-
1st May 2015, 08:00 PM
#11
Junior Member
Veteran Hubber
1980 பாராளுமன்ற தேர்தலையடுத்து நமது புரட்சித்தலைவரின் புனித ஆட்சி, காரணமின்றி கலைக்கப்பட்டது. அப்போது, திருவொற்றியூரில் இயங்கி வந்த எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர் குழுவினை சார்ந்த நானும், இதர உறுப்பினர்களும், மக்கள் திலகத்தை தலைமை கழகத்தில் நேரில் சந்தித்து, துரோகிகள் பலர் இயக்கத்தை விட்டு வெளியேறிய நிலையில், இதய தெய்வம் தலைமையில் நம்பிக்கை வைத்து, தியாகராயர் கல்லூரி மாணவர்கள் பலரை கழகத்தில் இணைத்து, அவரின் தலைமயில் நம்பிக்கை வைத்து எங்கள் முழுமையான ஆதரவினை தெரிவித்தோம். அந்த சமயத்தில், அவரிடம், என்னுடைய நோட்டு புத்தகத்தில் வாங்கப்பட்ட கையெழுத்து :

"உழைப்பவரே உயர்ந்தவர்" என்ற உயரிய தத்துவத்தையும், தான் வணங்கும் தெய்வமாம் பேரறிஞர் அண்ணா அவர்களின் நாமம் வாழ்க என்றும் தனது கைப்பட எழதி எனக்கு வழங்கியதை போற்றி பொக்கிஷமாக பாதுகாத்து வரும் இந்த வேளையில், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதமான நாளில், தொழிலாள தோழர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து அதனை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
1st May 2015 08:00 PM
# ADS
Circuit advertisement
Bookmarks