-
30th April 2015, 12:41 PM
#3411
Senior Member
Senior Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
30th April 2015 12:41 PM
# ADS
Circuit advertisement
-
30th April 2015, 12:52 PM
#3412
What a surprise Neyveli Vasudevan sir,
Gnana Oli patri pesumbothellaam neengal unarchi vasappaduvadhil irundhe, andha padam...che..che.. andha kaaviyam endha alavu ungal manadhudan ondri vittadhu endru therigiradhu. (already known, but once again).
Ungalai varavazhaikkum 'maaya valai' Gnana Oli patri padhivu iduvadhuthaan.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th April 2015, 03:02 PM
#3413
Senior Member
Senior Hubber
வாங்க வாசு வாங்க.
மதுர கானத் திரியே திருவிழாக்கோலம் பூண்டு விட்டது. உங்களுக்காக நாங்கள் எல்லோரும் எவ்வளவு காத்திருந்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். . நீங்கள் எழுதும் ஒவ்வொரு நாளும் இங்கு வருகை தரும் அனைவருக்கும் உற்சாகத் திருவிழாதான். என்னையெல்லாம் இவ்வளவு எழுத வைத்து நீங்கள் எழுதாமல் இருந்தது கடினமாக இருந்தது. நீங்களும் எழுதி, கிருஷ்ணாவும் கலந்து கொண்டால் திரியில் பட்டாசு கொளுத்தி கொண்டாடும் வழி வகைகளைத் தேட வேண்டும். எனது ஞான ஒளி பாடலின் வேண்டுகோளை ஏற்று வருகை தந்ததற்கு நன்றி. நன்றி. நன்றி. உங்கள் வீக்னஸ் எங்களுக்கு எல்லாம் பலம். இருந்தாலும் உங்களை கண் கலங்க வைத்ததற்கு எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் நேரம் கிடைக்கும் போது ஒன்றிரண்டு பதிவுகள் இட்டிருந்தால் உங்கள் பலவீனத்தை இப்படி பயன் படுத்தி இருக்கமாட்டோம்.
நீங்கள் வராமல் இருந்த போது உங்கள் வரவை எதிர்பார்த்த சிலர் இப்படி சொன்னார்கள்: "நீ வருவாய் என நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன்."
சிலர் இப்படி இருந்தோம்: "நீ வரவேண்டும் என எதிர் பார்த்தேன்"
நீங்கள் வந்த பின்னே சி.க சொன்னார்: "மன்னவன் வந்தானடி"
நான் சொல்கிறேன்: "வந்தாலும் வந்தான்டி ராஜா"
சித்ரா பௌர்ணமி வருகிறதே!!! நீங்களும் பௌர்ணமியாய் வந்துட்டீங்க. கலக்குங்க. வாழ்த்துகள்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
30th April 2015, 03:35 PM
#3414
CK & Kalnayak,
To welcome Vasu sir, these five songs are not enough. Some more are...
'Varugave varugave... thalaivaa' (Aadhi paraskathi)
'Thalaivaa Dhavapputhalvaa varugave' (Agathiyar)
'Varavendum Maharaja' (Varaverpu)
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th April 2015, 03:53 PM
#3415
Senior Member
Senior Hubber
இன்னிக்கு மீனாட்சி திருக்கல்யாணம்..மதுரையில் ஒரே கோலாகலமாக இருக்கும்..ம்ம் எவ்ளோ நாளாச்சு பார்த்து..சரி அதைக் கொண்டாடறதுக்கு பாட் போட்டுடலாம்..
யாரங்கே முழிக்கறது..அதான் பாட்டு நடுல்ல அபிராமியேன்னு வருதுங்களே
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th April 2015, 05:35 PM
#3416
Senior Member
Senior Hubber
கலைவேந்தன்,
உங்களுடைய லைக்சுக்கும், தான்க்சிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உங்கள் கொள்ளுப் பேரரை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்கள். மஞ்சள் மகிமை படத்திலிருந்து பாடல் போட்டதும் நானும் உங்கள் வயதுதான், உங்கள் காலத்திய நண்பன் கிடைத்துவிட்டேன் என்று குஷியாகி விட்டீர்கள் போலிருக்கிறது. மன்னிக்கவும். நான் அவ்வளவு பெரியவன் இல்லை. வயது வித்தியாசம் பாராமல் நட்பு கொள்ளலாம். யூட்யூபில் தேடினால் மஞ்சள் மகிமை (ராஜேஷ் சொன்னார்), ஆத்மா சாந்தி (நீங்கள் சொன்னீர்கள்) கிடைக்கிறது. உங்களைப் போன்று சிவகவி, சந்திரலேகா, அவ்வையார், வஞ்சிக் கோட்டை வாலிபன் போன்ற படங்களை வெளியான அன்றே காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, மிகவும் பின்பே பிறந்ததினால். அதனால் என்ன. நீங்கள்தான் இருக்கிறீர்களே இந்த திரியில், அந்த அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள.
மற்றபடி நான் மேற்கொண்டு சூரியனுக்கு செல்வதாயில்லை. சந்திர மண்டலத்திலிருந்து விரைவில் திரும்பி வந்துவிடுவேன். வேறு வேலைகள் உள்ளன. அறிவிக்கிறேன்.
எல்லோருடைய வேண்டுகோளுடன் உங்களுடையதையும் ஏற்று வாசுதேவன் திரிக்கு வந்துவிட்டார். வேண்டுகோளை வைத்ததற்கு உங்களுக்கும் நன்றி.
அதானே சி.க. சொல்வது போல் நீங்கள் ஏன் நேபாள் பூகம்ப நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு ஒரு அசாதாரண பாட்டை அறிவிக்கக் கூடாது.
Last edited by kalnayak; 30th April 2015 at 05:42 PM.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th April 2015, 05:45 PM
#3417
Junior Member
Seasoned Hubber
வாசு சார்,
வாங்க... வாங்க.. வாங்க... உங்கள் அற்புதமான எழுத்துக்களை படித்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று. சார், நாம் ஒவ்வொருவருமே அலுவல் மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கிடையே ரிலாக்சுக்காகவும் மனத்திருப்திக்காகவும் திரையில் நாம் ரசித்ததை பகிர்ந்து கொள்கிறோம். நாம் பார்க்காத கோணங்களை மற்றவர்கள் கூறும்போது ‘அட... ஆமாம்..’ என்று ரசித்து மகிழ்கிறோம்.
உங்களைப் போன்று நுணுக்கமாக எடுத்துச் சொல்பவர்கள், ரவி சார் போன்று நல்ல கருத்துக்களை கூறுபவர்கள், கிருஷ்ணா சார், சின்னக்கண்ணன், கல்நாயக் போன்று நகைச்சுவையாக எழுதுபவர்கள் திரிக்கு வராமல் இருந்தால் உங்களுக்கெல்லாம் நஷ்டம் இல்லாமல் இருக்கலாம். எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய நஷ்டம்.
பல்வேறு அலுவல்கள் இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது திரிக்கு வந்து பங்களியுங்கள். ரசிக்க காத்திருக்கிறோம். திரியை வரி விடாமல் படித்து வருகிறேன் என்று கூறியது மகிழ்ச்சி. எனது பங்களிப்பை பாராட்டியதற்கு நன்றி.
அன்பான வேண்டுகோளை ஏற்று திரிக்கு வந்ததற்கு மிகவும் நன்றி.
குறிப்பாக, ஞானஒளி பாடலை போட்டு நீங்கள் வரக் காரணமாக இருந்த கல்நாயக் நன்றிக்குரியவர்.
எனக்கு பாடலை தரவேற்றத் தெரியாது. என் சார்பாக உங்களை,
வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா,
ஏழைகள் உங்களை நம்பி
எதிர்பார்த்து நின்றோமய்யா...
என்று வரவேற்கிறேன்.
கல்நாயக்,... கிருஷ்ணா சாருக்கு ஒரு பாட்டு ரெடி பண்ணுங்க.
சின்னக்கண்ணன், ...என் ரூட்ட கரெக்டா தெரிஞ்சு வச்சுருக்கீங்க. எப்பப் பார்த்தாலும், ஏழைகள், கஷ்டம், பசி, தொழிலாளர்கள், சாதாரண மக்களின் துயரம் என்றுதான் சிந்தனை ஓடுகிறது. நான் அடித்தளத்தில் இருந்து வந்ததும் அதற்கு ஒரு உளவியல் காரணமாக இருக்கலாம். விரைவில் பாட்டோடு வரேன். (பயப்படாதீங்க, நேபாள பூகம்பம் இல்லை)
அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்: கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th April 2015, 05:56 PM
#3418
Senior Member
Senior Hubber
சி.க. மார்கடிங்-னாலே பிடிக்காத என்னை பெரிய ஆளாக்கிட்டீங்களே. இதுக்கு காரணமான குரு யாரு நீங்கதானே. வாரவுக எல்லாரும் எழுதணும் வோய். என்ன பண்ணப் போறீக? வாசு சீக்கிரம் வந்து எழுதறேன்-னுட்டாரு. எப்பிடியாவது நீங்கதான் கிருஷ்ணாவை பிடிக்கணும். சின்னக்கண்ணன் பிடிக்கமுடியாத கிருஷ்ணாவா? மதுவையும் அழைங்க. எஸ். வாசுதேவனுக்கான வலை விரிப்பு சூப்பர். இந்த ஆதிராமையும் எப்பிடியாவது வளைச்சு பிடிக்கணும். பயங்கர திறமை கொண்ட ஆளு. கவிதையெல்லாம் பிரமாதமா எழுதுவாரு.
உங்க மங்கைப் பருவப் பாடல் தொடர் அருமை. "என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரும் என்னடி" எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த மோனிஷா திமிழில் அறிமுகமான படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்திருந்தார். படத்தின் பெயர் நினைவில் வரமாட்டேன் என்கிறது. பாடல்கள் அப்போதைக்கு கவர்ந்திருந்தது.
எதிர் நீச்சல் பாட்டும் மிக பிரபலமானது. எல்லோரும் விரும்பி கேட்பது. நாகேஷிற்கு ப.ப. ஸ்ரீநிவாஸ் குரல் வித்தியாசமாக இருக்கிறது.
அடுத்த பருவத்திற்கு காத்திருக்கிறேன்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th April 2015, 05:59 PM
#3419
Senior Member
Senior Hubber
-
30th April 2015, 06:05 PM
#3420
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
test message
சி.க. உங்கள் டெஸ்ட் மெசேஜ் சூப்பர். அடிக்காதீங்க. அடிக்காதீங்க. நான் ஓடிடறேன். 3 நாள் கழிச்சு வர்றேன்.
எல்லோருக்கும் சித்திரை பௌர்ணமி திருநாள் வாழ்த்துகள்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
Bookmarks