-
27th April 2015, 01:51 PM
#601
Junior Member
Platinum Hubber
-
27th April 2015 01:51 PM
# ADS
Circuit advertisement
-
27th April 2015, 01:52 PM
#602
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 01:57 PM
#603
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 01:58 PM
#604
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 02:01 PM
#605
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 02:03 PM
#606
Junior Member
Platinum Hubber
-
27th April 2015, 03:58 PM
#607
Junior Member
Seasoned Hubber
நன்றி .அந்தி மழை - இணையத்தளம்
1966-ல் தெருவில் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து பிப்ரவரி மாதம், 11 வது வட்ட திமுக.உட்கிளையாக `மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்’ ஆரம்பித்திருந்தோம். ஜனவரியில் ஆரம்பிப்பதாக இருந்தது, லால் பகதூர் சாஸ்திரி இறந்ததால் அதைத் தள்ளி வைத்து பிப்ரவரியில் திறந்தோம்.திருச்சி, திமு க எம் எல் ஏ , எஸ் எஸ் .மணி திறந்து வைத்தார்.கலைஞரை அழைக்கும் கனவில் ஆரம்பித்து, காஞ்சி கல்யாண சுந்தரம், காட்டூர் கோபால், என்று விசாரித்து. எஸ்.எஸ்.மணியில் வந்து நின்றது. அவருக்கு போக்கு வரத்து செலவுக்கு ஐம்பது ரூபாய் மணி ஆர்டர் நான் தான் அனுப்பி வைத்தேன்.அதிலிருந்து மன்றத்தின் கடிதப் போக்கு வரத்துக்கு நானே பொறுப்பானேன்.எங்கள் வீட்டு முகவரியான `28.சுடலை மாடன் கோவில் தெரு’அதற்கான முகவரியாயிற்று.


தென் சென்னை எம் ஜி ஆர் ரசிகர் மன்ற செயலாளர் எஸ்.கல்யாண சுந்தரம்,வடசென்னை, குமரப்ப முதலி தெரு,ஏழு கிணறு எம்ஜிஆர் ரசிகர் மன்றம், மதுரை புதுக்குயவர் பாளையம், சீத்தாரமன், சுந்தர ராஜன், வேலூர் ஆர். எஸ் மாறன்,பீப்பிள்ஸ் ஸ்டார் எம்ஜி ஆர் ஃபேன்ஸ் அசோஷியேஷன் தூத்துக்குடி, பாலகிருஷ்ணன்,திருச்சி. தா வரதராஜன். (தினத்தந்தி, டெலி பிரிண்டர் ஆபரேட்டர், பறவை சாலை, திருச்சி.)இன்னும் சேலம் , கரூர், என்று எத்தனையோ மன்றங்கள்.தினமும் தபால் வரும் , வசூல் நோட்டீஸ் வரும். நானும் இங்கே அடிக்கிற நோட்டீஸ்களை அனுப்புவேன். இரண்டு வருடத்தில் அவை நூற்றுக் கணக்கில் சேர்ந்து விட்டது. சிலர் அற்புதமான பேனா நண்பர்களாகி விட்டனர்.எல்லவற்றையும் ஒரு பெரிய கைப் பையில் எடுத்துக் கொண்டு சென்னைக்கு கணபதியண்ணனுடன் ரயிலேறினோம்.
Last edited by Varadakumar Sundaraman; 28th April 2015 at 08:21 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th April 2015, 04:25 PM
#608
Junior Member
Seasoned Hubber
1964 –ல் தனுஷ் கோடி புயல் வீசிய போது அங்கு போய் விட்டு திருநெல் வேலியில் ஒரு மாபெரும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.அப்புறம் எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி விழாவிற்கு வந்திருந்தார்.67-ல் தி மு க ஆட்சிக்கு வந்த போது, எம்ஜியார் சிறு சேமிப்பு திட்ட துணைத்தலைவர் ஆக இருந்தார்.அப்போது சந்திரகாந்தா நாட்டியத்திற்கு தலைமை தாங்கி சிறு சேமிப்பு விழா நடத்த திருநெல்வேலி வந்திருந்தார்.அப்போது கலெக்டர் வீட்டில் மதிய விருந்து.அந்த சமயத்தில், தினமலரில் நிருபராய் இருந்த என் ஒன்று விட்ட அண்ணன் ஒருவர் அங்கே அழைத்துப் போயிருந்தார்.அப்போதுதான் முதன் முதலாக நெருக்கமாக பார்த்தது. அது பழைய ப்ரிட்டிஷ் காலத்து வீடு.அங்கே மீட்டிங் நடந்து கொண்டிருந்த அறையின் சுவர் பச்சை வண்ணமாயிருந்தது.தரையிலும் அடர் பச்சை நிறத்தில் காயர் விரிப்பு, அந்த பின்னணியில், கம்பிகளற்ற ஜன்னல் வழியாகரோஸ் நிறத்தில் எம் ஜி ஆரைப் பார்த்ததும் எனக்கும் சபாபதிக்கும் மூச்சே நின்று விட்டது. அவனும் என் அண்ணனிடம் கெஞ்சிக் கூத்தாடி உள்ளே வந்து விட்டான்.எனக்கும் அவன் வந்தது குறித்து ரொம்ப சந்தோஷம்,ஏனென்றால் நான் எம் ஜி ஆரை நேரில், அருகில் பார்த்ததுக்கு,சாட்சி வேண்டாமா?.மீட்டிங் முடிந்ததும் சாப்பிடுவதற்கு முன், அவர் சாலையில் கூடியிருந்த கொஞ்சம் ரசிகர்களின் ஆரவாரம் கேட்டு காம்பவுண்ட் வாசல் வரை வந்து கை அசைத்தார், இருங்க வாரேன் என்கிற மாதிரி.சபாபதி `ச்சேய்’ என்று உற்சாக மிகுதியில் சத்தம் போட்டான்.அவருடைய பாடி கார்ட் எங்கள் அருகே வந்து யார் என்ன என்று விசாரிக்கவும், தள்ளவும் ஆரம்பித்து விட்டார்.என் கையை லேசாக தட்டி விட்டார்.எலும்பில் வலி விண்ணென்று தெறித்தது.தர்மலிங்க அண்ணன் என்றேன், அந்த ஆள் சிரித்து விட்டார். அவர்தான் எங்க வீட்டுப் பிள்ளையில் ஒரு சண்டைக் காட்சியில் சரோஜா தேவியிடம் கைப்பையை திருடிக் கொண்டு ஓடுவார்.
எப்படியாவது சென்னை செல்ல வேண்டும், எம் ஜி ஆருடன் புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை கிடந்து அடித்தது.தின மலர் நிருபர், சங்கரின் அண்ணன், ஆவுடையப்பன்,என்னிடம் ரொம்ப பிரியமாக இருப்பார்.சங்கரண்ணனுக்கு வேலை வாங்க உதவியது அப்பா தான்.இருவரும் எனக்கு பெரியப்பாவின் மகன்கள்.அவரது பெயரும் ஆவுடையப்ப பிள்ளை தான்.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பெரிய ஆர்வலர். மு.வ. வெல்லாம் நல்ல பழக்கம்.அந்தக் குடும்பத்திலும் ஏதோ கஷ்டம்.திருநெல்வேலிக்கு பிழைக்க வந்து விட்டார்கள்.ஆவுடையப்ப அண்ணான் ஜேயார் மூவிசில் ப்ரொடக்*ஷன் மேனேஜராக வேலை பார்த்தார்.புதிய பூமி படம் படப் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.தென்காசியில் அவனுக்குப் பழக்கமானவர்கள் எடுக்கிற படம். நம்பிக்கையான ஆள் தேவை என்பதால் அங்கே வேலை பார்த்து வந்தான்.எம் ஜி ஆர் குண்டடி பட்டு, படப் பிடிப்பெல்லாம் நின்று போயிருந்த சமயம், திருநெல்வேலியில்தான் அவர் இருந்தார்.அப்போது அவரிடம் என் சென்னை வரும் ஆசை பற்றிப் பேசினேன். அட கிறுக்கா இதுக்கா யோசிக்கெ, அங்க கடல் மாதிரி ஆபீஸ் எடுத்துப் போட்டுருக்கோம்.நீ எப்ப வேண்ணாலும் வா, என்றார். இப்ப ரகசிய போலீஸ் ஷீட்ட்ங்க்ல பிஸியா இருக்காரு.அது முடிஞ்சதும் நம்ம படம் தான்னுருக்காரு, என்று சொல்லி ரகசிய போலீஸ் ஸ்டில் ஒன்றைக் கொடுத்தார்.
நன்றி .அந்தி மழை - இணையத்தளம்
Last edited by Varadakumar Sundaraman; 28th April 2015 at 08:22 AM.
-
28th April 2015, 05:33 AM
#609
Junior Member
Platinum Hubber


1968 ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ரசிக மன்ற செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பதிவு அபூர்வ ஆவணம் .அந்தி மழை- இனைய தளத்தில் இருந்து எடுத்து பதிவிட்ட திரு குமார் அவர்களுக்கு நன்றி .
-
28th April 2015, 06:57 AM
#610
Junior Member
Platinum Hubber
****TODAY 2.00PM WATCH VASANTH TV
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks