-
4th May 2015, 10:30 AM
#3481
Senior Member
Senior Hubber
//எழுத்துக்களும் உங்களுக்கு மிகவும் சின்னதாகவே தெரிந்திருக்கும் - கரெக்ட் ஆ ??// எனக்குக் கண்ணாடியின் பவர் மாறியது உங்களுக்கு எப்படித் தெரியும் ரவி
மார்கழி மாசம் சுண்டலா..யாருங்க தருவாங்க..ம்ம்சரி சரி இன்னொரு சூரியன்பாட் போட்டு எங்களைப் பனியாய்ச் சுடுங்க..!
-
4th May 2015 10:30 AM
# ADS
Circuit advertisement
-
4th May 2015, 10:35 AM
#3482
Senior Member
Senior Hubber
//சீனப் பின்னணி இசையில் 'தமிழக மும்தாஜ்' (பேர் நல்லா இருக்கா?) 'வெண்ணிற ஆடை' ஆட, 'திலகம்' பர்மா பின்னணியில் லுங்கி, தலையில் பர்மா தலைப்பாகைக் கட்டு என்று அசத்துவார் 'ச்சிங் ச்சிங் ச்சிங் ச்சூச்சூ' என்றே பாடியபடி. நாகேஷ் சாப்ளின் வேடத்தில் இருப்பார்.// பட்டம் நன்னாயிட்டு இருக்கு..
சொன்னாற்போல பார்த்து நாளாயிடுச்சு.. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..வெ. ஆ. நிர்மலா கடற்கரைப்பாட் தான் நினைவுக்கு வருது..காட்சியாய்..பாட்டுக்குக் கொஞ்சம் ரோசிக்கணும்
பின்னவாரேன்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th May 2015, 10:51 AM
#3483
Junior Member
Seasoned Hubber
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 3.
ஞாயிறு என்பது கண்ணாக
இது போன்ற அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத பாடல்கள் இக்காலத்தில் வரும் படங்களில் அபூர்வம். காதலர்களின் மனம் எப்படி ஒற்று போகவேண்டும் என்பதை அழகாக எடுத்துச்சொல்லும் பாடல் - SSR பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இது
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக (ஞாயிறு என்பது கண்ணாக)
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு (நேற்றைய பொழுது)
ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
ஊருக்கு துணையாய் நான் இருக்க
எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற
மைவிழி கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
முன்னொரு பிறவி எடுத்திருந்தேன்
உன்னிடம் மனதை கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன்
பேசிய படியே கொடுக்க வந்தேன்
ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
4th May 2015, 03:15 PM
#3484
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
வாசு...
அந்தக் காலத்தில் மதுரை சாந்தி தியேட்டரில் பார்த்தபோது ஏற்பட்ட பரபரப்பு ஆர்வம் - தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் காட்சி- அதை அப்படியே வரிகளில் கொண்டுவந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்..மனப்பூர்வமாக..
சரோஜா தேவி மட்டும் இந்தப் படத்தில் சற்றே செழுமையாக (ஹி ஹி குண்டு என்றால் கோபிப்பீர்கள் தானே) இருப்பார்..ஆனால் இந்தப் பாட்டில் ஏனோ சற்றே ஒல்லியாகத் தென்படுவார்.. ந.தியின் ஸ்டைல் ப்ள்ஸ் பாடல் சிச்சுவேஷன்.. சுசீலாம்மாவின் குரல் ப்ள்ஸ் இசை.. பாட்டை எங்கோ கொண்டு போய்விடும்..
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்
வீரத்தை அணைத்துக் கொள்ளட்டும்
வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்
நூலாடும் மேலாடை சிரிக்கின்றதே
மேலாடும் பொன்னாடை அழைக்கின்றதே
சேலாடும் கண் இன்று துடிக்கின்றதே
போராடும் உனைக் கண்டு தவிக்கின்றதே
கவிஞரின் வரிகளுக்கு வாயசைப்பு சுசீலாம்மாவின் இனிமைக் குரல்..ப்ளஸ் ந.தி.. மறக்க இயலுமா..
ம்ம் காலங்கார்த்தாலே படுத்திவிட்டீர்கள் ஸ்வாமி.. தாங்க்ஸ்ங்க்ணா..

hmmmmmmm
-
4th May 2015, 04:03 PM
#3485
Junior Member
Seasoned Hubber
அன்பின் வடிவமே, ஆற்றலின் உருவமே, நட்பின் இலக்கணமே, நல்லிணக்க நாயகரே, எங்கள் வாசுதேவரே, தங்களை நடிகர் திலகம் திரியில் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களது வரவு நமது இரு திரிகளிடையே நட்புறவை மேலும் பலப்படுத்த உதவும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
4th May 2015, 05:31 PM
#3486
Senior Member
Senior Hubber
-
4th May 2015, 05:59 PM
#3487
Junior Member
Seasoned Hubber
ரவி சார், உங்களது ஆயிரம் கரங்கள் நீட்டி பதிவுகளும் தேர்ந்தெடுக்கும் பாடல்களும் அற்புதம். நன்றி.
சின்னக்கண்ணன், ரூம் போடாமலேயே இப்படி யோசிக்கிறீர்களே? ரூம் போட்டால் இன்னும் என்னவெல்லாம் தோன்றுமோ? வித்தியாசமாக சிந்தித்திருக்கிறீர்கள். உங்களுக்கு நகைச்சுவையாக எழுத வரும் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், கார்கில் அனுபவ பதிவு மூலம் உருக்கமாகவும் எழுத வரும் என்று நிரூபித்து விட்டீர்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th May 2015, 09:42 PM
#3488
Senior Member
Senior Hubber
பருவமே பழைய பாடல் பாடு – 6
யார் கவிஞர் என நினைவில்லை.. நெடுங்காலம் முன்பு படித்த கவிதை..
பிள்ளைப் பேறு வேண்டுமென்று
மாந்தர்
அரசைச் சுற்றியது அந்தக்காலம்
வேண்டாமென்று
அரசு
அவர்களைச் சுற்றுவது இந்தக்காலம்..
ஏன் பெண்பேறு வேண்டுமென்று யாரும் வேண்டுவதில்லை..ஒவ்வொருவருக்கும் சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை பிறந்தால் நல்லது என்ற மெண்ட்டாலிட்டி.. (இப்போது இன்றையகாலகட்டத்தில் வெகுவாக மாறிவிட்டது என்பது வேறு விஷயம்..)
So.. ஆண்களின் பருவங்கள் என்று பார்த்தால் ஒட்டுக்கவே பார்த்துவிடலாம்..
* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.
17-30 ந்னு இங்க ஸ்ட்ரெய்ட்டா காளைங்கறாங்க..ஆனா பெண்களுக்கு மட்டும் அதையே இன்னும் மூன்று பருவமா பிரிச்சுருக்காங்க..ம்ம் அண்ட் 30 வயதுக்கு மேலான பருவம் முதுமகன் என்பதெல்லாம் ஓவர்..
பாலனுக்கு அம்மாவும் நீயே அப்பாவும் நீயே நினைவுக்கு வருகிறது..
மீளிக்கு அஞ்சலியில் முதல்பாட்டு நினைவுக்குவருகிற்து..
மறவோன் அழியாத கோலங்கள் பாட்ட
திறவோன் விடலை எல்லாம் வந்திருக்கலாம் விட்டுவிடலாம்..
சுவாரஸ்யமான பருவம் என்ன..இளமை பொங்கும் பருவம்.. காளை தான்.. கல்லூரியிலிருந்த் வேலை பார்க்கும் வரை என்பதாலேயே காளை என வைத்திருக்கிறார்களா..
அந்தக்காலப் பாடல் என்ன சொல்கிறது காளை வயதுகட்டான சைஸூ களங்கமில்லா மனசு
காளைவயதில் தான் கேள்விகள் எழும்பும்.. காதல் என்பது எதுவரை கல்யாணக் காலம் வரும்வரை.. என..
காளை காளை முரட்டுக்காளை நீதானே..
காளையிருக்கு செவலை இருக்கு கன்னுக்குட்டி எங்கய்யா (இதில் வருவது நிஜக் காளையோ)
கனிவாக பேசும் பெண்கள் கையிலே
கத்தியும் ஈட்டியும் இருக்குது
கணவனை கண்டால் மனைவியர் எல்லாம்
காளை போலவே முறைக்குது// அநியாயம் இந்த ஆட்சியியிலே அநியாயம்.. பாட்டில் வருகிறது இந்த வரி..
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடுகாளை என்னோடு என்கிறார் ரவிச்சந்திரன் மாடிவீட்டு மாப்பிள்ளையில்..
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா என்கிறார் ஏ.எம் ராஜா பாட்டுப்பாடவாவில்..
காளைக்கு நிறைய பாடல்கள் இருக்கின்றன..ஆனால் காளைப் பருவத்தில் முறைப்பெண்களுடன் பாட எத்தனை பேருக்குக் கொடுத்துவைத்திருக்கும்..
அழகிய பாடல் அழகிய வரிகள் (ஒரு வரி மட்டும் கவிஞரிடம் தவறு என்று ஒருவர் சொல்ல அதைப் பெருந்தன்மையாக ஆமாம் எனச் சொல்லிவிட்டாராம் கண்ணதாசன் அது என்னவரி அதுபற்றி அப்புறம்..
ஆஹா என்ன இனிமையான பாடல்..
ரொம்ப்ப்பப்பிடிச்ச வரிகள்..
முதிராத நெல்லாட ஆட-ஆட
முளைக்காத சொல்லாட ஆட-ஆட
உதிராத மலராட ஆட-ஆட
சதிராடு தமிழே நீ ஆடு!
இளமை ம.தி, ஜோதிலட்சுமி , மணிமாலா.. பெரிய இடத்துப் பெண்..
//சோ எழுதிய ஒரு நூலில் படித்தது.. பச்சரிசிப் பல்லாட என எழுதியிருக்கிறீரே கவிஞரே பாடுவதோ இளமைப் பூ.. எப்படி அதனுடையபச்சரிசிப்பற்கள் ஆடும் எனக் கேட்க..ஆமாம் அது தவறு என்றாராம் கண்ணதாசன்//
சரி தப்பெல்லாம் இல்லாமல் எப்போதுமே மயக்கும் பாடல் இது..எனக்கு காளைப்பருவத்திலும் சரி இப்போ தர்ட்டி ப்ளஸ் முதுமகன் பருவத்திலும் சரி..
முதுமகன் + காளை இரண்டும்சேர்ந்த ஒருபாட் இருக்கே..
பருவம் முடிஞ்சு போச்சான்னு பார்த்தா அதான் இல்லை.. மறுபடியும் பார்க்கலாம்..
வரட்டா..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
4th May 2015, 09:55 PM
#3489
Senior Member
Senior Hubber
ஹை ரொம்ப நாளாச்சு கேட்டு வாங்கி.. வாசுங்ணா..
திடீர்னு தேடினா இந்தப் பாட்டு கிடைச்சதாக்கும்..
முத்துராமனுடன் ஆடுபவர் முன்னாலாடிய மணிமாலா தானே படம்..நல்லாருக்குமா..
வெண்பளிங்கு மேடை கட்டி..- சீர்காழி..எல்.ஆர்.ஈ.?
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
4th May 2015, 10:28 PM
#3490
Senior Member
Senior Hubber
தேவி ஸ்ரீதேவி கலெக்ஷன்!
தேவி ஸ்ரீ தேவி தேடி அலைகின்றேன்.. ப்ரேம் நசீர் ஷீலா..பாட் கேட்டிருக்கேன்..அது என்ன காணொளி தமிழ்ல்ல வீடியோ இப்பத்தான் பாக்கறேன்.. பிபி.எஸ். நல்ல பாட்டு...
ஹச்சோ இன்னொரு பாட்டு கிடைக்குதே அதே தேவிஸ்ரீதேவி தான் ஆரம்பம் இங்க சாவித்ரி – சந்தானம்ங்கற படமாம்..
பாடுபவர் கண்டசாலா எனப் போட்டிருக்கிறது..குரல் வித்தியாசமாக இருக்கிறது..
**
சரி சரி.. இந்த ஸ்ரீதேவியையும் பார்த்துடலாம்.. பாக்கலாமா..
இடத்தக் கொடுத்தா மடத்தப்பிடிப்ப எனக்கா தெரியாது..என்னங்க்ணா.. ஓ பாட்டு வரியா..சரி..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks