-
4th June 2015, 07:24 AM
#601
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 39
சுமக்கும் பாடல்களை சுவைத்தோம் ,ரசித்தோம் - இனி தாயின் இரண்டாவது பருவமான ஜனணி ( குழந்தையை ஈன்றுபவள் ) யை பற்றி தெரிந்து கொள்ளலாமா ?
ஒரு பெண், தாய் என்ற உன்னத நிலையை குழந்தையை பெற்றுக் கொள்வதன் மூலம் தான் அடைகிறாள் . அதற்குள் அவள் சந்திக்க வேண்டிய துன்பங்கள் , விஷம் தோய்த்து வரும் வார்த்தைகள் - மலடி அவள் - அவளை எதையும் தொடச்சொல்லாதே என்று சொல்லும் பஞ்சாங்க உலகம் - அப்பப்பா - எவ்வளவு எதிர்ப்புக்களை அவள் சந்திக்க வேண்டியுள்ளது .. மீறி குழந்தையும் வந்து விட்டால் , ஒ - மீண்டும் பெண் குழந்தைதானா - ஒரு வாரிசு பெற்றுத்தர துப்பில்லை ---- இப்படி தேள் கொட்டும் வார்த்தைகள் - அவள் மட்டும் தான் இதற்க்கு காரணமா ?? யார் கேட்பது ??
குழந்தையை கண்டவுடன் - பட்ட துன்பங்கள் சிறகடித்து பறந்து விடுகின்றன --- பாசம் அங்கே பாலாக சொரிகின்றது --- கனவுகள் அவளை சுற்றி ரீங்காரம் பண்ணுகின்றன - என்ன மகிழ்ச்சி அவள் முகத்தில் !!!! தன்னை மெழுகு வர்த்தியாக பாலை சொரியும் போதே ஆக்கி கொள்கிறாள் - அவள் சுமப்பது தொடர்கின்றது .
பாடல்களில் ஆனந்தம் இருந்தால் கவிதைகள் தானே தேரோட்டும் ---
ஆண்; நான் காதல் எனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே
பெண்;அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே
மிகவும் நேர்தியான வரிகள் அற்புதம்.
ஜனணி தொடர்வாள் -----
Last edited by g94127302; 4th June 2015 at 07:53 AM.
-
4th June 2015 07:24 AM
# ADS
Circuit advertisement
-
4th June 2015, 07:29 AM
#602
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 40
ஜனணியின் தொடர்ச்சி :
யாழ் இனிதா ? குழல் இனிதா ? --- இல்லவே இல்லை - ஒரு குழந்தையின் மழலையை கேளுங்கள் - பிள்ளையாய் இருந்துவிட்டால் தொல்லையே இல்லையே ----
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 07:34 AM
#603
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 41
ஜனணியின் தொடர்ச்சி :
அம்மா , குழந்தையின் முதல் வார்த்தை - "அம்மா " அவள் தன் மகனிடம் இருந்து கேட்க்க விரும்பும் கடைசி வார்த்தை ---------
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
மழலியால் யாவும் தேனும் மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேனோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
ஓ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நாள் தோரும் காவல் நின்று
நம்மைக் காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதி ராஜன் என்று பல தேசம் நீயும் வென்று
வரவேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென்மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னைக் கண்டு
இரு தோளில் மாலைச் சூடும் மகராணி யாரோ இங்கு
ஒளிவதற்கு எதிர்காலம் உண்டு
உறவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
மீனாட்சி கையில் கொண்டு அரும்பூரும் பிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால்
உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரைக் கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கொரு குறை நேர்ந்திடாது
வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
-
4th June 2015, 07:36 AM
#604
Senior Member
Senior Hubber
Originally Posted by
g94127302
கருவின் கரு - பதிவு 41
ஜனணியின் தொடர்ச்சி :
அம்மா , குழந்தையின் முதல் வார்த்தை - "அம்மா " அவள் தன் மகனிடம் இருந்து கேட்க்க விரும்பும் கடைசி வார்த்தை ---------
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
மழலியால் யாவும் தேனும் மரகத வீணை தானோ
மடி மேலே ஆடும் பூந்தேனோ
அன்னை மனம் தான் பாடும் ஆராரோ
ஓ மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நாள் தோரும் காவல் நின்று
நம்மைக் காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதி ராஜன் என்று பல தேசம் நீயும் வென்று
வரவேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென்மதுரை சீமை எல்லாம் அரசாளும் உன்னைக் கண்டு
இரு தோளில் மாலைச் சூடும் மகராணி யாரோ இங்கு
ஒளிவதற்கு எதிர்காலம் உண்டு
உறவாகும் நாளை இங்கு
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
மீனாட்சி கையில் கொண்டு அரும்பூரும் பிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால்
உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரைக் கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கொரு குறை நேர்ந்திடாது
வளர்ப்பேனே தோளின் மீது
பணிவாய் மலரே மடி மேல் உறங்கு
மன்னவா மன்னவா மனாதி மன்னன் அல்லவா
நீ புன்னை சிந்திடும் சிங்காரக் கண்ணன் அல்லவா
எனக்கு மிகவும் பிடித்த பாடல். நன்றி ரவி
வாலி ஐயாவின் வரிகளும், சுனந்தாவின் குரலும், சுகன்யாவின் இயல்பான நடிப்பும்.. அபாரம் .. ராஜாவின் இசை ...
-
4th June 2015, 07:39 AM
#605
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 42
ஜனணியின் தொடர்ச்சி :
அம்மா - நீ அன்று என்னை தனியாக சுமந்தாய் !
அன்று நீ சிரித்தாய் - நான் அழுதேன் !!
இன்று நான் உன்னை சுமக்குகின்றேன் மூன்று பேர் உதவியுடன் !!!
நான் இன்னும் அழுதுகொண்டுதான் அம்மா இருக்கிறேன் !!!!!!!
--------------------
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சக் கேட்டாத்தான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரட்டுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா
கண்ணாமூச்சு ஆட்டம் உனக்கு சொல்லித் தரட்டுமா - இப்ப
கலகலன்னு சிரிச்சிக்கிட்டு என்னப் பாரம்மா
(சின்ன...)
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னைக் கூப்பிடுவாரு - நீ
கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - குங்குமம்
கோழி மிதிச்சி குஞ்சு முடம் ஆகிவிடாது - உனக்கு
கொய்யாப்பழம் பறிச்சு தாரேன் அழுகை கூடாது
(சின்ன...)
Last edited by g94127302; 4th June 2015 at 09:37 AM.
-
4th June 2015, 07:47 AM
#606
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 43
ஜனணியின் தொடர்ச்சி :
அம்மா - உனக்கு நான் உன் வாழ்க்கை முழுவதும் பாரமாய் இருந்துவிட்டேன் - ஆனால் உன்னை அல்லவோ என் பாரம் என்று நினைத்தேன் - எனக்கு நரகத்திலும் இடம் கிடையாதே தாயே - இந்த பாவத்தை எத்தனை கங்கையில் முழுகி நீக்கிக்கொள்ள போகிறேன் ! திரும்பி வந்து விடம்மா - உன் பாதங்களை என் குருதியால் குளிப்பாட்ட வேண்டும் .....
-----------------------
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல்
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே
தாய் என்ற பெருமை தனை மனம் குளிர தந்தவளே
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா
பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
அழுதால் அரும்புதிரும் அண்ணாந்தால் பொன் உதிரும்
சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதறும்
சிரித்தால் முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதறும்
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா
பேணி வளர்க்க வேனும் தெரியுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
அல்லலைக் கண்டு மனது அஞ்சுமா
குழந்தை அழுவதைக் கேட்டு மனது மிஞ்சுமா
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இல்லை பாரமா
கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா
Last edited by g94127302; 4th June 2015 at 09:39 AM.
-
4th June 2015, 07:52 AM
#607
Junior Member
Seasoned Hubber
-
4th June 2015, 08:02 AM
#608
Junior Member
Seasoned Hubber
Ck - நீங்கள் சொல்வதிலும் , திரு கல்நாயக் சொல்வதிலும் , மிகுந்த முரண்பாடு உள்ளது - காதல் பாடல்களை மட்டும் ஒருவர் போடுவதால் அவர் என்றுமே மார்கண்டேயனாகவும் , பாடல்களில் முதுர்ச்சி இருந்தால் , அந்த ஒருவர் 90 வயதிற்கும் அதிகமாக இருக்ககூடும் என்று நீங்கள் இருவரும் சொல்வது --- எங்கோ உதைக்கின்றதே !! - இந்த சின்ன வயதில் நான் உங்கள் தத்துவங்களை புரிந்துகொள்வேன் என்று நீங்கள் இருவரும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது உங்கள் இருவரின் வயதிற்கும் , அனுபவத்திற்கும் , முதுர்ச்சிக்கும் அழகல்ல - காதலுக்கு வயதில்லை - வாத்தைகளில் பக்குவம் 4 வயதில் கூட வரலாம் என்பதே என்னுடைய வாழ்க்கை அனுபவம் ..
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th June 2015, 10:18 AM
#609
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ரவி .. ஜனனி நைஸ்.. ஈவ்னிங்க் கேட்கிறேன் சொல்கிறேன்..
உங்களை யார் வயதானவரென்று சொன்னது..லேட்டஸ்ட் பிங்க் கோட் பார்த்தாலே தெரிகிறதே மீன்ஸ் நீங்கள் சமர்த்தா தத்தூஸ் எழுதறீங்க.. எனக்கு அந்த மாரி எழுத வல்லைன்னு தானே சொன்னேன்..எதுக்காக வயசெல்லாம் இழுக்கறீங்க யுவர் ஹானர்..
-
4th June 2015, 10:19 AM
#610
Senior Member
Senior Hubber
ராஜேஷ்.. கோட்க்கு ரிப்ளை பண்ணும் போது முழுதாகத்தரவேண்டியதில்லையே.. கொஞ்சம் டெலீட் பண்ணி ப் போடுங்களேன்..இது சின்ன ரெக்வஸ்ட்..
Bookmarks