film industry DrRajkumar
Dear Sailesh sir.
Though DrRajkumar is hailed as the MGR of Kannada screen, he was also the NT's performer in many movies as there was virtually no NT for Kannada movie world even as good actors like Vishnuvardhan were emerging. Rajkumar had given outstanding performances in movies like Sanathi(Shenoy)Appanna in line with Thillaanaa Mohanaambal, the movie acclaimed by Makkal Thilagam endorsing the acting histrionics of NT many times...
Last edited by sivajisenthil; 24th April 2015 at 11:10 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks