ஏழு மலைதனிலே – அவன்
நின்றிருப் பானருள் தந்துநிற்பான்
மேலும் வேண்டிநின்றால் – நம்
மேன்மைகள் துலங்கிட வழியும் செய்வான்

சூழும் துன்பங்களை – தூளாய்
தூற்றியே மாற்றியே காட்டிடுவான்
வீழும் வேதனைகள் – மாறி
விந்தையாய் இன்பமும் தந்திடுவான்