-
26th April 2015, 08:26 AM
#3371
Senior Member
Veteran Hubber
Jugalbandi 27 Tamil -Hindi- English
From 'Or Iravu' (1951)
Ayyaa saami avoji saami....
From 'Samadhi' (1950)
Gore Gore ......
From Edmundo Ros band(1945)
Chico chico from Puerto Rico...
Enjoy !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
26th April 2015 08:26 AM
# ADS
Circuit advertisement
-
28th April 2015, 09:52 AM
#3372
Senior Member
Senior Hubber
ராஜ்ராஜ்,
ஓர் இரவு பாடல், ஹிந்தியின் சமாதி படப் பாடல் மற்றும் ஆங்கிலப் பாடல் ஜுகல்பந்தி நன்றாக இருக்கிறது. 1940-50 களிலேயே ஆங்கில பாடல்களை காப்பியடித்தார்கள் என்று சொல்ல முடியுமோ? அப்போது இப்போதைக்கு இருக்கும் வசதி கிடையாதே. இருந்தாலும் ஆங்கிலப் பாடலை கேட்டு அதை தழுவலாக மும்பையில் கொண்டு வந்து அங்கிருந்து தமிழுக்கு வர இது சாத்தியமாயிருக்கிறது. இது முடிய 6 வருடங்கள் ஆகியிருக்கிறது. இப்போதெல்லாம் அசலுக்கு முன் அதன் காப்பி நகல் வந்து விடும்.
Last edited by kalnayak; 29th April 2015 at 10:44 AM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
28th April 2015, 10:37 AM
#3373
Senior Member
Senior Hubber
நிலாப் பாடல் 68: "நிலவும் மலரும் பாடுது, என் நினைவில் தென்றல் வீசுது"
--------------------------------------------------------------------------------------------------------------
ஒருத்தர் என்னை ரொம்பவே வையறாருங்க "நீயெல்லாம் என்னலே நிலாப்பட்டு எழுதறே. படத்துப் பேருலயே நிலா இருக்கு. பாட்டும் நிலாவுல ஆரம்பிக்குது. இதையெல்லாம் முதல்லையே எழுதாம என்னலே நிலாப் பாட்டு?" அருமையான இயக்குனர் ஸ்ரீதரோட படம். தென்றலோட தவழும் A.M.ராஜாவோட இசை. என்னவோ போங்க. கொஞ்சம் பொறுமை வேணும். நானும் எம்புட்டு நாளு வேலைக்கு நடுவில நிலாப் பாட்டு எழுதிட்டு இருக்கேன். நான் எழுதுறதுக்கு முன்னாலேயே சி.க வேற எழுதிடறாரு. இந்த மாதிரி பாட்டை அவரு எழுதி என்னை காப்பாத்தி இருக்கலாம். பரவாயில்லை.
A M . ராஜாவும் இசையரசி பி.சுசீலாவும் பாடியிருக்கிறார்கள். காதல் மன்னன் ஜெமினி கணேசனும், வைஜயந்தி மாலாவும் நடித்து நிலாவை கொண்டாடுகிறார்கள். மீண்டும் காதல் பாடல்தான். என்ன சுகமான பாடல் கவியரசரின் வரிகளிலே (இறைவா, இதுவாவது சரியா இருக்கணும்பா!!!)
பாடல் வரிகள்:
----------------------
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காஅல் ஜாடை பேசுது
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா
மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் பார்க்க முடியுமா
கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
மலர் முடிப்போம் மணம் பெறுவோம்
மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் கானம் பாடுவோம்
------------------------------------------------------------------------------------
காணொளி:
-----------------
தேன் நிலவில் பாடவேண்டிய பாடல்தான்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th April 2015, 11:10 AM
#3374
Senior Member
Senior Hubber
பட்டாக்கத்தி விரும்பிக் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. அவருக்காக உலக அழகியின் நடன அசைவுகளை கொண்ட இந்த நிலாப்பாடல்.
நிலாப் பாடல் 69: "வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே"
---------------------------------------------------------------------------------
A. R. ரஹ்மான் இசையில் மணிரத்தினம் படத்திற்காக உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் முன்பாக உலக அழகி ஆடிய பாடல். உடன் ஆடாமல் பார்த்து நடந்து நிற்பவர் மோகன்லால். பாடியவர்: ஆஷா போஷ்லே. உறுதியாக சொல்லலாம் கவிப்பேரரசுவின் வரிகள் என்றுதான் நினைக்கிறன். பாட்டிலேயே காதல் என்று சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் விவாதிக்க வேண்டுமா?
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
(வெண்ணிலா)
என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்
(வெண்ணிலா)
கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
(வெண்ணிலா)
இருவர் பாடாமல் ஒருவர் மட்டும் ஏன் பாடினார்? - உலக அழகி இருக்கறப்போ அதெல்லாம் தேவையா?
Last edited by kalnayak; 28th April 2015 at 12:38 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th April 2015, 11:57 AM
#3375
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th April 2015, 12:30 PM
#3376
Senior Member
Senior Hubber
அப்பாடி சி.க. வந்துட்டீங்களா. நீங்களும் நானும் மாத்தி மாத்தி குழப்பித்தான் பார்க்கறோம். வர்றவங்க தெளிவா இருக்கறாங்களே!!! இல்லை கண்டுக்காம போறாங்களா. அதுவுமில்லைன்னா தெளிவா இருக்கறாப்போலே நடிக்கறாலா? தெரியலை.
நீங்க குழப்பறதை நான் ரொம்ப சீரியசா எடுத்துகறதில்லை. நான் குழப்பறதையும் நீங்க சீரியசா எடுத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்.
"குலோப் ஜாமூனில் செய்த சிற்பம் நித்தி படம் பார்த்தீங்களா "
ஆனா அதுக்காக நீங்க இப்படி சொல்லி நான் குழம்பி போயிட்டேனே!!!
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th April 2015, 12:32 PM
#3377
Junior Member
Junior Hubber
நன்றி கல்நாயக். நினைவு தப்பாமல் ஞாபகம் வைத்திருந்து 'இருவர்' படத்தின் 'வெண்ணிலா' பாடலை பதிவு செய்ததற்கு நன்றி. இந்த அமிதாப்பின் அழகு மருமகளுக்கு உடம்பு வில்லாய் என்னமாய் வளைகிறது! ரஹ்மானின் பாடல்களில் என்னுடைய இரண்டாவது சிறந்த பாடல் இது.
ஆமாம்! முதல் பாடல் என்ன என்று கேட்கிறீர்களா?
சொல்லியே விடுகிறேன். 'பவித்ரா' படத்தில் மிக மிக இனிமையான பாடலான 'செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதா' பாடல்தான் அது.
மனோவுடன் சேர்ந்து பாடும் பல்லவி மிக அற்புதமான தன் குரலில் இப்பாடலை எங்கோ கொண்டு சென்று விடுவார்.
சும்மா 'உயிரே...உயிரே' என்று திரும்ப திரும்ப புலம்பும் 'பம்பாய்' பட பாடலைவிட நான் மேற்சொன்ன பாடல் மிக மிக அற்புதமானது. முடிந்தால் பதியுங்கள் நாயக். நீங்களும் உளம் மகிழ்வீர்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th April 2015, 01:17 PM
#3378
Senior Member
Senior Hubber
யாரும் கேட்காத பாடல்... அப்படின்னு போடத்தான் ஒரு ஆசை. யாரும் கேட்காத ஒரு பாடல் எப்படி போட முடியும்-ன்னு சி.க. தெளிவா கேட்பார். யாரும் விரும்பி கேட்காத பாடல்-ன்னு சொன்னால் என்னை தொலைச்சிடுவாங்க. எல்லாரும் விரும்பிக் கேட்கும் பாடல்-ன்னு சொல்லவும் முடியலை. ஆஹா. இப்படி சொல்லிடலாம் - "எல்லோரும் விரும்பிப் பார்த்து கேட்க வேண்டிய பாடல்". இதுலயும் குறை கண்டுபிடிச்சா இந்த கல்நாயக் என்னதான் செய்வாங்க? பாவம். சரி அந்த பாடல் என்னன்னு பார்த்திடலாமா. பாட்டை பார்த்திட்டு எல்லோர் கிட்ட இருந்தும் லைக்ஸ் அள்ளிடலாம்னு இருக்கேன். ஏமாத்திடாதீங்க மக்களே.
நிலாப் பாடல் 70: "இரவும் நிலவும் வளரட்டுமே. நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே"
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இங்கே தேவிகா ஆடுகிறார், ஓடுகிறார், ... ஆனால் நடிகர் திலகம் நடக்கிறார் பாருங்கள். சிறிது நேரம் விட்டு மறுபடியும் நடை. இந்த நடையைப் பத்தி நான் என்ன சொல்றது. வேகமாய் நடக்கும் அந்த கம்பீர நடையை பற்றி விளக்கமாக நடிகர் திலகம் திரிக்கு போய் தேடிப் படியுங்கள். இந்த பாடல் ஹிந்துஸ்தானி ராகமான சாரங்க தரங்கிணி-யில் அமைந்தது என்று சொல்கிறார்கள். கோபால் போன்றவர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. இந்த கோயில் கொனாரக் சூரியனார் கோயில் என்கிறார்கள். இல்லை கர்நாடகத்தின் பேலூர் மற்றும் ஹளேபீடு என்றும் சொல்கிறார்கள். பார்த்தவர்கள் சொல்லட்டும். (கல்நாயக்கிற்கு ஒன்றும் தெரியாது என்று இப்போதாவது மற்றவர்களுக்கு தெரியட்டும். ஒன்னும் தெரியாமலேயே எம்புட்டு நாளா தெரிஞ்சமாதிரி நடிக்கிறது? உண்மைய சொன்னாலும் இந்த உலகம் நம்ப மாட்டேங்குதே!!!)
பொதுவாக புராணப் படங்களுக்கு திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை அமைத்துத்தான் பார்த்திருப்போம். மெல்லிசை மன்னர்கள் அரிதாக இசை அமைத்த அற்புதமான புராணப் படம். அவர்கள் இசையமைத்த மற்ற புராணப் படங்களை தெரிந்தவர்கள் சொல்வார்கள். பாடலைப் பாடியவர்கள் தமிழ்த் திரையுலகின் பெருமையான ஜோடிப் பாடகர்கள் டி.எம். சௌந்தர் ராஜன் மற்றும் இசையரசி பி. சுசீலா. பாடல் வரைந்தவர் கவியரசர் கண்ணதாசன். உருவாக்கியவர் B. R. பந்துலு.
கவியரசர் சொல்வது - இரவும் நிலவும் வளர்ந்தால் நம் இனிமை நினைவுகள் தொடரும். அடுத்த வரிதான் அவரோட தனித்தன்மை. "தரவும் பெறவும் உதவட்டுமே." இப்படியேதான் பாட்டு முழுக்க என்ன என்னமோ சொல்றாருங்க. உங்களுக்கு நல்லாவே புரியும். வேற வித்தியாசமா உங்களுக்கு புரிந்தால் இங்க சொல்லுங்க. சரி பாட்டு வரிங்களை பார்த்திடலாமோ.
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே - அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே - நெஞ்சில்
இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே - அங்கு
அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே - அதில்
நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
-----------------------------------------------------------------------------------------------------------
சரி நடிகர் திலகத்தின் நடை அழகைப் பார்க்கலாமா இப்போது, அந்த அழகிய பாடலைக் கேட்டுக் கொண்டே.
கர்ணன் என்பதற்காக நடிகர் திலகத்துடன் எல்லோருமே இனிமையை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
28th April 2015, 01:33 PM
#3379
Senior Member
Senior Hubber
ஹாய் பட்டாக்கத்தி,
வெண்ணிலா க்யுப் பாடலுக்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி. உங்களின் முதல் விருப்பப் பாடலான "செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதா" எனக்கும் மிகவும் பிடித்த பாடல்தான். நீங்கள் கேட்டு விட்டீர்கள். அந்த காணொளியை தரவேற்கிறேன். ஆனால் நிலாப் பாடல் அல்ல என்பதால் நான் மேற்கொண்டு இப்போதைக்கு அதைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாது.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th April 2015, 03:13 PM
#3380
//பொதுவாக புராணப் படங்களுக்கு திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை அமைத்துத்தான் பார்த்திருப்போம். மெல்லிசை மன்னர்கள் அரிதாக இசை அமைத்த அற்புதமான புராணப் படம். அவர்கள் இசையமைத்த மற்ற புராணப் படங்களை தெரிந்தவர்கள் சொல்வார்கள்.//
GANGA GOWRI - MSV alone
SAKTHI LEELAI - TKR alone
Kalnayak,
Iravum Nilavum Valarattume is the topmost for all your 'Nila Songs'.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks