-
4th May 2015, 04:31 PM
#1751
Junior Member
Seasoned Hubber
Mr Gopal,
Pls convey my best wishes as well as congratulation to your son. Let him continue to shine forever in his
choosen field.
Regards
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th May 2015 04:31 PM
# ADS
Circuit advertisement
-
4th May 2015, 04:31 PM
#1752
Dear Muthaiyan Ammu sir,
Your visual treat of the movie Gowravam is extordinary.
I can realise your painful work to upload each frame of the movie, with powerful performance of NT.
As Ragavendar sir told, please take care of your health, and continue with a normal speed.
No need for hurry, because the Chairs left by NT & MT will always be vacant till the last day of the universe and nobody can fill it up.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015, 04:32 PM
#1753
Junior Member
Seasoned Hubber
Mr Muthyaluammu
Hats off to your work and also take care of your health as posted by Mr Raghavendra.
Regards
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015, 04:32 PM
#1754
Junior Member
Veteran Hubber
Happy come back Vasudevan Sir.
This thread is fortified with your contribution knots!!
Senthil
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015, 07:23 PM
#1755
வாசு,
2013 நவம்பர்
2015 மே
இடைப்பட்ட 17 மாத காலம் ஒரு வனவாசம் போல அமைந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் வேறு திரியில் பயணித்தாலும் உங்கள் மனம் இங்கேதான் சுற்றிக் கொண்டிருந்தது என்பதை நான் அறிவேன். காலம் நேரம் கனிந்து வரும்போது வருகிறேன் என்று சொன்னதற்கேற்ப தட்டட்டும் பாடலுடன் உள்ளே நுழைந்திருக்கும் உங்களை கைதட்டல்களுடன் வரவேற்கிறோம்.
நடிகர் திலகத்தின் ஞான ஒளி உங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும். தொடருங்கள். ரசிக்க காத்திருக்கிறோம்.
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th May 2015, 07:24 PM
#1756
திரு முத்தையன் அவர்களே,
நீங்கள் அடிப்படையில் ஒரு திரையரங்க ஆபரேட்டர் ஆக இருப்பதால் மக்களின் ரசனையை நேரிடையாக கண்டு புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்து விட்டது. அதனால்தான் பார்வையாளர்களுக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் எந்த வகை கோணங்கள் எந்த வித போஸ்கள் பிடிக்கும் என்பதை துல்லியமாக அறிந்து செய்த பதிவுகள் என்பதால் எல்லோர் மனதையும் கொள்ளை அடிக்கிறது. சில ஸ்டில்ஸ் வெகு தத்ரூபமாக நேரில் நம்மிடம் பேசுவது போல் தெரிகிறது என்று சொன்னால் மிகையில்லை. ஆதிராம் குறிப்பிட்டது போல தெய்வ மகன் கோவில் காட்சியின் ஸ்டில்ஸ் பார்க்கும்போது எனக்கும் அது போன்றே தோன்றியது.
நன்றிகள் பல!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th May 2015, 07:28 PM
#1757
செந்தில்,
சில பழைய செய்திதாள்கள், வார இதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் ஆகியவற்றை பார்க்கும்போது மனதுக்குள் சொல்ல முடியாத ஒரு சந்தோஷம் தோன்றும். பழைய நினைவுகள், பழைய நாட்கள் ஏன் இன்னும் சொல்லப் போனால் அந்த நாட்களுக்கு மறுபடியும் போக மாட்டோமோ என்ற மனோரீதியான ஏக்கம் இவை அனைத்தும் தோன்ற காரணமாக இருப்பவை இந்த ஆவணங்கள். என்னைப் பொறுத்தவரை 1967 முதல் 1977 வரை உள்ள காலகட்டம் அந்த காலகட்டத்தின் ஆவணங்கள் இது போன்ற நினைவுகளை தூண்டி விடும்.
70-களின் மத்தியில் வந்த சிவாஜி ரசிகன் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. நடிகர் திலகத்தின் சினிமா டைரி அவர் எந்தளவிற்கு பிஸியாக இருந்தார் என்பதற்கு சாட்சியம் வகிக்கிறது. உதாரணமாக 1975 மே 15 முதல் 25 வரை மூன்று படங்களின் படப்பிடிப்பில் [மன்னவன் வந்தானடி, ரோஜாவின் ராஜா மற்றும் பாட்டும் பரதமும்] கலந்துக் கொண்டிருக்கிறார். மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான படங்கள் பாத்திரங்கள். மூன்றும் வேறு வேறு லொகேஷன்கள் [சென்னை திருவனந்தபுரம் மற்றும் கொடைக்கானல்]. இவற்றையெல்லாம் செவ்வனே உள்வாங்கி அந்தந்த பாத்திரங்களுகேற்ப வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் எப்பேர்ப்பட்ட ஒரு அர்ப்பணிப்பு உணர்வு, பாத்திரத்திற்குள்ளே ஊடுருவும் திறமை, கூடு விட்டு பாயும் நடிப்பு மாந்திரீகனாகவே திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலம் வரை வாழ்ந்திருக்கிறார்.
அந்த சிவாஜி ரசிகன் இதழில் இடம் பெற்றிருக்கும் சில விஷயங்களைப் பார்க்கும்போது அகில இந்திய சிகர மன்றம் எத்துனை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது ஸ்தாபன காங்கிரஸ் இயக்கத்தின் உயிர் மூச்சாய் பெருந்தலைவரின் போர்வாளாய் திரு சின்ன அண்ணாமலை அந்த இயக்கத்தை எப்படி முன்னெடுத்து சென்றிருக்கிறார் என்பதை அவரது தமிழக சுற்றுப்பயண விவரங்கள நமக்கு விளக்குகின்றன.
அதே போன்று மதுரையில் 1975 ஜூலை 5, 6 தேதிகளில் நடப்பதாக இருந்த 175-வது படவிழா பற்றிய விளம்பரங்களும் தலையங்கமும் அந்த விழா நடந்திருந்தால் எப்படிப்பட்ட பிரம்மாண்டமான விழாவாக இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. நாங்களெல்லாம் வெகு ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த விழா. சென்னையிலும் கோவையிலும் திருச்சியிலும் நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழாக்களும் 150-வது பட விழாவும் நடந்திருக்க மதுரையில் மட்டும் விழாக்கள் ஒன்றும் நடைபெறாதது ஏமாற்றமாக இருந்த நேரத்தில்தான் 175-வது படவிழா மதுரையில் நடைபெறும் என்ற அறிவிப்பு தேனாக காதில் வந்து விழுந்தது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்க அந்த நாட்கள் எப்போது வரும் என்று நாங்கள் ஆவலுடன் காத்திருக்க வந்தது மற்றொரு செய்தி. 1975 ஜூன் 25 அன்று நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது அகில இந்தியாவெங்கும் எதிர்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டனர். என்ற செய்திதான் அது 1974 முதல் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருந்த வேளை. 1975 ஏப்ரல்-மே மாதங்களில் குடியரசு தலைவர் ஆட்சியின் கீழ் இருந்த குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மொரார்ஜி அவர்கள் உண்ணாவிரதம் இருக்க அந்த விவகாரத்தில் ஆரம்பித்து 1975 ஜூன் 12 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உச்ச்சகட்டத்தை அடைந்தது. 1971-ம் ஆண்டு மக்களவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த இந்திரா காந்தி அம்மையாரின் தேர்தல் வெற்றி செல்லாது என வழக்கு தொடுத்திருந்த ராஜ் நாராயண் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர பிரதமர் இந்திரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலு பெற jp தலைமையில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்க அனைத்து தரப்பினரையும் விளிக்க இந்திரா அம்மையார் அவர்கள் அவசர நிலையை கொண்டு வந்தார்கள்.
நாடு அன்று இருந்த நிலைமையில் இந்த விழா தேவையில்லை என்று நடிகர் திலகமும் ஸ்தாபன காங்கிரஸ் இயக்கமும் முடிவெடுக்க விழா ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. மேலும் அந்த 1975 மே ஜூன் மாதங்களில் கடுமையான கோடையில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பெருந்தலைவர் ஜூலை முதல் வாரம் சுகவீனமுற்று கடுமையான காய்ச்சலினால் பாதிக்கப்பட்டார். உடல் நலத்தோடு எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டது அவரை மனதளவில் பெரிதும் பாதித்தது. அவருக்கு முழுமையான ஒய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்த அதுவும் விழா நடைபெறாமல் போனதற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது.
அவரை அன்று படுக்கையில் தள்ளிய அந்த சூழல் அதிலிருந்து அவரை எழுந்திருக்க விடாமல் மூன்றே மாதங்களில் அவர் உயிர் பிரிவதற்கும் காரணமானது.
அன்று நடைபெற முடியாமல் போன அந்த 175-வது பட விழா 4 வருடங்கள் கழித்து 200-வது பட விழாவாக எங்கள் மதுரையில் அதே தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று ரசிகர்களை குஷிப்படுத்தியது.
செந்தில். உங்கள் சிவாஜி ரசிகன் 1975 ஜூன் இதழின் பதிவு இத்தகைய நினைவலைகளை தூண்டி விட்டு விட்டது. நெஞ்சார்ந்த நன்றி செந்தில்!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
4th May 2015, 07:32 PM
#1758
Junior Member
Seasoned Hubber
Dear Gopal Sir,
Its really a great achievement of your son and getting such a recognition congrats sir, Feeling happy
Last edited by ragulram11; 4th May 2015 at 07:37 PM.
-
4th May 2015, 07:34 PM
#1759
Junior Member
Seasoned Hubber
Dear Vasu sir,
It is always a great pleasure to read all your write ups, it gives double joy when I read it after 2 years
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015, 07:36 PM
#1760
Junior Member
Seasoned Hubber
Dear Muthaiyan Ammu sir,
Hats off for your work sir, Gouravam stills were too good, Deivamagan stills were extra ordinary
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks