-
29th April 2015, 08:22 AM
#681
Junior Member
Seasoned Hubber
"காலத்தை வென்றவன் காவியமானவன் "
ஒரறிவு உயிரினங்கள் முதல்
ஆறறிவு மனிதர்வரை
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும் காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள் மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?
அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விட திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய் இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?
தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?
அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
புரட்சித் தலைவனாய் அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான சூத்திரம் என்னவாக இருக்கும் ?
கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?
புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும் புதிராய் இருப்பினும்
நல்லவன் வாழ்வான் தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர் புகழ் இன்றுபோல் என்றும் வாழ்க என
வாழ்த்தி நிறைவான பெருமிதம் கொள்வோ
courtesy - ramani -net
-
29th April 2015 08:22 AM
# ADS
Circuit advertisement
-
29th April 2015, 08:40 AM
#682
Junior Member
Seasoned Hubber
தமிழ்த் திரைப்படஉலகில் வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றிய திரைப்படம் 1963-ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது. ஆம். எம்.ஜி.ஆர் நடித்த “கலைஅரசி” படம்தான் அந்த முதல் தமிழ்த் திரைப்படம்.
“கலைஅரசி” படச் சாதனையில் ரவீந்தருக்கு தலையாய பங்களிப்பு உண்டு. டி.இ.ஞானமூர்த்தி எழுதி வைத்த அறிவியல் புனைவிலிருந்து மூலக்கருவைக் கையாண்டிருந்தாலும் கதை, திரைக்கதை, வசனம் முழுவதையும் எழுதி வடிவமைத்தது ரவீந்தர்
தமிழ்த் திரையுலகிற்கு பாரசீக, அரபு நாட்டுக்கதைகளை அறிமுகம் செய்து முஸ்லீம் கதாபாத்திரங்களை புகுத்தி வெற்றி பெற்றதோடல்லாமல் இதுபோன்ற எண்ணற்ற புதுமைகளை தமிழுக்கு கொண்டு வந்த பெருமை ரவீந்தரைச் சாரும். புதுப்புது யுக்திகளை கையாண்டு சினிமா உலகில் பரிசோதனை செய்து வெற்றி கண்டவர்.
பஞ்ச் டயலாக் என்ற Concept-யை தமிழ்ப்பட உலகில் முதன்முதலில் புகுத்திய பெருமையும் இவருக்குத்தான் உண்டு. பி.எஸ்.வீரப்பா பேசிய “மணந்தால் மகாதேவி இல்லயேல் மரணதேவி” என்ற காலத்தால் அழியாத பஞ்ச் டயலாக் ரவீந்தர் எழுதியதுதான்.
தமிழ் மொழியில் எத்தனையோ அறிபுனைத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. “விக்ரம்”, “நியு”, “இரண்டாம் உலகம்”, “அம்புலி”, “எந்திரன்” என எத்தனையோ சினிமாக்களை உதாரணம் காட்ட முடியும். இவை யாவற்றிற்கும் முன்னோடியாகத் திகழ்ந்த படம்தான் “கலையரசி”.
வேற்றுக் கிரக மனிதர்களை மையமாக வைத்து எழுதப்பட்டு, இந்தியத் திரையுலகில் மாபெரும் புரட்சியை உண்டு பண்ணிய முதல் அறிபுனைத் திரைப்படம் இதுதான்.
இதுபோன்ற அறிவியல் தொடர்பான கதைகளை கையாண்ட சுஜாதா, அரவிந்தன் நீலகண்டன், ராஜ்சிவா, ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் நாகூர் ரவீந்தருக்கு பின்னர் வந்தவர்கள்தான் என்பதை இங்கு நான் பதிவு செய்வதன் மூலம் உண்மை நிலவரம் இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தெரியவரும்.
“கலைஅரசி” வெள்ளித்திரையில் திரையிடப்பட்டபோது வெகுவாகப் பேசப்பட்டது. பறக்கும் தட்டு Concept-யை இந்தியத் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்தது ரவீந்தர்தான். கதையை உருவாக்கி ஏ.காசிலிங்கத்திடம் தனது கற்பனைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக ஆர்ட் டைரக்டர் ஏ.கே.பொன்னுச்சாமியை விண்கலம் மற்றும் அயல்கிரகத்து வடிவமைப்பை வரையச் செய்தவர் ரவீந்தர்.
1950-களின் தொடக்கம்வரை வேற்றுக்கிரக விண்கலத்தை பறக்கும் தட்டு (Flying Saucers) என்றே அழைத்து வந்தனர். பிற்காலத்தில் இதனை ‘அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள்” ’(UFO-Unidentified Flying Object) என்று அழைக்கலாயினர். அரிஸ்டாட்டில் இதனை “சொர்க்கத்தின் தட்டு” என்று அழைத்தார்.
கி.பி. பதினோறாம் நூற்றாண் டிலேயே சீனக் கல்வியாளரான ஷென்குவே என்பவர், தான் எழுதிய கட்டுரையில் “பறக்கும் தட்டு” பற்றிய தன் கற்பனையை வடித்திருந்தார். பறக்கும் பொருளின் கதவுகள் திறக்கப்படக் கூடியதாகவும் அது ஒளி வீசக் கூடியதாகவும் அதிவேகமாகச் செல்லக் கூடியதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
கலைஅரசி படத்தில் பறக்கும் தட்டின் வடிவமைப்பு இதுபோலத்தான் இருந்தது.
ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எம். ஜி. ஆர், கதாநாயகனாகவும் பி. பானுமதி மற்றும் பலரும் “கலைஅரசி: படத்தில் நடித்தனர். இவர்களைத் தவிர ராஜஸ்ரீ, பி.எஸ்.வீரப்பா, கண்ணன், எம்.என்.நம்பியார், சச்சு, சி.டி.ராஜகாந்தம், எஸ்.ஆர்.ஜானகி, எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா என்று ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.
இதில் இடம்பெற்றிருந்த சச்சு, எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா, பாடகி ரத்னமாலா போன்ற கலைஞர்கள் ரவீந்தர் கதாசிரியராக இருந்த எம்.ஜி.ஆர்.நாடக மன்றத்திலிருந்து பயிற்சிபெற்று உருவானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும், இப்படத்தில் எம்.ஜி.ஆர் பெயரும் ரவீந்தர் பெயரும் ஒன்றாக இடம் பெற்றிருந்ததாலும், இதனை எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் படம் என்றே பலரும் நினைத்தனர். உண்மையில் “சரோடி பிரதர்ஸ்” என்ற புதிய தயாரிப்பாளர்கள் இப்படத்தை தயாரித்து வழங்கியிருந்தார்கள்.
1950-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இப்படம் எடுத்து முடிப்பதற்கு நீண்ட காலம் பிடித்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது. காரணம், இப்படத்தின் பாடலாசிரியர்களின் ஒருவரான பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் 1959-ஆம் ஆண்டே இறந்துவிட்டார். இப்படம் 1963-ஆம் ஆண்டுதான் திரைக்கு வந்தது. ரத்னமாலா, பி.லீலா, ஜிக்கி போன்ற பாடகிகள் 50-களில்தான் புகழ்வெளிச்சத்தில் இருந்தார்கள். .
“கலைஅரசி” படத்தில், கே.வி.மகாதேவன் இசையமைத்த பாடல்கள் யாவும் மனதில் நிற்கும் வண்ணம் சிறப்பாக அமைந்திருந்தன. சீர்காழி கோவிந்தராஜனும், பி. பானுமதியும் இணைந்து பாடும் இப்பாடல் அதில் இடம் பெற்றிருந்தது.
ஆண்: “கலையே உன் எழில்மேனி கலையாவதேன்?
காதல் கணநேரம் பிரிந்தாலும் கனல் ஆவதேன்?
பெண்: உறவாடும் இவ்வேள் பிரிவென்பதேன்? – நம்
உயிரோடு உயிர்சேர்ந்து பெறும் இன்பத்தேன்!
ஆண்: இருவேறு பொருள் கூறும் கண் பார்வை ஏன்?
ஒன்று நோய் தந்ததேன்? ஒன்று மருந்தானதேன்?”
கவித்துவம் நிறைந்த இப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ். பாடிய “நீலவான பந்தலின் கீழே”, ஆலங்குடி சோமு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய “அதிசயம் பார்த்தேன்” போன்ற இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஜனரஞ்சகமான பாடல்களாகவே இருந்தன
அரச படங்களுக்கு தூயதமிழில் அடுக்குமொழி வசனங்கள் மட்டுமல்லாது, வழக்குத் தமிழில் எதார்த்தமான உரையாடல்களை எழுதுவதிலும் ரவீந்தர் திறம் பெற்றிருந்தார். அது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது
காதல், சாகசம், அறிவியல் புனைவு, அதிரடி, நவீனம் என்று அத்தனை பொழுதுபோக்கு அம்சமும் நிறைந்த படமாக பல புதுமைகளை கொண்ட படமாக “கலைஅரசி” இருந்தபோதிலும், இப்படம் அடித்தட்டு ரசிகர்களை ஏனோ சென்று அடையவில்லை.
அன்றைய சூழ்நிலையில் அரச கதைகள், சமூக கதைகள் மட்டுமே வெற்றியை தேடித் தந்தன. இது போன்ற அறிவியல் புனைவுகள் தமிழ்த்திரையுலகிற்கு பரிசோதனை ஓட்டம் (Experimental) என்றுதான் சொல்ல வேண்டும். இதே படம் பிற்காலத்தில் வெளிவந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்திருக்குமோ என்னவோ தெரியாது. “கலைஅரசி” எம்.ஜி.ஆரின் வெற்றிப்பட வரிசையில் இடம் பெறாவிட்டாலும் தயாரிப்பாளருக்கு நட்டத்தை உண்டு பண்ணவில்லை.
எம்.ஜி.ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று கருதலாகாது. மற்ற எம்.ஜி.ஆர். படங்களைவிட வசூல் சற்று குறைவாக இருக்குமே தவிர பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ பண இழப்பை உண்டு பண்ணிவிடாது. தமிழில் ஒரு பழமொழி உண்டு, “யானை படுத்தால் குதிரை மட்டம்” என்று. நட்டம் ஏற்படாத அளவுக்கு எம்.ஜி.ஆர். படங்கள் வசூலை பெற்றுத் தந்து விடும்.
எம்.ஜி.ஆர் இரட்டைவேடங்களில் நடித்த 17 படங்களில் “கலைஅரசி”, நாடோடிமன்னன் – இவையிரண்டும் ரவீந்தரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த படைப்புகள். இவையிரண்டும் எம்.ஜி.ஆரின் ஆரம்பகால படங்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிற்காலத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைத் தழுவிய அத்தனை இரட்டைவேட எம்.ஜி.ஆர். படங்களுக்கும் இவைகள்தான் முன்னோடியாகத் திகழ்ந்தன.
“கலைஅரசி” படத்தில் மற்றொரு சிறப்பு என்னவெனில் கதாநாயகன் எம்.ஜி,ஆர் மற்றும் கதாநாயகி பி.பானுமதி இருவருமே இரட்டை வேடமேற்று நடித்திருப்பார்கள். இதுபோன்று வேறுபடம் ஏதாவது வெளிவந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
எம்.ஜி.ஆர். “மோகன்” மற்றும் “கோமாளி” என்ற இரு மாறுபட்டவேடம் ஏற்று நடித்திருப்பார். பி.பானுமதி, “வாணி” மற்றும் “வள்ளி” என்ற இரு பாத்திரங்களில் நடித்திருப்பார்.
வேற்றுக் கிரகத்திலிருந்து விண்கலம் ஒன்று பூமிக்கு வருகிறது. அதில் வேற்றுக்கிரகவாசிகள் இருவர் உள்ளனர். அவர்கள் பார்வைக்கு பூமிவாசிகள் போலிருப்பினும் விஞ்ஞான ரீதியாக பெரிதும் முன்னேற்றம் கண்டவர்கள்
இந்த படத்தில் காமிரா அபாரமாக கையாளப்பட்டிருக்கும். காமிராமேன் ஜே.ஜி.விஜயம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருப்பார். இவர் ‘ஜெனோவா’, ‘ஆனந்த ஜோதி’. ‘அன்னையின் ஆணை’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
“Zoom Lens” தமிழ்த்திரையுலகில் புழக்கத்தில் இல்லாத காலம் அது. விஞ்ஞான நுட்பங்கள் அதிகம் கையாளப்படாத காலம். பறக்கும் தட்டு, வேற்றுக் கிரகக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் ஒளிப்பதிவாளர் எப்படிப்பட்ட சவால்களையெல்லாம் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். “ஹாலிவுட்” சினிமா உலகைப் போன்று தொழில்நுட்பம் வசதி இல்லாத அந்தக் காலத்தில் இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க மிகுந்த மனோதைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும்.
தந்திரக் காட்சிகள் எடுப்பதில் வல்லவர்களான, ஜெர்மனியில் இருந்து டி.ஆர்.சுந்தரம் அவர்களால் வரவழைக்கப்பட்ட ‘வாக்கர்’, ‘பேய்ஸ்’ என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்களிடம் பயிற்சி பெற்றவர் ஜே.ஜி.விஜயம். “கலைஅரசி” படம் வெளியானபோது இந்திப்பட உலகில் அனைவரும் வியந்துப் போயினர். தமிழர்களின் திரைப்பட நுட்பங்களைக் கண்டு அதிசயித்தனர்.
ரவீந்தரின் வித்தியாசமான அறிவியல் திரைக்கதை, எஸ்.நடராஜனின் படத்தொகுப்பு, ஏ.கே.பொன்னுச்சாமியின் கலை வடிவமைப்பு, ஜே.ஜி.விஜயத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒளிப்பதிவு அத்தனையும் இப்படத்தில் அபாரமாக இருந்தது.
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் இல்லாதபோதும் மேலைநாட்டு படங்களுக்கு நிகராக தமிழ் மொழியில் நம்மாலும் தயாரிக்க இயலும் என்று சரோடி பிரதர்ஸுக்கு நம்பிக்கையூட்டி உற்சாகப் படுத்தியவர் ரவீந்தர். ரவீந்தரின் புதுப்புது யோசனைகளுக்கு பக்கபலமாக இருந்தவர் மக்கள் திலகம் அவர்கள்.
COURTESY - NET
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th April 2015, 01:30 PM
#683
Junior Member
Seasoned Hubber
தமிழ்த் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அது புரட்சித் தலைவர் துவங்கிவைத்தது. குழுவாக வந்து சண்டையிட்டுச் செல்லும் ஸ்டண்ட் நடிகர்களுடன் கதாநாயகன் மோதும்போதெல்லாம் கதாநாயகனின் கைமட்டுமே மேலோங்கியிருப்பது மரபு. மேலே சொல்லியிருக்கும் ரிக்*ஷாக்காரனாகட்டும் அல்லது படகோட்டியாகட்டும், உரிமைக்குரலாகட்டும், ஊருக்கு உழைப்பவனாகட்டும் அப்படித்தான் எம்.ஜி.ஆருக்கு காட்சிகள் அமைக்கப்பட்டன. ஷ்யாம் சுந்தர் அதில் வித்தகர். அந்த வழியில் நீங்கள் அனைவருமே அப்படித்தான் காட்சிகளை அமைக்கின்றீர்கள். ஆனால், நேருக்குநேர் ஒறைக்கு ஒற்றையாக நடக்கும் சண்டைக்காட்சிகள் அப்படி அமைக்கப்படுவதில்லை, சிறிது நேரம் சமபலத்தில் இருவர் மோதிக்கொள்வதும் பிறகு கதாநாயகனின் கை ஓங்குவதுமாகவே காட்சியமைப்புகள் இருக்கும்.
எம்.ஜி.ஆருடன் சண்டைக்காட்சிகளில் பங்குபெற்ற நம்பியார், சின்னப்பா தேவர், பி.எஸ்.வீரப்பா, அசோகன், குண்டுமணி, ஜஸ்டின் என நீண்டதொரு வரிசையை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட சண்டைக்காட்சி முடியும் வரையிலும் கதாநாயகனும் வில்லனும் சமபலத்துடன் மோதுவதாகவே காட்சிகள் அமைந்திருந்தன. முக்கியமானதொரு சந்தர்ப்பத்தில் வில்லன் நடிகர் கண்மூடித் திறப்பதற்குள் எம்.ஜி.ஆரின் நுட்பமான தாக்குதல் அவரை நிலைகுலையச் செய்து கை ஓங்கிவிடும். எம்.ஜி.ஆரின் கை ஓங்கிய ஓரிரு நிமிடங்களில் சண்டை முடிந்துவிடும்.
நம்பியாருடன் நடக்கும் விவசாயி சிலம்பச் சண்டை, தேவருடன் நடக்கும் தாயைக்காத்த தனயன் சிலம்பச் சண்டை, பி.எஸ்.வீரப்பாவுடன் மகாதேவியில் வாட்போர், அசோகனுடன் அடிமைப்பெண்ணில் வாட்போர், குண்டுமணியுடன் குடியிருந்த கோயிலில் நடக்கும் சண்டை, ஜஸ்டினுடன் ரிக்*ஷாக்காரனில் நடக்கும் சண்டை, இப்படி ஒரு பட்டியலை அதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
Courtesy- azad- net
-
29th April 2015, 01:37 PM
#684
Junior Member
Seasoned Hubber
-
29th April 2015, 01:39 PM
#685
Junior Member
Diamond Hubber
-
29th April 2015, 02:32 PM
#686
Junior Member
Diamond Hubber
-
29th April 2015, 05:50 PM
#687
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
SUNDARAJAN
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா .......
அருமையான சாருகேசி ராகத்தில் அமைந்த மெலடி !
கவியரசரின் பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர்கள் ..
இடம் பெற்ற படம் , பணத்தோட்டம் ...
பாடலின் ஆரம்பமே அமர்க்களம் .ஏகாந்தமான அந்த காட்டில் ....கதையின் நாயகி சரோ , .அன்னம் போல அழகு நடை நடந்து ... தாமரை இலையில் நீரை எடுத்து .வந்து ..தன் கரிய , பெரிய விழிகளை சுற்றுமுற்றும் சுழல விட்டவாறே செய்வதறியாது நிற்க...
அப்போது சற்றும் எதிரபாராத விதமாக காரின் மேல் தளத்திலிருந்து மக்கள் திலகம் ,
' பேசுவது கிளியா ' என்று பாடியவாறே சரோவின் தலையில் செல்லமாக தாளமிட ....
அப்போது சரோ ' பயமும் , மருட்சியும் ' கலந்த ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுப்பார் பாருங்கள் ......
அடடா ....பார்த்துக்கொண்டே இருக்கலாம் அதை ....
பின் அழகான பெரிய விழிகளை ஒயிலாக அசைத்து ...பொங்கும் அழகு புன்னகையுடன் அவரை பார்த்து
' பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா '
என்று பாடும் போது திரையில் அவரே பாடுவது போன்றதொரு தத்ரூபம் !......சுசீலாம்மாவின் தித்திக்கும் தேன் குரல் சரோவுக்கு அத்தனை கச்சிதமாக பொருத்தம் ....
அவருக்கு சற்றும் சளைக்காத மக்கள் திலகத்தின் நடிப்பு ....டி எம் எஸ் அவர்களின் கணீர் குரல் !
கவியரசரின் எளிய பாடல் வரிகள் .+..மெல்லிசை மன்னர்களின் இனிமையான இசை + சரோ , மக்கள் திலகத்தின் நடிப்பு + சுசீலாம்மா , டி எம் எஸ் இருவரின் குரலினிமை ...மற்றும் காட்சியமைப்பு
இப்படி எல்லாமுமாக சேர்ந்து ....ஐம்பது வருடங்கள் ஆனாலும் ...இந்த பாடலை காலத்தால் அழிக்க முடியாத பாடலாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி விட்டது !
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
அன்பு நண்பர் திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு,
பேசுவது கிளியா? பாடலை நன்கு அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். நல்ல இசைஞானமும் உடையவர் நீங்கள் என்று தெரிகிறது. நீங்கள் சொல்லித்தான் இந்தப் பாடல் சாருகேசி ராகம் என்று தெரிந்து கொண்டேன்.
அதிலும், இந்தப் பாடலில் மக்கள் திலகத்தைப் பார்த்து கன்னடத்துப் பைங்கிளி பாடுவது போலே, கவியரசர் தனது வரிகளில் ‘சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா?’ என்று எழுதியிருப்பார். மக்கள் திலகம் மன்றாடியார் வழித்தோன்றலில் வந்தவர். அவர்கள் கோவை மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அதிகம் வசிப்பவர்கள். கோவைப் பகுதி சேர மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. அதனால், கவியரசர் மக்கள் திலகத்தை ‘சேரனுக்கு உறவா? என்றதோடு, செந்தமிழர் நிலவா? என்றும் வியந்து போற்றுவார். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.
திறமை எங்கே? யாரிடம் இருந்தாலும் மனம் விட்டு பாராட்டுவது மக்கள் திலகத்திடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டபாடம். அந்த வகையில், பாவமன்னிப்பு படத்தை நீங்கள் பார்த்த அனுபவம் குறித்து நவீன கவிதை வடிவில் எழுதியதும் சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள். நன்றி.
மதுரையில் மே மாத கடைசியில் வெளியாக வாய்ப்புள்ள மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தகவலுக்கும் அவரது அரிய புகைப்படங்களை பதிவிட்டதற்கும் சிறப்பு நன்றி. தங்களுக்கும் எங்கள் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
29th April 2015, 05:57 PM
#688
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
SUNDARAJAN
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
தலைவர் அணிந்துள்ள சட்டையின் முண்டா பகுதியில் இப்போது உள்ள பேஷன் போல சிறிது கத்தரிக்கப்பட்டு அதற்கு மேலே பட்டன் வைக்கப்பட்டுள்ளது. அப்போதே இதுபோன்ற சட்டைகளை தலைவர் அணிந்திருப்பது வியப்பளிக்கிறது. இப்போதைய இளைஞர்களின் இன்னொரு பேஷன் போல கழுத்தை ஒட்டிய செயின். தலைவரின் ஸ்டைலான, அட்டகாசமான இந்தப் புகைப்படம் நமது திரியில் முதல்முறையாக இப்போதுதான் பதிவாகிறது என்று நினைக்கிறேன்.
திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
29th April 2015, 06:03 PM
#689
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
தமிழ்த் திரைப்படஉலகில் வேற்றுக் கிரகவாசிகளைப் பற்றிய திரைப்படம் 1963-ஆம் ஆண்டே வெளிவந்துவிட்டது. ஆம். எம்.ஜி.ஆர் நடித்த “கலைஅரசி” படம்தான் அந்த முதல் தமிழ்த் திரைப்படம்.
“கலைஅரசி” படச் சாதனையில் ரவீந்தருக்கு தலையாய பங்களிப்பு உண்டு. டி.இ.ஞானமூர்த்தி எழுதி வைத்த அறிவியல் புனைவிலிருந்து மூலக்கருவைக் கையாண்டிருந்தாலும் கதை, திரைக்கதை, வசனம் முழுவதையும் எழுதி வடிவமைத்தது ரவீந்தர்
தமிழ்த் திரையுலகிற்கு பாரசீக, அரபு நாட்டுக்கதைகளை அறிமுகம் செய்து முஸ்லீம் கதாபாத்திரங்களை புகுத்தி வெற்றி பெற்றதோடல்லாமல் இதுபோன்ற எண்ணற்ற புதுமைகளை தமிழுக்கு கொண்டு வந்த பெருமை ரவீந்தரைச் சாரும். புதுப்புது யுக்திகளை கையாண்டு சினிமா உலகில் பரிசோதனை செய்து வெற்றி கண்டவர்.
பஞ்ச் டயலாக் என்ற Concept-யை தமிழ்ப்பட உலகில் முதன்முதலில் புகுத்திய பெருமையும் இவருக்குத்தான் உண்டு. பி.எஸ்.வீரப்பா பேசிய “மணந்தால் மகாதேவி இல்லயேல் மரணதேவி” என்ற காலத்தால் அழியாத பஞ்ச் டயலாக் ரவீந்தர் எழுதியதுதான்.
COURTESY - NET
திரு.குமார் சார், கலையரசி திரைப்படம் பற்றி இணையத்தில் இருந்து எடுத்து தாங்கள் பதிவிட்டிருக்கும் விமர்சனக் கட்டுரைக்கு நன்றி. நன்றாக உள்ளது.
ஆனால், இதில் குறிப்பிடப்பட்டிருப்பது போல இல்லாமல், மகாதேவி படத்துக்கு முன்பே மர்மயோகி படத்தில் பஞ்ச் வசனம் இடம் பெற்றுவிட்டது. மர்மயோகி படத்தில் ‘கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான். தவறுமானால் குறிவைக்க மாட்டான்’ என்ற பஞ்ச் வசனத்தை (ஏ.எஸ்.ஏ.சாமி) தலைவர் பேசியுள்ளார். மூத்த ரசிகரான தாங்கள் உட்பட நம் எல்லாருக்குமே இது தெரிந்திருக்கும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 29th April 2015 at 06:36 PM.
-
29th April 2015, 07:00 PM
#690
Junior Member
Platinum Hubber
Bookmarks