-
27th May 2015, 07:37 AM
#281
Junior Member
Seasoned Hubber
Good Morning
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th May 2015 07:37 AM
# ADS
Circuit advertisement
-
27th May 2015, 07:47 AM
#282
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 20
உண்மை சம்பவம் -2
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன . இந்த சம்பவம் என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த ஒன்று .
உமா, என் மனைவி அவசர அவசரமாக என்னை எழுப்பினாள் - " என்னங்க ? எழுந்திருங்க - நேற்று எவ்வளவோ சொல்லியும் இப்படி தூங்கினால் என்ன அர்த்தம் ? "
உமா citibank இல் director ஆக இருக்கிறாள் - நானும் தனியார் அலுவகத்தில் vice chairman ஆக இருக்கிறேன் - குழந்தைகள் இருவர் - இருவரும் MS படித்துக்கொண்டுருக்கிண்டார்கள் USA வில் . என்னுடன் 80 வயதை கடந்த அம்மா -. அப்பா தவறி இரண்டு வருடங்கள் ஆகின்றது - ஒரே மகனாக இருப்பதால் அம்மாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் எனக்கே கிடைத்தது . நாங்கள் இருவரும் வேலை செய்வதாலும் , இரவு நீண்ட நேரம் கடந்து இல்லத்திற்கு வருவதாலும் அம்மாவை சரியாக கவனித்துக்கொள்ள முடியவில்லை - அந்த வயதில் அவர்களுக்கு வரும் மிக கொடுமையான வியாதி என்ன தெரியுமா ?
"The feeling of being unwanted ; being ignored " . இதை அப்பொழுது நான் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை . முழு நேர வேலைக்காரி அம்மாவை விட அதிகமான தேவைகளுடன் வருவதால் எங்களுக்கு ஒத்து வரவில்லை .
மீண்டும் உமாவின் அதட்டல் - எழுந்தாச்சா ? சீக்கிரம் கிளம்புங்கள் - இன்று எனக்கு போர்டு மீட்டிங் - சாயிந்தரம் கம்பெனியில் நம் இருவருக்கும் பாராட்டு விழா - மறக்காமல் அம்மாவை பவானி முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு ஆபீஸ் செல்லுங்கள் - இதோ அம்மாவிற்கு தேவையான உடுப்புகள் , மருந்துகள் , அவள் விரும்பி படிக்கும் திருவாசகம் ,.....
"உமா ! அம்மாவை கண்டிப்பாக முதியோர் இல்லத்தில் சேர்த்து தான் ஆக வேண்டுமா ? பாவம் நிமிடத்திற்கு ஆயிரம் முறை விசு என்று கூப்பிடுவாளே , என்னை விட்டு தனியாக எப்படி அங்கு வசிப்பாள் ?"
" முருங்கை மரம் ஏறியாகி விட்டதா ? படித்து படித்து சொன்னேன் - மீண்டும் மீண்டும் அதே கேள்வி ? கம்பெனியில் vice chairman ஆக இருந்து என்ன குப்பை கொட்டுகிறீர்கள் ? இந்த சின்ன விஷயத்தைகூட சமாளிக்கத்தெரியாமல் ? "
இல்லை உமா - அம்மா பாவம் - எனக்காக ------" உமா கிளம்பி சென்று 5 நிமிடங்கள் ஆகி விட்டன . உள்ளே அம்மாவின் அழகிய குரலில் திருவாசகம் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தது .
" திகைத்தால் தேற்றி அருள வேண்டும் " என்ற தலைப்பின் கீழ் வரும் பாடலை கணீரெண்டு பாடிக்கொண்டிருந்தாள்
" கூறும் நாவே முதலாகக்
கூறும் கரணம் எல்லாம் நீ !
தேறும் வகை நீ ! திகைப்பும் நீ !
தீமை , நன்மை , முழுதும் நீ !
வேறு ஓர் பரிசு , இங்கு ஒன்று இல்லை ;
மெய்ம்மை , உன்னை விரித்து உரைக்கின் ,
தேறும் , வகை என் ? சிவலோகா !
திகைத்தால் , தேற்ற வேண்டாவோ !
வேண்டத்தக்கது அறிவோய் நீ !
வேண்ட , முழுதும் தருவோய் நீ !
வேண்டும் அயன் மாற்கு , அரிவோய் நீ !
வேண்டி என்னைப்பணி கொண்டாய் ;
வேண்டி , நீ யாது அருள் செய்தாய் ?
யானும் அதுவே வேண்டின் அல்லால் ,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் ,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே !
மெதுவாக அம்மா என்று அழைத்தேன் - அதில் உயிர் இல்லை .
" என்ன விசு , ஆபீஸ் போகல்ல ? உடம்புக்கு என்ன ? எதோ மாதிரி இருக்கிறாய் - உமா எங்கே ஆபீஸ் சீக்கிரம் போகவேண்டும் என்றாளே ?" அம்மாவின் அக்கறை தோயிந்த வார்த்தைகள் -----
" அம்மா உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் - உன்னை ஒரு புது இடத்திற்கு கூட்டி செல்லபோகிறேன் - அங்கு எல்லா வசதிகளும் உண்டு - மருத்துவர் எப்பொழுதும் இருப்பார் - உன் வயதை எட்டியவர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள் --- மேலே வார்த்தைகள் வர மறுத்தன ...
" விசு , எல்லாம் சரி நீ அங்கு இருப்பாயா ? உமா இருப்பாளா ? - அது என்ன மாதிரியான இடம் ?. அப்பா வாழ்ந்த இந்த வீட்டை விட்டு ஏன் அங்கு அழைத்துச்செல்கிறாய் ? - நான் இங்கு இருப்பதில் உனக்கு ஏதாவது கஷ்ட்டமா ? அப்படியானால் போகிறேன் !"
வாசலில் யாரோ அழைக்க விரைந்து சென்றேன் . சிறிது நேரம் கழித்து அம்மாவிடம் மீண்டும் பேச அவளிடம் சென்றேன் - உறங்கி விட்டாள் --- அம்மா , நான் சொல்ல வந்தது என்ன வென்றால் --------
அம்மாவின் கைகள் chill ஆக இருந்தது - மூச்சுக்காற்று நின்று 5 நிமிடமாவது ஆகியிருக்கும் .. யாரோ என்னை முதுகில் ஓங்கி அடித்ததைப்போன்று இருந்தது .
என் மொபைல் , என் மனவியைப்போலவே அலறியது - மறுப்பக்கம் உமாதான் " என்ன அம்மாவை சேர்த்து விட்டீர்களா ? என்ன சொன்னாள் ? "
என் உள்ளம் கதற , உதடுகள் மட்டுமே அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தது " ம்ம் அம்மாவை சேர்த்துவிட்டேன் ( இறைவன் காலடியில் ) , அவள் ஒன்றுமே சொல்லவில்லை "
என்னை விட்டு ஒரு நிமிடம் பிரிந்து இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவளின் உயிர் பிரிந்தது - பிரிந்து தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவன் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டுருக்கிறேன் -------
கடல் என்ற அவள் கருணையில் , நான் பயணிக்க நினைத்தது ஒரு காகித கப்பலில் - மணலால் வீடு செய்து அவளின் கண்ணீரில் அதை கரைய வைத்தேன் - அவள் முகத்தைப்பார்க்காமல் யாருடைய முகத்தையோ பார்த்துக்கொண்டுருக்கிறேன் - அவள் கொடுத்த நிழலை விட்டு காண நீரில் இளைப்பாருகின்றேன் .........வாழ்க்கை கடிகாரத்தை யாரவது திருப்பி வையுங்களேன் - அவளிடத்தில் நான் நாள் முழுவதும் , ஏன் என் ஜென்மம் முழுவதும் மன்னிப்பு கேட்க்கவேண்டும் , அவள் மடியில் விழுந்து அழ வேண்டும் !!
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th May 2015, 07:50 AM
#283
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 21
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் - அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும் ---- அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா? அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா......
என் சின்ன சின்ன வெற்றியையும் ரசிப்பாயே - உன்னை ரசிக்காமல் வேலை வேலை என்றிருந்தேனே !
என் காலில் சிறியதாக அடிபட்டதற்கு - கண்களில் இருந்து இரத்தத்தை அல்லவோ அன்று சிந்தினாய் !!
உனக்கு இரத்தம் கொடுக்க நானோ காசை அல்லவா எண்ணினேன் !!
நல்ல மனைவி எனக்கு வேண்டும் என்று - நீ சுற்றாத கோயில் இல்லை !
நீ நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு நாளும் கோயிலை நான் நினைத்ததே இல்லை !!
நீ எனக்காக வாழ்ந்தாய் - நான் எனக்காகவே வாழ்ந்தேன் !!
நீ சாப்பிட்டதை விட விரதம் ( பட்டினி ) இருந்த நாட்கள் அதிகம் - நானோ பட்டினியை புத்தகத்தில் தான் படித்திருக்கிறேன் ---
எங்கேயோ சென்று விட்டாய் -- இன்னுமொரு பிறவி என்று ஒன்றிருந்தால் நான் உனக்கு தாயாக பிறக்கவேண்டும் - உன்னை என் மடியில் வைத்து சீராட்ட வேண்டும் - இது தான் என் கடைசி ஆசை ---- இறைவன் என்று ஒருவன் இருந்தால் , எனக்கு செவி சாய்க்கட்டும் .........
தெய்வம் மனிதனாக வந்து வாழ்வதை படித்திருக்கிறோம் - ஒரு மனித பிறவி தெய்வமாக வாழ்வதை தாயின் மூலமாகத்தான் பார்க்கமுடியும் , படிக்க முடியும் .
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th May 2015, 08:11 AM
#284
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 22
அவன் முகம் அழகு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கும் - அவன் இதயமோ கருணை என்றால் - buy one get two free என்று சொல்லும் - அவன் அழகில்லை என்பதால் அவன் தந்தை அவனை தூக்கி எறிந்தான் , வீட்டிலிருந்தும் , மனதிலிருந்தும் --- தாயின் மடி கனத்தது - கருவறையில் இரத்தம் கசிந்தது - வெளி அழகினால் என்ன பயன் - அழியக்கூடியது ! உள் மனம் மன்மதனாக இருக்கின்றதே - அதுவல்லவோ நிரந்தரம் .... கண்கள் பார்த்திருக்காத மகனை தேடுகின்றது - பத்து மாதங்கள் குடியிருந்த அந்த கருவறையை பார்க்க மகனும் துடிக்கிறான் - கருவாகவே மீண்டும் உள்ளே சென்று விட்டால் , அவளின் நிழலில் மீண்டும் இருக்கலாமே -- மனம் ஏங்குகிறது - யாரோ பாடும் பாடல் அவர்களின் எண்ணங்களை இணைக்கிறது ..
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th May 2015, 08:23 AM
#285
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 23
தாயை மதித்தால் ( மிதிக்காமல்) வெற்றி மீது வெற்றி வருவதுடன் புவியரசோடு நமக்கும் ஒரு சரியாசனம் கிடைக்குமே ---- அந்த உலக மாதாவிற்கும் , நம்முடைய மாதாவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை - அவள் கோவில்களில் கல்லாக இருக்கிறாள் - நாம் நம் மனதை கல்லாக்கி நம் தாயை அதில் அமரவைத்து அழகு பார்க்கிறோம் !!
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
27th May 2015, 08:24 AM
#286
Junior Member
Seasoned Hubber
ஒரு ரசிகரின் அலசல் இந்த பாட்டைப்பற்றி
ஒரு அதிகாலையில் உறக்கம் விழித்த போது, என்னவோ தெரியவில்லை.. அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையில் இந்த பாட்டைக்கேட்க வேண்டுமென்று எண்ணம் வந்தது - இணையதளம் சென்று யூட்யூப் சென்றேன்.. முதல் பாட்டே இது தான் இருந்தது ! குறைந்தது ஐந்து முறை அணு அணுவாக ரசித்தேன் - முதல் முறை டி எம் எஸ்ஸின் அருமையான தமிழ் உச்சரிப்புக்கு - இரண்டாம் முறை நடிகர் திலகத்தின் முக பாவம் அற்புதமான நடிப்பு மூன்றாம் முறை காளியாக நடித்த நடிகையின் அற்புதமான நடனம் - நான்காம் முறை திரை இசை திலகம் மகாதேவனின் அருமையான இசை ஐந்தாம் முறை கண்ணதாசன் வரிகளுக்காக அவர் உட்பட டைரக்டர் தயாரிப்பாளர் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களின் அருமையான ஒருங்கிணைப்பு ! ஐந்து நிமிடத்தில் இயல் இசை நாடக முத்தமிழின் அனைத்து அம்சங்கங்களும் சாரமாக அமைந்த பாடல்..... அருமை அருமை அருமை...
-
27th May 2015, 08:25 AM
#287
Junior Member
Seasoned Hubber
-
27th May 2015, 08:31 AM
#288
Junior Member
Seasoned Hubber
CK - உங்கள் " என்னமோ போங்க " அருமை - என்னிடம் இருக்கும் பல குறைகளில் முக்கியமான ஒன்று , multitasking ability இல்லாதது - ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் மனம் அதை சரியாக முடிக்கும் வரை வேறு இடத்தில் கவனம் செலுத்துவதில்லை - இதனால் பலர் போடும் நல்ல பதிவுகளை ரசித்து உடனுக்குடன் பாராட்டுக்களை தெரிவிக்க மறந்து விடுகிறேன் . என்ன செய்வது -- இப்படியே வளர்ந்து விட்டேன் - மிகவும் ரசிக்கும் படியாக இருக்கின்றது - பாராட்டுக்கள்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th May 2015, 10:46 AM
#289
Senior Member
Senior Hubber
வணக்கம்.
திரு நெளஷாத் அவர்களுடன் இசையரசி மற்றும் அவர் கணவர், உடன் லதா மங்கேஷ்கர், சீர்காழியார்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
27th May 2015, 10:56 AM
#290
Senior Member
Senior Hubber
இரு திலகங்களின் பாடல்களுடன் இனிதே துவங்குவோம்
நடிகர் திலகம்... இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
கவியரசரின் வார்த்தை ஜாலமா, இசையரசியும் ஏழிசை வேந்தரும் பாடிய விதமா
அபிநய சரஸ்வதி அழகு பொம்மையாக குறிப்பாக வலது கை கடிகாரம் என fashionஆக இருக்க
அடிபட்ட காலுடன் நடிகர் திலகம் நடக்கும் அழகே அழகு.. நடிப்பெல்லாம் institute'ல் படித்து கற்று கொள்ள முடியாது என்பது பலருக்கு தெரியவில்லை
அதெல்லாம் தானே உள்ளே இருக்கனும்..
ஆம் கொடியசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா
மக்கள் திகலம் பாடல்
நாயகியையும் தாண்டி ஒரு நாயகன் ஸ்க்ரீன் ப்ரஸன்ஸ் எப்பொழுதுமே இருக்கக்கூடியவர் நடிகர் திலகம்.
அதுவும் சரோவுடம் இவர் சேர்ந்தாலே துள்ளலான காதல் (எனக்கு ஜெ-யுடன் மக்கள் திலகத்தை விட சரோவுடன் தான் மிகவும் பிடிக்கும்)
அப்படி ஒரு துள்ளல் இங்கே
வாலி ஐயாவை புகழுச்சிக்கு இழுத்து சென்ற பாடல்
திருக்குறள் போல் இரண்டு அடிகளாக வரும் பாடல்
இவர் தொட்டால் பூ என்ன செடியே மலருமே
ஆம் தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks