-
27th May 2015, 03:18 PM
#301
Junior Member
Seasoned Hubber
திரு கல்நாயக் - இன்னொமொரு விஷயம் - எங்கோ படித்தது - பொதுவாக ந.தி பாடலை கேட்டப்பிறகு, அதை தன்னுள் வாங்கிக்கொண்டு பிறகுதான் அந்த பாடலுக்கு நடிக்க வருவாராம் - ஆனால் இந்த பாடல் ஒரு விதிவிலக்கு - அந்த situation யை மட்டும் மனதில் வாங்கிக்கொண்டு நடிக்க ஆரம்பித்தாராம் - TMS இப்படித்தான் பாடியிருப்பார் என்று சொல்லி விட்டாராம் - என்ன நடிப்பு ஞானம் பாருங்கள் - ம்ம் எல்லாம் அவருடைய அன்னையின் கருணை , ஆசிர்வாதங்கள் --------
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th May 2015 03:18 PM
# ADS
Circuit advertisement
-
27th May 2015, 03:28 PM
#302

Originally Posted by
kalnayak
chi.ka.,
அவன்தான் மனிதன் படம் பற்றி நடிகர் திலகம் திரியில் முரளி அவர்கள் பதிவிட்ட பின்பு அங்கும் இங்கும் அதிகமாக விவாதிக்கப்படும் பாடலாக 'ஆட்டுவித்தால் யாரொருவர்' பாடல் விளங்குகிறது. நான் மிகச் சிறிய வயதில் மதுரையில் (எந்த திரை அரங்கம் என்று கூட தெரியவில்லை) என் அம்மாவுடன் போய் பார்த்து என்று என் நினைவில் வாழும் திரைப் படமாகவும், என் நெஞ்சில் கலந்த பாடலாகவும் இதை நினைக்கிறேன். மிகச் சிறிய வயதில் மதுரைக்கு வந்த போது பார்த்தால் என் அம்மா அடிக்கடி அங்கே படம் பார்த்தோம் என்று சொல்லி நினைவு படுத்துவார்கள். கடைசிப் பாடலான 'மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று' பாடலும் வாழ்வியல் தத்துவத்தை விளக்குவதாகவே படுகிறது. இதில் கவியரசரை வெல்ல இன்னும் ஒரு கவிஞர் வர முடியாது என்றே தோன்றுகிறது. பாடிய பாடகர் திலகத்தைப் பற்றி நான் சொல்ல என்ன இருக்கிறது. நாமெல்லாம் பார்த்து, கேட்டு ரசிக்க கொடுத்து வைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக 'விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால், மதியும் மயங்குதடா' - என் காதில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருக்கிறது. விவரம் புரியாத வயதில் பார்த்து மனதில் ஏற்றி வைத்து கால ஓட்டத்தை கணக்கிட வைத்துக் கொண்டு இருக்கிறதுஇந்த திரைப் படமும் இதன் பாடல்களும். என்னமோ போங்க.
நண்பர் கல்நாயக்
'அவர் தான் மனிதர்' மலரும் நினைவுகள் அருமை.
ராகவேந்தர் சொன்ன மாதிரி இரண்டாம் பாதியில் சோகத்தை சற்று குறைத்து இருந்தால் படம் ரேஞ்சே வேறே . ACT யின் problem இது . 'அன்புள்ள அப்பா' வை கொஞ்சம் டிங்கரிங் பண்ணி பிரகாஷ் ராஜ் 'அபியும் நானும்' ஹிட் ஆக்கிட்டார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th May 2015, 03:35 PM
#303
Senior Member
Senior Hubber
(எந்த திரை அரங்கம் என்று கூட தெரியவில்லை)//ஓய்..கல் நாயக்..அது சென் ட்ரல் சினிமா..அங்கு தான் நானும் பார்த்தேன்..
அன்னெஸஸரியாக ந.தியை அழவிடுவது, அவர் சொத்துக்கள் இழப்பதுபோல் காட்டுவதெல்லாம் அந்தக்காலப் படங்களில் தொடர்ந்ததாக நினைவு..அந்த மேட்ச் பாக்ஸ் சீன் ஆரம்பத்தில் அவரது ஃபேக்டரி பின் முத்துராமனுடையதாக மாறியவுடன் அவருடைய ப்ராண்ட் தெரிவது..
கொடுத்துக் கொடுத்து சிவந்த கைகள்னு காட்டவேண்டியது தான்..அதற்காக கடைசிவரை இழப்பதாக - உயிர் வரைக்கும் என்று காட்டவேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயம்..எனக்கு அன்றும் கோபம் இன்றும் கோபம்..ம்ம்
நன்னா ஊறின த.வ போல ஜெயலலிதா.. சரி காதல் தியாகம் (ஹப்பா ந.தி எஸ்கேப்னு பெருமூச்சு விட்டேன்) நு வச்சுண்டாலும் கூட ரொம்ப ஏழையா ஆகி அந்தக் குழந்தையும் சாகடிச்சு.. என்னமோ போங்க..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th May 2015, 03:37 PM
#304
Senior Member
Senior Hubber
பா.பொ.பா.போ - 1
(பாட்டுக்குப் பொருத்தமா (சினிமா) பாட்டுப் போடுங்க..
கண்ணனைத் தேடித் தேடி
..கண்களும் பூத்த தேடி
சின்னதாய்க் குமிழ்சி ரிப்பு
..சீருடன் நடையுங் கொண்டே
பண்ணினைக் குழலி சைக்க
...பாங்குடன் வருவேன் என்றே
சொன்னவன் காணோ மேடீ
...சொல்லுவாய் வரமாட் டானா..
கொஞ்சம் ஓரிரு பாரா ரைட் அப்பும் வேணும்..(போடலைன்னா நானே எழுதிடுவேன் உஷார்)
*
கிருஷ்ணாஜி..எனி கோபம்..
-
27th May 2015, 03:38 PM
#305
Senior Member
Senior Hubber
அஞ்சு நாளில் ஸ்டார் கொடுத்த மாடரேட்டர்ஸிற்கும் ஆக்கிய நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th May 2015, 03:55 PM
#306
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
பா.பொ.பா.போ - 1
(பாட்டுக்குப் பொருத்தமா (சினிமா) பாட்டுப் போடுங்க..
கண்ணனைத் தேடித் தேடி
..கண்களும் பூத்த தேடி
சின்னதாய்க் குமிழ்சி ரிப்பு
..சீருடன் நடையுங் கொண்டே
பண்ணினைக் குழலி சைக்க
...பாங்குடன் வருவேன் என்றே
சொன்னவன் காணோ மேடீ
...சொல்லுவாய் வரமாட் டானா..
கொஞ்சம் ஓரிரு பாரா ரைட் அப்பும் வேணும்..(போடலைன்னா நானே எழுதிடுவேன் உஷார்)
*
கிருஷ்ணாஜி..எனி கோபம்..
சி.க.,
இது பொருத்தமாக இருக்குமா என்று பாருங்களேன்.
படத்தோட பேரு? அட. மதுர கீதம் தானுங்க.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th May 2015, 03:57 PM
#307
Senior Member
Senior Hubber
kal nayak ji. Thanks ... paattu pugaiya ninaivil..veet pOi kEt paakkaraen okyaa.
-
27th May 2015, 04:05 PM
#308
Senior Member
Senior Hubber

Originally Posted by
chinnakkannan
kal nayak ji. Thanks ... Paattu pugaiya ninaivil..veet poi ket paakkaraen okyaa.

ok. Ok.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
27th May 2015, 04:08 PM
#309
கண்ணா உங்கள் மீது கோபமா ? எனக்கா ? எதற்கு
புரியவில்லையே ! .
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th May 2015, 05:04 PM
#310
Senior Member
Senior Hubber
பூவின் பாடல் 13: "பாடுவோம் பூ மாலை சூடுவோம் ஆடும் மயில் வண்ணமே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~
செங்கமலத் தீவின்(?) புதிய ராணிக்கு தோழிகள் பாடி வாழ்த்தும் பாடல். பூவில்லாமல் காயுமில்லை. "பொறுமையில்லாமல் வெற்றியுமில்லை. பாவையரின் மானம் காக்க நடந்து வர" அழைக்கிறார்கள். நடித்திருப்பவர் எவரென்று கேட்டால் பக்கெட் பக்கெட்டாக எடுத்துத் தருபவர் இருக்கையில் நமக்கென்ன கவலை. வேறு என்ன கவலையென்றால், கூப்பிட்டுப் போவதைப் பார்த்தல், கவுண்டமணியை பூமிதிக்க அழைத்துச் செல்வது போல் இருக்கிறதே. பாவம் என்றுதான். பாடலின் மேற் விவரங்கள் தந்து ஆதரிக்க வேண்டும்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks