Page 238 of 402 FirstFirst ... 138188228236237238239240248288338 ... LastLast
Results 2,371 to 2,380 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #2371
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2372
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

    ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


    எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

    ‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


    வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

    ‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


    சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!
    courtesy - bala ganesh- net

  4. #2373
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடகர் திலகம் பாடி திரைப்படத்தில் இடம் பெறாத அபூர்வமான பாடலின் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துக் கூறி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய சைலேஷ் பாசு சார், தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes ainefal liked this post
  6. #2374
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மதிப்பிற்குரிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாகஅன்பு பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம் .

  7. #2375
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

    ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


    எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

    ‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


    வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

    ‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


    சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!
    Courtesy - bala ganesh- net
    sandai katchiglil mattum illamal nadipilum kodikatti parandhu barath virudu pettru kadaisi varai market pogaamal kathanaayakanaaga irundhu sadhanai padaithavar purathchi thalaivar.

  8. #2376
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் ராகவேந்தர் அவர்களுக்கு என் சார்பிலும் மக்கள்திலகம் எம்ஜியார் திரியின் பக்தர்களின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்




  9. #2377
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர்.
    ரிக்ஷாக்காரன் .
    29.5.1971.
    45வது ஆண்டு விழா துவக்கம் ..
    சத்யா மூவிஸ் முதல் வண்ணப்படம் .
    மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பாரத் பட்டம் கிடைத்த படம் .
    முந்தய சாதனைகளை வசூலில் முறியடித்த படம் .
    பிரமாண்ட கனவு பாடல் - அழகிய தமிழ் மகள் .
    மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பின்னணி இசை
    மக்கள் திலகத்தின் ரிக்க்ஷா ரேஸ் - .
    மக்கள் திலகம் - ஜஸ்டின் மற்றும் குழுவினர்
    மக்கள் திலகம் - மனோகர் .
    மக்கள் திலகம் - ராமதாஸ் குழுவினர் - மூன்று சண்டை காட்சிகள் .
    அனல் பறக்கும் வசனங்கள்
    குளுமையான ஒளிப்பதிவு
    நேர்த்தியான பட தொகுப்பு .
    மேஜர் சுந்தரஜனின் அருமையான நடிப்பு .
    பத்மினியின் சிறப்பு தோற்றம்
    பிரமாண்ட அரங்கங்கள் .
    தரமான படம் . சிறந்த நடிப்பு .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் சாதனையின் மகுடம் .
    எல்லா புகழும் எம்ஜிஆருக்கே .

    நன்றி - முக நூல்

  10. #2378
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத ரிக்ஷாக்காரன் . மலரும் நினைவுகள் .
    மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த சத்யா மூவிஸ் ''ரிக்ஷாக்காரன் '' .
    1969 இறுதியில் துவங்கப்பட்ட ரிக்ஷாக்காரன் 1970 மற்றும் 1971களில் படப்பிடிப்பு நடந்தது .மக்கள் திலகம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி புதுமுக நாயகி மஞ்சுளாவின் அறிமுகம் . நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை பத்மினி குனசித்திர வேடத்தில் நடித்து .அசோகன் - மேஜர் சுந்தராஜன் சோ ,தேங்காய் ஸ்ரீனிவாசன் , ஐசரி வேலன் மனோகர் ராமதாஸ் மற்றும் பலர் நடித்தது .

    பேசும் படம் , பொம்மை , திரை உலகம் , திரை செய்தி ,ஆனந்த விகடன் , முரசொலி , நவமணி , தினமணி , தினத்தந்தி , போன்ற ஏடுகளில் தொடர்ந்து ரிக்ஷாக்காரன் . படப்பிடிப்பு மற்றும் காட்சிகள்ற்றி வெளியிட்டார்கள் .
    ரசிகர்களின் ஆர்வத்தை கேட்கவா வேண்டும் .பிரமாண்ட செட்டில் கனவு
    பாடல்கள் , சண்டை காட்சிகள் ,அண்ணா நகரில் படமாக்கப்பட்ட ரிக்ஷா சைக்கிள் ரேஸ் , அண்ணா
    நினைவிடத்தில் மற்றும் அண்ணா சிலை முன் மக்கள் திலகம் படப்பிடிப்பில் கலந்து கொண்டது
    மேலும் ஆர்வத்தை தூண்டியது .


    மக்கள் திலகத்தின் பெரும்பலான படங்கள் சித்ரா , பிளாசா , காஸினோ , பாரகன் , குளோப் வெலிங்டன் போன்ற குளிர் சாதன வசதி இல்லாத , 1000க்கும் குறைவான இருக்கைகள் மற்றும் குறைந்த கட்டணம் கொண்ட அரங்குகளில் வந்தது [மிட்லண்ட் A /C யில் ஒளிவிளக்கு என் அண்ணன் அடிமைப்பெண் -படங்கள் வந்தது ]. எங்க வீட்டு பிள்ளை 1965ல் காசினோ - பிராட்வே - மேகலா மூன்று அரங்கில் வெள்ளி விழா ஓடி வசூலில் சாதனை புரிந்தது .

    பின்னர் வெளிவந்த அடிமைப்பெண் 1969 , மாட்டுக்கார வேலன் -1970 படங்கள் உருவாக்கிய சாதனைகள் ஏராளம் . ஏராளம் . சென்னை யில் புதியாதாக கட்டப்பட்ட ஏ .சி அரங்கமும் , அதிக இருக்கைகள் கொண்ட அரங்கமாக ''தேவி பாரடைஸ் '' 1970ல் திறக்கப்பட்டது .மக்கள் திலகத்தின் ''என் அண்ணன் '' இவ்வரங்கில் வெளிவருவதாக கூறப்பட்டது . பின்னர் ஏனோ வெளியாகவில்லை .
    1970 தீபாவளி வெளியீடாக ''சொர்க்கம் '' வெளி வந்து 100 நாட்கள் ஓடியது . இதற்கிடையில் 1971 தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் நடந்ததால் தமிழ் புத்தாண்டில் ரிக்ஷாக்காரன் வெளிவரும் என்று விளம்பரங்கள் வந்தது . கடைசியாக மே 29.5.1971 அன்று சென்னை தேவி பாரடைஸ் . கிருஷ்ணா , சரவணா என்று விளம்பரம் வந்ததும் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .
    மே முதல் நாளே தேவி பாரடைஸில் ரிக்ஷாக்காரன் ஸ்டிலஸ் வைக்கப்பட்டது . இதை தினமும் காண்பதற்கு ஏராளமான ரசிகர்களும் , மக்களும் பார்வையிட்டு மகிழ்ந்தார்கள் .பல விதமான வண்ணப்போஸ்டர்கள் .கண்ணுக்கு விருந்தாக இருந்தது . முன் பதிவு அன்று ஆயிரக்கனாக்கில் ரசிகர்கள் குவிந்தது திரு விழா போல் காட்சி அளித்தது 1212 இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸில் டிக்கெட் விலை ரூ 1.25 ரூ 2.00 ரூ 2.50 ரூ 3.00

    29.5.1971 திரு விழா
    அன்றைய தமிழக முதல்வர் , திமுக தலைவர் திரு மு கருணாநிதி தலைமையில்அனைத்து மந்திரிகளும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு ரிக்ஷாகாரனின் பெருமைகளை பாராட்டி பேசினார்கள் .அனைத்துலக எம்ஜிஆர் மன்ற அமைப்பாளர் கல்யாண சுந்தரம் அவர்கள் திருவல்லிக்கேணியிலிருந்து யானையை வர வழைத்து முதல்வருக்கும் , எம்ஜிஆருக்கும் மாலையிட செய்தார் .
    ரிக்ஷாக்காரன் - முதல் முறையாக சென்னை நகர மிகப் பெரிய குளிர்சாதன அரங்கில் சிறந்த ஒலி
    ஸ்டீரியோ இசையில் படத்தை பார்க்கும் போது எல்லையில்லா ஆனந்தம் அடைந்தோம் .
    ஒரு பக்கம் டைட்டில் சூப்பர் இசை +ரிக்ஷா ரேஸ் + அங்கே சிரிப்பவர்கள் ..பாடல் + சைக்கிளில் இருந்தாவாறே போடும் சண்டை காட்சி ....எம்ஜிஆர் ரசிகர்களும் மக்களும் பரவசமடைந்து
    படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடினார்கள் .
    மேஜர் சுந்தரராஜனுக்கு இந்த படத்தில் கிடைத்த கைதட்டல்கள் , வரவேற்பு வேறு எந்த நடிகர்கள் நடித்த படத்திற்கு கிடைக்கவில்லை என்று அவரே பெருமையுடன் கூறினார் .
    இனி தேவி பாரடைஸ் சாதனை
    முதல் முறையாக 100 காட்சிகள் அரங்கு நிறைந்து தொடர்ந்து 163 காட்சிகள் நிறைந்து ஓடி முடிய
    217 காட்சிகள் அரங்கு நிறைந்து 142 நாட்களில் வசூலில் ரூ 9 லட்சம் பெற்று ALL TIME RECORD
    புரிந்தது .
    ரிக்ஷாக்காரன் படத்தை தயாரித்த திரு ஆர்.எம் வீரப்பன் எம்ஜிஆரின் புகழை விண் முட்ட செய்தார் .இந்திய அரசாங்கமும் பாரத் -எம்ஜிஆர் என்று பட்டம் வழங்கி பெருமை சேர்த்தார்கள் .
    ரிக்ஷாக்காரனின் சாதனைகளை , எம்ஜிஆர் நடிப்பை கண்டு உலகமே வியந்து பாராட்டியது



  11. #2379
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  12. #2380
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    காவிரியை கமண்டலத்தில் அடக்கிய குறுமுனி அகத்தியர் போலே, நற்பண்புகளையும் உயர் குணங்களையும் தன்னுள் அடக்கியிருக்கும் பண்பாளப் பெருந்தகை திரு.ராகவேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  13. Likes uvausan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •